புதன், 28 ஆகஸ்ட், 2019

ஹோமோ எரக்டகஸ் என்றால் குரங்கு மனிதன் என்று பொருள் (படிமவளர்ச்சி) -15

தோழர்களே விலங்கியல் 15ம் பதிவு 
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

நாம் கடந்த பதிவில் ஹோமோ ஹெபிலிசை பற்றி பார்த்தோம் இப்போது பார்ப்பது ஹோமோ எரக்டகஸ்
ஹோமோ எரக்டகஸ் என்றால் குரங்கு மனிதன் என்று பொருள் இம்மனிதக்கூட்டமூதாதையின் பாசில்கள் முதலில் இந்தோனோசியாவின் ஜாவாவில் 1892,ல்கண்டுபிடிக்கப்பட்டது பின்னர் தெனாப்பிரிக்கா , தான்சானியாவின் ஓல்டுவாய் ஜார்ஜ் ,போன்ற பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டது
இதில் மிகப்பழமையானது சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட சீன மனிதனின் பாசில்களாகும் காலம் 2,1 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பானது மற்றவை 1,8,2 மில்லியன் காலத்தை சேர்ந்ததாகும்
ஆப்பிரிக்காவில் மனிதன் தோன்றினான் என்றால் ஆப்பிரிக்காவுக்கு முன்பாக சீனத்துக்கு எப்படி வந்தான்
இந்தியாவின் வடதுருவத்துக்கு 2,8மில்லியன் ஆண்டுக்கு முன்பாக எப்படி வந்தான் அப்படியானால் ஆசியாவில் மனிதன் தோன்றினானா?
இக்கேள்விகளுக்கான விடையை இன்னும் சில புதிர்களுக்கு பின்பு அவிழ்ப்போம்
1982 அருண் சாணக்கியா எனும் ஆய்வாளர் மத்திய பிரதேசத்தின் நர்மதை நதிக்கரயில் ஒரு மனித மண்டையோட்டை கண்டு பிடித்தார் அது ஹோமோ எரக்டசாக இருக்கவேண்டும் அதன்காலம் 6லட்சம் ஆண்டுகள் என தீர்மானித்தார்
இந்தகண்டுபிடிப்பை அமெரிக்க, பிரான்ஸ் ஆய்வுக்குழுக்கள் மேலும் ஆய்வு செய்து அது ஹோமோ எரக்டஸ் இல்லை ஹோமோ செபியன் என முடிவுசெய்தார்கள் அதன்காலத்தை 3லட்சத்தில் இருந்து 1.5 லட்சம் ஆண்டு என்று முடிவு செய்தார்கள்
மேலும் தமிழகத்தின் விலுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஓடை எனும் ஊரில் ஒரு சிறுமியின் மண்டை ஓடு கிடைத்தது இதன்காலம் ஒரு லட்சத்து அறுபது ஆண்டுகளுக்கு முந்தியது
இது ஹோமோ செபியன் எனும் மனித வகையை சேர்ந்தது
மேலும் தமிழகத்தின் சென்னைக்கு அருகில் உள்ள திருவள்ளூர்மாவட்டத்தில் உள்ள அத்திரம் பாக்கத்தில் பனிக்காலத்தின் தொடக்கத்தில் அதாவது 15ல் இருந்து 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னதாக மனிதனின் மூதாதைகள் வாழ்ந்த அடையாளங்களை சாந்தி பப்புவா எனும் ஆய்வாளர் கண்டு பிடித்து இருக்கிறார்
மேலும் இப்பகுதியில் கொற்றவை ஆற்றுக்கரைகளில் [ இன்று குசஸ்தலை ஆறு] மத்திய கற்கால மக்கள் 375000 ஆண்டுகளில் இருந்து 172 000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததை கிடைத்த கற்கருவிகளும் விலங்குகளின் எலும்புகளும் உறுதி செய்துள்ளன
பொதுவாக சிவாலிக் மலைப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் 2,8 மில்லியன் ஆண்டுக:ள் 2 மில்லியன் ஆண்டுகள் ,மத்திய பிரதேசம் மகாராஸ்டிரா, பகுதிகளில் 14 லட்சம் , 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பான கற்கருவிகள் கிடைத்துள்ளன
சீனாவில் 21 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பான பாசில்கள்கிடைத்து இருக்கிறது
தமிழகத்தில் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பான கற்கருவிகள் கிடத்து இருக்கிறது
இவற்றை எல்லாம் வைத்து என்ன முடிவுக்கு வருவது மனிதனின் தொட்டில் ஆப்பிரிக்காவா? ஆசியாவா? என்ற குழப்பம் ஏற்படுவது இயல்புதான்
ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக ஆப்பிரிக்காவில் இருந்துதான் ஹோமோ செபியன் எனும் மனிதன் உலகம் முழுவதும் பரவினான் எனும் கருத்தை மேற்கண்ட சான்றுகள் மறுக்கிறதா?
கால்டுவெல் போன்றோர் தமிழக பூர்வ குடிகள் ஆரியர்கள் ஈரானில் இருந்து வந்ததைப்போல் ஈரானுக்கு அருகில் இருந்த ஈழத்தில் இருந்து வந்தவர்கள் என்ற கதைகள் உண்மையா?
அல்லது சிந்து சமவெளி நாகரீகத்தை சேர்ந்த தமிழ்க்குடிகளை ஆரியர்கள் விரட்டி அடித்தார்கள் போன்ற கதைகளுக்கு புதைபடிவ சான்றுகளிடம் விளக்கம் கிடைக்குமா என வரும் பதிவுகளில் பார்க்கலாம்
தொடரும்
- ஆர் சந்திரசேகரன் ஆர் சந்திரசேகரன்,  முகநூல் பதிவு, 28.8.19
[
](https://www.facebook.com/photo.php?fbid=172517403911666&set=a.104351330728274&type=3&eid=ARDcBkHKYeTv0oRPnloSCwmgkY2zDclGK_8fOpQQEmgXFEzKPxfXcAXkbBzLXY1yeGFEpQYhWHFmzWfU)

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக