ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

நுண் துகள்களால் உருவாகும் முத்து!

சிப்பி என்பது நன்னீர் மற்றும் கடல் நீர் ஆகிய இரண்டிலும் காணப்படும் இருவோட்டுடலி வகுப்பைச் சேர்ந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. 2.5 செ.மீ., முதல் ஒரு மீட்டர் வரை வளரக்கூடியவை. சிப்பி களின் ஓடு இரு பகுதிகளால் ஆனது. இரு பகுதிகளும் ஓரத்தில் ஓரிடத்தில் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருக் கின்றன. பெரும்பாலும் அதன் ஓடுகள் திறந்தே இருக்கும். நீரில் இருக்கும்போது உள்ளிழுத்துக்கொள்கிறது சிப்பி. அதன் பருவகாலத்தில் கோடிக்கணக்கான முட்டைகளை இடும். முட்டையை விட்டு வெளியே வரும்போது சிப்பிக்கு ஓடு இருக்காது. அப்போது அதன் உருவம் ஒரு ஊசிமுனை அளவே இருக்கும். ஒரு நாள் கழித்தே அதற்கு ஓடு உண்டாகிறது. இரண்டு வாரங்களில் நீந்தத் தொடங்கும். ஐந்து ஆண்டுகளில் முழு வளர்ச்சி அடையும்.
ஆபரணங்களில் மின்னும் மிக நல்ல முத்துக்கள் சிப்பிகளிலிருந்தே எடுக்கப்படுகின்றன. முத்து இருவாயில் () மெல்லுடலி உயிரினங்கள் சிலவற்றின் உடலினுள் உருவாகின்றன. வெளியிலிருந்து இவ்வுயிரினங்களின் உடலுக் குள் செல்லும் நுண்துகள்களினால் ஏற்படும் உறுத்தலைக் குறைப்பதற்காக இவற்றிலிருந்து சுரக்கும் ஒருவகைப் பொருள் அந்த நுண்துகள்களின் மீது பூசப்படுகின்றது. இச்செயல்பாடே முத்து எனும் இந்தப் பெறுமதிப்புவாய்ந்த பொருளை உருவாக்குகின்றது. சிலர் தூத்துக்குடி போன்ற பகுதிகளில் கட லில் மூழ்கி முத்து குளிப்பதையே முக்கிய தொழிலாகக் கொண்டிருக் கின்றனர். சிவப்பு, மஞ்சள், நீலம் ஆகிய நிறங் களிலும் முத்துக்கள் கிடைக்கின்றன.
சிப்பிகள் உலகின் பல பகுதி மக்களால் விரும்பி உண்ணப்படும் உணவாகும்.
இதில் புரதச்சத்தும் குறைந்த கொழுப்பும் உள்ளதால் உடல்நலனுக்கு ஏற்றது.
 - விடுதலை நாளேடு,15.8.19

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக