செயற்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செயற்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 31 அக்டோபர், 2025

மருத்துவத்தில் ஒரு மைல் கல் இதயம், கல்லீரல் உள்ளிட்ட மனித உறுப்புகளை செயற்கையாக உருவாக்கினர் அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை

 


வாசிங்டன், அக்.3 அமெரிக்க காவின் நார்த் டெக்சாஸ் பல்கலைக்கழகம், ஸ்டான்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து இதயம், கல்லீரல், ரத்த நாளங்கள் உள்ளிட்ட மனித உறுப்புகளை ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

இதுதொடர்பான ஆய்வறிக்கை முன்னணி மருத்துவ இதழ்களில் வெளியிடப்பட்டு உள்ளது. அந்த ஆய்வறிக்கையில் கூறியிருப் பதாவது: ஆய்வகத்தில் ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி செயற்கை இதயத்தை உருவாக்கும் ஆராய்ச் சியில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஆண்டு முதல் ஈடுபட்டு வருகிறோம்.

இதன்படி 16 நாட்களில் எங்களது ஆய்வில் செயற்கை இதயம் உருவாக்கப்பட்டது. இந்த செயற்கை இதயம்,மனித இதயத்தை போன்று துடிக்கிறது. இதேபோல செயற்கை கல்லீரலையும் உரு வாக்கி உள்ளோம். மேலும் செயற்கை ரத்த நாளங்களையும் உருவாக்கி இருக்கிறோம். எங்கள் ஆராய்ச்சியின் மூலம் லட்சக்கணக்கான மக்களை காப்பாற்ற முடியும். இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 03.10.25

வியாழன், 21 நவம்பர், 2019

செயற்கை இலை உருவாக்கம்

பூமியின் வளி மண்டலத்தில் தற்போது அதிகளவான காபனீரொட்சைட் வாயு காணப்படுகின்றது.

இதன் காரணமாக பூமியின் வெப்பநிலை அதிகரித்துள்ளது. எனவே மித மிஞ்சிய காபனீரொட் சைட்டினை எரிபொருளாக மாற்றுவது தொடர்பில் விஞ்ஞானிகள் நீண்ட நாட்களாக ஆராய்ந்து வந்தனர்.

இதன் விளைவாக தற்போது சூரிய ஒளி முன்னிலையில் காபனீரொட்சைட்டினை திரவ எரிபொருளாக மாற்றக்கூடிய செயற்கை இலை ஒன்று உருவாக்கப் பட்டுள்ளது.

Yimin A. Wu எனும் ஆராய்ச்சி யாளரின் தலைமையில் கலிபோர்னியா பல்கலைக் கழகம் மற்றும் ஹொங் ஹொங் கின் சிட்டி பல்கலைக்கழகம் என்பவற்றின் ஆராய்ச்சியாளர்களும் இணைந்தே இந்த இலையினை உருவாக்கியுள்ளனர்.

இயற்கையில் பச்சை இலைத்தாவரங்கள் காபனீரொட்சைட் மற்றும் நீரின் உதவி யுடன் குளுக்கோசினை உற்பத்தி செய் கின்றன.

இது ஒளித்தொகுப்பு என அழைக்கப் படுகின்றது. இதன்போது பச்சை இலை களில் காணப்படும் குளோரொபில் எனப் படும் பதார்த்தம் சூரிய ஒளியை உறுஞ்சுகின்றது.

பின்னர் குளுக்கோசு தாவரங்களுக்கான எரிபொருளாக பயன்படுத்தப்படுகின்றது. இதே பொறிமுறையினைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட செயற்கை இலையானது மெதனோல் மற்றும் ஒட்சிசனை உற்பத்தி செய்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

- விடுதலை நாளேடு 14 11 19