திங்கள், 30 மே, 2016

ஆய்வுச்சாலையில் உருவாக்கப்பட்டுள்ள இறைச்சி


பசு மற்றும் பன்றியின் செல்களைக் கொண்டு செயற்கை முறையில் இறைச்சியை வளர்த்து, உற்பத்தி செய்ய முடியும் என அறிவியல் ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.
இறைச்சி ஆய்வுச்சாலைகளில் உருவாக்கப்படுவதன்மூலமாக  மூன்று ஆண்டுகளுக்குள்ளாக  விலங்குகளை உண்பது என்பதை நினைத்து பார்க்க முடியாததாகிவிடும் என்று ஆய்வா ளர்கள் கூறுகிறார்கள்.
உமா வெலெட்டி என்கிற அறிவி லாளர் மேயோ மருத்துவமைனையில் பயிற்சி பெற்ற இருதய நோய் நிபுணரும், மின்னெசோட்டா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியரும் ஆவார். இரட்டை நகரங்களின் அமெரிக்க இருதய சங்கத் தின் தலைவருமாவார். அவர் ஸ்டெம் செல் உயிரியல் வல்லுநர் முனைவர் நிக்கோல¢ஸ் ஜெனோவெஸ், உயிர் மருத்துவ இயல் பொறியாளர் முனைவர் வில் கிளெம் ஆகிய இருவருடன் இணைந்து இறைச்சிகுறித்த ஆய்வை மெம்பிஸ் உணவு விடுதியில் இணைந்து தொடர் ஆய்வு மேற்கொண்டார்.
மாட்டின் கருவிலிருந்து வெளியா கின்ற சீரத்தை அடிப்படையாகக் கொண்டிராமல் அதற்கு பதிலாக தாவரங்களை வளர்ப்பதைப் போன்று உருவாக்கப்படுகிறது.
சோதனைக்குழாயிலிருந்து பெறப்படும் இறைச்சியை ஆய்வகத்தி லிருந்து நேரடியாக உணவுத்தட்டுக்கு கொண்டு வரும் நிலை உள்ளது.
உயிரற்ற இறைச்சியிலிருந்து விலங்கு களின் செல்லைப்பிரித்தெடுத்து, விலங் குகள் தொடர்பில்லாத உற்பத்திப் பொருள்களாக சந்தைப்படுத்தும் வாய்ப்பு மூன்று முதல் நான்கு ஆண்டு களில் பொதுமக்களுக்கு கிடைக்கும் என்பதை, ஆய்வகத்தில் வளர்த்து எடுக் கப்பட்ட Ôஇறைச்சி பந்துÕ (னீமீணீtதீணீறீறீ) மூலமாக இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேம்பிஸ் மீட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் உமா வேலட்டி கூறும்போது, “இதுதான் முற்றிலும் இறைச்சியின் எதிர்காலமாக இருக்கும். குதிரை மற்றும் குதிரை வண் டிகளுக்கு மாற்றாக கார் வந்ததுபோல இறைச்சி தொழிலில் செய்திட திட்ட மிட்டுள்ளோம். இறைச்சியை உரு வாக்கி வளர்ப்பதன்மூலமாக இப்போ துள்ள நிலையை முற்றிலும் மாற்றிட முடியும்.  விலங்குகளை உண்பது என்ப தையே எண்ணிப்பார்க்க முடியாத அள வுக்கு ஆகிவிடும். பசு மாடு, பன்றி, கோழி ஆகியவற்றின் செல்களைக் கொண்டு இந்நிறுவனம் சிறிய அளவில் இறைச்சியை வளர்த்து வருகிறது’’ என்று குறிப்பிட்டார்.
அந்நிறுவனத்தின் இணையத்தில் குறிப்பிடும்போது, Òஅமெரிக்கர்களாக உள்ள நாங்கள் இறைச்சியை மிகவும் விரும்புகிறோம். பழைய முறையில் உள்ள இறைச்சி உற்பத்தியில் எதிராக உள்ள பக்கவிளைவு,  சுற்று சூழல் பாதிப்பு, உடல்நலத்துக்கு கேடு, நுண்ணு யிர்க்கொல்லிகள், மலம் மற்றும் நோய்க் கிருமிகள் மற்றும் இதர அசுத்தங்கள் உள்ள நாங்கள் விரும்பவில்லை’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது
-விடுதலை,13.2.16

மனித வரலாறு முழுவதையும் பதிய ‘5டி’ நினைவு வட்டு


இங்கிலாந்திலுள்ள சவுத்தாம்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், 360 டெராபைட்டுக்கும் அதிகமான தகவல்களை பதிவு செய்யும் நினைவு வட்டு ஒன்றை உருவாக்கி உள்ளனர்.
இதில், 360 டெராபைட்டுக்கும் அதிகமான தகவல்களை, லேசர் ஒளிக்கற்றை மூலம் பதிவு செய்யலாம். நேனோ படிக கண்ணாடியால் ஆன இந்த கையடக்க வட்டு, அறை வெப்ப நிலையிலேயே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு அழியாமல் நீடிக்கும் என்கிறார், இதை உருவாக்கிய, குழுவைச் சேர்ந்த பேராசிரியர் பீட்டர் காசான்ஸ்கி. இதை, 190 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வைத்திருந்தாலும், 13.8 பில்லியன் ஆண்டுகள் வரை அழியாமல் தகவல்களை பத்திரமாக வைத்திருக்கும் என்கிறார் அவர்.
கல்வெட்டு, உலோக தகடுகள் என்று மனிதன், தன் வரலாற்றை பிற்கால சந்ததியருக்கு பதிந்து வைக்க பல தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறான். அதில் மிகவும் சிறந்ததாக இந்த, ‘5டி’ வட்டு இருக்கும் என்கிறார் காசான்ஸ்கி. உலகின் எல்லா மனிதர்களை பற்றிய தகவல்களையும் இதில் பதிய முடியும் என்பதால், மனித வரலாறு முழுவதும் பிற்கால மக்களுக்கு துல்லியமாக போய் சேர இந்த ஊடகம் உதவும்.
கடந்த, 2013இல் சோதனை அளவில் உருவான, 5டி வட்டில், நியூட்டனின் நூலான, ‘ஆப்டிக்ஸ்’, அமெரிக்க மனித உரிமை பிரகடனம், கிங் ஜேம்சின் பைபிள் போன்றவை சோதனைக்காக பதியப்பட்டன.
அதிவேக லேசர் கதிர் மூலம் தகவல்கள் இதில் நிரந்தரமாக பதியப்படுவதுடன், இதை படிக்கவும் ஒரு சிறிய லேசர் சாதனம் தேவைப்படும்.

வீட்டிலேயே பொம்மை செய்ய ‘3டி’ பிரிண்டர்!
குழந்தைகளுக்கு பொம்மை தயாரிக்கும் நிறுவனம் ‘மேட்டல்.’ இது விரைவில், 20 ஆயிரத்து, 600 ரூபாய் விலையில் சிறுவர்களுக்கான முப்பரிமாண அச்சியந்திரத்தை - 3டி பிரின்டர்- அறிவித்துள்ளது.
‘திங் மேக்கர்’ என்ற அந்த இயந்திரத்தையும், அதனுடன் வரும் செயலியையும் வைத்து சிறுவர், சிறுமியர் வீட்டிலேயே தங்களுக்கு விருப்பமான பொம்மைகளை வடிவமைத்து, அச்சிட்டுக் கொள்ள முடியும்.
முப்பரிமாண மென்பொருள் உலகில் பிஸ்தாவான, ‘ஆடோடெஸ்க்‘குடன் கூட்டாக மேட்டல், பல நூறு பொம்மைகளுக்கான மென்பொருட்களையும் இதனுடன் வெளியிடுகிறது. கூடவே, அவற்றை அச்சிடுவதற்கான பல வண்ண பிளாஸ்டிக் இழைகளையும் விற்கிறது.
மொபைல் அல்லது டேப்லெட்டுடன் ஒயர்லெஸ் மூலம் திங்மேக்கரை இணைத்த பின், சிறுவர்கள் தங்களுக்கு பிடித்த பொம்மை அல்லது அணிகலனை தேர்ந்தெடுத்து அச்சிடலாம் அல்லது, தங்கள் கற்பனையை பயன்படுத்தி புதிய பொம்மை அல்லது, பொருளை வடிவமைத்து உருவாக்கலாம்.
பிளாஸ்டிக் ஒயர்களை உருக்கி பொம்மைகள் செய்யப் படுவதால், வேலை நடக்கும்போது சிறுவர்கள் பிரின்டரை திறந்துவிடாமல் இருக்க, பாதுகாப்பு பூட்டுகள் திங்மேக்கரில் உண்டு.
நினைத்துப் பாருங்கள்... தங்கச்சிக்கு புதிய காதணி, சக பசங்களுடன் விளையாட டைனோசர் பொம்மைகளை வீட்டிலேயே அச்சிட்டு எடுப்பது, எவ்வளவு திரில்லான அனுபவமாக இருக்கும்!


கேமராவை இலகுவாக்கும்
தட்டை லென்ஸ்!

நமக்கு லென்ஸ் என்றா லே ஒன்று மேடாக அல்லது குழியாக இருக்க வேண்டும். ஆனால், அமெ ரிக்காவிலுள்ள யூட்டா பல்கலைக் கழக விஞ்ஞானிகள், காகிதத்தைப் போல மெல்லிய, தட்டை யான லென்சை உருவாக்கியுள்ளனர்.
வழக்கமாக தட்டையான கண்ணாடி ஒளி, வண்ணங்கள் மற்றும் உருவங்களை சிதறடித்துவிடும். ஆனால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேராசிரியர் ராஜேஷ் மேனன் தலைமையிலான ஆய்வுக்குழு உருவாக்கிய தட்டை லென்ஸ், ஒளியை துல்லியமாக குவியச் செய்கிறது.
இந்த லென்சை உருவாக்க சிறப்பான பொருட்கள் எதுவும் தேவையில்லை என்கிறார் ராஜேஷ். “வழக்கமான கண்ணாடி அல்லது பிளாஸ்டிக்கே போதும்.
இதை தயாரிப்பதற்கும் சிறப்பான உற்பத்தி ஆலைகளை உருவாக்க தேவையில்லை, என்கிறார் அவர். இன்னும், இரண்டு அல்லது, மூன்று ஆண்டுகளில் ராஜேஷ் குழுவி னரின் கண்டுபிடிப்பு சந்தைக்கு வரும்.
அப்போது, சோடா புட்டி கண்ணாடிகள், கனமான கேமரா லென்ஸ்கள் பழைய கதையாகிவிடும். கேமரா உள்ள மொபைல்களும் கடன் அட்டை சைசுக்கு வர ஆரம்பித்து விடும்.
-விடுதலை,18.2.16

மூளையில் சின்ன சின்ன மடிப்புகள் இருப்பது ஏன்?

மனித மூளையின் மேல் பகுதியில், ஏன் அத்தனை மடிப்புகள் இருக்கின்றன? இந்தக் கேள்வி, மூளை ஆராய்ச்சி யாளர்களுக்கு பல ஆண்டு புதிராக இருந்தது. ஏன்? குழந்தை பிறக்கும்போது, மூளை மொழுக்கென்று, அதன் கன்னத்தைப் போல தான் இருக்கும்.
20ஆவது வாரத்தில் தான், மெல்ல மெல்ல மடிப்புகள் விழ ஆரம்பிக்கும். இந்த மடிப்புகள் விழுவது ஒன்றரை ஆண்டு வரை நீடிக்கும். சிறிய மண்டை ஓட்டுக்குள், அதிகளவு திறனுள்ள மூளையை வளர்க்க, இயற்கை செய்த ஏற்பாடு இது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
மூளையின் மேல் பரப்பளவு அதிகமாக இருந்தால், அதில் நியூரான்கள் என்ற தகவல் பதிவு அணுக்கள் அதிகமாக இருக்கும். இவை அதிகமாக இருந்தால், அறிவுத்திறனும், தகவல்களை அலசும் திறனும் அதிகமாக இருக்கும் என்று, விஞ்ஞானிகள் பல ஆண்டுகளுக்கு முன் கண்டறிந்தனர்.
கடந்த சில மாதங்களாக, ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்களும், பிரான்ஸ் மற்றும் பின்லாந்து ஆய்வாளர் களும், மூளை மடிப்பு விழும் விதத்தை, முப்பரிமாணத்தில் பதிவு செய்ய ஆரம்பித்தனர்.
அதற்கு, பிறந்த குழந்தையின் மூளையை சி.டி., ஸ்கேன் செய்து, பின் அந்த ஸ்கேனை, முப்பரிமாண அச்சு இயந் திரத்தில் கொடுத்து, குழந்தையின் மூளையை, முப்பரிமாண பிரதியாய் வார்த்து எடுத்தனர். இப்படியே வாரக்கணக்கில் செய்தபோது, மடிப்புகள் படிப்படியாக அதிகரிப்பதை, அவர்களால் பதிவு செய்ய முடிந்தது.
பின் அந்த, 3டி மாடலின் மேல், ‘ஜெல்’ போன்ற ஒரு பொருளை பூசி, அதை ஒரு திரவத்தில் போட்டபோது, மேலும் சில மடிப்புகள் உருவாகின.
‘மிக எளிய இயற்பியல் விதிமுறை மூலம் தான், மூளையின் மேற்பரப்பில் மடிப்புகள் விழுகின்றன என்ற முடிவுக்கு நாங்கள் வந்திருக்கிறோம்‘ என்கிறார், இந்த ஆய்வுக் குழுவைச் சேர்ந்தவரான லட்சுமிநாராயணன் மகாதேவன். இவர்களது ஆய்வு, மூளை சார்ந்த நோய்கள் உள்ளவர்களுக்கு பயன்படும்.
-விடுதலை,18.2.16

பனி வீடுகள் கரையாமல் எப்படி அப்படியே நீடிக்கின்றன?



சூரியனின் கதிர்கள் பூமியின் மத்திய பகுதியை எட்டும்போது வெப்பம் அதிகமாக இருக்கும். ஆனால், சூரியக் கதிர்கள் சாய்வான கோணத்தில் துருவப் பகுதிகளை எட்டும்போது வெப்பம் இருப்பதில்லை.
இதனால் தான் இரு துருவங்களும் உறை பனிப் பிரதேசங்களாகவே இருக்கின்றன. ஆனால், துருவத்தை எட்டும் சூரியக் கதிர்களின் பிரகாசத்திற்கு குறைச்சல் இல்லை.
எங்கும் வெண் பனியாக இருக்கும் போது, அங்கு படும் சூரிய ஒளியின், ‘பளீர்’ பிரதிபலிப்பு கண்களை கூச வைக்கும். கறுப்புக் கண்ணாடி அணியாமல் எதையும் பார்க்க முடியாத நிலைகூட வருவதுண்டு.
பனி வீடுகளை, ‘இக்ளூ’ என்று எஸ்கிமோக்கள் அழைக்கின்றனர். பனியை செங்கல் போல இறுக்கமாக வார்த்து எடுத்து, அடுக்கி, இக்ளூவை உருவாக்குகின்றனர். அரைக் கோளம் போல இருக்கும் இக்ளூவின் கூரை, கடும் பனிப் புயலையும் தாங்கும் தன்மை கொண்டது. அந்த வடிவத்திற்கு அத்தனை சக்தி உண்டு.
இக்ளூவின் சுவர்கள் பனிக்கட்டியால் ஆனது என்றாலும், அது திடமாக இருப்பதால் வெளியே உள்ள குளிர், உள்ளே வராமல் தடுத்துவிடும். உள்ளே மனிதர்கள் இருக்கும்போது அவர்களது உடலின் உஷ்ணமும் வெளியே போகாது. இதனால், எப்போதும் இக்ளூவுக்குள், 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை தக்கவைக்க முடியும்.
தொடர்ந்து பல நாட்கள் பனிப்புயல் வீசும்போது, இக்ளூவுக்குள் போதிய உணவு இருந்தால், எந்தவித பாதிப்பும் இல்லாமல் தப்பிக்கலாம்.
புயல் நின்றதும் வெளியே வந்து, சூரியனுக்கு, ‘ஹாய்’ சொல்ல எஸ்கிமோக்களால் முடியும். இக்ளூக்களுக்கு யாரும் பட்டா கேட்பதில்லை; ஏனெனில் அவை தற்காலிக வசிப் பிடங்களே. தவிர, வேட்டைத் தொழில் புரியும் எஸ்கிமோக்களில் பெரும்பாலானோர் நாடோடிகளே.
-விடுதலை,11.2.16

நுண் ஈர்ப்பு விசை


விண்வெளியில், புவி ஈர்ப்பு சக்தி இல்லை என்பது தவறான கருத்து. பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பருப்பொருட்களுக்கும் ஒன்றை ஒன்று ஈர்க்கும் சக்தி உண்டு. அதிக எடை உள்ள பொருளுக்கு, அதிக ஈர்ப்பு சக்தி உண்டு. பூமி மிகப் பெரிய பொருள்; அதன் ஈர்ப்பு சக்தி பல ஆயிரம் கி.மீ.,க்கள் வரை இருக்கத்தான் செய்கிறது.
பூமியிலிருந்து தூரமாக செல்லச் செல்ல, அதன் ஈர்ப்பு சக்தி குறைந்து கொண்டே போகுமே தவிர, ஈர்ப்பு விசையே இல்லாமல் போய்விடாது. அதனால் தான் விஞ்ஞானிகள், பூஜ்ஜிய ஈர்ப்பு விசை - ‘ஜீரோ கிரேவிட்டி’ என்பதற்கு பதிலாக, நுண் ஈர்ப்பு விசை - ‘மைக்ரோ கிரேவிட்டி’ என்று சொல்கின்றனர். பூமியிலிருந்து, 400 கி.மீ., தொலைவில் சுற்றிவரும், சர்வதேச விண்வெளி நிலையத்தை, 90 சதவீத புவி ஈர்ப்பு விசை எட்டவே செய்கிறது. ஆனால், அந்த நிலையம் மணிக்கு, 27,600 கி.மீ., வேகத்தில் பூமியை சுற்றி வருகிறது.
இதனால் தான் அதனுள் இருக்கும் விண்வெளி ஆய்வாளர்கள் மிதக்கின்றனர்; புவி ஈர்ப்பு விசை இல்லாததால் அல்ல. விண் கற்களும் அப்படித்தான், பிற கோள்களின் ஈர்ப்பு விசைக்கு உட்பட்டு பயணிக்கின்றன. அப்படி பயணிக்கையில் பூமியின் ஈர்ப்பு விசை வலுவாக உள்ள பகுதிக்கு வரும்போது, அவை வேகமாக பூமியின் வளி மண்டலத்திற்குள் அதிவேகமாக நுழைகின்றன.
சில கிராம்களே எடை கொண்ட ஒரு விண் கல், மணிக்கு, 10 முதல் 70 கி.மீ., வேகத்தில் பயணிக்கும்.
அப்போது வளி மண்டல உராய்வினால், அதன் மேற்பரப்பு தீப்பிடித்து எரியும். இதை இரவு நேரத்தில் பார்க்கும்போது, வால் நட்சத்திரம் நகர்வது போலத் தெரியும்.
இப்படி எரிந்து மிஞ்சிய விண்கல்தான், பூமி மீது அதி வேகமாக மோதுகிறது.
-விடுதலை,11.2.16

மதத்துக்கும் சோதிடத்துக்கும் மரண அடி புதிய பூமி கண்டுபிடிப்பு


லாஸ்ஏஞ்சல்ஸ், மே29- மனிதர்கள் வாழ வாய்ப் புள்ள புதிய பூமி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது நமது பூமியிலிருந்து 1200 ஒளி ஆண்டு (60 லட்சம் கோடி மைல் ஓர் ஒளியாண்டாகும்)தூரத்தில் உள்ளது.

பூமியில் இருந்து சுமார் 1200 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் மனிதன் வாழ்வதற்கு ஏற்றதாகக் கருதப்படும் புதிய பூமி கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அமெரிக்கா வின் நாசா விண்வெளி ஆய்வு மய்யம் கடந்த 2009-ஆம் ஆண்டில் கெப்ளர் என்ற விண் கலத்தை விண்ணில் செலுத்தியது. அதிநவீன தொலைநோக்கி பொருத்தப்பட்ட இந்த விண்கலம் பூமியில் இருந்து 150 மில்லியன் கி.மீ. தொலைவில் சுற்றி வருகிறது. இதுவரை 2300-க்கும் மேற்பட்ட கிரகங்களை கெப்ளர் கண்டுபிடித்துள்ளது. அந்த வரிசையில் பூமியில் இருந்து 1200 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் புதிய பூமியை கெப்ளர் கண்டறிந்துள்ளது.

அந்த கிரகத்துக்கு கெப்ளர்-62.எப் என்று நாசா விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இது பூமியை விட 1.4 மடங்கு பெரிதாக உள்ளது. பூமியில் 0.04 சதவீதம் கார்பன் டை ஆக்ஸைடு உள்ளது. இதே போல கெப்ளர் 62.எப் கிரகத்திலும் கார்பைன் டை ஆக்ஸைடு இருப்பதாக கருதப்படுகிறது.  அந்த கிரகத்தில் பாறை களும் கடல்களும் இருக்கக்கூடும். அங்கு தண்ணிர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. எனவே நிச்சய மாக அங்கு மனிதன் உயிர் வாழ முடியும் என்றுணீ விஞ்ஞானிகள் உறுதியாக நம்புகின்றனர்.
கெப்ளர் 62.எப் கிரகமும் இதர 4 கிரகங்களும் சூரியனைப் போன்ற ஒரு பெரிய நட்சத்திரத்தை சுற்றி வருகின்றன. அந்த பெரிய நட்சத்திரம் சூரியனைவிட சிறியதாகவும் வெப்பம் குறைந்ததாகவும் உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பூமியை போன்ற சில கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட் டாலும் தற்போது அடையாளம் காணப் பட்டுள்ள கெப்ளர் 62எப் மிகுந்த நம்பிக் கையளிப்பதாக உள் ளது. எனவே அந்த கிரகத்தை நாசா விஞ்ஞானிகள் ‘சூப்பர் பூமி என்று செல்லமாக அழைக்கின்றனர். புதிய பூமி குறித்து தொடர்ந்து ஆராய்ச்சிகள் மேற் கொள்ளப்படும் என்று நாசா அறிவித்துள்ளது.
-விடுதலை,29.5.16.

ஞாயிறு, 29 மே, 2016

பொருட்களின் நான்காம் நிலை கண்டுபிடிப்பு

பொருட்களின் நான்காம் நிலை கண்டுபிடிப்பு    
உலகில் பொருட்கள் மூன்று நிலைகளுன் ஒன்றாகத்தான் இருக்க முடியும். திரவம், திடம், வாயு. இது பள்ளிக்கூடத்துப் பாடம். இது விரைவில் நான்காக அதிகரிக்கக் கூடும். நீர் மூலக்கூறுகளை ஆராய்ந்து கொண்டிருந்த விஞ்ஞானிகள், தற்செயலாக இந்த மூன்று நிலைகளையும் சாராத ஒரு புதிய நிலையில் உள்ள பொருளைக் கண்டனர்.
இந்த புதிய நிலைக்கு அமெரிக்காவின் ஆற்றல் துறையை சேர்ந்த ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வக விஞ்ஞானிகள், ‘குவாண்டம் சுழல் திரவம்‘ என்று பெயரிட்டுள்ளனர்.  நாற்பது வருடங்களுக்கு முன்பிருந்தே சில பொருட்கள், ‘நான்காம் நிலை’யில் இருப்பது பற்றி அவ்வப்போது பேச்சு அடிபட்டு வந்தது. குறிப்பாக சில வகை காந்தங்களில் இந்த நிலை இருப்பதாக சொல்லப்பட்டது.
குவாண்டம் இயற்பியலின்படி நீரில் உள்ள இரண்டு ஹைட்ரஜன் மூலக்கூறுகளும், ஒரு ஆக்சிஜன் மூலக்கூறும் இதுவரை காணாத வடிவத்துடனும், தன்மையுடனும் ஆய்வுக்கூடத்தில் செயல்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
ஆனால், ஆய்வுக் கட்டுரை மூலம் அந்த நான்காம் நிலையை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியது இதுவே முதல் முறை. இந்த ஆய்வு முடிவுகள், ‘பிசிகல் ரிவ்யூ ஆப் லெட்டர்ஸ்’ என்ற இதழில் வெளியாகியுள்ளது.
-விடுதலை,28.4.16

தாவரங்களுக்கும் நினைவாற்றல் உண்டு


தாவரங்களுக்கும் நினைவாற்றல் உண்டு
இந்திய விஞ்ஞானி கண்டுபிடிப்பு
இந்திய உயிரியல் வல்லுநரான சோகினி சக்ரவர்த்தி, சமீபத்தில் ஒரு மாபெரும் தாவரவியல் புதிருக்கு விடை கண்டுபிடித்திருக்கிறார்.
தாவரங்களுக்கும் நினைவாற்றல் உண்டு என்பதுதான் அவரது அசத்தல் கண்டுபிடிப்பு. பலவகையான கடுகு செடிகளில் உள்ள 20,000 புரதங்களின் தகவல் தொகுப்பை மூன்று வருடங்கள் ஆராய்ந்த சோகினி, தாவர புரதங்களில் ஒரு சில மட்டும் ‘பிரையான்’ என்ற புரதங்களைப் போல இயங்குவதை கவனித்தார். பொதுவாக பிரையான் புரதங்கள், ஈஸ்ட், பூச்சிகள், பாலூட்டிகளின் உடலில் இருக்கும். இவை அவற்றின் நினைவாற்றலுக்கு உதவக்கூடியவை.
ஆனால், தாவரங்களில் பிரையான் போன்ற தன்மையுள்ள புரதங்கள் இருப்பது சோகினியின் ஆய்வு மூலமே உலகுக்கு தெரிய வந்துள்ளது. எப்படி பருவம் வந்ததும் செடிகள் பூக்கின்றன; வெயில், மழை, குளிர், பனி என்று வெளிப்புற தட்ப வெப்பத்தை உணர்ந்து, அவற்றை தாங்கிக்கொள்ளும் விதத்தில் எப்படி தாவரங்கள் தங்கள் உள் பாகங்களில் மாறுதல் செய்கின்றன? இதுபோல, தாவரவியலில் பல ஆண்டுகளாக விடை காண முடியாத கேள்விகளுக்கு சோகினி முகர்ஜியின் கண்டுபிடிப்பு, பதிலை கண்டடைய உதவும்.
தாவரங்கள் சுற்றுச்சூழலை உணர்ந்து தகவல்களை சேகரித்து நீண்டகால நினைவுத்தொகுப்பில் வைத்திருந் தால்தான் அவை, சூழ்நிலைக்கேற்றவாறு தங்களை தகவ வமைத்துக்கொள்ள முடியும் என்கின்றனர் தாவரவியல் வல்லுநர்கள்.
பிரையான் புரதங்கள் தங்களை புதுப்பித்தபடியே இருக்கவும், அவை ஒரு நினைவுத் தொகுப்பாக வளரவும் கூடியவை. டில்லி பல்கலைக்கழகத்தில் தாவரவியல் படித்த கினி, இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பிற்காக சென்றார்.
பிறகு, அமெரிக்காவில் உள்ள மாசாசூசெட்ஸ் தொழில் நுட்ப நிலையத்தின் உயிரி மருத்துவ மய்யத்தில் ஆராய்ச்சியாளராக சேர்ந்தார்.
-விடுதலை,28.4.16

ஆக்சிஜனை மட்டும் நாம் எப்படி சுவாசிக்கிறோம்?

காற்றில் பலவித வாயுக்கள் கலந்திருந்தாலும்,
ஆக்சிஜனை மட்டும் நாம் எப்படி சுவாசிக்கிறோம்?
காற்றில் நைட்ரஜன் 78.08 சதவீதமும், ஆக்சிஜன் 20.95 சதவீதமும் உள்ளன. இவை தவிர ஆர்கான், கார்பன் டை ஆக்சைடு, நியான், ஹீலியம், மீத்தேன், கிரிப்டான், நைட்ரஜன் ஆக்சைடு, ஹைட்ரஜன், ஜெனான், ஓசோன் ஆகிய வாயுக் களும் காற்றில் கலந்திருக்கின்றன.
அதுமட்டுமல்ல, நீராவியும், தூசு தும்புகளும், மாசுபாடு களும் கலந்திருக்கின்றன. இவை மட்டும் இடத்துக்கு இடம் மாறுபடும்.
நாம் காற்றை மூக்கு வழியே சுவாசித்ததும், அது மூச்சுக் குழாய் வழியே நுரையீரலை அடைகிறது. நுரையீரலில் மரங்களின் வேர் போல விரிந்திருக்கும் மிக, மிக நுண்ணிய குழாய்களை காற்று அடைந்ததும், அங்கு வேதியியல் மாற்றத்தால் ஆக்சிஜன் மட்டும் சிறிதளவு நம் ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினுடன் கலக்கிறது.
பிறகு, ஆக்சிஜன் தோய்ந்த ரத்தம் உடலெங்கும் உள்ள செல்களுக்கு அனுப்பப்படுகிறது.
காற்றில் அதிகமாக உள்ள நைட்ரஜன், உடலில் எதனுடனும் வினை புரியாத தன்மை உள்ளது. எனவே, எந்த அளவுக்கு நைட்ரஜன் நம் சுவாசத்தில் உள்ளே போகிறதோ, அதே அளவு வெளிமூச்சு வழியே வெளியேறுகிறது.
இதைத் தவிர கார்பன் டை ஆக்சைடும் வெளியேற்றப் படுகிறது.
-விடுதலை,28.4.16

வெள்ளி, 13 மே, 2016

வோல்ட் (மின்சாரம்) பெயர் எப்படி வந்தது?



மின்சாரத்தின் பயன்பாட்டில் குறியீடாக உள்ள வோல்ட் என்ற பதம் அலெசான்ரா வோல்ட்டா என்ப வரின் நினைவாக வைக்கப்பட்டது.   இத்தாலி நாட்டில்  1745-ஆம் ஆண்டு இதே நாளில் படகோட்டியின் மகனாகப் பிறந்தார். நகரத்தின் வெளியே இருந்ததால், அடிக்கடி மின்னும் மின்னல் இவரை மிகவும் ஈர்த்தது. சிறுவயதில் இருந்தே மின்னல் மின்சாரம் குறித்து ஆராய்வதில் பேரார்வம் கொண்டிருந்தார்.
இதன் விளைவாக மின்சாரம் என்ற ஒன்று உருவாவதற்கு முன்னோடியாக இருந்த அறிவியல் அறிஞர்களுள் இவர் முதன்மையானவர். இவருடைய காலகட்டத்தில் அய்ரோப் பாவில் மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டாலும், அது பொழுதுபோக் கிற்காகவும், தனிப்பட்ட மனிதர்களின் பயன்பாட்டிற்கு மாத்திரமே இருந்தது.
மின்சாரத்தை பயன்படுத்தும் முறையில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்த அலக்சாண்ட்ரா அனைவரும் இதை பயன்படுத்தவேண்டும் என்ற பேரவா இவருக்கு இருந்தது.  இந்த ஆவல் இவரை மின்கலன்(பேட்டரி) கண்டுபிடிக்க உறுதுணையாக இருந்தது.  மின்கலன் கண்டறியும் போது மின்கலனை அளவிடும் வோல்டா மீட்டரையும் கண்டுபிடித்தார்.
மின்சாரம் பற்றிய ஆய்வுத்தூண்டல் காரணமாக பல்வேறு தனிமங்களில் இருந்துமின்சாரம் எடுக்கும் முறையைக் உலகுக்கு எடுத்துக்காட்டினார். தனிமங்களை ஆய்வு செய்யும் போது தான் இவர் மீத்தேன் என்னும் வாயுவையும் கண்டுபிடித்தார். இவரது குடும்பம் முழுவதுமே பழமைவாத கிறிஸ்தவ மதப்பிரிவைச்சேர்ந்தவர்கள்.
சூரியன் மறைந்த பிறகு சமைப்பதோ, விளக்கு பற்றவைப்பதோ, கூடிப்பேசுவதோ பழமைவாத கிறிஸ்தவ முறையில் கடுமையான குற்றமாகக் கருதப்பட்டது. அப்படிப்பட்ட  குடும்பத்தில் பிறந்த இவர் இரவைப் பகலாக்கும் மின்சாரத்தை அனைத்து மக்களிடமும் கொண்டு செல்லும் மின்கலம்(பேட்டரி) கண்டறிந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இவர் தன்னுடைய 82-ஆவது வயதில் மே மாதம் 5 ஆம் தேதி மரணமடைந்தார்.
-விடுதலை ஞா.ம.,21.2.15