விண்வெளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விண்வெளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

வெளி’ என்பது வெற்றிடம் அல்லவாம்! விந்தையான சுரங்கமாம்!



 ஸ்பேஸ் அல்லது விண்வெளி என்றால் வெற்றிடம் என்றுதான் நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் விண்வெளி உண்மையில் வெற்றிடம் கிடையாது என்று தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நமது பூமி இருக்கும் சூரியக் குடும்பத்திலிருந்து தொலைதூர நட்சத்திரங்கள் வரை ஒரு விந்தையான சுரங்கப்பாதை பரவியிருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இப்படி இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று விஞ்ஞானிகள் காலங்காலமாக நம்பி வந்த நிலையில், தற்போது இதற்கான ஆதாரம் கிடைத்திருக்கிறது.

இந்த சுரங்கப்பாதை சூடான, குறைந்த அடர்த்தி கொண்ட பிளாஸ்மாவால் ஆனது. இ-ரோசிட்டா எக்ஸ்-ரே தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்ட இந்த கண்டுபிடிப்பு, நம் பால்வெளியின் மறைந்திருக்கும் கட்டமைப்புகள் பற்றிய புதிய தகவல்களை அளிக்கிறது. அத்துடன், விண்வெளி வெறுமையானது என்ற நீண்டகாலக் கருத்தை மறுபரிசீலனை செய்யத் தூண்டுகிறது.

பல ஆண்டுகளாக, விஞ்ஞானிகளிடையே ஒரு பொதுவான கருத்து நிலவி வந்தது. அதாவது, சூரியன் “உள்ளூர் சூடான குமிழி” எனப்படும் ஒரு விந்தையான பகுதிக்குள் அமைந்துள்ளது என்பதுதான் அது. இந்தக் குமிழி சுமார் 300 ஒளி ஆண்டுகள் அகலமானது. ஒளி ஒரு நொடிக்கு 3 லட்சம் கி.மீ வேகத்தில் பயணிக்கும். ஓர் ஆண்டு முழுவதும் இது எவ்வளவு தொலைவில் பயணிக்கிறதோ அதைத்தான் ஒளி ஆண்டு என்கிறார்கள்.

இந்த சூடான குமிழி, சூப்பர்நோவா வெடிப்புகளால் இது உருவானது. சுற்றியுள்ள வாயுவை சூடாக்கி, சூடான, மெல்லிய பிளாஸ்மாவின் ஒரு குமிழியை உருவாக்கின. இதுவரை, இது தனிமைப்படுத்தப்பட்ட ஓர் அம்சமாகவே கருதப்பட்டது.

மாக்ஸ் பிளாங்க் நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் எல். எல். சாலா மற்றும் அவரது சக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. நாம் முன்னாடி நம்பிக்கொண்டிருந்ததை விட இந்தக் குமிழி அதிகத் தொடர்பு கொண்டதாக இருக்கலாம் என ஆய்வுகள் சொல்கின்றன. ஆய்வில் சென்டாரஸ் விண்மீன் குழுவை நோக்கி நீட்டிக்கப்படும் ஒரு சுரங்கப்பாதை போன்ற அமைப்பையும், மேலும் கேனிஸ் மேஜர் திசை நோக்கி செல்லும் மற்றொரு பாதையையும் வெளிப்படுத்தியுள்ளன.

இப்போது நாம் இந்த குழியின் மய்யத்திற்கு அருகில் இருக்கிறோம், இது திட்டமிட்டது அல்ல, தற்செயலானது. மனித இனம் உருவாவதற்கு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இது உருவாகிவிட்டது. குறிப்பாகச் சொல்வதெனில் நாம் வான வேடிக்கைகளை தவற விட்டுவிட்டோம். அது மட்டுமல்லாது, ஒரு பெரிய அண்ட நிகழ்வின் விளைவுக்குள் நாம் தற்செயலாக நுழைந்தது போல உள்ளது. எதிர்காலத்தில் இது பற்றிய ஆய்வு அதிகரிக்கும் அப்போது நாம் இன்னும் அதிகமான விஷயங்களை தெரிந்துகொள்வோம்.

- விடுதலை நாளேடு,21.8.25

செவ்வாய், 6 ஜூலை, 2021

விண்வெளிக்கு செல்லும் ஆந்திர பெண் விஞ்ஞானி


கேப் கேனாவரல், ஜூலை 4- மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் போட்டியில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோ சின் புளூ ஆரிஜின் நிறுவனம் மற்றும் தொழிலதிபர் ரிச்சர்டு பிரான்சனின் விர்ஜின் கேலக்டிக் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வரும் செப்டம்பரில் முதல் முறையாக தனியார் விண்கலம் மூலம் மக்களை விண் வெளிக்கு சுற்றுலா அழைத்துச் செல்கிறது. பெசோஸ் நிறு வனம் வரும் 20ஆம் தேதி முதல் முறையாக மனிதர்களை ஏற்றிக் கொண்டு சோதனை ஓட்டமாக விண்வெளிக்கு விண் கலத்தை  அனுப்புகிறது. இதில், பெசோஸ், அவரது சகோதரர் உள்ளிட்டோர் பயணம் செய்ய உள்ளனர்.

இந்நிலையில், விண்வெளிக்கு பயணிப்பதில் தற்போது பெசோசை முந்த இருக்கிறார் சக போட்டியாளர் பிரான்சன். இவரது நிறுவனம் வரும் 11ஆம் தேதியே விண்வெளிக்கு விண்கலத்தை அனுப்ப இருப்பதாக அறிவித்துள்ளது. அதில், பிரான்சன், ஆந்திராவை சேர்ந்த சிரிஷா பண்ட்லா உட்பட 6 பேர் செல்கின்றனர். டெக்சாஸ், ஹூஸ்டனில் வளர்ந்த இந்திய வம்சாவளியான சிரிஷா ஜார்ஜ், வாஷிங்டன் பல்கலை யில் எம்பிஏ பட்டம் பெற்றவர். விர்ஜின் கேலக்டிக்கில் பணி யாற்றி வரும் இவர், விண்வெளி திட்டத்தில் முக்கிய பங் காற்றியவர்.

வியாழன், 5 மார்ச், 2020

மனிதர்கள் வாழக்கூடிய புதிய விண்வெளி கண்டுபிடிப்பு

பூமியை விட இரண்டு மடங்கு அதிக அளவிலான எதிர்காலத்தில் மனிதர்கள் வாழக்கூடிய விண்வெளியை விண்வெளி வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதனை பற்றி விரிவாக பார்ப்போம்.

பூமியிலிருந்து 124 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள 2-18  என்றழைக்கபடும் எக்சோபிளானட் கிரகமானது பூமிக்கும் நெப்டியூனுக்கும் இடையே உள்ளது.

இது பூமியை விட கணிசத்தில் பெரியதாகவும் நெப்டியூனை விட சிறியதாவும் காணப்படுகிறது. இதன் ஆரம் 2.6 மடங்கு மற்றும் பூமியின் நிறை 8.6 மடங்கு ஆகும். 2-18 கிரகமானது 2-18 என்ற சிவப்பு விண்மீனை சுற்றி வரும் நிலையில் மனித வாழ்விடத்திற்கு சரியான தூரத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

வளிமண்டலத்தின் அளவும், அதன் அடிப்பகுதி நிலை களும் தெரியாத நிலையில் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் நிறைந்த நீர் நீராவி இருப்பதாகவும் வானியலாளர்கள் கண் டறிந்துள்ளனர்.

எக்சோபிளானட் கிரகத்தில் ஹைட்ரஜன் உறைகளின் தடிமன் மற்றும் ஆழத்தினை கண்டறிந்ததில் அதன் அதிகபட்ச அளவு 6 சதவீதமாகும் என்று உறுதி செய்துள்ளனர். வளிமண்டலத்தில் கணிசமான அளவு  நீராவியுடன் ஹைட்ரஜன் அதிகம் இருப்பதால் அம்மோனியா,மீத்தேன் போன்ற வேதிப்பொருட்களின் அளவு குறைவாகவே இருக்கும்.

இதற்கு உயிரியல் செயல்பாடுகளே காரணமாக இருக்க முடியும் என்பதை ஆராய்ந்து வருகின்றனர். வளிமண்டலத்தின் கலவை மற்றும் கட்டமைப்பை விரிவுபடுத்தி கட்டுப்படுத்து வதற்கு வளிமண்டல கலவை, அளவு மற்றும் நிறையை அவதானித்து வந்துள்ளனர்.

எண் மாடலிங் மற்றும் புள்ளிவிவர முறைகளை பயன்படுத்தி வளிமண்டலத்தின் உள் அமைப்பு மற்றும் வெப்ப இயக்கவியலை கட்டுபடுத்தினர்.

எக்சோபிளானட் 2-18 கிரகமானது மனிதர்கள் வாழும் நிலைகளை கொண்டிருக்கும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் எதிர்கால அவதானிப்புபடி ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கி மூலம் தங்களது கண்டுபிடிப்பு பற்றி மேற்கொண்டு தெரிவிக்கிறோம் என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

- விடுதலை நாளேடு 5 .3.20

வியாழன், 24 ஜனவரி, 2019

விண்வெளியில் ரேடியோ சிக்னல்?



சுமார் 150 கோடி ஒளி ஆண்டு தூரத்தில் உள்ள ஒரு நட்சத்திரக் கூட்டத்தில் இருந்து வந்த ரேடியோ சிக்னல் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக வானிய லாளர்கள் கூறியுள்ளனர்.

கனடா நாட்டு டெலஸ்கோப் உதவியுடன் இது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப் படுகிறது.

மிகச்சரியாக அது என்னவிதமான ரேடியோ அலைகள் என்பதோ, மிகச்சரியாக எங்கிருந்து வந்தது என்பது பற்றியோ தெரியவில்லை.

13 ரேடியோ வேக அதிர்வுகளில் ஒரு அசாதாரணமான சமிக்ஞை 150 கோடி ஒளி ஆண்டு தூரத்தில் இருந்து திரும்பத் திரும்ப வந்தது.

ஒரு விநாடிக்கு சுமார் 3 லட்சம் கி.மீ. வேகத்தில் ஒளி பயணிக்கும். இந்த வேகத்தில் ஒளி ஓராண்டு பயணித்தால் அடையும் தூரமே ‘ஓர் ஒளி ஆண்டு தூரம்‘ எனப்படும்.

எனவே, விநாடிக்கு 3 லட்சம் கி.மீ வேகத்தில் 150 கோடி ஆண்டுகள் பயணித்தால் செல்லக்கூடிய தூரத்தில் இருந்து இந்த மர்ம ரேடியோ சிக்னல் வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

ஒரே இடத்தில் இருந்து ரேடியோ வேக அதிர்வுகள் திரும்பத் திரும்ப வரும் நிகழ்வு இதற்கு முன்பு ஒரே ஒருமுறை நடந்துள்ளது. அப்போது வேறொரு டெலஸ்கோப் உதவியுடன் அந்த சிக்னல் கண்டறியப்பட்டது.

கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின், ஒகநாகன் பள்ளத்தாக்கில் உள்ள சைம் வான் நோக்கியகம் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது.

இந்த வான் நோக்கியகத்தில் கடந்த ஆண்டு நிறுவப்பட்ட 100 மீட்டர் நீள அரை உருளை வடிவ ஆண்டெனாக்கள் உடனடியாக இந்த 13 ரேடியோ வேக அதிர்வுகளைக் கண்டுபிடித்தது. இந்த ஆண்டெனாக்கள் தினமும் வடதிசை வானத்தை முழுவதுமாக ஸ்கேன் செய்து பார்க்கின்றன.

‘நேச்சர்’ ஆய்விதழில் இந்த ஆய்வு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

- விடுதலை நாளேடு, 24.1.19