வியாழன், 26 மே, 2022

பூமிக்குத் தண்ணீர் வந்த வழி

 

நமது பால்வெளி மண்டலத்தில் உயிர் உள்ள ஒரே கோளாக நமது பூமி மட்டுமே திகழ்கிறதுஇந்த பூமிக் கோளின் சிறப்பே இதில் உயிர்கள் உள்ளது என்று பலர் கூறினாலும்,உண்மையில் எந்த கோளிலும் இல்லாத ஒரு சிறந்த பொருளை இந்த பூமி கொண்டுள்ளதுஅது தான் தண்ணீர்தண்ணீர் இருந்தால் மட்டுமே அந்தக் கோளில் உயிர்கள் உருவாகவும்உயிர் வாழவும் முடியும் என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.

இதனால் தான் நமது பூமி சிறப்பானதாக இருக்கிறதுசரிபூமி எப்படி உருவாகியது என்பது தெரியும்ஆனால்பூமியில் தண்ணீர் எப்படி உருவாகியது இது குறித்து பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் இரண்டு மட்டுமே உறுதியாகி உள்ளனஒன்று எரிநட்சத்திரங்களின் மோதல்மற்றொன்று பூமியில் இருந்த வாயுக்கள் வெப்பத்தால் இணைந்து நீராவியாகி பிறகுநீராக மாறியது

ஆனால் இரண்டு கருத்துக்களை அறிவியலாளர்கள் தெளிவுபடுத்தியிருந்தாலும்அது எதுவும் உறுதிசெய்ய முடியாமல் இருந்தது என்பதே உண்மைஆனால்நீண்ட நாட்களுக்குப் பிறகுஇப்போது அறிவியலாளர்கள் ஒரு முடிவிற்கு வந்துவிட்டனர்பூமியில் தண்ணீர் எப்படி உருவாகியது என்பதற்கான பின்னணியை தற்பொழுது வெளியிட்டுள்ளனர்.

நமது பால்வெளி மண்டலத்தில் இருக்கும் ஒட்டுமொத்த கோள்களில் பிரமிக்க வைக்கும் கோளாக இதுவரை பூமி திகழ்ந்துவருகிறதுநமது பூமி நீரின் அளவு காரணமாகத் தனித்து நிற்கிறதுபூமி பெரும்பாலும் “தி ப்ளூ பிளானட்” என்று இதனால் தான் குறிப்பிடப்படுகிறதுபூமியில் நீர் உருவாகியதற்குச் சூரியன் முக்கிய காரணமாக இருந்துள்ளதுபூமியின் மேற்பரப்பில் சுமார் 70 சதவீதம் நீரால் ஆனது என்பதை நாம் பள்ளிக்கூடப் பாடங்களில் இருந்தே படித்து வருகிறோம்இந்த 70 சதவீத தண்ணீர் பூமியில் உருவாக முதல் காரணமாகக் கூறப்படுவது கார்பனேசியஸ் அல்லது வெறுமனே “சி-வகை சிறுகோள்கள்” என்று அழைக்கப்படும் சிறுகோள்களின் தாக்குதல் காரணமாக உருவாகியிருக்கலாம் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சிறுகோள் குழுவிலிருந்து தான் பூமிக்கு நீர் வந்திருக்க வாய்ப்புள்ளதாக முன்னர் இருந்தே விஞ்ஞானிகள் சந்தேகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதுஇருப்பினும்இது மட்டும் காரணமாக இருக்க முடியாது என்பதை உணர்ந்த அறிவியலாளர்கள்  தொடர்ந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டுபூமியில் தண்ணீர் எப்படி உருவாகியது என்பதை நிரூபிக்க முயன்று வந்தனர்இறுதியாக,  நீர் குறித்த முடிவிற்கு வந்துள்ளனர்.

பூமியின் நீர் டியூட்டீரியத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும்இது “சி” டைப் சிறுகோள் தாக்குதல் காரணமாக - பூமியில் இருக்கும் நீரின் ஒரே ஆதாரமாக மாறியிருக்க வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்அடிப்படையில் இவை ஹைட்ரஜனின் கனமான பதிப்பாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.பூமியில் நீரை உருவாக்குவதில் நமது சூரியன் முக்கிய பங்காற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுகளால் விஞ்ஞானிகளுக்குச் சாதமான பதில் கிடைத்துள்ளது.

சூரியக் காற்றுகள் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் அயனிகளால் சார்ஜ் செய்யப்படுகின்றனஅவை சிறுகோள்கள் அல்லது சிறுகோள் தூசியுடன் தொடர்பு கொண்டால்காற்றில் உள்ள ஹைட்ரஜன் அயனிகள் சிறுகோளில் உள்ள ஆக்ஸிஜன் அணுக்களுடன் தொடர்புகொண்டு பூமியில் மூலக்கூறை உருவாக்கி இருக்கும் என்பதை இது குறிக்கிறதுபூமியின் பரந்த நீர்நிலைகளில் சூரியனின் பங்குக்கான முதல் சான்று ஜப்பானிய விண்வெளி ஏஜென்சியின் ஹயபுசா விண்வெளி ஆய்வு மூலம் 2010 இல் பூமிக்கு வாங்கப்பட்ட இடோகாவா என்ற சிறுகோள் மாதிரிகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதுஇது பூமியில் எப்படி நீர் உருவாகியது என்ற ஆராய்ச்சிக்கு முக்கிய பங்கை வழங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேச்சர் வானியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஒரு ஆய்வறிக்கையில்,

விஞ்ஞானிகள் பூமியில் தண்ணீருக்குப் பங்களிப்பவைகளில் முக்கிய காரணிகளில் ஒன்றாகச் சூரியனை உறுதிப்படுத்தியுள்ளனர் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளதுசூரியக் காற்றிலிருந்து வரும் ஹைட்ரஜனும் சிறுகோள்களில் இருந்து வெளியான டியூட்டீரியமும் இணைந்து தான் பூமியில் இன்று நாம் உயிர் வாழ முக்கிய காரணமாக அமைந்துள்ள நீரை உருவாக்க முக்கிய முதுகெலும்பாகச் செயல்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெள்ளி, 20 மே, 2022

நிலவு மண்ணில் தாவரம் வளர்வது வியப்பானதா!

         • Viduthalai


நாம் இருக்கும் இந்த புவியில் உயிரினங்களும், தாவர இனங்களும் செழித்து பெருகி இருக்க இயற்கை சூழ்நிலையே காரணமாகும். 

இதில் முதன்மையாக தாவர இனங்கள் வளர்வதற்கு அடிப்படையாக மண் தேவைப்படுகிறது.

புவியில் 118 வகையான தனிமங்களும் மற்றும் அதனால் உண்டான கலவைகளும், சேர்மங்களும் உள்ளன. அதோடு மட்டுமல்லாமல் உயிரினங்களா லும், தாவரங்களாலும் உண்டான கரிம சேர்மங்களும் (அமினோ அமிலங்கள்) உள்ளன. இவற்றிற்கு பொது வான அறிவியல் பெயரும் இடப்பட்டுள்ளன.

இவற்றில் நம் புவியில் உள்ள மண்ணும் ஒரு தனிமம் தான். 

தாவரங்கள் வளர்வதற்கு மண் ஏதுவாக  இருக்கிறது. 

நிலவின் மண்ணை எடுத்து அதில் தாவரங்களை 'நாசா' அறிவியலாளர்கள் வளர்த்து உள்ளதாக ஒரு செய்தி வந்துள்ளது.

உண்மையில் தாவரங்கள் வளர மண் தேவையா?

தாவரங்கள் வளர மண் தேவையில்லை என்பதே உண்மையாகும்.

தாவரங்கள் வளர ஊட்டச்சத்தும் நீரும், காற்றும் சூரிய ஒளியும் மட்டுமே இருந்தாலே போதும். மண் தேவையில்லை.

புவி மண்ணில் மேற்கண்ட அனைத்தும் கிடைப்பதால் தாவரங்கள் செழித்து வளர்கின்றன.

மண்ணில்லா வேளாண்மை (ஹைட்ரோபோனிக்) முறை என்றே ஒரு வேளாண்மை முறை உள்ளது. 

இதில் மண்ணை பயன்படுத்துவதில்லை, பெரும் பான்மையாக நீர் தான் பயன்படுகிறது.

அப்படி இருக்கும்போது நிலவில் இருந்து எடுத்துக்கொண்டு வந்த 'ரெகோலித்' என்ற ஊட்டச் சத்து இல்லாததாக சொல்லக்கூடும் மண்ணில், தாவரத்தை வளர்ப்பதில் வியப்பொன்றுமில்லை.

நிலவில் இருந்து எடுத்துக் கொண்டு வந்த மண்ணில் ஊட்டச்சத்தும் நீரும் விட்டுதான் நாசா அறிவியலாளர்கள்  'அரபிடோப்சிஸ் தலியானா' என்ற கடுகு வகை செடியை வளர்த்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் எந்த வகையான வியப்புக் குரிய செய்தியும் இருப்பதாக தெரியவில்லை! மண் ஒரு பிடிமானப் பொருள் அவ்வளவுதான்! தாவரங்கள் வளர மண் தேவையில்லை என்பதே உண்மை!

-செ.ர.பார்த்தசாரதி, சென்னை

கொசுக்களுக்கு நிறம் பிரிக்கத் தெரியுமா?


மனித வாடையை முகர்ந்துவிட்டால்கொசுக்கள் அருகே வந்து கடிக்கத் தோதான இடம் பார்க்கும்இது அறிவியல்பூர்வமான உண்மைமனித மூச்சில் உள்ள கார்பன் - டை - ஆக்சைடு வாடைதான் கொசுக்களுக்கு அழைப்பிதழ்ஆனால்தற்போது வாசிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூடுதல் தகவலையும் கண்டறிந்துள்ளனர்.

அதாவதுமனித மூச்சிலுள்ள கார்பன் - டை - ஆக்சைடின் வாடையை கண்டுகொண்ட பிறகுஅவை சுற்றிலும் நோட்டம் பார்க்கின்றனஅப்போது சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் ஏதாவது தட்டுப்படுகிறதா என்பதை தேடுகின்றனஅப்படி தட்டுப்பட்டதும்அதை நெருங்கி தங்கள் ரத்தப் பசியை தீர்க்க முயல்கின்றன.ஆய்வகங்களில் பல நிறங்களில் பொருட்களை வைத்தபோதும்கொசுக்கள் இந்த இரு நிறமுள்ள பொருட்களையே நாடுவதை ஆய்வாளர்கள் கவனித்தனர்.

இது ஏன் என்று ஆராய்ந்தபோதுமனிதர்கள் எந்த நிறத் தோலை உடையவர்களாக இருந்தாலும்அவர்களது தோலிலிருந்து சிவப்பு அல்லது ஆரஞ்சு நிற ஒளி அலைகள் பிரதிபலிக்கின்றனமுதலில் கார்பன் - டை - ஆக்சைடு வாடை அந்த இடத்திலிருந்து வரவேண்டும்.

அடுத்து அந்த இடம் சிவப்பு அல்லது ஆரஞ்சு வண்ணத்தில் இருக்க வேண்டும்அப்படி இருந்தால்கொசுக்களுக்கு சாப்பாட்டு மணி அடிக்கப்படுவதாகவே பொருள்.

மற்ற பூச்சிகளுக்கு இதேபோல நிறப் பாகுபாடு பற்றிய அறிவு உண்டா எனவிஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

வியாழன், 19 மே, 2022

உயிரை எடுக்கக் கூடிய சயனைடே பூமியில் உயிர்கள் உருவாக உதவியது: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

 

லண்டன்பிப். 17- புதிய ஆராய்ச்சி யில் ,  கொடிய சயனைடு  கலவைஉண்மையில்பூமியில் உயிர்கள் உருவாக உதவியது என்று கண்டறியப்பட்டு உள்ளது.

விஞ்ஞானிகள் சயனை டைப் பயன்படுத்தி ஓர் இரசா யன எதிர்வினையை உருவாக்கி யுள்ளனர்,சயனைடு 400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் கரிம உயிர்களை உருவாக்க உதவியது என கண்டறிந்து உள்ளனர்.

சயனைடு என்பது கார்பன் மற்றும் நைட்ரஜன் அணுக் களால் உருவானதுஇதன் அறிவியல் பெயர் சிஎச் (சிபிஇதனை உட்கொள்ளும் நபர் முதலில் தலைவலிஎரிச்சல்இதய துடிப்பின் வேகம் அதி கரிப்புவாந்தி முதலியவற்றை சந்திக்கநேரிடும்பின்னர் குறைந்த இரத்த அழுத்தம்மெதுவான இதய துடிப்புமாரடைப்பு  ஏற்பட்டு உயிரி ழக்க நேரிடும்.

இதனை உட்கொண்ட நபரை காப்பற்ற இயலாதுஒரு வேளை காப்பாற்றினாலும் வாழ்நாள் முழுவதும் நரம்பு சம்பந்தபட்ட நோய்களால் அவதிப் பட நேரிடும்.

இதற்கு காரணம் அதில் கலந் துள்ள ஹைட்ரஜன் சயனைடு வாயு மற்றும் ஹைட்ரஜன் உப்புகள்.

இந்த ஆபத்தான வாயுக்கள் சயனைடு குப்பியில் மட்டுமில் லால் எரிகின்ற வீடுமெட்டல் புகைகளில் இருந்தும் வருகின் றது

சயனைடு எனபது பல வடிவங்களில் இருக்கக்கூடிய ஒரு கொடிய இரசாயனம்இர சாயனம் உயிரை போக்கக் கூடி யதாக இருந்தாலும் சயனைடு  உயிருக்கு  தேவையான மூலக் கூறுகளை உருவாக்குவதற்கு ஓர் அத்தியாவசிய கலவை  என விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.

மேலும்வேற்றுக் கோள் களில் அதற்கான அறிகுறிக ளைத் தேடுவதுபிரபஞ்சத்தில் வேறு இடங்களில் உள்ள உயிர் களைக் கண்டறியவும் உதவும் என்று ஸ்க்ரிப்ஸ் ஆராய்ச்சியின் வேதியியலாளர்கள் கண்டறிந் துள்ளனர்.

நைட்ரஜன் அணுவுடன் பிணைக்கப்பட்ட கார்பன் அணுவைக் கொண்ட கலவைகார்பன் டை ஆக்சைடில் இருந்து கார்பன் அடிப்படையிலான சேர்மங்களை உரு வாக்கும் பூமியில் சில முதல் வளர்சிதை மாற்ற எதிர்வினை களை ஏற்படுத்தியிருக்கலாம் என்று குழு கண்டுபிடித்தது.

வளர்சிதை மாற்ற எதிர் வினைகள் என்பன உணவில் இருந்து ஆற்றலை உருவாக்கும் எதிர்வினைகள் மட்டுமின்றி உயிரைத் தக்கவைக்கவும் அவ சியமானதாகும்.

இதுகுறித்து கூறிய ஆராய்ச் சியாளர்கள் 'சயனைடு பூமியில் உயிர்களின் தோற்றத்தில் முக்கிய பங்கு வகித்திருக்கலாம்மேலும் வேற்றுக் கோள் வாசி களை கண்டறிய நமக்கு  உதவ லாம்என்று கூறி உள்ளனர்.

ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சியின் வேதியியல் இணைப் பேராசிரி யரும்ஆய்வின் முதன்மை ஆசி ரியருமான டாக்டர் ராமநாரா யணன் கிருஷ்ணமூர்த்தி கூறிய தாவது:-

பூமியின் ஆரம்பத்திலோ அல்லது பிற கோள்களிலோ - நாம் உயிர் வாழ்வின் அறிகுறி களைத் தேடும்போது - நாம் அறிந்த உயிர் வேதியியலின் அடிப்படையில் தேடுகிறோம்.

இதே வளர்சிதை மாற்ற எதிர்வினைகள் சயனைடால் நிகழ்ந்து இருக்கலாம் என்பது வாழ்க்கை மிகவும் வித்தியாச மாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது என கூறினார்.