வியாழன், 26 மே, 2022

பூமிக்குத் தண்ணீர் வந்த வழி

 

நமது பால்வெளி மண்டலத்தில் உயிர் உள்ள ஒரே கோளாக நமது பூமி மட்டுமே திகழ்கிறதுஇந்த பூமிக் கோளின் சிறப்பே இதில் உயிர்கள் உள்ளது என்று பலர் கூறினாலும்,உண்மையில் எந்த கோளிலும் இல்லாத ஒரு சிறந்த பொருளை இந்த பூமி கொண்டுள்ளதுஅது தான் தண்ணீர்தண்ணீர் இருந்தால் மட்டுமே அந்தக் கோளில் உயிர்கள் உருவாகவும்உயிர் வாழவும் முடியும் என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.

இதனால் தான் நமது பூமி சிறப்பானதாக இருக்கிறதுசரிபூமி எப்படி உருவாகியது என்பது தெரியும்ஆனால்பூமியில் தண்ணீர் எப்படி உருவாகியது இது குறித்து பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் இரண்டு மட்டுமே உறுதியாகி உள்ளனஒன்று எரிநட்சத்திரங்களின் மோதல்மற்றொன்று பூமியில் இருந்த வாயுக்கள் வெப்பத்தால் இணைந்து நீராவியாகி பிறகுநீராக மாறியது

ஆனால் இரண்டு கருத்துக்களை அறிவியலாளர்கள் தெளிவுபடுத்தியிருந்தாலும்அது எதுவும் உறுதிசெய்ய முடியாமல் இருந்தது என்பதே உண்மைஆனால்நீண்ட நாட்களுக்குப் பிறகுஇப்போது அறிவியலாளர்கள் ஒரு முடிவிற்கு வந்துவிட்டனர்பூமியில் தண்ணீர் எப்படி உருவாகியது என்பதற்கான பின்னணியை தற்பொழுது வெளியிட்டுள்ளனர்.

நமது பால்வெளி மண்டலத்தில் இருக்கும் ஒட்டுமொத்த கோள்களில் பிரமிக்க வைக்கும் கோளாக இதுவரை பூமி திகழ்ந்துவருகிறதுநமது பூமி நீரின் அளவு காரணமாகத் தனித்து நிற்கிறதுபூமி பெரும்பாலும் “தி ப்ளூ பிளானட்” என்று இதனால் தான் குறிப்பிடப்படுகிறதுபூமியில் நீர் உருவாகியதற்குச் சூரியன் முக்கிய காரணமாக இருந்துள்ளதுபூமியின் மேற்பரப்பில் சுமார் 70 சதவீதம் நீரால் ஆனது என்பதை நாம் பள்ளிக்கூடப் பாடங்களில் இருந்தே படித்து வருகிறோம்இந்த 70 சதவீத தண்ணீர் பூமியில் உருவாக முதல் காரணமாகக் கூறப்படுவது கார்பனேசியஸ் அல்லது வெறுமனே “சி-வகை சிறுகோள்கள்” என்று அழைக்கப்படும் சிறுகோள்களின் தாக்குதல் காரணமாக உருவாகியிருக்கலாம் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சிறுகோள் குழுவிலிருந்து தான் பூமிக்கு நீர் வந்திருக்க வாய்ப்புள்ளதாக முன்னர் இருந்தே விஞ்ஞானிகள் சந்தேகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதுஇருப்பினும்இது மட்டும் காரணமாக இருக்க முடியாது என்பதை உணர்ந்த அறிவியலாளர்கள்  தொடர்ந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டுபூமியில் தண்ணீர் எப்படி உருவாகியது என்பதை நிரூபிக்க முயன்று வந்தனர்இறுதியாக,  நீர் குறித்த முடிவிற்கு வந்துள்ளனர்.

பூமியின் நீர் டியூட்டீரியத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும்இது “சி” டைப் சிறுகோள் தாக்குதல் காரணமாக - பூமியில் இருக்கும் நீரின் ஒரே ஆதாரமாக மாறியிருக்க வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்அடிப்படையில் இவை ஹைட்ரஜனின் கனமான பதிப்பாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.பூமியில் நீரை உருவாக்குவதில் நமது சூரியன் முக்கிய பங்காற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுகளால் விஞ்ஞானிகளுக்குச் சாதமான பதில் கிடைத்துள்ளது.

சூரியக் காற்றுகள் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் அயனிகளால் சார்ஜ் செய்யப்படுகின்றனஅவை சிறுகோள்கள் அல்லது சிறுகோள் தூசியுடன் தொடர்பு கொண்டால்காற்றில் உள்ள ஹைட்ரஜன் அயனிகள் சிறுகோளில் உள்ள ஆக்ஸிஜன் அணுக்களுடன் தொடர்புகொண்டு பூமியில் மூலக்கூறை உருவாக்கி இருக்கும் என்பதை இது குறிக்கிறதுபூமியின் பரந்த நீர்நிலைகளில் சூரியனின் பங்குக்கான முதல் சான்று ஜப்பானிய விண்வெளி ஏஜென்சியின் ஹயபுசா விண்வெளி ஆய்வு மூலம் 2010 இல் பூமிக்கு வாங்கப்பட்ட இடோகாவா என்ற சிறுகோள் மாதிரிகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதுஇது பூமியில் எப்படி நீர் உருவாகியது என்ற ஆராய்ச்சிக்கு முக்கிய பங்கை வழங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேச்சர் வானியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஒரு ஆய்வறிக்கையில்,

விஞ்ஞானிகள் பூமியில் தண்ணீருக்குப் பங்களிப்பவைகளில் முக்கிய காரணிகளில் ஒன்றாகச் சூரியனை உறுதிப்படுத்தியுள்ளனர் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளதுசூரியக் காற்றிலிருந்து வரும் ஹைட்ரஜனும் சிறுகோள்களில் இருந்து வெளியான டியூட்டீரியமும் இணைந்து தான் பூமியில் இன்று நாம் உயிர் வாழ முக்கிய காரணமாக அமைந்துள்ள நீரை உருவாக்க முக்கிய முதுகெலும்பாகச் செயல்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக