புதன், 26 ஏப்ரல், 2017

அபூர்வ புதைப்படிவம்



எரிமலைக் குழம்பு ஏரியில் 48 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் புதையுண்டு போன பாம்பின் புதை படிவத்தை கண்டெடுத்ததே வியப்பின் உச்சம். அதிலும் அப்படிப் புதைபடிவமாகிப்போன பாம்பின் உடலுக்குள் ஒரு பல்லியும், அந்தப் பல்லியின் வயிற்றில் ஒரு வண்டும் காணப் பட்டால்! வண்டை விழுங்கிய பல்லியை ஒரு பாம்பு விழுங்கிய ஓரிரு தினங்களில் எரிமலை ஏரியில் சிக்கி புதையுண்டு மரித்துப்போயிருக்கிறது. அதே நிலையில் புதைபடிவமாகிப்போனதால் இத்தனை கோடி ஆண்டுகளாக அது சிதையாமல் ஒரு அபூர்வமான உணவுச் சங்கிலியையும் அப்படியே தக்கவைத்திருக்கிறது.

தனித்துவ பதனப்படுத்துதல்

இந்த அதிசயப் புதைபடிவத்தை ஜெர்மனியின் ஃபிராங்கஃபர்ட் நகரின் அருகில் உள்ள மெஸ்ஸல் பிட் பகுதியிலிருந்து ஆய்வாளர்கள் கண்டெடுத்திருக்கிறார்கள். பொதுவாக விலங்குப் புதைபடிவங்களுக்குள் உணவைக் காண்பது அரிது. ஆனால் மெஸ்ஸல் பகுதியில் காணப்படும் தனித்துவமான பதனப்படுத்தும் தன்மை யால், ஏற்கெனவே இதுபோன்று ஏராளமான பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. காலத்தைக் கணிக்க முடியாத அளவுக்கு எண்ணற்ற ஆண்டுகளுக்கு முன்னால் புதையுண்டுபோன குதிரையின் வயிற்றில் திராட்சையும் இலைகளும், பறவையின் குடலில் மகரந்தம், புதைபடிவமாகிப்போன மீனின் வயிற்றுக்குள் பூச்சிகள் இப்படிப் பலவற்றை ஃபிராங்ஃபர்ட் நகரில் உள்ள செங்கர்பெர்க் ஆய்வு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

கோடி ஆண்டுகளுக்கு முன்

மூன்று அடுக்கில் புதை படிவமாகிப் போன உணவு சங்கிலியைக் கண்டு பிடித்திருப்பது இதுவே முதல் முறை. 3.4 அடி நீளமான பாம்பின் உடம்புக்குள் 20 சென்டிமீட்டர் நீளமுள்ள பல்லி காணப்படுகிறது. அதுவும் அந்தப் பாம்பின் எலும்புக் கூட்டுக்குள்ளேயே இந்தப் பல்லி படிவமாகிக் கிடப்பதால், அதை நிச்சயமாகப் பாம்புதான் விழுங்கியிருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது.

மேம்படுத்தப்பட்ட கணினித் திரை மூலமாக டாக்டர் ஸ்மித்தும் அவருடன் இணைந்து பணியாற்றும் அகஸ்டின் ஸ்கான்ஃபர்லாவும்தான் பாம்புக்குள் இருக்கும் பல்லியின் படத்தை முதன் முதலில் கண்டெடுத்தார்கள். அதிலும் பல்லியின் வயிற்றில் வண்டைக் கண்டதன் மூலம் ஒரு புதிய நிலைப்பாட்டை எட்டியிருக்கிறார்கள். இதற்கு முன்னால் கிடைத்த பல்லியின் புதை படிவங்களுக்குள் தாவரங்களின் மிச்சம் மட்டுமே இருந்திருக்கிறது. ஆனால் இப்போது இந்தப் பல்லியின் வயிற்றில் வண்டு இருப்பதால், கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பல்லிகள் தாவரங்களை மட்டுமல்லாமல் பூச்சிகளையும் உண்டு வந்திருப்பது இதன் மூலமாகத் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இப்படிப் பல வர லாற்று புரியாத முடிச்சுகளை அவிழ்த்துள்ளது இந்த

அபூர்வமான புதைபடிவம். கருந்துளைகளை படம்பிடிக்க முடியுமா? 

ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியால் அது அண்மையில் முடிந்திருக்கிறது.

ஒரு மாபெரும் கருந்துளை, ஈர்ப்பு அலைகளால் உந்தித் தள்ளப்பட்டு, ஒரு நட்சத்திரக் கூட்டத்திலிருந்து அதி வேகமாக வெளியேறும் அந்தக் காட்சியை ஹப்பிள் பதிவு செய்ததை, அமெரிக்க விண்வெளி அமைப்பான, ‘நாசா’ உறுதி செய்திருக்கிறது.

சாலையில் வாகனங்கள் பிரேக் போடும்போது ஏற்படும் உராய்வால், தாமிரம், இரும்பு, மாங்கனீசு போன்ற உலோகங்களின் நுண்துகள்களும், சக்கர ரப்பர் துகள்களும் காற்றில் கலக்கின்றன. அப்படி கலக்கும்போது ஏற்கனவே நகரக் காற்றிலிருக்கும் நச்சு வேதிப் பொருட்களுடன் வினை புரிந்து, மேலும் நச்சுத் தன்மையை கூட்டுகின்றன.

இவற்றை சுவாசிப்பவர்களுக்கு ஆஸ்துமா, மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல சுவாச நோய்கள் வர வாய்ப் பிருப்பதாக, ‘என்விரோன்மென்டல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி’ ஆய்விதழில் வெளியான ஒரு கட்டுரை தெரிவிக்கிறது.
-விடுதலை,20.4.17



ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

லெமூரியா கண்டத்திட்டுகள் கண்டுபிடிப்பு


மொரீசியஸ் நாட்டின் அருகே ஆழ்கடலுக்குள் மூழ்கிக் கிடக்கும் லெமூரியா கண்டத்திட்டுகள் கண்டுபிடிப்பு
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. லெமூரியா கண்டம். உலகிலேயே முதன் முறையாக இந்த கண்டத்தில்தான் மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் பேசிய மொழி தமிழ் என்ற நம்பிக்கை நெடுங்காலமாக உயிர்ப்புடன் இருந்து வருகிறது. எனினும் அறிவியல் ஆய்வுகள் வாயிலாக உறுதிப்படுத்தப் படவில்லை.
சங்க இலக்கியங்களில் குமரிக்கண்டம் கடல் கோளால் விழுங்கப்பட்டது என்பது தொடர்பான பதிவுகள் காணப்படுகின்றன. பரந்து விரிந்திருந்த தமிழர்களின் நிலப்பரப்பு கால மாற்றத்தால் படிப்படியாக அருகி விட்டது.
இப்போது உலகில் முழுக்க முழுக்க தமிழர்களுக்கென ஒரு நாடு கூட இல்லாமல் போய்விட்டது. ஆனால் பன்னெடுங் காலத்திற்கு முன்பு 49 நாடுகளில் தமிழர்கள் செம்மையாகவும், செழுமையாகவும் வாழ்ந்து வந்தனர் என்பதை இலக்கியப் பதிவுகள் உணர்த்துகின்றன. இல்லாத சரஸ்வதி நதியை கண்டுபிடிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதைப் போல குமரிக்கண்டம் குறித்தும் கடல் பகுதியில் அறிவியல் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் ஒலித்து வருகிறது.
இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் உள்ளவிட்வாட்டர்ஸ் ராண்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் லூயிஸ் ஆஷ்வால் மொரீசியஸ் நாட்டின் அருகே உள்ள ஆழ்கடல் பகுதியில் ஆய்வு நடத்தினார். ஆய்வாளர்கள் சிலர் அவருக்கு உறுதுணையாக செயல்பட்டனர். இந்த ஆய்வின் வாயிலாக, ஆழ்கடல் பகுதியில் கோண்டுவானா கண்டத் திட்டுகள் மூழ்கிக்கிடக்கின்றன என்பது கண்டறியப் பட்டுள்ளது. கோண்டுவானா, லெமூரியா, குமரிக்கண்டம் ஆகிய யாவும் ஒன்றே,
இவை வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. மொரீசியஸ் நாட்டின் பாறைப் பகுதியில் சிலிகான் படிவுகள் காணப்பட்டன. இப்படிவுகள் 300 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது தெரியவந்துள்ளது. இதை மய்யப் புள்ளியாக வைத்து ஆழ்கடலில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக பயனுள்ள தகவல்கள் பெறப்பட்டுள்ளன. ஆய்வை மேலும் விரிவாகவும், ஆழமாகவும் நடத்தினால் லெமூரியா கண்டம் பற்றி இன்னும் பல முக்கிய தகவல்களை சேகரிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
- நன்றி: “முகம்”, மார்ச் - 2017
-விடுதலை ஞா.ம.,1.4.17

கயிறு கட்டுவோரே - கயிறு திரிப்பல்ல!



மூடநம்பிக்கையாக கையில் கட்டும் கயிறை சோதனைக்கூடத்தில் பரிசோதனைக்குட்படுத்தியபோது எண்ணற்ற கிருமிகள் இருப்பதை கண்டறிந்தோம்.
மாணவர்கள் சேர்க்கையின் போது முதல்வர் கொடுத்த அறிவுரையின்படி மருத்துவ ஆய்வுக்கூட மாணவர்கள் தாமாகவே ஆர்வமாக முன்வந்து, தன் கையில் இருக்கும் கயிற்றினை அறுத்து அந்த கிருமிகள் வளர்வதற்கு ஏதுவான சூழ்நிலையில் வைத்தபோது எண்ணற்ற கிருமிகள் இருந்ததை கண்டறிந்தனர். அந்த கிருமிகள் எவ்வாறு, தம் கையில் வந்தன என்று வினவும்பொழுது அவை, தாம் மலம் கழித்தபின் கைக்கழுவிய நீரின் மூலமாகவும், சில கிருமிகள் காற்றின் மூலமாக அல்லது தூசி, அழுக்கு போன்றவை நம் கையில் படும்போதும் சில கிருமிகள் அந்த மாணவரின் தோலில் இருந்தும் வந்திருக்கும் என தெரிந்தபோது உடனே அவர்கள் கயிற்றினை கழற்றி எறிந்தனர்.
இந்த நோய் கிருமிகளால் வயிற்றுபோக்கு, சிறுநீரக கோளாறு தோலில் வறட்சிகள் போன்றவை வரக்கூடும் என்று தெரிந்ததும் மற்றெல்லா மருத்துவ ஆய்வுக்கூட மாணவர்களும் அவரவர் அணிந்திருந்த கயிறுகளை கழற்றி எறிந்து விட்டனர்.
கண்டறியப்பட்ட நோய்க்கிருமிகளின் பெயர்கள்
ஸ்டெப்பைலோகாக்கஸ் ஆரியஸ் (staphylococcus Aureus), ஸ்டெப்பைலோ காக்கஸ் ஆல்பஸ் (Staphyococcus Alpus), எஸ்செரிச்சியா கோலி (Eeherichia coli)
-விடுதலை \ஞா.ம,1.4.17

ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

அண்ட வெளியில் பேரொளியுடன் வெடிப்பு


நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
வாஷிங்டன், ஏப்.2 அண்ட வெளியில் வெடிப்பு ஒன்று நிகழ்ந் ததாகவும், அது அனைத்து நட்சத்திரங் களையும் விட ஆயி ரம் மடங்கு ஒளியை ஏற்படுத்திய தையும் அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவின் விஞ்ஞானிகள் கண்டறிந் துள்ளனர்.
இது தொடர்பாக நாசா அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
அண்டவெளியில் விஞ்ஞானி சந்திரசேகரின் பெயரில் அழைக்கப்படும் “சந்திரா களம்-தெற்கு’ என்ற இடத்தில் பெரிய வெடிப்பு ஒன்று ஏற்பட்டதை எங்கள் அமைப்பின் எக்ஸ்ரே  படம் காட்டுகிறது.  இது ஒரு அழிவுச் செயல் ஒன்றின் விளைவாக இருக்கக் கூடும். எனினும் இதுபோன்றதொரு எக்ஸ்ரே புகைப்படத்தை விஞ்ஞானிகள் இதற்கு முன் கண்டதில்லை.
இந்த வெடிப்பு நிகழ்ந்தபோது அண்டவெளியில் உள்ள அனைத்து நட்சத்திரங்களையும் விட ஆயிரம் மடங்கு பேரொளி ஏற்பட்டது.  பூமியில் இருந்து 170 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள அண்டவெளிப் பகுதியில் இந்த நிகழ்வு நடைபெற்றது என்று நாசா தெரிவித்துள்ளது.
இது குறித்து சிலி நாட்டைச் சேர்ந்த பான்டிஃபிகல் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஃபிரான்ஸ் பாயர் கூறுகையில்,  “இந்த வெடிப்பு மற்றும் பேரொளியைக் கண்டறிந்தது முதல், அதன் மூலாதாரம் என்ன? என்பதைப் புரிந்து கொள்ள நாங்கள் போராடி வருகிறோம்‘ என்றார்.
இந்தப் பெரு வெடிப்புக்கு அறிவியல் ரீதியில் மூன்று வாய்ப்புகள் காரணமாகக் கருதப்படுகின்றன. அவற்றில் இரண்டு வாய்ப்புகள், காமா கதிர்களின் வெடிப்பை சுட்டிக் காட்டுகின்றன.  ஒரு பெரிய நட்சத்திரத்தின் சிதைவு அல்லது ஒரு நியூட்ரான் நட்சத்திரத்துடன் மற்றொரு நியூட்ரான் நட்சத்திரம் இணைவது போன்ற காரணங்களால் காமா கதிர்களின் வெடிப்பு ஏற்படுகிறது என்று விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது.

-விடுதலை,2.4.17


paper/140616.html#ixzz4d5xqod7Z