சனி, 18 நவம்பர், 2023

14 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிரினத்தின் கால்தடம் இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு


13
லண்டன், நவ. 17- டைனோசரின் கால் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இகுனாடோன்ஷியன் வகையைச் சேர்ந்தது என நிபுணர்கள் தெரிவிக் கின்றனர்

கால் அடையாளத்தில் 3 விரல்கள் காணப்படுகின்றன. இங்கிலாந்தின் டார்செட் (Dorset) கவுன்டியில் உள்ள பூலே ஹார்பர் (Poole Harbour) பகுதியில் உள்ள பல தீவுகளில் ஒன்று பிர வுன்சீ தீவு (Brownsea Island). இங்குள்ள இயற்கை வனாந்திரப் பகுதியில் ஒரு டைனோசரின் கால் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 140 மில்லியன் ஆண்டுகள் பழைமை உடையது என தெரிய வந்திருக்கிறது. இதனை இகுனாடோன்ஷியன் (igunodontian) எனும் வகையை சேர்ந்த டைனோசரின் கால் அடையாளம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த கால் அடையாளத்தில் 3 விரல்கள் காணப்படுகின்றன. அந்த தீவிலுள்ள பிரவுன்சீ கேஸில் (Brownsea Castle) பகுதியில் ஒரு வனத்துறை அதிகாரி சென்று கொண்டிருந்த போது கண்டுபிடித்திருக்கிறார்.

திங்கள், 29 மே, 2023

மனிதப் பிரதி எடுத்தல் (குலோன்) ஆபத்தை உருவாக்குமா?

  

மனிதப் பிரதி எடுத்தல் (குலோன்) ஆபத்தை உருவாக்குமா?


.com/


நாம் 21-ஆம் நூற்றாண்டில் வாழ்ந் துகொண்டு இருக்கிறோம், மனித இனம் அதிவேகமான அறிவியல் தொழில்நுட்ப யுகத்தில் பயணித்துக்கொண்டு இருக்கிறது.  இந்த தொழில் நுட்பம் மனிதர்களுக்கு பல் வேறு வழிகளில் அமைதியான வாழ்க்கை யைத் தருகிறது, ஆனால் இந்த அறிவியல் தொழில்நுட்பத்தில் இன்றளவும் மனித இனத்தை பிரதிஎடுத்தல் எனப்படும் குளோ னிங் தொடர்பாக பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறோம்.


 நாம் தற்போது இந்த உயிர்பிரதி எடுத்தல் முறையில் மனிதர்களுக்குத் தான் சில விதிமுறைச் சிக்கல்கள், பல்வேறு மரபணுவிதி முரண்பாடுகள் உள்ளன. ஆனால்  உயிர் பிரதி எடுத்தல் முறையில் ஆடு, பசு, நாய் மற்றும் சமீபத்தில் சீனா குரங்குகளைக் கூட உயிர்பிரதி எடுத்தல் முறையில் உருவாக்கி விட்டது.  ஆனால் இதே போன்று மனித உயிர் பிரதிஎடுத்தல் எளிதானதல்ல.


நம்முள் சில கேள்விகள் எழலாம் அதா வது உண்மையிலேயே மனிதப் பிரதிஎடுத்தல் சிக்கலான ஒன்றா? அல்லது நாம் மனிதர் களைத் தவிர இதர உயிரினங்களில் மட்டுமே இந்த சோதனையைச் செய்துகாட்டும் நிலை உள்ளதா? என்று கேட்கலாம்.


 முதலில் சில கேள்விகளுக்கு பதிலைத் தேடுவோம், பலர் தற்போது உயிர்பிரதி எடுத்தல் குறித்து தவறான கருத்தைக் கொண்டுள்ளனர். மரபணுப் பிரதி எடுத்தல் என்பது பெற்றோர்களில் அடையாளத்தை அழிப்பது அல்ல, இதிலும் அறிவியல் இரண்டு கருத்துக்களை கொண்டுள்ளது.


  முக்கியமாக உயிர்ப்பிரதி எடுத்தல் என்பது ஒரே மாதிரியாக மற்றொன்றை உரு வாக்குவது ஆகும். அதாவது  கருமுட்டையில் இருந்து நேரடியாக பிரதி எடுப்பது இது நடக்குமா என்றால் ஆம் இதுவரை பல உயிர்பிரதி எடுத்தல் ஒரு உயிரின் அதாவது தாயின் கருமுட்டையை மட்டுமே வைத்து அதில் உள்ள செல்களைக் கொண்டு உயிரை உருவாக்கியுள்ளார்கள். ஆனால் ஆண் பெண் உயிரினச்சேர்க்கை அதாவது இரண்டு வேறுபட்ட மரபணுக்களைக் கொண்டு உருவானதுதான் மனித உயிரினம். இவ்வாறு பெறும் மரபணு உண்மையானது ஆகும். ஆனால் இந்த விதியிலிருந்து மாறுபட்டு மரபணுப் பிரதியை உருவாக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம்.


 முக்கியமாக மனித உயிர்பிரதி எடுத்தல் என்பது பெற்றோரின் மரபணுக்கலப்பில் வேறு வேறு சூழலில் இணைந்து உருவானது, இது மனித இனத்தின் தனித்தன்மையை பாதிக்காது. 


ஒரே மனிதர் அதாவது தாயின் கருமுட் டையும் தாயின் உடல்செல்லும் இணைந்து மனிதர் உருவாகும் போது அங்கு முழுமை பெற்ற மனிதத்தன்மை  குறைவாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.  இங்கு டி என் ஏ தகவல் பரிமாற்றத்தில் குறைபாடு உரு வாகும் இது எதிர்கால மனித இனத்திற்கே பேராபத்தாக அமையும். குளோன் மூலம் உருவான பல உயிர்கள் ஆடு, மாடு, குரங்கு, பன்றி, கரடி உள்ளிட்ட பல மலட்டுத்தன்மை உடையதாகவும், தன்னை ஒத்த பிற உயிர்களுடன் இணக்கமாக இல்லாமலும் இருப்பதே இதற்கு எடுத்துக்காட்டு ஆகும்.


இது மரபணுக்களின் மூலம் ஏற்படும் சிக்கல் ஆகும். அதே நேரத்தில் குழந்தைகள் வளரும் விதம் பல்வேறு சூழல்களில் கற்றுக் கொள்வது போன்றவற்றின் மூலம் குழந்தை களின் குணத்தின் தன்மையை மாற்ற முடியும் என்றும் கருதப்படுகிறது.  மனிதப் பிரதி எடுத் தல் என்பது ஒரு தாயிடமிருந்து உருவாக்குவது அதாவது ஒத்த குணங்களைக் கொண்ட மரபணுக்களின் பிரதிமட்டுமே, இதில் அதிக விபரங்கள் இருக்க வாய்ப்பில்லை.


 இது தொடர்பாக அறிவியலாளர்கள் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தி இந்தச் சிக்கலைத் தீர்க்கும் நடைமுறைக் குறித்து ஆலோசித்து வருகின்றனர். மேலும் கொள்கை ரீதியிலான பல்வேறுச் சிக்கல் களும் இதில் உள்ளது. இங்கு முக்கியமாக நமக்கு தெரியவேண்டியது என்னவென்றால் உயிரினங்கள் அனைத்திற்கு வாழ்வதற்கான உரிமைகள் உண்டு. ஆனால் மனிதப்பிரதி எடுத்தல் மூலம் தனித்து உயிர்வாழும் தன்மை சீரழிந்துவிடக்கூடாது. மேலும் மனிதப்பிரதி எடுத்தல் மூலம் உருவாகும் குழந்தை தன்னை தனித்தன்மையானவர் என்று கருதாதவாறு இருக்கவேண்டும், ஒருவேளை மனிதப்பிர தியின் மூலம் உருவாகும் குழந்தை தன்னை தனித்தன்மையானவர் என்று உணர்ந்து கொண்டால்?


 அல்லது மனிதப்பிரதி என்பது உடலுறுப் புகளுக்காக வளர்க்கப்படும் ஒரு உயிரின மாக சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டால்?


மனிதப்பிரதி மூலம் உருவாகும் உயிரி னங்கள் மருத்துவமனை என்னும் சிறைச் சாலைக்குள் வளர்க்கப்படும் ஆய்வு உயிரி னமாக இருந்து அவற்றில் உடல் உறுப்புக் களை  விற்பனைக்காக வளர்க்கப்படும் அபா யமும் உள்ளது.


 முக்கியமாக  மனிதப்பிரதி எடுத்தல் மூலம் உருவாக்கப்படும் மனிதர்கள் ஆரோக்கிய மானவர்களாக இருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு. மனிதர்கள் அல்லாத இதர உயிர் பிரதிகள் ஏன் உருவாக்கினோம் என்றால் அவைகளின் மூளைத்திறன் மிகக்குறைவான தாக உள்ளது அவற்றை நாம் எளிதாக பராமரிக்க முடியும், ஆனால் மனிதப்பிரதிகள் மூலம் ஆரோக்கியமற்ற மனித இனத்தை நாம் உருவாக்குதல் மிகவும் தவறானதாகும்.


 நீங்கள் உங்களைப் போலவே அல்லது உங்கள் நண்பர்களைப் போலவே ஓர் உயிரை விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொண்டால் அந்த பிரதி நண்பரோ அல்லது உங்கள் பிரதியோ ஆரோக்கியமற்ற வாழ்க்கையை அபாயகரமான வாழ்நிலைச்சூழலில் அவர் கள் வாழ்வார்கள். இதை நாம் தெரிந்தே ஓர் உயிரைப் படைக்க துணை போக மாட்டோம். உயிரினங்கள் அனைத்திற்கும் வாழும் உரிமை உள்ளது, முக்கியமாக ஆரோக் கியமான சூழலில் வாழும் உரிமை உள்ளது.


 மனிதர்ப்பிரதி என்பது ஒரு நல்ல உயிரியல் சோதனை அல்ல, எதிர்காலத்தில் மனிதப்பிரதி எடுத்தல் மூலம் உருவாகும் மனிதர்களால் ஏற்படும் சிக்கல்கள், மனித இனத்திற்கே அபாயகரமான சூழலை உருவாக்கிவிடும் ஆபத்து உள்ளது. ஆகவே  முக்கியமாக மனிதர்களாகிய நாம் இயற்கை கொடுத்த உயிரின பரிணாமத்தின் பாதையி லேயே செல்வோம். மனிதப்பிரதி என்ற ஒன்றின் மூலம் மனித இனத்தை அழிவில் தள்ளாமல் பாதுகாப்போம்.

3 பேர் மரபணுக்களுடன் உருவான குழந்தை

 

 3

பிரிட்டனில் முதன்முறை யாக 3 பேரின் மரபணுக் களுடன் (டி.என்.ஏ.க்களுடன்) ஒரு குழந்தை பிறந்துள்ளது. இதனை அந்நாட்டின் குழந்தைப் பேறு ஒழுங்குமுறை ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. தீர்க்க முடியாத மைட்டோ காண்ட்ரியல் நோய்களுடன் குழந்தைகள் பிறப்பதை தடுக்கும் முயற்சியாக இந்த முன்னோடி  தொழில்நுட்பம் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதுவரையிலும், இந்த வகையில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால், கூடுதல் விவரங்கள் ஏதும் இல்லை. மைட்டோகாண்ட்ரியல் நோய்கள் குணப்படுத்த முடியாத வை. குழந்தை பிறந்த சில நாட் களில் அல்லது சில மணி நேரத்தில் கூட மரணம் நேரிடலாம். சில குடும்ப ங்கள் பல குழந்தைகளை இதனால் இழந்துள்ளன. அத்தகைய பெற் றோர் ஆரோக்கியமான குழந்தை யைப் பெற்றெடுக்க இந்த தொழில்நுட்பம் மட்டுமே ஒரு வாய்ப்பாக இருக்கிறது.

ஆற்றல் மய்யம் - மைட்டோகாண்ட்ரியா 

செல்லின் ஆற்றல் மய்யங்கள்  எனப்படும் மைட்டோகாண்ட்ரி யாக்கள் நமது உடலின் ஒவ்வொரு செல்லிலும் இருக்கின்றன. அவை  உணவை நாம் பயன்படுத்துவதற்கான ஆற்றலாக மாற்றும் வேலையைச் செய்கின்றன. குறைபாடுள்ள மைட்டோ காண்ட்ரியாக்கள் உணவை ஆற்ற லாக மாற்றத் தவறுகின்றன. இத னால் உடல் இயங்கத் தேவையான ஆற்றல் கிடைக்காமல் மூளை பாதிப்படையும்; இதயம் முடங்கிப் போகும்; கண் பார்வையிழக்கும்; தசைகள் வலுவிழக்கும். மரபுவழி நோயான இது தாயிடம் இருந்தே குழந்தைக்கு கடத்தப்படும். ஆகவே, மைட்டோ காண்ட்ரியா கொடை சிகிச்சை என்பது சோதனைக்குழாய் குழந்தையின் இன்னொரு வடிவமே. அதில் ஆரோக்கியமான பெண்ணிடம் இருந்து பெறப் பட்ட கருமுட்டையில் உள்ள மைட்டோகாண்ட்ரியா பயன்படுத்தப்படுகிறது.

மைட்டோகாண்ட்ரியா கொடை

மைட்டோகாண்ட்ரி யாக்கள் அவற்றிற்கென சொந்த மரபணு  குறியீடுகள் அதாவது டி.என்.ஏ. வை பெற்றுள்ளன. ஆகவே, இந்த முறையில் பிறக்கும் குழந்தை, தாய், தந்தை மற்றும் கருமுட்டை கொடையாக அளிக்கும் பெண் ஆகிய 3 பேரின் டி.என்.ஏ.க்களைப் பெற்றிருக்கும். பெற்றோரின் மரபணு சங்கிலியில் செய்யப்பட்ட இந்த மாற்றம், நிரந்தரமாக அடுத்து வரும் பல தலைமுறைகளுக்கும் வழிவழியாக கடத்தப்படும். தாய், தந்தை தவிர்த்து, மூன்றா வது நபர் அதாவது, கருமுட்டை கொடையாக அளிக்கும் பெண்ணின் டி.என்.ஏ. முழுக்கமுழுக்க மைட்டோ காண்ட்ரியா உருவாக்கம் தொடர்பான தாக மட்டுமே இருக்கும். குழந்தை யின் தோற்றம், குணநலன்கள் போன்ற மற்ற தன்மைகளை தீர்மா னிப்பதில் அதற்கு எந்தவொரு பங்கும் இருக்காது.

இதுதான் முதல் குழந்தையா?

இந்த தொழில்நுட்பம் நியூ  காஸில் நகரத்தில் கண்டுபிடிக்கப் பட்டது. இதனைப் பயன்படுத்தி குழந் தைகளை உருவாக்க வழி வகை செய்து பிரிட்டனில் 2015-ஆம் ஆண்டு சட்டங்கள் இயற்றப்பட்டன.ஆனாலும், பிரிட்டன் அடுத்த கட்டத்தை நோக்கி உடனே பயணப்படவில்லை. 2016-ஆம்  ஆண்டு அமெரிக்காவில் ஜோர்டான்  குடும்பம் ஒன்று இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி சிகிச்சை எடுத்துக் கொண்டது. 2023 ஏப்ரல் 20-ஆம்  தேதிப்படி, அய்ந் துக்கும் குறைவான குழந்தைகள் புதிய தொழில்நுட் பத்தைப் பயன்படுத்தி பிறந்திருப்பதாக மனித கருவுறுதல் மற்றும் கருவியல் ஆணையம் (பிஸிணிகி) கூறுகிறது. இந்த சிகிச்சையைப் பெற்றுக் கொண்ட குடும்பங்கள் அடையாளம் காணப்படுவதைத் தடுக்கவே  துல்லியமான விவரங்களை வெளியிடுவது தவிர்க்கப்பட்டுள்ளது. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் ‘தி கார்டியன்’ பத்திரிகை கேள்வி  எழுப்பிய போது இந்த தகவல்கள் தரப்பட்டுள்ளன. “பிரிட்டனில் முதன் முறையாக, கொடையாக பெறப்பட்ட மைட்டோகாண்ட் ரியாக்க ளுடன் குறைந்த எண்ணிக்கையில் குழந்தைகள் பிறந்துள்ளன. மைட்டோகாண்ட்ரியா கொடையின் விளைவுகளை முழுமையாக ஆய்வு செய்து அதனை படிப்படி யாக நெறிப்படுத்துவதே அடுத்த கட்டமாக இருக்கலாம்,” என்கிறார் ப்ராக்ரஸ் எஜூகேஷனல் டிரஸ்ட் இயக்குநர் சாரா நார்க்ராஸ்.

ஆபத்தும் உண்டு

ஆனால் நியூ காஸில் மருத்து வக் குழு தொடர்ந்து மவுனம் காக்கிறது. ஆகவே, இந்த சிகிச்சை வெற்றிகரமாக அமைந்ததா? இல்லையா? என்பதை உறுதியாகக் கூற முடியவில்லை. “மைட்டோகாண்ட்ரியா பதிலீடு தெரபி தொழில்நுட்பம் எவ்வ ளவு சிறப்பாக செயல்பட் டது? குழந்தைகள் மைட்டோ காண்ட்ரியல் நோயில்லாமல் இருக்கிறார்களா? பிற்காலத்தில் அவர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளதா? என்பதை அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும்.” என்று பிரான்சிஸ் கிரிக் ஆய்வு நிறுவன பேராசிரியர் ராபின் லவெல்-பேட்ஜ் கூறுகிறார். தொழில்நுட்ப ரீதியாக “தலை கீழ் மாற்றம்” ஏற்படும் அபாயமும் உண்டு. அதாவது, ஏதேனும் குறை பாடுள்ள மைட்டோகாண்ட்ரியா குழந்தைக்கு கடத்தப்பட்டால், அது எண்ணிக்கையில் பெருகி இந்த நோயை உரு வாக்கும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது. இங்கிலாந்தில் ஏற்கெனவே ஒருமுறை செய்யப்பட்ட ஆய்வில், ஒவ் வோர் ஆண்டும் 150  குழந்தைகள் வரை இந்த குறை பாட்டுடன் பிறக்கக்கூடும் என்று தெரியவந்தது.

 நன்றி: ஜேம்ஸ் கல்லேகர்

'தீக்கதிர்', 11.5.2023

வியாழன், 27 ஏப்ரல், 2023

புதிய பல்லியினம்

 புதிய பல்லியினம்

12

தென்னமெரிக்காவின் பெரு நாட்டில் ஆண்டீஸ் மலைத்தொடரில் ஒரு புதிய பல்லி இனம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதன் அறிவியல் பெயர் லியாலிமஸ் வார்ஜெண்ட்டே (Liolaemus Warjantay). இந்த இனம் பெருவின் தென்மேற்குப் பகுதியில் அரிக்கீட்டா  (Arequita)  என்ற பிரதேசத்தில் வாழ்கிறது. 4,500 மீட்டர் (14,700 அடி) உயரத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இதனை பன்னாட்டு விஞ்ஞானிகள் குழு ஒன்று சமீபத்தில் கண்டுபிடித்தது.

Liolaemus Warjantay  அமைப்பும் பரவலும்

இதன் தலை அடர் சாம்பல் நிறத்துடன் உள்ளது. பெண் இனப் பல்லிகள் வெளிறிய மஞ்சள் நிற கண் இமைகளைப் பெற்றுள்ளன. அர்ஜெண்டினா, பொலிவியா, சிலி மற்றும் பெரு நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு விஞ்ஞானிகள் குழு இந்த இனத்தைக் கண்டுபிடித்தது. இதே வகையைச் சேர்ந்த 280 இனங்கள் பெருவில் உள்ள மத்திய ஆண்டீஸ் பகுதி முதல் தென்னமெரிக்காவின் தென்கோடி மூலையில் உள்ள படகோனியா (Patagonia) வரை காணப்படுகிறது.

தகவமைப்பு

இவை தாங்கள் வாழும் பகுதிக்கு ஏற்ப பல்வேறு தகவமைப்புகளைக் கொண்டுள்ளன. 2021 ஆரம்பத்தில் ஆய்வாளர்கள் இதே பிரிவைச் சேர்ந்த மற்றொரு பல்லியை இதே பகுதியில் 5,000 மீட்டர் உயரத்தில் கண்டுபிடித்தனர். இதுவே உலகில் மிக உயரத்தில் வாழும் ஊர்வன வகையைச் சேர்ந்த உயிரினம் என்று அப்போது விஞ்ஞானிகள் கருதினர். இந்த கண்டுபிடிப்பு பூமியில் மனிதன் கண்டறிய வேண்டிய உயிரினங்கள் எண்ணற்றவை உள்ளன என்பதை எடுத்துக் காட்டுகிறது.

- சிதம்பரம் இரவிச்சந்திரன்


ஞாயிறு, 19 மார்ச், 2023

சுமார் 3 கோடி ஆண்டுகள் கடந்து வந்த ஒரு மரபணுத் தொடரின் முடிவிற்கு முடிவு?


55 மில்லியன் ஆண்டுகள் உயிர் பிழைத்த வடக்கு வெள்ளை காண்டாமிருகம் பனி யுகங்கள், பூகம்பங்கள், விண்கல் தாக்குதல்களைக் கண்டது மற்றும் கோள்களில் எண்ணற்ற வரலாற்று மாற்றங்களுக்கு சான்றாக இருந்தது,  இப்போது செயல்பாட்டில் அழிந்து விட்டது.

கடைசி ஆண் வடக்கு வெள்ளை காண்டா மிருகம் இறந்துவிட்டதால், இப்போது இரண்டு பெண் வடக்கு வெள்ளை காண்டாமிருகங்கள் உயிருடன் உள்ளன. செயற்கை இனப்பெருக்கத்தில் சிறந்த முயற்சிகள் இருந்தும், எந்த வெற்றியும் அடையப்படவில்லை. இந்த துணை இனம் மறதிக்குள் மறைந்து போவது காலத்தின் விடயம். பூமியின் மேற்பரப்பில் இருந்து மேலும் ஒரு உயிரினத்தை மனிதர்கள் அகற்றியுள்ளனர் என்பது மிகவும் வருந்தத்தக்கது, 

மேலும் ஒரு அழகான படைப்பு அழிக்கப் பட்டது. இந்த அழிவுகளுக்குக் காரணம் "மனித குலம்" அல்ல - "மனிதகுலம்" முடிவுகளை எடுப்ப தில்லை. முதலாளித்துவ வர்க்கம் பலரின் நலன்களை விட ஒரு சிலரின் லாபத்தை முன்னிறுத்தி முடிவுகளை எடுக்கிறது. சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு முதலாளித்துவமே காரணம்.

மனித இன தோற்றமும் பரிணாமமும் பரவலும்


 தமிழர்களுக்கு என தனியே மரபணு அமைப்பு உள்ளதா? ஆய்வுகள் கூறும் உண்மைகள்

உலகில் அனைத்து உயிரினங்களும் பரிணமிக்கின்றன. சமகாலத்திய உயிர்கள் அனைத்தும் பரிணாம கிளைகளின் தொடர் சங்கிலியின் தற்போதைய கண்ணி. பரிணாம தொடர்ச்சியில் தற்போதைய உயிரினங்களில் மனிதனுக்கு நெருக்கமானது சிம்பன்சி. சுமார் 65 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதனுக்கான பரிணமித்த பாதையும் சிம்பன்சி பயணித்த பாதையும் பிரிந்தன. இருந்தும், ஒப்பீட்டளவில் 98.8% மரபணு தொகுப்பு ஒன்று போல் இருக்கும்.

அறிவியல் ரீதியாக மனிதனை புரிந்து கொள்ள, சிற்றினம், பேரினம், குடும்பம் போன்ற சில அடிப்படை அறிவியல் வழங்கு வார்த்தகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக Pantheraஎனும் ஒரே பேரினத்தை சேர்ந்தவைதான் சிங்கம் (leo), புலி (tigris), சிறுத்தை  (pardus). இவை மூன்றும் பூனை (Felidae) குடும்பத்தை சார்ந்தவை.

ஆக, புலியின் அறிவியல் பெயர் pandarus tigris,  சுருக்கமாக P. tigris எனவும் தொடர்ந்து குறிக்கலாம். சிங்கம் - P. leo, சிறுத்தை  P. pardus.

மனிதனின் அறிவியல் பெயர் Homo sapiens. Homo பேரினம்,  sapiens சிற்றினம். தற்போது உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் H. sapiens தான். இந்த  H. sapiens எப்போது எங்கே எப்படி உருவானாது, எப்போது, எப்படி பரவியது? Sahelanthropus tchadensis என்னும் மனிதக் குரங்குதான்(Primate)என்று கூறுவர், முதனி என தமிழ்படுத்துகின்றனர்) தற்கால மனிதனுக்கும், சிம்பன்சிக்குமான பொதுவான மூதாதையின் நெருங்கிய உறவாக கருதப்படுகிறது. ஆப்ரிக்க கண்டத்தின் மேற்கு பகுதியில் சுமார் 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருக்கிறது. இது எப்போதும் அல்லாமல், அவ்வப்போது மட்டும் நிமிர்ந்து நடந்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

அதாவது மனிதன் எனும் உயிரினம் உருவாவதற்கான முதல் படிநிலை இந்த உயிரினத்தினிடமிருந்து தொல்லியல் ஆதாரத்தில் அறியப்படுகிறது.

பின் மனித பரிணாமத்தில் பாதையில் முக்கிய திருப்புமுனையில் இருந்த உயிரினம் Orrorin tugenensis எனும் கிழக்கு ஆப்ரிக்காவில் வாழ்ந்த பிரைமேட். அது கிட்டத்தட்ட முழுவதுமாக நிமிர்ந்த நடை கொண்டிருந்தது. இந்த O. tugenensis  மனிதனின் மூதாதை வழியில் அல்லாமல், ஆனால் மூதாதை விலங்கின் நெருங்கிய பரிணாம தொடர்பு கொண்ட உயிரியாக இருக்கலாம் என்றும் கருத்துகள் உண்டு. அதன் தொடர்ச்சியாக, 55 லட்சம் ஆண்டுகளுக்கு முன் கிழக்கு ஆப்ரிக்காவில் Ardipithecus kadabba  எனும் விலங்கு இரு கால்களைக் கொண்டு நிமிர்ந்து நடக்கும்படியான ஆற்றல் பெற்றிருந்ததை அதன் தொல் எலும்பு படிமங்கள் மூலம் அறியப்படுகிறது(Gobbons 2009).

இதன் நெருங்கிய உயிரினமாக 44 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த Ardipithecus ramidus  எனும் விலங்கும் நேர் நிமிர்ந்து நடத்துள்ளது.

ஆனாலும், இந்த  Ardipithecus பேரின விலங்குகள், மரத்தினை பற்றும் படியான உள்ளங்கை உள்ளங்கால்களை கொண்டிருந்தன. இவைகளின் மூளை அளவும் 300 - 350cc (1ccஎன்பது ஒரு கன செண்டிமீட்டர்) அளவிலேயே இருந்தன.

இந்த Ardipithecus பேரினத்திலிருந்து தான் Australopithecus பேரினம் பரிணமிக்கிறது. இந்த நிகழ்வுமனித பரிணாமத்தில் முக்கிய மைல்கல்.

சுமார் 40 லட்சம் ஆண்டு காலம் முன் வாழ்ந்த Australopithecis anamensis எனும் விலங்கின் தொல் படிமத்தால் அறியப்படும் முக்கிய நிகழ்வு, அதன் உள்ளங்கைகள், உள்ளங்கால்கள் மரத்தில் ஏறும்படியாக இல்லாது இருந்தது, பரிணாமத்தில் முக்கிய நிகழ்வு (Leakey et al.1995).

பின் 35 லட்ச ஆண்டுகளுக்கு முன் பலப்பல Australopithecus பேரினத்தின் சிற்றினங்கள்,A. afarensis, A. bahrelghazali தோன்றி, மிக முக்கியமாக 30 லட்சம் ஆண்டுகளுக்கு முன், தெற்கு ஆப்ரிக்காவில் தோன்றிய A. africanus மிக முக்கிய திருப்புமுனை உயிரியாக கருதப்படுகிறது.

இதன் மூளை அளவு420 - 510cc ஆக அதிகரிக்கிறது. இதன் பின் கால சுழற்சியில் பரிணாமத்தில் Australopithecus  பேரினம் பல வேறுபட்ட சிற்றினங்கள் என, (உதாரணம் A. garhi) பரிணமிக்கிறது. இதன் கிளையாக paranthropus aethiopicus எனும் உயிரினமும் வாழ்ந்தது அறியப்படுகிறது. இதே காலகட்டத்தில்தான் (25-27 லட்சம் ஆண்டுகளுக்கு முன்) கற்களை கருவிகளாக இந்த விலங்குகள் பயன்படுத்தி இருக்கின்றன என உறுதிபட கூற முடியாவிட்டாலும், அதற்கான சமிக்ஞைகள் பரிணமித்திருக்கும் என கருதப்படுகிறது.இதன் அந்திம காலத்திலேயே (23 லட்சம் ஆண்டுகளுக்கு முன்) Homo habilis  எனும் Homo  பேரினத்தை சார்ந்த விலங்கும் தோன்றுகிறது. மனிதனான Homo sapiens sapiensசும், H. habilis-சும் ஒரே பேரினத்தை சார்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

இனி, அது இது என அஃறிணையில் குறிக்காமல் உயர்திணையிலேயே குறிப்போம்.  H. habilis கற்களை குச்சிகளை கருவிகளாக மாற்றி, அதை உபயோகப்படுத்தியதும் கண்கூடாக, தொல் எச்சங்கள் மூலம் அறியப்படுகிறது (இந்த கருவிககளை இதற்கு முன்னும், இதே காலகட்டத்திலும் வாழ்ந்த Australopithecus garhi, paranthropus aethiopicus விலங்குகள் செய்திருக்கலாம் எனும் வாதமும் உண்டு). Homoபேரினத்தில் வெளிப்புறத் தோற்றம் தாண்டி, மூளை/அறிவு சார்ந்த பரிணாமமும் மிகப்பெரிய மாற்றங்களை உண்டாக்கியுள்ளது. இவரை முதல் மனிதன் என்றே சொல்லும் அளவுக்கு மனிதனுக்கான பண்புகள் உருவாகிவிட்டிருந்தன. இவர் சுமார் 23 லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவாகி, 16.5 லட்சம் ஆண்டுகள் வரை வாழ்ந்துள்ளான். இவரை‘HANDY MAN’  என்று அழைக்கலாம். காரணம் ஆயுதங்களை செய்யக் கற்றுக்கொண்டார்.அதனை பத்திரப்படுத்தி மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்தினார் (இதற்கு முந்தைய விலங்குகள், தற்போதும் சில குரங்குகள் கற்ளை குச்சிகளை கருவிகளாக பயன்படுத்தினாலும், பத்திரப்படுத்தி மீண்டும் மீண்டும் உபயோகித்ததில்லை). அதாவது, எதிர்காலத்தில் தேவை உண்டு எனும் சிந்தனை மேலோங்கத் தொடங்கிய காலம். குறிப்பிடத்தகுந்த மாற்றமாக, இவரது மூளையின் அளவு 500 - 900cc வரை விரிவடைந்திருந்தது. இது மூளை/அறிவு சார்ந்த பரிணாமத்தின் மிகப் பெரிய லாங்ஜம்ப் என்றே சொல்லலாம். இந்த  H. habilis,பிற Homo சிற்றினங்களுக்கும், முந்தைய Australopithecus பேரினத்திற்குகான இடைப்பட்ட குணாதிசியங்களுடனே இருந்தார்  (Tobias 2006). வெளித்தோற்றமும் சற்றே குரங்கு ஜாடை இருந்தது.  (Tobias 2006). என்றால் நிமிர்ந்த என்று பொருள். இவரை ‘UPRIGHT MAN’’ என்றும் குறிப்பிடுவதுண்டு.  Homo erectus சுமார் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் கிழக்கு ஆப்ரிக்காவில் தோன்றியது. உடல்ரீதியாக மனிதனாகவே தெரிந்தார். H. habilisக்கு இருந்தது போல அல்லாமல், குரங்கு முகஜாடை பெருமளவு மறைந்து மனித முகஜாடை கொண்டிருந்தார். இவரது மூளை அளவு 546 - 1,251cc வரை விரிவடைந்திருந்தது. இவர் பயன்பாடு சார்ந்த பலதரப்பட்ட விதவிதமான கல் ஆயுதங்களை செய்தார்.

அதாவது, இன்ன வேலைக்கு இன்ன ஆயுதங்கள் என பிரித்தறியும் அறிவு பெற்றிருந்தார். மிக முக்கியமாக, நெருப்பை உண்டாக்க கற்றுக்கொண்டாரா என்பதில் அய்யப்பாடு இருந்தாலும், நெருப்பை பயன்படுத்த கற்றுக்கொண்டார். இயற்கையாக தோன்றிய நெருப்பை, தொடர்ந்து எரிய விட்டு பயன்படுத்தியிருக்கலாம் என்றே கருதப்படுகிறது. ஹோமோ எரக்டஸ் மனிதர்கள் அறிவு சார்ந்த ஆதிக்கம் செலுத்தி ஆப்ரிக்கா முழுவதும் பரவினர்.

இவர்களே முதல் முறையாக ஆப்பிரிக்காவை விட்டும் வெளியேறினர். மத்திய கிழக்கில் இரண்டாக பிரிந்து, அய்ரோப்பாவிலும் ஆசியாவிலும் நுழைந்தனர். மேற்கு அய்ரோப்பா வரையிலும், ஆசியாவில் இந்திய நிலப்பரப்பை தாண்டி, இந்தோனீசியா தீவுகள் வரையிலும் பரவினர். இவர்கள் மிதவைகளை பயன்படுத்திய முதல் கடலோடியாக இருக்கவும் வாய்ப்புண்டு என்றும் நம்பப்படுகிறது. பின், சென்ற இடங்களுக்கு ஏற்ப தன்னை தகவமைத்து பல்வேறு புதிய  Homo சிற்றினங்களாக பரிணமித்தனர். தெற்கு ஆப்ரிக்காவில் பரவிய  H.erectus, கால சூழ்நிலைக்கேற்ப மாற்றமடைந்து H. ergaster - ராக பரிணமித்தது. இந்தH. ergaster சுமார் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றி, 14 லட்சம் ஆண்டுகளுக்கு முன் அழிந்தே போகிறது. ஆயினும்H.erectus மற்றும் H.ergaster அவ்வப்போது கலந்து இணை சேர்கின்றன.மேற்கு அய்ரோப்பாவை வந்தடைந்த H. erectus,அங்குள்ள சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு H. antecessor ராக பரிணமித்தது. இந்த இனம் 12 லட்சம் ஆண்டுகள் முன் தோன்றி, 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் முற்றாக அழிந்தது.

சமகாலத்தில் ஆப்பிரிக்காவிலிந்து கிழக்கே நகர்ந்து சீனா மற்றும் இந்தியா வரை வந்தடைகின்றது H. erectus. இந்தியா வந்தடைந்த H.erectus, இந்தியா முழுவதும் பரவி, தரைவழியாக கிழக்கு ஆசியா வரை பரவி, பின் கடல் மார்கமாக இந்தோனீசியா தீவுகள் வரை பரவியது.

தென் இந்தியாவில் சென்னைக்கு அருகில் அதிரம்பாக்கத்தில், கற்கருவிகளை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் காலம் 3,85,000 ஆண்டுகளுக்கு முன் வரை இருக்கலாம் என தெரிகிறது. இதனை உருவாக்கி பயன்படுத்தியதுH.erectus என்றே ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.இந்த கற்கருவிகளுக்கும், அங்கே தற்போது வாழும் தமிழர்களுக்கும், ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் எந்தவித வரலாற்றுத் தொடர்பும் இல்லை.

இந்தோனீசியா வரை சென்றH.erectus, அங்கே ஃப்ளாரன்ஸ் தீவில், உருவமாற்றம் பெற்று, H. florensisஎனும் குட்டையான மனிதனாக உருவெடுத்தது. தீவின் சூழல் இவனை மூன்றடிக்கு வளரும் இனமாக மாற்றிவிடுகிறது. அங்குள்ள, குள்ள யானைகளை கூட வேட்டையாடியது.

H. florensis-ä ‘HOBBIT MAN’, ‘FLORES MAN’என்றும் அழைக்கின்றனர்.  H. florensis இனம் சுமார் 1,90,000 ஆண்டுகளில் தொடங்கி, மிக சமீபமாக 12,000 ஆண்டுகளுக்கு முன் வரை அந்த தீவுகளில் வாழ்ந்துள்ளது. வடக்கு ஆப்பிரிக்காவில் வாழ்ந்த H.erectus,மெல்ல மெல்ல மாற்றமடைந்து, H.ergester சில சந்தர்ப்பங்களில் கலந்து, H. heidelbergensis உருவெடுத்தது. இந்த இனமே தற்கால மனித இனமான பி.  H. sapiens-ன் நேரடி மூதாதை. இந்த H. heidelbergensis மீண்டும் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி, அய்ரோப்பா, ஆசியாவில் சீனா, இந்தியா, இந்தோனீசியா வரை பரவியது. இந்த இனம் வாழ்ந்தது 6 லட்சம் முதல் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வரை.

நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன், நெருப்பை பயன்படுத்துவது இந்த இனத்துக்கு கைவந்த கலையாக மாறிவிட்டிருந்தது. இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் பண்பு இந்த  H. heidelberginsis காலத்தில் தான் தொடங்குகிறது. சீனா மற்றும் கிழக்காசியா வரை பரவிய இவன், அங்கே H. denisova எனும் புதிய மனித இனமாக பரிணமித்தது. Denisovans  என அழைக்கப்பட்ட இந்த மனித இனம் வாழ்ந்தது இரண்டு லட்சம் தொடங்கி 50,000 ஆண்டுகள் வரை. அய்ரோப்பவை வந்தடைந்த H. heidelbergensis, அங்கே குளிருக்கு ஏற்றபடி H. neanderthalensis, ‘NEANDERTHAL MAN’  என்றும் அழைக்கப்படும் நியாண்டர்தால் மனிதனாக மனித இனமாகப் பரிணமித்தது. வெள்ளை தோலுடன், செம்பட்டை முடியுடன், பருத்த உடலுடன், வாழ்ந்த இந்த இனத்துக்கு என்று மொழிகள் இருந்திருக்கும் என நம்பப்படுகிறது. புறத்தோற்றத்தில் சகமனிதனாகவே நாம் கருதும் அளவுக்கு தற்கால மனித இனத்தை இந்த இனம் ஒத்திருந்தது.

H. neanderthalensis வாழ்ந்த காலம் சுமார் நான்கு லட்சம் முதல் 1,30,000 ஆண்டுகள் முன் உச்சம் பெற்று, சுமார் 35,000 ஆண்டுகளுக்கு முன், மனிதன்(H. sapiens)  வரவை தொடர்ந்து முற்றாக அழிந்தது. H. neanderthalensis மனித இனம்  H.sapiens இனப்பெருக்கம் செய்துள்ளது வரலாற்றில் முக்கிய நிகழ்வு. நியாண்டர்தால்களிடம் கலை பண்பாடு இருந்ததும் பரிணாமத்தின் முக்கிய மைல்கள்.வடக்கு பகுதி ஆப்ரிக்காவில் தங்கிய H. heidelbergensis,  மெல்ல மெல்ல பரிணமித்து, மூன்று முதல் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன் H. sapiensஎனும் புதிய மனிதனாக பரிணமித்தது, அதாவது நாம் தான். H. sapiens இனத்தை ‘MODERN HUMAN’ என்றே அழைத்தனர்.  H. sapiens- இடம் கட்டமைந்த மொழி இருந்தது.

உலகத்தை கைப்பற்றுதல்

இந்த  H. sapiens,2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மீண்டும் ஆப்ரிக்காவை விட்டு வெளியேறி, மத்திய கிழக்காசியாவிலும், அய்ரோப்பாவிலும் நியாண்டெர்தல்களுடன் கலந்தது. நியாண்டர்தால்கள் புதிய மனிதனுடன் இரண்டற கலந்து சுமார் 35,000 ஆண்டுகளுக்கு முன் முற்றாக வரலாற்றிலிருந்து காணாமல் போகிறது.

H. sapiens -ன் ஆசிய வரவால், இங்கே இந்தியாவில் வாழ்ந்து வந்த H. erectus,  போட்டியிட முடியாமல் வாழமுடியாமல் மெல்ல மெல்ல அழிகிறது. அவ்வப்போது, இரண்டு இனங்களும் இணை சேர்ந்த நிகழ்வும் நடந்ததாக கருதுகோள் உண்டு, ஆயினும் போதிய தரவுகள் இல்லை.

கிழக்காசியாவை அடைந்த H. sapiens, அங்கிருந்த டெனிசோவியன்ஸிடம் கலந்தது. காலப்போக்கில் டெனிசோவியன்ஸும் மறைகின்றனர். சுமார் 40000 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவையும் கடல் வழியாக இந்த புதிய மனித இனம் அடைந்தது. கிழக்கு ரஷ்யா வழியாக, நிலவழியாக அலாஸ்காவை 20000 ஆண்டுகளுக்கு முன் அடைந்து, வட அமெரிக்கா தாண்டி, 12000 ஆண்டுகளுக்கு முன் தென் அமேரிக்காவிலும் அடைந்து, அண்டார்டிகா தவிர்த்து, மொத்த உலகத்திலுமான ஒரே மனித இனமாக பரவி வாழத்தொடங்குகியது.

தமிழன் தனித்துவமானவனா?

மரபணு ரீதியில் தமிழன் தனித்துவமானவனா என்றால் இல்லை என்றே பதிலளிக்க வேண்டியிருக்கும். ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறிய மொத்த மனித கூட்டம் அதிகபட்சமாக 10,000 இணைகள் மட்டுமே என நம்பப்படுகிறது.

அதாவது, ஆப்பிரிக்காவுக்கு வெளியே வாழும் அனைத்து மக்களின் மூதாதையர்கள் இந்த பத்தாயிரம் பேர்களே என நம்பப்படுகிறது. ஆப்ரிக்காவில் வாழும் மனிதர்கள் ஒன்று போல நமக்கு தோன்றினாலும், மரபணு ரீதியாக அதிக வேறுபாடுகளை கொண்டவர்கள். அதாவது, ஒரு வெள்ளை அய்ரோப்பியரும், பழுப்பு இந்தியரும், மஞ்சள் சீனரும், கருப்பு ஆஸ்திரேலியரும் வேறுபாடுகளாக நம் கண்களுக்கு தெரிந்தாலும், அனைவரும் மரபணு நெருக்கம் கொண்டவர்கள். காரணம், மரபணு வேறுபாடு அடைய பல லட்சம் ஆண்டுகள் பிடிக்கும்.

நாம் தோன்றியதே சுமார் மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்தான். வெறும் பத்தாயிரம் இணைகள் மூலமே ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி, அதிகபட்சம் இரண்டு லட்சம் ஆண்டுகள்தான் பரிணாமப் பாதையில் நடந்துள்ளோம். தனித்த மரபணு தொகுப்பு உருவாக, புவியியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டு, பல லட்சம் ஆண்டுகளாவது ஆகும்.

சுமார் 65 லட்சம் ஆண்டுகளுக்கு முன் நம்மை பிரிந்த சிம்பன்சிக்கும் நமக்குமான மரபணு தொகுப்பு வேறுபாடே 1.2% தான் எனும் போது, வெறும் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றி, புவியியல் ரீதியாக தனிமைப்படுத்தப்படாத நாம், எப்படி மரபணு தொகுப்பில் அதிகப்படியான வேறுபாட்டை கொண்டிருக்கமுடியும்? அதற்கான வாய்ப்போ, காலமோ நமக்கு அமையவில்லை என்பதே நிதர்சனம்.

தமிழன் மட்டுமல்ல, உலகில் உள்ள எந்த இனக்குழுவிற்கும் தனித்த மொழி, கலாசார அடையாளங்கள் இருக்குமே தவிர, தனித்த மரபணு தொகுப்பு அமைப்பு, அறிவியல் ரீதியாக இல்லவே இல்லை.

(தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கட்டுரையாளர் ராம்குமார், சுமார் 15 ஆண்டுகளாக மரபணு சார்ந்த ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது அமெரிக்காவின் ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் முதுமுனைவர்பட்ட ஆய்வாளராகவும், திருச்சி அரசுக் கல்லூரியின் வருகைதரு ஆசிரியராகவும் இருக்கிறார்.)

வியாழன், 9 மார்ச், 2023

மரபணு ஆராய்ச்சிக்காக சவாண்டே பேபோவுக்குக் கிடைத்த நோபல் பரிசு! (மனித இன தோற்றம்)

 

 நிர்மல் ராஜா

உயிரியலாளர்

மைக்கேல் க்ரைடன் எழுதிய ‘ஜுராசிக் பார்க்’ நாவலில் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்த டைனோசர்களை, அதன் மரபுத் தொகுதி யைக் கொண்டு குளோனிங் செய்து மீட்டுட்ருவாக்கம் செய்வார்கள். குளோ னிங், மரபணு ஆய்வு போன்றவை மக்களிடையே மிகவும் புதிய சொற்களாக இருந்தன. ‘பல்லாயிரம் ஆண்டுகளுக் குள் முன்னர் அழிந்து போன உயிரி னத்தின் எச்சத்தில் இருந்து மரபணுவைப் பிரித்து எடுக்க முடியுமா?’ என்ற கேள்வி எழுந்தது. ‘முடியும்’ என வெகு சிலரே சொன்னார்கள்; அதுவும் பெருத்த சந்தேகங்களிடையே!

பொதுவாக ஓர் உயிரினத்தின் அனைத்துத் தகவல்களும் அதன் மரபணுத் தொகுதியில் இருக்கும். சமையல் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து அதிலுள் ளதைப் போல சமைத்தால் அந்த உணவை நாம் உருவாக்கலாம் என்பது போல, மரபணுத் தொகுதி என்பது பல்லாயிரம் மரபணுக்கள் சேர்ந்தது. மரபணுக்கள் ஓர் உயிரினத்தின் இயல்புகளைப் பற்றிய தகவல்களைச் சந்ததிகளூடே கடத்தவல்லது. 

சொல்லப்போனால் நமது மரபணுக் கள் நமது முன்னோர்களின் உடலின் மூலம் அவர்களின் முன்னோர்களிடம் இருந்து வந்தவையே. இறந்தாலும் இறவா வரம் பெற்றவை மரபணுக்கள். இதை ரிச்சர்ட் டாக்கின்ஸ் ‘இறவாச் சுருள்’ என்கிறார். இறவாச் சுருள் என்றாலும், இவற்றால் ஓர் உடலினுள் மட்டுமே இறவாமல் இருந்து, அவ் வுடலில் இருந்து இன்னோர் உடலுக்கு (இனப்பெருக்கம் மூலம்) தாவிச் செல்ல முடியும். ஓர் உயிரினம் இறந்து விட்டால் அதன் உடலில் வெகு சில காலமே டிஎன்.ஏ. இருக்கும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து போகும். டி.என்.ஏ.வின் அரை வாழ் காலம் வெறும் 521 ஆண்டுகளே! அதாவது 521 ஆண்டுகளில் அதனுள் இருக்கும் கடடமைப்புகள் உடைந்து போகும். இன்னொரு 521 ஆண்டுகளில் ஒன்றும் இல்லாமல் போய் விடும். இறந்த உடல் அழுகி உருத்தெரியாமல் போவது போல!

ஆனால் சில சூழ்நிலைகளில் அவ்வு டல்கள் பல காலத்துக்கு கெடாது இருக்கும். எகிப்து மம்மிகள் போல காரத்துக்காகவும், ஆல்ப்ஸ் மலையில் சுமார் அய்ந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து பனிப் பாறைகளில் இயற்கையாகப் பதப்படுத்த மனித உடல் போலவும், சில சூழ்நிலைகளில் டிஎன்ஏ பல நூற்றாண்டுகளுக்குக் கெடாது இருக்கும். அதாவது மைனஸ் அய்ந்து டிகிரி செல்சியஸ் தட்பவெப்பத்தில் டிஎன்ஏ சுமார் அறுபது லட்சம் ஆண்டு கள் வரை சிதையாமல் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். 

‘டைனோசரகள் மரபணுக்கள் கிடைப்பது சாத்தியமில்லை. ஆனால் அக்காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் மரபணுக்களை எடுக்கலாமே?’,  ‘ஆராய்ந்தால் நமக்கும் அவர்களுக்கு மிடையே இருக்கும் தொடர்பு நமது பரிணாம வரலாற்றை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள உதவுமே?’ போன்ற கேள்விகள் சுவீடனைச் சேர்ந்த மரபியலாளர் ஸ்வாண்டே பேபோவுக்கு எழுந்தன. 

1986-இல் சுவீடனின் உப்சாலா பல்கலைக்கழத்தில் முனைவர் பட்டம் பெற்றவர், பின்னர் பல நாடுகளில் ஆராய்ச்சியை தொடர்ந்து வந்தார் 1990களில் ஜெர்மனியின் மேக்ஸ் பிளாக் நிறுவனத்தில் பரிணாம மானிடவியல் துறையைத் தொடங்க முக்கிய காரணமாக இருந்தார். ஆரம்ப காலகட்டத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மம்மிக்களில் இருந்து மரபணுக்களை பிரித்தெடுக்க முயன்றார். பல தோல்விகள். மரபணுக்கள் மம்மிக்களிடம் இருந்து வந்தாலும் கூடவே அவற்றைக் கையாண் டவர்கள், சோதனைக் கூடங்களில் இருந்தவர்களின் மரபணுக்களும் சேர்ந்தே வந்தன. பின்னர் பல ஆராய்ச்சிகளின் முடிவில் தொன்மை யான மரபணுக்களைப் பிரித்து எடுப்பது எப்படி என ஒரு முறையான நெறி முறையை வகுத்தார். 

1997-இல் பேபோ சுமார் நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்து போன நியாண்டர்தால் மனிதர்களின் எலும்பு களில் இருந்து டி.என்.ஏ.வைப் பிரித்து எடுக்க முடியும் என நிரூபித்தார், 2010-இல் சுமார் நாற்பதாயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு நியாண்டர்தால் மனிதரின் எலும்பில் இருந்து முழு மரபணுத் தொகுதியையும் பிரித்தெடுத்து வெளியிட்டார். அது வரை  எலும்புகளும், கற்கருவிகளும் அகழ்வாராய்ச்சியில் தூசு படிந்து இருந்த தொல் மானுடவியல் ஆராய்ச்சியை முதன் முதலாக பரிசோ தனைக் கூடத்துக்குக் கொண்டு வந்தார் பேபோ. தொன்மையான மரபணுக்களை, இன்று உயிரோடு இருக்கும் நமது மரபணுக்களுடன் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தபொழுது பல உண்மைகள் வெளிவந்தன. 

அதாவது அதுவரை புதிராக இருந்த நியண்டர்தால்களின் ஆரம்பம் தெளிவா னது. சுமார் ஏழு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பொது மூதாதையரில் இருந்து நியாண்டர்தால்களும் மனிதர் களும் பரிணமித்தனர். இன்றைய அய்ரோப்பாவில் அவர்கள் பரிணமித் தாலும், பின்னர் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறிய மனிதர்களைச் சந்திக்க நேர்ந்தது. சந்திப்புகள் ஒரு கட்டத்தில் அன்பாகவும் மாறியது. மனிதர்களும் நியாண்டர்தால்களும் கலந்து பிள்ளை கள் பெற்றுக்கொண்டனர். அதாவது இன்று ஆப்பிரிக்கர்கள் அல்லாத மனிதர் களின் மரபணுக்களில் சுமார் 1 முதல் 2% வரை நியண்டர்தால்களின் மரபணுக்கள் இருப்பதை காணலாம். நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தனித்த மனித இனமே, மற்றொரு மனித இனத்துள் கலந்து முற்றிலும் அழிந்து போனது. 

பேபோவின் கண்டுபிடிப்புகள் மனிதப் பரிணாமம் பற்றிய புரிதலைப் புரட்டிப் போட்டது. அகழ்வாராய்ச்சியில் கிடைக்காத ஆதாரங்களை, நமது மரபணுக்களில் தேடலாம் என உலகுக்கு அறிவித்தார். பேலியோ ஜீனோமிக்ஸ் - தொல் மரபியல் என்ற புதிய துறையைத் தோற்றுவித்தார்.  

முதன் முதலாக மரபணுக்கள் மூலம் இன்னொரு மனித இனத்தை பேபோ கண்டுபிடித்தார். 2010-இல் சைபீரியாவின் அல்டாய் மலைத் தொடரில் இருக்கும் டெனோசோவா குகையில் 40,000 ஆண்டுகள் பழமையான ஒரு விரல் எலும்புத்துண்டு கிடைத்தது. முதலில் யாருடையது என தெரியவில்லை ஒரு வேளை ஒரு நியாண்டர்தாலுடையதாக இருக்கலாம் என கருதினர் ஆராய்ச்சி யாளர்கள். பின்னர் பேபோ மற்றும் அவரது குழுவினர் அவ்வெலும்பில் இருந்து மரபணுத் தொகுதியைப் பிரித் தெடுத்து ஆராய்ந்தபோது, அது நியாண்டர்தாலுடனோ, ஹோமோ சேப்பியன்ஸ் மனிதர்களின் மரபணுக் களுடனோ பொருந்திப் போகவில்லை. 

சுமார் அய்ந்து லட்சம் முதல் முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆசியாவில் வாழ்ந்து அழிந்த மற்றொரு மனித இனம் என்பதைக் கண்டுபிடித்தார். மேலும் மத்திய கிழக்கு ஆசியாவில் இருக்கும் இன்றைய மனிதர்களில் சுமார் 5% வரை அந்த டெனிசோவன்களின் மரபணுக்கள் இருப்பது தெரிந்தது. கற்காலத்தில் மனிதர்கள், நியாண்டர் தால்களுடன் மட்டுமல்லாமல் டெனிசோ வன்களுடனும் கலந்தனர் என்பது தெரியவந்தது. 

இவரின் ஆராய்ச்சியின் விளைவால் மனிதப் பரிணாம வரலாறு ஓர் உயர் வரையறு தொலைக்காட்சியில் (High Definition TV) தெரிந்தாலும், மிகவும் சிக்கலான ஒரு கதையைக் கொண்டது என நமக்கு புரிந்தது.

நியாண்டர்தால் மனிதர்களில் இருந்து நமக்குக் கடத்தப்பட்ட மரபணுக்கள் இன்று கோவிட் தொற்றில் இருந்து இக்கால அய்ரோப்பியர்களைக் காப்பாற் றியது என தனது ஆராய்ச்சியை இன்றும் நடத்திக் கொண்டிருக்கிறார் இந்த 68 வயது இளைஞர்.  

இன்று ஆதிச்சநல்லூரிலும், கீழடி யிலும், சிந்து சமவெளியிலும் நடக்க விருக்கும் அடுத்த கட்ட ஆராய்ச்சி தொல் மரபியல் ஆராய்ச்சியே என்றால், அறிவியலுக்கான பேபோவின் பங்க ளிப்பும் அதன் முக்கியத்துவமும் நமக்கு புரிந்து இருக்கும்.

சவாண்டே பேபோவுக்கே இந்த ஆண்டின் மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டு உள்ளது.

புதன், 11 ஜனவரி, 2023

கொசுக்கள் ஒரு சிலரை மட்டுமே கடிக்கும் - அது ஏன்?

 

கொசுக்களும் அவை பரப்பும் நோய் களும் வரலாற்றில் நடந்த அனைத்துப் போர் களையும் விட அதிக மக்களைக் கொன்று உள்ளன. உண்மையில், புள்ளிவிவரங்களின் படி, கொசுதான் மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் உலகின் மிகக் கொடிய உயிரினம்.

2018இல் மட்டும் சுமார் 7 லட்சத்து 25 ஆயிரம் இறப்புகளுக்கு இந்த கொசுக்கள் காரணமாக இருந்தன. அதே ஆண்டில், மனிதர்களின் இறப்புக்கு காரணமான உயி ரினங்கள் பட்டியலில் மனிதர்கள் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். அவர்கள் 4 லட்சத்து 37 ஆயிரம் மனிதர்களின் இறப்புக்கு காரண மாகியுள்ளனர்.

அதன் பிறகு, பாம்புகள், நாய்கள், விஷத் தன்மை கொண்ட நத்தைகள், முதலைகள், நீர்யானைகள், யானைகள், சிங்கங்கள், ஓநாய்கள் மற்றும் சுறாக்களின் கூட்டுத் தாக்குதல் அதற்கு அடுத்த எண்ணிக்கையில் மனித மரணங்களுக்கு காரணமாகியுள்ளது.

இதனால்தான் உலக நோய்பரப்பிகள் கட்டுப்பாட்டு நடவடிக்கையை (Global Vector Control Response (GVCR)  2017-2030) 2017ஆம் ஆண்டு தொடங்க ஒப்புதல் அளித்தது உலக சுகாதார நிறுவனம்.

நோய்ப் பரப்பிகளை, குறிப்பாக இந்த பட்டியலில் முக்கியமாகத் தனித்து நிற்கும் கொசுக்களை கட்டுப்படுத்தும் முயற்சிக ளுக்கு வலு சேர்க்கவே இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது.

வெஸ்ட் நைல் காய்ச்சல், ஜிகா, டெங்கு, மஞ்சள் காய்ச்சல், சிக்குன்குனியா, செயின்ட் லூயிஸ் மூளை அழற்சி போன்ற பல்வேறு நோய்களைப் பரப்பக்கூடியவை கொசுக்கள். மலேரியா நோயால், கடந்த 2020இல் மட்டும் 62 ஆயிரத்து 700 இறப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆனால், கொசுக்கள் எல்லோரையும் ஒன்று போலவே கடிப்பதில்லை. சிலரை அதிகமாக கடிக்கும் கொசுக்கள், வேறு சிலரை கடிப்ப தில்லை. இதற்குக் காரணம் என்ன?

கரியமில வாயுவும் உடல் வாடையும்

ஆண், பெண் கொசுக்கள் மற்ற விலங்குகளை கடிக்காமல் வாழ முடியும். ஆனால் இனப்பெருக்க சுழற்சியை முடிக்க, பெண் கொசுவுக்கு ரத்தம் தேவைப்படுகிறது. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, கரியமில வாயு  (CO₂) கொசுக்களை ஈர்க்கும் வாயுவாக அடையாளம் காணப்பட்டது. முட்டைகளை உருவாக்குவதற்குத் தேவை யான ஊட்டச்சத்துகளைப் பெறுவதற்காக பெண் கொசுக்களுக்கு ரத்தம் தேவைப்படு கிறது.

ஆனால், சிலரை அதிகமாக கடிக்கவும், சிலரை கடிக்காமல் விடுவதற்கும் குறிப்பிட்ட நபர்களின் கரியமில வாயு உமிழ்வு அளவே காரணம் என்று கூறுவது சரியான விளக்க மாக இருக்காது. வேறு என்ன காரணம் இருக்கக்கூடும்? குறிப்பிட்ட நபர்களை ஒரு கொசு கடிக்க தீர்மானிப்பதற்குக் காரண மாகும், பிற உடலியல் மற்றும் வேதியியல் சமிக்ஞைகள் உள்ளன.

குறிப்பாக, வெப்பம், ஈரப்பதம், அதற்கு தென்படும் விஷயங்கள் மற்றும், மிக முக்கியமாக, தோலில் இருந்து வெளிப்படும் ஒருவித வாடை ஆகியவையே கொசுக்கள் யாரை அதிகம் கடிப்பது என்பதைத் தீர் மானிக்கின்றன. நம் உடலில் இருந்து வரும் எந்த வாடை, கொசுக்களை அதிகம் ஈர்க் கிறது என்பது இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்றாலும், பல ஆய்வுகள் இண்டோல், நோனானோல், ஆக்டெனோல் மற்றும் லாக்டிக் அமிலம் போன்றவையே இப்படி ஈர்ப்பதாக சுட்டிக் காட்டுகின்றன.

அமெரிக்காவின் புளோரிடா இன்டர் நேஷனல் யுனிவர்சிட்டியின் மேத்யூ டிஜென்னாரோ தலைமையிலான ஆராய்ச் சியாளர்கள் குழு, அயனோட்ரோபிக் ரிசெப்டர் 8ஏ (Ionotropic receptor - IR8a)  எனப்படும் தனித்துவமான வாசனை ஏற்பியை அடையாளம் கண்டுள்ளது. இது டெங்கு சிக்கன் குனியாவை பரப்பும் ஏடிஸ் எஜிப்டி வகை கொசுக்கள் லாக்டிக் அமிலத் தைக் கண்டறிய வழி செய்கிறது. ஜிகா வைரசையும் இவையே பரப்புகின்றன.

விஞ்ஞானிகள் பூச்சி ஆன்டெனாவில் காணப்படும் IR8a  ஏற்பியை மாற்றிய மைத்தபோது, ​​​​கொசுக்களால் லாக்டிக் அமிலம் மற்றும் மனிதர்கள் வெளியிடும் பிற அமில வாசனைகளை கண்டறிய முடிய வில்லை என்பதைக் கண்டறிந்தனர்.

கொசுக்களை ஈர்க்கும் வாசனை

பொதுவாக, மனிதர்கள் மற்றும் எலி களின் தோல் நுண்ணுயிர் எதிர்ப்பு பெப்ட் டைடுகள் உருவாக்குகிறது. இது பாக்டீரியாக் களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துகிறது. ஆனால், டெங்கு அல்லது ஜிகாவால் பாதிக் கப்பட்ட எலிகளில், அசிட்டோபீனோனின் உற்பத்தியைத் தூண்டுகிறது. மனிதர்களில் இதேபோன்ற ஒன்று நடக்கிறது: டெங்கு நோயாளிகளின் அக்குள்களில் இருந்து சேக ரிக்கப்பட்ட வாடையில், ஆரோக்கியமான நபர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட வாடையை விட அதிகம் அசிட்டோபீனோன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதில் சுவாரசியமான விஷயம் என்ன வென்றால், இந்த வேறுபாட்டை சரி செய்ய முடியும். டெங்குவால் பாதிக்கப்பட்ட சில எலிகளுக்கு அய்சோட்ரெட்டினோயின் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது அசிட்டோபெனோன் வெளியேற்றத்தை குறைக்க வழிவகுத்தது, இதனால் கொசுக்க ளுக்கு ஈர்ப்பு குறைந்தது. வாசனையை மாற்றும் நுண்ணுயிரிகள் ஒரு நுண்ணுயிரி கொசுக்களையும், மனித உடலையும் பல்வேறு வகையிலும் பாதிக்கின்றது.

எடுத்துக்காட்டாக, மலேரியாவை உண் டாக்கும் ஒட்டுண்ணியான பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரம். இந்த நோயால் பாதிக்கப் பட்டவர்கள், ஆரோக்கியமான நபர்களை விட, நோயை பரப்பும் அனோபிலிஸ் காம் பியா என்ற ஒரு வகை கொசுக்களுக்கு மிக வும் ஈர்க்கக்கூடியவார்களாக மாறுகின்றனர் இதற்கான காரணம் தெரியவில்லை என்றா லும், இது  (E)-4-hydroxy-3-methyl-but2-enyl pyrophosphate (HMBPP) எனப் படும் அய்சோபிரனாய்டு உருவாக்கும் பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். இது கொசு ரத்தத்தை உறிஞ்சும் வழக்கத்தை பாதிக் கிறது. அத்துடன் நோய்த்தொற்றுக்கு உள் ளாகும் தன்மையும் உள்ளது.

குறிப்பாக, எச்.எம்.பி.பி.பி என்பது மனித ரத்த சிவப்பணுக்களை தூண்டி கரியமில வாயுவையும், ஆல்டிஹைடுகள் மற்றும் மோனோடெர்பீன்களின் உமிழ்வையும் அதிகரிக்கச் செய்கிறது . இவை ஒன்றாக சேர்ந்து கொசுவை மிகவும் வலுவாக ஈர்த்து 'நம் ரத்தத்தை உறிஞ்சுவதற்கு' வழிவக்கு கிறது. மேலும், ரத்த மாதிரிகளில் எச்.எம்.பி. பி.பியைச் சேர்ப்பதன் காரணமாக அனோ பிலிஸ் கொலுஸி, அனோபிலிஸ் அராபி யென்சிஸ், ஏடிஸ் எஜிப்டி மற்றும் குலெக்ஸ் பைபியன்ஸ்/குலெக்ஸ் டோரன்டியம் காம்ப் ளக்ஸ்  போன்ற பிற கொசு இனங்களுக்கு கணிசமான அளவில் ஈர்ப்பு அதிகரிக்கிறது.

கொசுக்கள் சிலரை மட்டும் அதிகம் கடிப்பதற்கும், சிலரை தவிர்ப்பதற்கும் என்ன காரணம் என்பதைப் புரிந்துகொள் வது, கொசுக்கள் தொற்று நோய்களைப் பரப்பும் அபாயத்தைக் கண்டறியவும் குறைக்கவும் உதவும். ரவுல் ரிவாஸ் கோன்சாலஸ் ஸ்பெயின் நாட்டில் உள்ள சலாமன்கா பல்கலைக்கழகத்தில் நுண்ணு யிரியல் பேராசிரியராக உள்ளார்.

திங்கள், 9 ஜனவரி, 2023

டாஸ்மேனிய புலியின் எச்சங்கள் கண்டுபிடிப்பு: 85 ஆண்டுகால முடிச்சு விலகியது

 

உலகில் கடைசியாக வாழ்ந்ததாக அறியப்பட்ட டாஸ்மேனியன் புலியின் எச்சங்கள், 85 ஆண்டுகளா கக் காணாமல் போனதாகக் கருதப்பட்டது. அதன் எச்சங்கள் ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் அலமாரியிலேயே வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

தைலசைன்  (Thylacine)  என்று டாஸ்மேனிய புலி அறியப்படுகிறது. தற்போது எச்சமாகக் கண்டுபிடிக் கப்பட்ட புலி 1936ஆம் ஆண்டில் ஹோபார்ட் காப்பிடத்தில் உயிரிழந்தது. அதன் உடல் உள்ளூர் அருங்காட்சியகத்திற்கு வழங்கப்பட்டது. ஆனால், அதன் எலும்புகளும் தோலும் என்ன ஆனது என்ற கேள்வி தொடர்ந்து கமுக்கமாகவே நீடித்து வந்தது.

டாஸ்மேனிய அருங்காட்சியகம் மற்றும் கலைக் கூடம், அந்த எச்சங்களை இழந்தன. அதுமட்டுமின்றி, அவை தூக்கி எறியப்பட்டதாக நம்பப்பட்டது.

ஆனால் சமீபத்திய ஆய்வு மூலம், அவையனைத் தும் அருங்காட்சியகத்திலேயே இருந்ததும் சரியாக ஆவணப்படுத்தப்படாமல் போனதால் இருந்ததே தெரியவில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

“பல அருங்காட்சியக கண்காணிப்பாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் பல ஆண்டுகளாக அதன் எச்சங்களைத் தேடினர். ஆனால், அவர்களுக்கு அதில் வெற்றி கிட்டவில்லை. ஏனெனில், 1936ஆம் ஆண்டிலிருந்து தைலசின் தொடர்பான எந்தப் பொருட்களும் ஆவணங்களில் பதிவு செய்யப்படவே இல்லை. அதன் உடல் அப்புறப் படுத்தப்பட்டதாகக் கருதப்பட்டது” என்று 2000ஆம் ஆண்டில் உயிரினங்களின் அழிவு குறித்து ஒரு நூலை வெளியிட்ட ராபர்ட் பேடில் கூறினார்.

ஆனால், அவரும் அருங்காட்சியகத்தின் கண் காணிப்பாளர்களில் ஒருவரும் வெளியிடப்படாத டாக்சிடெர்மிஸ்டின் (இறந்த உயிரினங்களின் தோலை பதப்படுத்தி, அதில் மற்ற பொருட்களை நிரப்பி உயிரோடு இருப்பதைப் போல் செய் பவர்) அறிக்கையைக் கண்டறிந்தனர். இது அருங் காட்சியகத்தில் வைக்கப் பட்டிருந்த பொருட்களை மதிப்பாய்வு செய்யத் தூண்டியது.

அருங்காட்சியகத்தின் கல்வித் துறையிலுள்ள அலமாரியில் காணாமல்  போன உயிரிழந்த பெண் டாஸ்மேனிய புலியின் மாதிரியை அவர் கள் கண்டுபிடித்தனர். அதை ஒரு பயணக் கண்காட்சிக்காக ஆஸ்திரேலியா முழுக்க எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால், அதுதான் கடைசி டாஸ்மேனிய புலி என்பது ஊழியர்களுக்குத் தெரியவில்லை என்று கண்காணிப்பாளர் கேத்ரின் மெட்லாக் ஆஸ்தி ரேலிய ஒளிபரப்பு நிறுவனத்திடம் தெரிவித்தார்.

“சேகரித்து வைக்கப்பட்டிருந்தவற்றில் இது சிறந்த தோல் என்பதால் இது தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் அவை இன்னும் ஊர்ப்புறப் பகுதிகளில் வாழ்வதாக அவர்கள் நினைத்தார்கள்,” என்று அவர் கூறினார். 

தோலும் எலும்புகளும் இப்போது ஹோபார்ட் டில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட் டுள்ளன. முன்னர் ஆஸ்திரேலியா முழுவதும் சுற்றித் திரிந்ததாக நம்பப்பட்ட டாஸ்மேனிய புலிகளின் எண்ணிக்கை மனிதர்கள் மற்றும் டிங்கோக்களின் (ஆஸ்திரேலியாவில் வாழக்கூடிய நாய் இனம்) தாக்கத்தால் அருகியது. இறுதியாக, டாஸ்மேனியா தீவில் மட்டுமே காணப்பட்டது. பிறகு அங்கும் வேட்டையாடப்பட்டதால் முற்றிலுமாக அழிந்து போனது.