ஞாயிறு, 19 மார்ச், 2023

சுமார் 3 கோடி ஆண்டுகள் கடந்து வந்த ஒரு மரபணுத் தொடரின் முடிவிற்கு முடிவு?


55 மில்லியன் ஆண்டுகள் உயிர் பிழைத்த வடக்கு வெள்ளை காண்டாமிருகம் பனி யுகங்கள், பூகம்பங்கள், விண்கல் தாக்குதல்களைக் கண்டது மற்றும் கோள்களில் எண்ணற்ற வரலாற்று மாற்றங்களுக்கு சான்றாக இருந்தது,  இப்போது செயல்பாட்டில் அழிந்து விட்டது.

கடைசி ஆண் வடக்கு வெள்ளை காண்டா மிருகம் இறந்துவிட்டதால், இப்போது இரண்டு பெண் வடக்கு வெள்ளை காண்டாமிருகங்கள் உயிருடன் உள்ளன. செயற்கை இனப்பெருக்கத்தில் சிறந்த முயற்சிகள் இருந்தும், எந்த வெற்றியும் அடையப்படவில்லை. இந்த துணை இனம் மறதிக்குள் மறைந்து போவது காலத்தின் விடயம். பூமியின் மேற்பரப்பில் இருந்து மேலும் ஒரு உயிரினத்தை மனிதர்கள் அகற்றியுள்ளனர் என்பது மிகவும் வருந்தத்தக்கது, 

மேலும் ஒரு அழகான படைப்பு அழிக்கப் பட்டது. இந்த அழிவுகளுக்குக் காரணம் "மனித குலம்" அல்ல - "மனிதகுலம்" முடிவுகளை எடுப்ப தில்லை. முதலாளித்துவ வர்க்கம் பலரின் நலன்களை விட ஒரு சிலரின் லாபத்தை முன்னிறுத்தி முடிவுகளை எடுக்கிறது. சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு முதலாளித்துவமே காரணம்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக