செவ்வாய், 22 டிசம்பர், 2015

உலகின் மிகப்பெரிய பறவையின் புதைபடிமம் கண்டுபிடிப்பு


இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பறவை இனங்களிலேயே மிகப்பெரிய பறவையின் புதைபடிமத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக் கிறார்கள்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிமத்தை விரிவாக ஆராய்ந்ததில், மிகப்பெரிய தொரு பறவையின் பாதுகாக்கப்பட்ட எச்சங்களை அதில் இவர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
இந்த பறவைகள் தமது இறக்கைகளை விரித்தால் அதன் அகலம் ஆறு மீட்டர் முதல் ஏழரை மீட்டர் வரை இருந்திருக்கும் என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக்கிறார்கள். அதாவது 20 முதல் 24 அடி அகல இறக் கைகளை கொண்டதாக இந்த பறவை இருந்திருக்கும் என்பது விஞ்ஞானி களின் கணக்கு.
தற்போது உயிர்வாழும் பறவைகளி லேயே அல்பட்ராஸ் என்னும் கடற் பறவைதான் மிகப்பெரிய பறவையாக அறியப்படுகிறது. இவற்றின் இறக்கை களின் அகலம் அதிகபட்சம் மூன்று மீட்டர் என்று கணக்கிடப்படுகிறது. அப்படி பார்க்கும்போது இந்த புதை படிம பறவை அல்பட்ராஸைவிட இரண்டு மடங்கு பெரிய பறவையாக இருந்திருக்கும் என்பது இந்த விஞ்ஞானிகளின் கணக்கு.
இரண்டரை கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக கணக்கிடப்படும் இந்த பறவையின் உருவத்தை விஞ் ஞானிகள் கணினி மூலம் மாதிரி வடிவை உருவாக்கிப் பார்த்தபோது அந்த பறவை வானில் பறந்தபோது மிகச் சிறப்பாகவும், கம்பீரமாகவும், லாவக மாகவும் பறந்திருக்கக்கூடும் என்று கணித்திருக்கிறார்கள்.
ஆனாலும் இந்த பறவையின் மிகப்பெரிய உருவமும் எடையும் அது நிலத்திலிருந்து வானத்துக்கு மேலெழும்பும் போதும் வானில் இருந்து நிலத்துக்கு கீழிறங் கும்போதும் அதற்கு கடும் சிரமத்தைக் கொடுத்திருக்கக்கூடும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.
பெலகோர்னிஸ் சந்தெர்ஸி என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த பறவையின் புதைபடிமம் தெற்கு கரோலினா கடற்பரப்பில் கண்டெ டுக்கப் பட்டது. இது கடல்நாரையின் முன்னோர்களில் ஒன்றாக இருந்திருக் கக்கூடும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை.
-விடுதலை,10.7.14

ஞாயிறு, 13 டிசம்பர், 2015

பூமியின் தட்பவெப்ப நிலையின் பின்னணி



உலகில் இன்று வெப்பப் பிரதேசங் களாக உள்ள சில பகுதிகள் பழங் காலத் தில் குளிர்ப் பிரதேசங்களாக இருந்து பின்னர் மாற்றம் அடைந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருது கின்றனர். ஆனால் ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற பகுதிகள் எப்போதுமே ஒரே மாதிரியான வெப்பமான பிரதேசமா கவே இருந்து வந்திருப்பதாக ஆராய்ச்சி யாளர்கள் தீர்மானிக்கின்றனர்.
பூமியின் பல்வேறு பகுதிகளில் நிலவும் தட்பவெப்பநிலை குறித்து புவியியல் அறிஞர்களால் பல்வேறு கருத்துகள் கூறப்படுகின்றன.
பூமியின் மீது படர்ந்து படிந்து கிடக்கும் பனிப் போர்வையின் இடமாற்ற மே அந்தந்தப் பிரதேசத்தின் தட்ப வெப்பநிலையைப் பிரதிபலிக்கிறது என்பது ஒரு கருத்து. பூமியின் மீது படிந்துள்ள பனிக்கட்டியின் எடை மில்லியன் கன மைல்களாகும். இது பூமியின் மொத்தப் பரப்பில் 10 சதவீதம்.
ஆல்ப்ஸ் மலை மீதுள்ள பனிக் கூரையை புவியியல் அறிஞர்கள் நெடுங் காலமாக ஆராய்ச்சி செய்து வருகின்ற னர். இம்மலை மீதுள்ள பனிக்கட்டியின் தன்மையை ஒத்த பனிக்கட்டிகள் உலகின் பிற பகுதிகளிலும் காணப்படுவதைக் கண்டு அவர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.
ஓரிடத்தில் இருக்கும் பிரம்மாண்ட மான பனிப் படிவங்கள் இடம் விட்டு இடம் நகரக்கூடும் என்றும், அவ்வாறு நகர்ந்து செல்லும்போது ஆங்காங்கே பிரம்மாண்ட பனிப் பாறைகளை விட்டுச் சென்றிருக்க வேண்டும் என்றும் அறிஞர் கள் கருதுகிறார்கள்.
இவ்வாறு பனிப் படலம் இடம் விட்டு இடம் மாறும்போது பனிப்படலம் போய்ச் சேர்ந்த இடம் குளிர்ச்சித் தன்மையையும், அது இடம் விட்டு நகர்ந்த பகுதி வெப்பத் தன்மையையும் பெற்றிருக்கக் கூடும் என்றும் அறிஞர்கள் நினைக்கின்றனர்.
பனிப் படலங்கள் இடம்பெயரும் போது ஆங்காங்கே பெரிய ஏரிகள் தோன்றின. அம்மாதிரி ஏரிகள் கனடா விலும், அமெரிக்காவிலும் உள்ளன. பல பெரிய ஏரிகள், பனிப்படலங்கள் விட்டுச் சென்ற சின்னங்கள் என்றே கருதப் படுகின்றன. பனிப்போர்வையின் வரு கையும், விலகலும் தட்பவெப்பநிலை யை மட்டுமல்லாமல் கண்டங்களின் உருவங் களையும் மாற்றி அமைக்கின்றன. உதாரணமாக, அண்டார்டிகாவிலும், கிரீன்லாந்திலும் உள்ள பனிப்பாறைகள் அனைத்தும் உருகத் தொடங்கினால் கடல் மட்டமானது 200 அடிக்கு மேல் உயர்ந்துவிடும்.அப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்பட்டால் கடல் ஓரத்தில் உள்ள அனைத்து நாடுகளையும் மூழ்கடித்துவிடும்.
-விடுதலை,12.6.14

வேற்றுக் கோள் மோதியதில் உருவான நிலா: புதிய ஆதாரம்

பூமி உருவாகிவந்த சமயத்தில் அதன் மீது வேறொரு கிரகம் மோதிய பின்னர் பூமியைச் சுற்றி உருவான கோளம்தான் நிலா என்ற அறிவியல் கோட்பாட்டுக்கு ஆதரவான ஒரு ஆதாரம் கிடைத்திருப்பதாக புதிய ஆய் வுகள் காட்டுகின்றன.
நாற்பது ஆண்டுகளுக்கும் முன்னால் அப்போலோ விண்கலத்தில் நிலவுக்கு சென்றிருந்த விண்வெளி வீரர்கள் எடுத்து வந்த நிலவுப் பாறைகளில் இரசாயன ஆய்வுகளை மேற்கொண்ட ஜெர்மானிய விஞ்ஞானிகள் இதனைத் தெரிவிக்கின்றனர்.
நானூற்றைம்பது கோடி ஆண்டுகள் முன்பாக பூமியின் மீது வேறு ஒரு கோள் வந்து பூமியின் மீது பயங்கரமாக மோதியது என்பதும், அப்படி மோதிச் சிதறிய சிதறல்கள் தான் பூமியைச் சுற்றி ஒன்றுதிரண்டு நிலவு உருவானது என்பதும்தான் 1980கள் முதல் விஞ்ஞானிகள் பலராலும் ஏற்றுக்கொள்ளப் பட்ட ஒரு கோட்பாடாக இருந்துவருகிறது.
சூரிய குடும்பமும் உருவான விதம் தொடர்பான சாத்தியக்கூறுகளை கணினிகள் மூலமாக அனுமானித்த போதும் நிலவு உரு வானதற்கு பொருந்திவரக்கூடிய விளக்கமாக இதுதான் இருந்துவருகிறது.
தியா: ஆனால் இந்த கோட்பாட்டுக்கு தடய பூர்வ ஆதாரம் எதுவும் அதற்கு இது வரை இல்லாமல் இருந்துவந்தது. அப்படி வந்து மோதியதாக கருதப்படும் கோளுக்கு கிரேக்க கதையிலிருந்து எடுத்து தியா என்ற ஒரு பெயரை விஞ்ஞானிகள் கொடுத்திருந்தார்கள். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர் கள் நிலவுப் பயணம் சென்று அங்கிருந்து பாறைகளை எடுத்து வந்த பின்னர் அதில் செய்யப்பட்டிருந்த ஆய்வுகளை வைத்து, நிலவுப் பாறைகள் முழுக்க பூமியிலிருந்து சென்றவைதான் - அதாவது பூமிப் பாறை களில் காணப்படும் இரசாயன மூலக்கூறு களும் அடையாளங்களும்தான் அந்த பாறைகள் முழுமையிலும் தென்பட்டதாக கருதப் பட்டது.
ஆனால் மேலும் நூதனமான ஆய்வுகளை தற்போது நிலவுப் பாறைகளில் மேற்கொண்ட போது, பூமிப் பாறைகளின் இரசாயன கூற்றுக்கு சம்பந்தமில்லாத வெளிக்கிரக தோற்றத்துக் கான அடையாளங்கள் நிலவுப் பாறைகளில் தெரிவதாக ஜெர்மனியிலுள்ள கொயெடிங் கென் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
-விடுதலை,12.6.14


மனித உடலில் புதிய தசை நார் கண்டுபிடிப்பு


நாம் நடந்து செல்லும்போது திடீரென்று திசை மாற்றி கால்களைத் திருப்பி நகர்த்தும் போது இந்த தசைநார்கள் தான் கால்களுக் கான பாதுகாப்பு அரணாக அமைகிறதாம்.
நமது முழங்கால் பகுதியில் இதுவரை அறியப்படாத தசைநார் ஒன்று இருப்பதை கண்டறிந்துள்ளதாக பெல்ஜியத்தின் முழங் கால் மருத்துவ நிபுணர்கள் அறிந்துள்ளார்கள். தொடை எலும்புக்கு மேல்புறத்தி லிருந்து முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடைப் பட்ட முன்னங்கால் வரையான பகுதி வரை இந்த தசைநார் அமைந்துள்ளதாக மருத்துவர் க்ளஸ்ஸு, பேராசிரியர் ஜோஹன் பெல் லெமன்ஸ் ஆகிய மருந்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
நாம் நடந்து செல்லும்போது திடீரென்று திசை மாற்றி கால்களைத் திருப்பி நகர்த்தும் போது இந்த தசைநார்கள் தான் கால்களுக் கான பாதுகாப்பு அரணாக அமைகிறதாம். இப்படி ஒரு தசைநார் முழங்காலை ஒட்டி அமைந்திருக்கும் என்று நீண்டகாலமாக கருத்துக்கள் இருந்து வந்த போதிலும், இப்போதுதான் அது பற்றிய ஒரு தெளிவு ஏற்பட்டிருக்கிறது. என்கிறார் பிரிட்டனைச் சேர்ந்த முழங்கால் சிகிச்சை நிபுணர் ஜோயல் மெல்டன். மருத்துவப் பரிசோதனைகள் செய்வ தற்காக தங்களது உடலை தானமாகத் தந்த 41 பேரின் உடலிலிருந்து முழங்கால்களை நுண்ணோக்கி மூலம் ஆராய்ந்தபோது இதைக் கண்டறிந்துள்ளனர். எல்லோரது முழங்கால் எலும்புகளிலும் இந்த தசைநார்கள் இருப்பதையும், அவை எல்லாம் ஒரே வடிவமைப்பில் இருப்பதையும் விஞ்ஞானிகள் பார்த்துள்ளார்கள்.
பொதுவாக விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படக்கூடிய முழங்கால் காயங்களின்போது, அவற்றை சரியாகப் புரிந்துகொள்ளவும் சிகிச்சை அளிக்கவும் இந்த தசைநாரின் அமைப்பு உதவும் என்பது மருத்துவர்கள் கருத்து. கால்களின் முன் பக்கவாட்டில் இருக்கின்ற இந்த தசைநாரில் ஏற்படுகின்ற காயங்களே ஏராளமான முழங்கால் உபாதைகளுக்குக் காரணமாக இருக்கின்றன என்பதும் க்ளஸ்ஸு மற்றும் ஜோஹன் பெல்லொமன்ஸ் ஆகியோரின் கருத்து. கால்களில் ஏற்படும் வலி மற்றும் உபாதைகள் தொடர்பான சிகிச்சைகளுக்கு இந்தப் புதிய கண்டுபிடிப்பை எந்த அளவுக்கு பயன்படுத்த முடியும் என்பது குறித்து தீவிர ஆராய்ச்சி நடக்கிறது.
-விடுதலை,12.6.14


சனி, 12 டிசம்பர், 2015

சோதனைக் குழாய் மூலம் பிறந்த உலகின் முதல் நாய்க் குட்டிகள்!



வாஷிங்டன்,  டிச.11_ உலகிலேயே முதல் முறையாக சோதனைக் குழாய் மூலம் கருத்தரிக்கப்பட்ட 7 நாய்க் குட்டிகள் அமெரிக்காவில் பிறந்துள்ளன.
அமெரிக்க விஞ்ஞானி கள் இந்த சாதனையால், அரிய வகை நாய்களைப் பாதுகாப்பதற்கும், மனிதர் கள் மற்றும் விலங்கினங் களின் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் புதிய வழி கிடைத்துள்ள தாக நிபுணர்கள் தெரி விக்கின்றனர்.
இதுகுறித்து அமெரிக் காவிலிருந்து வெளியாகும் "பப்ளிக் லைப்ரரி ஆஃப் சயின்ஸ் ஒன்' அறிவியல் இதழில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:
அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழக கால்நடை மருத்துவத் துறையைச் சேர்ந்த விஞ் ஞானிகளின் முயற்சியில், சோதனைக் குழாயில் கருத்தரிப்பு செய்யப்பட்ட 7 வெவ்வேறு இனம் மற்றும் கலப்பின நாய்க் குட்டிகள் கடந்த ஜூலை மாதம் பிறந்தன.
நீண்டகாலமாவே, சோதனைக் குழாய் கருத் தரிப்பு முறையில் மனிதர் கள் குழந்தை பெற்று வந்தாலும், அதே முறை யில் நாய்களை கருத்த ரிக்கச் செய்யும் முயற்சி இதுவரை வெற்றி பெற வில்லை. பெண் நாய் களின் கருத்தரிக்கும் பருவம் மிகவும் மாறு பட்டது என்பதால் அவற் றின் சினை முட்டையை தனியாக எடுத்து, அதனைக் கருவுறச் செய்ய முடியாமல் இருந்து வந்தது.
தற்போது, புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சோதனைக் குழாய் மூலம் நாய்க்குட்டி களையும் பிறக்கச் செய் திருப்பதே அமெரிக்க விஞ்ஞானிகளின் சாதனை யென அந்த  அறிவியல் இதழில் கூறப்பட்டுள் ளது.
-விடுதலை,11.12.15
-

சனி, 5 டிசம்பர், 2015

மனிதனின் பரிணாம வளர்ச்சி!


தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஆராய்ச்சிகள் பல புதுப்புதுத் தகவல்களைத் தந்து கொண்டிருக்கின்றன.  முதலில் உலகம் தட்டை என்று நம்பப்பட்டது.  பின்னர் ஆராய்ச்சிகள், அதைத் தொடர்ந்த பயணங்கள் உருண்டை என்று நிரூபித்தன. 

இப்படித்தான் மனிதனின் பரிணாம வளர்ச்சியும், குரங்கினின்று _ அதிலும் சிம்பன்சி எனும் குரங்கு வகையினின்று மாற்றம் பெற்று வளர்ச்சியடைந்தவன்தான் மனிதன்.

இப்படிப்பட்ட மாற்றத்தைப் பெற 50 லட்சம் ஆண்டுகள் ஆகின என இதுவரை இருக்கும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் சமீபத்தில் ராபர்ட் டி.மார்ட்டின் என்பவரால் சையின்ஸ் டெய்லி இதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தி மேலும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இவரது கூற்றுப்படி சிம்பன்சியினின்று மனிதனாக மாறிய பரிணாம வளர்ச்சியின் காலம் மேலும் 30 லட்சம் ஆண்டுகட்கு முந்தையது எனத் தெரிகிறது.

அதாவது 50 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பதற்குப் பதில் 80 லட்சம் ஆண்டுகட்கு முன்பே இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாம்!  மனிதனுக்கு முந்தைய இந்த சிம்பன்சிகளுக்கும் முந்தைய ஆதார உயிரினம் 8 கோடியே 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்துள்ளனவாம்! 

அறிவியலே விந்தை _ அதிலும் விந்தை இந்த அறிவியலை ஆராயும் மானிட மூளை!
(நன்றி: ஜனசக்தி 16.4.2011)
-விடுதலை ஞா.ம.23.4.11

வியாழன், 3 டிசம்பர், 2015

உலகிலேயே மிக நீளமான உயிரினம் எது ?


உலகிலேயே மிக நீளமான உயிரினம் எது ?
நீலத் திமிங்கிலம் அல்லது சிங்கப்பிடரி ஜெல்லிமீன் என்று பதில் கூறினால் அவை சரியான விடைகள் அல்ல. Lineus longissimus  என்னும் நாடாப் புழுதான் உலகத்திலேயே  மிக நீளமான உயிரினம் ஆகும். இதன் நீளம் 60 மீட்டர் வரை (200 அடி) நீளும் தன்மை கொண்டது. இது ஏறக்குறைய நீலத் திமிங்கிலத்தின் நீளத்தைப் போல் இரண்டு மடங்கு நீளம் கொண்டதாகும். ஜெல்லிமீனை விட மூன்றில் ஒரு பங்கு கூடுதல் நீளம் கொண்டது.
ஒரு நாடாப்புழுவை ஒலிம்பிக் நீச்சல் குளத்தின் இரு முனைகளை இணைத்துக் கட்டினாலும், அதன் நீளம் அதை விட அதிகமாகவே இருக்கும். இது நெமேட்டா (Nemettea) புழுக்குடும்பத்தைச் சேர்ந்தது. நெமேட்டா என்பது கடல்கன்னி (Nemertes)  என்ற கிரேக்க சொல்லில் இருந்து வந்தது. இவைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரினங்கள் உள்ளன; அவைகளில் பெரும்பாலானவை கடல்வாழ் உயிரினங்களாகும். மெல்லியதாகவும், நீளமான தாகவும் இருப்பவை அவை. அவற்றில் நீளமானவை கூட குறுக்களவில் ஒரு சில மில்லி மீட்டர் அளவே இருக்கும்.
நாடாப்புழு 30 மீட்டர் (100அடி) வரைதான் நீளும் என்று பலதரப்பினர் தெரிவிக்கின்றனர்.  இது சிங்கப் பிடரி ஜெல்லிமீனைப் போன்ற நீளம் கொண்டதல்ல.  ஆனால், அவற்றின் நீள்தன்மை மிகவும் அசாதாரணமானது என்று அண்மைக்காலத் தகவலல்கள் தெரிவிக்கின்றன. 50 மீட்டர் (165 அடி) வரை முழுமையாக நீளக்கூடிய நாடாப்புழுக்கள் பல காணப்பட்டுள்ளன.
அவை 50 கோடி ஆண்டு காலமாக இருந்து வருகின்றன என்பதை அவற்றின் கற்படிவங்கள் காட்டுகின்றன.
நாடாப்புழுக்களுக்கு இதயம் கிடையாது. தங்கள் சதையின் மூலமே அவை ரத்த ஓட்டத்தைப் பெறுகின்றன. தனியான வாயையும், கழிவு உறுப்பையும் பெற்றிருக்கும் ஒரு சாதாரணமான எளிய உயிரினம் இது.
நச்சுத்தன்மை கொண்ட கொக்கிகள் கொண்ட, ஒட்டிக் கொள்ளும், ஒரு நீண்ட மெல்லிய குழாயை  வேகமாக செலுத்த இயன்ற,  புலாலை விரும்பி உண்ணும் உயிரினம் இது. ரம்பம் போன்ற பற்களைக் கொண்ட இந்தக் குழாய்கள் கடின ஓடு கொண்ட நத்தை, நண்டு போன்ற உயிரினங்களைத் திகைப்படையச் செய்த பின், அவற்றை இவை உணவாகக் கொள்ளும். பெரும்பாலான நாடாப் புழுக்கள் கடலின் அடியில்  தங்கி சுற்றித் திரிபவையாகும். அவற்றில் சில வியக்கத்தக்க வகையில் வண்ணமாக ஒளிரக்கூடியவை.
Nemerteans  சிதைக்கப்பட்டாலும் இனப்பெருக்கம் அடையக்கூடியது. சில நாடாப் புழு இனங்கள் தங்களைத் தாங்களே சிறிய சிறிய துண்டுகளாக ஆக்கிக் கொண்டு, அந்தத் துண்டுகள் ஒவ்வொன்றும் ஒரு புதிய புழுவாக ஆகும் வகையில் இனப்பெருக்கு செய்ய இயன்றவை.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்)
-விடுதலை,5.1.12

விலங்குகளை சிவப்பு வண்ணத்தைக் காணச் செய்வது எது ?


விலங்குகளை சிவப்பு வண்ணத்தைக் காணச் செய்வது எது ?
அதிக அளவு விற்பனை யான நூலாசிரியரான ஜான் லிலி, யானையின் முன்னே வருபவர் ஒளிரும் வண்ண ஆடை அணிந்து வரமாட் டார், காளையின் முன்னே வருபவர் சிவப்பு ஆடை அணிந்து வரமாட்டார் என்று எழுதிய 1580ஆம் ஆண்டு காலத்திலிருந்தே சிவப்பு நிறத்தைக் கண்டு காளைகள் கோபம் கொள்கின்றன என்ற கட்டுக்கதை  நிலவுகிறது. ஆனால் உண்மை என்னவென்றால், எலிகள், நீர்யானைகள், ஆந்தைகள், உணவுக்காக இரவில் வேட்டையாடி நிலத்தில் குழி பறித்து வாழும்  aardvarks  விலங்குகள், காளைகள் அனைத்துமே வண்ணங்களைக் காண முடியாதவைகள் ஆகும்.
காளையின் முன் வண்ணத்துணியை வைத்து போராளி ஆட்டும்போது அத்துணியின் அசைவைக் கண்டுதான் காளை முட்டுவதற்கு பாய்ந்து வருகிறது. அத்துணியில் வண்ணம் சேர்ப்பது வேடிக்கை பார்க்கும் மக்களை மயக்கத்தான்.
நீல நிறத்தையும், மஞ்சள் நிறத்தையும் நாய்களால் பிரித்து அறியமுடியும். ஆனால், பச்சையை சிவப்பு வண்ணத்தில் இருந்து வேறுபடுத்திக் காண அவைகளால் முடியாது. போக்குவரத்து விளக்குகள் செயல்படும் இடங்களில், மக்கள் கடந்து செல்வதை வைத்துதான் பாதையைக் கடப்பது பாதுகாப்பானதா அல்லவா என்று நாய்கள் முடிவு செய்கின்றன. அதனால்தான்   நடந்து செல்பவர்கள் பாதையைக் கடப்பதற்கு தற்போது உள்ள அமைப்பில் பீப் பீப் ஒலி எழுப்பப்படுகிறது.
சிவப்பு நிறத்தை மிகச் சரியாக அடையாளம் கண்டு கொள்ளும் உயிரினம் கோழிகள்தான். கோழி சிவப்பு வண்ணத்தைக் காண்பதால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி கோழிப்பண்ணைக்காரர்கள் மட்டுமே நன்கு அறிந்துள்ளனர். ஏதேனும் ஒரு கோழியின் உடலிலிருந்து ரத்தம் வெளிப்பட்டால், மற்ற கோழிகள் அதை மூர்க்கமாகக் கொத்திக் கொத்தியே சாகடித்துவிடும். இதனை உடனே தடுத்து நிறுத்தாவிட்டால், கோழிகள் ஒன்றையொன்று கொன்று கொள்ளும் வெறி அதிகமாகிவிடும்; பண்ணையில் உள்ள கோழிகளின் எண்ணிக்கையும் விரைவாகக் குறைந்து போகும். இந்தப் பிரச்சினைக்கு வழக்கமாகக் கடைபிடிக்கும் தீர்வு, சூடான கத்தியினால் அவற்றின் அலகுகளை வளைத்து விடுவதுதான். அப்போதுதான் அதன் மூலம் ஏற்படக்கூடிய அழிவின் அளவு குறையும்.
என்றாலும் 1989இல் அனிமேலன் என்ற ஒரு நிறுவனம் முட்டையிடும் கோழிகளுக்கு பொருத்தக்கூடிய சிவப்பு வண்ண சாயல் கொண்ட கான்டேக்ட் லென்சை அறிமுகப் படுத்தியது. தொடக்க காலத்தில் இது நல்ல பயன் அளித்தது. கோழிகள் எதைப் பார்த்தாலும் சிவப்பாகவே தெரியும் என்பதுதான் இதன் காரணம். அதனால் கோழிகளிடையான சண்டைகள் குறைந்தன. முன்பு போல் அவை சுறுசுறுப்பாக இல்லாமல் போனதால், அவற்றிற்குத் தேவையான தீவனத்தின் அளவும் குறைந்துவிட்டது. என்றாலும் அவை அதே எண்ணிக்கையிலான முட்டைகளை வைத்தன.
கோழிப்பண்ணை தொழிலே மிகக் குறைந்த 1.6 விழுக்காடு லாபத்தில்தான் இயங்கி வருகிறது. அமெரிக்காவில் மட்டும் 25 கோடி முட்டையிடும் கோழிகள் உள்ளன. அவற்றில் 15 கோடி கோழிகள் 50 கோழிப் பண்ணைகளில் மட்டுமே உள்ளன. கோழிகளுக்கு சிவப்பு கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தும் முறையினால் அவர்களின் லாபம் மூன்று மடங்கு பெருகியது.
கோழிகளுக்கு கான்டாக்ட் லென்ஸ் பொருத்தும் பணி சிக்கல் நிறைந்ததாகவும், அதிக உழைப்பு தேவைப் படுவதாகவும் இருப்பது இழப்புக் கேடுதான்.  கண்ணாடி பொருத்தப்பட்டதால் இயற்கையான உயிர்க் காற்று கோழிகளின் கண்களுக்குக் கிடைக்காததால், கண்களில் வலியை ஏற்படுத்தி, விரைவில் அவை சீரழியச் செய்தது. விலங்குகள் மீதான கொடுமை இது என்று குற்றம் சாற்றப் பெற்றதால், இந்த கான்டாக்ட் லென்சை அனிமேலன்ஸ் நிறுவனம் திரும்பப் பெற்றுக் கொண்டது.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன்  ‘The Book of General Ignorance’  பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்)
-விடுதலை,9.1.12

செவ்வாய், 1 டிசம்பர், 2015

பசுவை புனிதமாக(?) மதித்த வரலாறு இல்லை!

பசு உணவுக்கே பயன்பட்டது!


(ஆதாரபூர்வ அலசல்)                                                          - சரவணா இராசேந்திரன்
மனிதன் பசுவை முதல் முதலாகப் பார்த்த போது அதை இன்றையப் பசுவாகப் பார்க்கவில்லை, மிகவும் கொடூர குணம் கொண்ட ஆவ்ரோச்ஸ் (aurochs) என்ற காட்டுவிலங்கினமாகத் தான் பார்த்தான், ஒரு ஆவ்ரோச்ஸ் விலங்கு சுமார் 500 கிலோவிற்கும் மேலாக பெரிய உருவமும், கடுமையாகத் தாக்கும் மனப்பான்மையும் கொண்டது, அதன் கொம்புகள் இன்றைய காளை மாடுகளின் நீண்ட கொம்புகளை விட இரண்டு மடங்கு அளவு இருந்தன.
பொதுவாக அமைதியுடன் குழுவாக சேர்ந்து புற்களை மேயும் பழக்கமுடைய இந்த ஆவ்ரோச்ஸ் எதிரிகள் யாரும் வந்தால் மட்டும், எதிர் தாக்குதல் நடத்தி விரட்டியடிக்கும் குணம் கொண்டவை, சுமார் 4000 ஆண்டுகளாக ஆவ்ரோச்ஸ் விலங்கை அடித்துத் தின்று அதன் பலனை நன்கு அனுபவித்து விட்டான், அதனால் மனிதன் தற்போது அதனை தனது கட்டுக்குள் எப்படிக் கொண்டுவருவது என்று ஓய்வு நேரங்களில் சிந்திக்கத் தொடங்கினான். அறுபது பெண் ஆவ்ரோச்ஸ்க்கு ஒரு ஆண் ஆவ்ரோச்ஸ் என்ற விகிதத்தில் இருக்கும். மேலும் பெண் ஆவ்ரோச்ஸ் இருக்கும் இடத்தை விட்டு ஆண் ஆவ்ரோச்ஸ்கள் வேறு இடங்களுக்குச் செல்வதில்லை, ஆகவே அவர்களுக்கு காளைகள் பற்றிக் கவலையில்லை. கொழுத்து திரியும் பெண் ஆவ்ரோச்ஸ்தான் அவர்களுக்கு முக்கியம், ஆகவே கூட்டமாக வரும் ஆவ்ரோச்ஸ்களை 100 ஏக்கர் அதற்குமேல் பரப்புகொண்ட பிரதேசத்திற்குள் வளைத்துப் போட்டான், அந்தப் பகுதிக்குள்ளே அதற்குத் தேவையான தண்ணீர், உணவு தொடர்ந்து கிடைக்குமாறு உறுதி செய்துகொண்டான். அதே போல் அவை திரும்பிச் செல்லாதவாறு சுற்றிலும் வேலி அமைத்து தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டான், இப்போது வளையத்திற்குள் மாட்டிக்கொண்ட ஆவ்ரோச்ஸ்கள் தொடக்கத்தில் வேலிகளைக் கடக்க முயற்சி செய்தன. ஆனால் ஆவ்ரோச்ஸ்கள் ஒன்றைப் புரிந்துகொண்டன, தங்களுக்குத் தேவையான உணவு கிடைக்கிறது, அதைவிட முக்கியம் புல்வெளிகளில் வாழும் கடுமையான வேட்டை மிருகங்களான சிங்கம், புலி, சிறுத்தை, ஓநாய், கழுதைப்புலி போன்ற விலங்குகளிடம்  இருந்து தங்களுக்கும், முக்கியமாக தங்களது குட்டிகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கிறது.

தற்போது அத்தனைக் கன்றுகளும் பாதுகாப்பாக தாய் ஆவ்ரோச்ஸ்சுடனே இருப்பதால் ஆவ்ரோச்ஸ்களின் மரபணுவில் முதல் மாற்றம் ஏற்படத் துவங்கியது. இந்த மாற்றம் 400 ஆண்டுகால இடைவெளியில் நடந்தது, அதாவது பெரிய எல்லைக்குள் மனிதர்கள் அடக்கிவைத்த 400 ஆண்டுகள் கழித்து வட்டத்தைவிட்டு வெளியே செல்லக் கூடாது என்ற எச்சரிக்கையும் தனக்காக மனிதர்கள் உணவுடன் பாதுகாப்பும் தருவார்கள் என்ற உணர்வும் ஏற்படத் துவங்கியது, இது காலப்போக்கில் தனது கொடூர குணத்தை மாற்றி தற்போது நாம் பார்க்கும் பசுவாக (Cattle) மாறத் தொடங்கியது. மனிதன் புற்களின் மூலம் சிறிய குடிசைகளைக் கட்டி மாடுகளுடனே வாழத் துவங்கினான். சுமார் 35 ஆயிரம் ஆண்டுகளில் இந்த புதிய மாற்றம் மனித குலத்தை மேலும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல  ஆங்காங்கே பெரிய நிலப் பரப்புகளை வளைத்து அதற்குள் பசுக்களை வளர்க்கத் துவங்கினான்.
இந்த காலகட்டத்தில் சிறிய பனியுகம் (Ice Age) தோன்றியது அட்லாண்டிக் பெருங்கடல் உறையத் துவங்கியதால் மத்தியத்தரைகடல் பகுதியில் பல்வேறு நிலப்பரப்புகள் வெளியே தெரியத் துவங்கின. முக்கியமாக ஜிப்ரால்டர் ஜலச்சந்தி அய்ரோப்பாவிற்கும் ஆப்பிரிக்காவிற்குமிடையே பெரிய நிலப்பாதையை திறந்துவிட்டது. அதே போல் கிழக்கே செங்கடலின் பெரும்பகுதி நீர் வற்றியதால் ஆசியாவிற்கும் ஆப்பிரிக்காவிற்குமிடையே பெரிய பாதை உருவாகியது, நிலக்குழுக்களின் மக்கள் தொகைப் பெருக்கம், அதிக அளவு கால்நடை போன்றவற்றை வைத்துக்கொண்ட அன்றைய மனிதர்கள் பெரிய குழுவாக இடம் பெயர்ந்தனர். புதிய நிலப்பரப்பு குறித்து எந்த ஒரு தெளிவும் இல்லாததால் மனித இடப்பெயர்வின்போது உணவுத் தேவைக்காக பசுவை நம்பி மட்டுமே இருந்தான்.
பனியுகம் முடிவதற்குள் அய்ரோப்பா, ஆசியக் கண்டங்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் இடப்பெயர்வு செய்திருந்தனர், அய்ரோப்பாவில் இடம் பெயர்ந்த மக்களால் அங்குள்ள குரங்கின மனிதர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆப்பிரிக்காவில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் அய்ரோப்பாவில் ஏற்கனவே வாழ்ந்த மக்களை மிகவும் எளிதாக அடக்கிவிட்டனர். முக்கியமாக அந்த அய்ரோப்பிய குரங்கின மக்களின் ஆண்களை மட்டும் கொன்று விட்டு பெண்களை விட்டுவைத்தனர். குரங்கினப் பெண்களுக்கும் அய்ரோப்பிய மக்களுக்கும், ஆப்பிரிக்காவில் இருந்து குடிபெயர்ந்த மக்களுக்கும் இடையே கலப்பு ஏற்பட்டு புதிய இனம் உருவானது.  பனியுகம் முடிந்த பிறகு, மீண்டும் ஜிப்ரால்டர் ஜலச்சந்தி அட்லாண்டிக் மற்றும் மத்தியத் தரைகடல் நீரால் நிரம்பியது. செங்கடல் முழுமையாக நீரில் மூழ்கிவிட்டது.
நியண்டர்தால் மனிதன்
அய்ரோப்பாவில் வாழ்ந்த மக்கள் நியண்டர்தால் மனிதன் ஆப்பிரிக்காவில் இருந்து இடம்பெயர்ந்த ஹோமோசெபியன்ஸ்களை விட உருவத்தில் பெரியவர்கள், பலசாலிகள். ஆனால் அவர்கள் தங்களது அறிவைப் பயன்படுத்தும் திறனில்லாதவர்களாக இருந்தனர். மேலும் அவர்கள் வேட்டையாடி வாழும் பழக்கமுடையவர்கள். இதுபோன்ற பல்வேறு காரணங்களால் ஹோமோசெபியன்ஸ்களால் மிகவும் எளிதில் அழிந்துபோனார்கள். நியண்டர்தால் பெண்களை ஹோமோசெபியன்ஸ்கள் பிடித்துவந்து தங்களது இனவிருத்திக்குப் பயன்படுத்திக் கொண்டனர். இதே போல் தான் ஆசியக்கண்டங்களில் ஹோமோசெபியன்ஸ்கள் பரவத் துவங்கினர். ஆனால் அப்படி பரவியவர்களால் கிழக்கு நோக்கிச் செல்லமுடியவில்லை, அதனால் மங்கோலியா, மற்றும் இந்தியப் பெருங்கடல், மற்றும் இந்தியத் தீபகற்ப மக்கள் தனித்துவம் பெற்றுவிளங்கினர்.
பசுமாட்டுக் கறியே சிறந்தது ஏன்? பசுவின் உணவை சிறிது உற்று நோக்குங்கள். படர் வகை புற்களை விட நாணல்வகைப் புற்களையே பசுக்கள் அதிகம் சாப்பிடும், நாணல் வகைப் புற்களில் அப்படி என்ன இருக்கிறது. சாதாரணமாக வீட்டு மாடியில் தண்ணீர் நிரம்பி வழியும் தண்ணீர் தொட்டிகளின் அருகில் இந்தவகைப் புற்கள் காணப்படும். இந்தப் புற்களைச் சாதாரணமாகப் பார்த்தால் அதன் நீளமான இலைகளில் அனைத்துப் பக்கங்களிலும் மெல்லிய ரோமங்கள் இருப்பதைக் காணலாம், இதை நுண்ணோக்கி கொண்டு பார்த்தால் ஆயிரக்கணக்கான கண்ணாடி இழைகளை உடைத்து வைத்து ஒட்டிவைத்தது போன்று இருக்கும், ஆம் இவை அனைத்தும் புற்களே தங்கள் இலைகளின் மீது உருவாக்கிக் கொண்ட சிலிகா ரோமங்கள், புற்கள் ஏன் சிலிகா ரோமங்களை உருவாக்கவேண்டும்? காரணம் இவ்வகைப்புற்கள் புல்வெளிகளில் ஒன்றன் மீது ஒன்றாக கோடிக்கணக்கில் போட்டிபோட்டுக் கொண்டு வளர்பவை. அப்படி வளரும் போது கிடைக்கும் சிறிய சூரிய ஒளியைக் கூட சேமித்து வைத்துக் கொள்ளவேண்டிய நிலை. மேலும் இலைகளை உண்ணும் பூச்சிகளின் தாக்குதல் அபாயமும் உள்ளதால் இயற்கையாகவே தங்களுக்குத் தேவையான சிலிக்காவை மண்ணில் இருந்து பிரித்து உரோமங்களில் சேமித்து வைக்கிறது.  பசுக்கள் ஏன் இந்தவகைப் புற்களை உண்ணவேண்டும்? பசு மாத்திரம் அல்ல, மான்களும் இந்தவகைப் புற்களை அதிகம் உண்கின்றன, இதற்குக் காரணம் விரைவான இனப்பெருக்கம் மற்றும் எதிரிகளிடமிருந்து தப்பிக்கத் தேவையான ஆற்றல் போன்றவை சிலிகா வகைப் புற்களால் கிடைக்கிறது. பசுமாட்டின் உடலில் இந்த சிலிகா தாதுஉப்புக்கள் அதன் சதைப் பகுதியில் அதிகமாக சேமிக்கப் படுகிறது.  பசுமாட்டை மனிதன் சாப்பிடும் போது முதலில் அவனது நரம்புகளுக்கு இடையேயான தொடர்புகள் வலுப்பெறுகிறது, இதனால் மூளையின் செயல்திறனும் அதிகரிக்கிறது. பசுவைச் சாப்பிட ஆரம்பித்தது முதல் 40,000 ஆண்டுகால இடைவெளியில் மனிதனின் மூளை 3000 மடங்கு செயல்திறன் அதிகரித்துள்ளது. பசுவை மனிதன் சாப்பிடாமல் இருந்திருந்தால் இன்றும் கொரில்லாக்-களைப் போலவும், சிம்பன்சிகளைப் போலவும் மனிதர்களும் காடுகளில் கிடைத்ததைத் தின்று குகைகளிலும், மரப் பொந்துகளிலும் வாழ்ந்துகொண்டு இருப்பார்கள்.
பசுக்களை எந்த மதமும் முக்கியப் படுத்தியதில்லை,
முன்பு கூறியது போலவே காளைகளின் எண்ணிக்கை பசுக்களின் எண்ணிக்கைக்கு  குறைவானது, ஆகவே காளைகளை அன்றைய மனிதர்கள் மிகவும் கவனமாக பராமரித்து வந்தனர். உலகின் அனைத்து நதிக்கரை நாகரீகத்திலும் பசுவைப் பற்றிய எந்த ஒரு குறிப்பும் இல்லை, ஆனால் காளைகளை மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்துள்ளனர்.
சுமேரியர்கள் காளைகளின் கண்களை சூரியனுக்கு ஒப்பான சக்தியுள்ள ஒன்றாகக் கருதினர்.
எகிப்தியர்கள் காளைகளை தங்களது மன்னர்களின் நேரடித் தூதுவர்களாகக் கருதினர். சிந்துசமவெளி நாகரீகத்திலும் காளையின் முக்கியத்துவம் குறித்து பல்வேறு குறிப்புகள் உள்ளன.
கிரேக்கக் கதைகளில் காளைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இப்படி அனைத்து நாகரீக மக்களும் காளைக்கு முக்கியத்துவம் கொடுக்க ஒரே ஒரு காரணம் மட்டுமே, அது காளை இனப்பெருக்கத்திற்கும் முக்கியமானதாக கருதப்பட்டது.
பசுவின் பால் தயிர் மோர் வெண்ணை, நெய் போன்றவைகள் ஆரம்பகால மனிதனுக்கு தேவையற்ற ஒன்றாகவே இருந்துள்ளன, முக்கியமாக மனித குழுக்களின் இடப்பெயர்வின் போது பசுக்களின் பாலை பயன்படுத்தக் கற்றுக்கொண்டான், இருப்பினும் அது குழுக்களாக வாழ்ந்த மனிதர்களின் முக்கிய உணவாகக் கருதப்படவில்லை, அக்காலகட்ட மனிதனுக்குத் தேவையானது பசுவின் சதைப்பகுதியே அன்றி பால், தயிர், வெண்ணை, நெய் அல்ல.
எனவே, தொடக்க காலம் முதலே பசுமாடு உணவாகப் பயன்படுவதற்கும் காளை மாட்டினைப் பெற்றுத் தருவதற்குமான தேவையாகத்தான் பார்த்தானே தவிர புனிதமாக(?) அவன் கருதுவதற்கு இதில் ஒரு வெங்காயமும் இல்லை. தரவுகள்:
“Brain Boost” November 23, 2013 (television documentary) History Channel
Grass leaf silicification
Grass\botany\ encyclopedia
www.pnas.org/content/80/3/790.full.pdf
An African Trilogy (Peter Matthiessen)
The State of the World’s Animal Genetic Resources for Food and Agriculture
By Barbara Rischkowsky, Dafydd Pilling
The Genetics of Cattle, 2nd Edition - Page 467
-உண்மை,16-30.11.15

மழைத்துளி சிப்பியில் விழுந்து முத்தாகும்?



சிப்பிக்குள் மழைநீர் வீழ்ந்து, அதுதான் பின்னர் முத்தாக மாறுகிறது என்ற கருத்து பரப்பப்படுகிறது. கண்ணதாசன்கூட தனது கவிதை ஒன்றில் இப்படித்தான் எழுதினார். ஆனால், இக்கருத்து முற்றிலும் தவறானதாகும்.
முத்துச் சிப்பிகள் கடலின் அடி ஆழத்தில் வாழக் கூடியவை. முத்துக் குளிக்கின்றவர்கள்-கூட கடலின் அடியில் மூழ்கிச் சென்றுதான் முத்து எடுக்கின்றனர். எனவே, முத்துச் சிப்பிக்குள் மழைத்துளி வீழ்வதற்கான வாய்ப்பு இல்லை. அப்படியிருக்க மழைத்துளிதான் முத்தாக மாறுகிறது என்பது மடமை.
முத்துச்சிப்பி கடலடியில் வாழ்வதால், அதனுள் செல்லும் மணல் ஒன்றின்மீது, முத்துச் சிப்பியுள் சுரக்கும் சுரப்புநீர் படிந்து படிந்து முத்தாக மாறுகிறது. மணலை ஆதாரமாகக் கொண்டு சுரப்புநீர் படிந்தே முத்தாக உருவாகிறது. மாறாக மழைத் துளியால் அல்ல.
-உண்மை,16-30.11.15

மல்லிகைப் புரட்சிக்கு நோபல் பரிசு



நோபல் பரிசு என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும், பெரும் பயன் விளைவிக்கும் - தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளை கண்டுபிடித்தவர்களுக்கும், சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர் களுக்கும் வழங்கப்படும், உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு ஆகும்.
சுவீடிய அரசுக் கல்விக் கழகத்தாலும், சுவீடியக் கல்விக் கழகத்தாலும், கரோலின்சுகா நிறுவனத்தாலும், நார்வே நோபல் குழுவாலும் தனியொருவருக்கோ, நிறுவனங்களுக்கோ வேதியியல், இயற்பியல், இலக்கியம், அமைதி மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில் பெரும் பங்களிப்பு ஆற்றுபவர்களுக்குத் தரப்படுகிறது.

இயற்பியல் 2015:
ஆர்தர் மெக்டொனால்டு (Arthur B. MCDonald)
டகாகி கஜீதா (Takaaki Kajita)
பொருளாதாரம் 2015:
ஆங்கஸ் டீடன் - ஸ்காட்லாந்து
(Angus Deaton)
மருத்துவம் 2015:
வில்லியம் சி. கம்ப்பெல்
(William C. Campbell)
சடோகி ஒமுரா (Satoshi Omura)
யுயுது (You You Tu)
வேதியியல் 2015:
தாமஸ் லிண்டால் (Thomas Lindahl)
பால் மோட்ரிச் (Paul Modrich)
ஆசிஸ் சங்கார் (Aziz Sancar)
அமைதி 2015:
துனிசிய தேசியக் கலந்துரையாடல் அமைப்பு
(The National Dialogue Quertet)
இலக்கியம் 2015:
ஸ்வெட்லாலானா அலெக்ஸிவிச்சு (Svetlana Alexievich)
பொருளாதாரம் 2015 : ஆங்கஸ் டீடன் - ஸ்காட்லாந்து. “வறுமை ஒழிப்பு நிபுணர்”
ஆங்கஸ் டீடன் 1945 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் பிறந்தார். இங்கிலாந்தில் பட்டப்படிப்பு மற்றும் ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு பிரிஸ்டல் பல்கலைக் கழகத்தில் பொருளாதார அளவியல் துறையில் பேராசிரியராக பணியாற்றிய பிறகு பிரிட்டனில் இருந்து அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் 1983 ஆம் ஆண்டு முதல் ஆய்வாளராகச் சேர்ந்தார்.
“நுகர்வு, வறுமை மற்றும் நலன், குறித்த இவரது ஆய்வுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இயற்பியல் 2015 : இயற்பியலுக்கான நோபல் பரிசை ஜப்பான் விஞ்ஞானி தகாக்கி கஜிதாவுடன், கனடா விஞ்ஞானி ஆர்தர் மெக்டொனால்டு “நியூடிரினோ” (Nutrinos) ஆராய்ச்சிக்காக பெற்றுள்ளனர்.
நியூடிரினோ பற்றி மெக்டொனால்டு கூறும்போது,
“நியூடிரினோ துகள் இயற்பியலில் நான் செய்த ஆய்வுகள் பரிதியை (சூரியனை) இயக்கிவரும் அணுப்பிணைவு (Nucfear fusion reations that power the sun)  இயக்கங்களை அளக்க உதவும். சூரியனின் இயக்க அளப்பாடுகளைத் துல்லியமாக அறிய முடிவது, பூமியில் செய்யப்படும் ஆய்வுகளைப் புரிந்து கொள்ளப் பேரளவு உதவுகிறது” என்றார்.
அமைதி - 2015 : அமைதிக்கான நோபல் பரிசு துனிஷியாவைச் சேர்ந்த சமூகக் குழுக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
The National Dialogue Quortet என்று அழைக்கப்படும் துனிஷியாவின் சமூக அமைப்புகளின் ஒன்றியத்துக்கு அமைதிக் கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு துனிஷியாவில் ஏற்பட்ட ஆட்சிக்கு எதிரான அமைதிப் புரட்சியை ஆங்கிலத்தில் “Jasmine Revolution of 2011” என்கிற பெயரில் அழைக்கிறார்கள். இதன்மூலம் துனிஷியா வில் பன்மைத்துவ ஜனநாயகத்தைக் கட்டியெழுப்ப இந்த சமூக அமைப்புகளின் ஒன்றியம் ஆற்றிய முக்கியத்துவம் வாய்ந்த முதன்மையான பங்களிப்பைப் பாராட்டி விருது வழங்கப்பட்டது.
இலக்கியம் - 2015 : உலக இலக்கியத்தின் 2015 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை வென்றிருப்பவர், பேலாரூஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்வெட்லானா அலெக்ஸ்யெவிச் என்ற பெண் எழுத்தாளர்.
“கடந்த 40 வருடங்களாக இவர் சோவியத் மற்றும் பிற்பட்ட காலத்து வரலாற்றைத் தீட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால் இது சம்பவங்களின் வரலாறு அல்ல, உணர்ச்சிகளின் வரலாறு, இவருடைய எழுத்துகள், நம் காலத்தின் கடும் துன்பங்களும், சோகங்களும் எழுதப்பட்ட ஒரு நினைவுச் சின்னமாக விளங்கும் பலகுரல் ஒலிப்பு”.
வேதியியல் 2015 : சுவீடனைச் சார்ந்த தாமஸ் லிண்டாஸ், அமெரிக்காவைச் சார்ந்த பால் மோட்ரிச், துருக்கியில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வரும் அஜீஸ் சான்சார் ஆகிய மூவருக்கும் வழங்கப் பட்டுள்ளது.
மரபணுக்களில் கோளாறுகள் ஏற்படும்போது அதனை உடல் எவ்வாறு தானாகவே சரி செய்து கொள்கிறது என்பதைக் கண்டறிந்ததற்காக, இந்த மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
மேலும், பல்வேறு பரம்பரை நோய்கள் எவ்வாறு உருவாகின்றன என்பது குறித்தும், புற்றுநோய், வயது முதிர்வு ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கான மூலக்கூறு மாற்றங்கள் குறித்தும் தெரிந்து கொள்ள இவர்களின் கண்டுபிடிப்புகள் பெரும் உதவி புரிந்துள்ளன.
மருத்துவம் 2015 : மருத்துவத் துறைக்கான நோபல் பரிசானது, உடல் இயங்கியல் அல்லது மருந்தியல் துறைக்கு வழங்கப் படுகிறது. அந்த வகையில் வில்லியம் சி. கம்ப்பெல், சடோசி ஒமுரா மற்றும் யுயுது ஆகிய மூவருக்கும் கூட்டாக வழங்கப் பட்டுள்ளது.
இந்த நோபல் பரிசு இரண்டு கண்டுபிடிப்புகளுக்காக, இரு பிரிவுகளாக பிரித்து வழங்கப்பட்டுள்ளது ஒன்று நாக்குப் பூச்சி ஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய்களை குணமாக்கும் சிகிச்சை முறை குறித்து ஆய்வு செய்ததற்காக வில்லியம் சி.கம்ப்பெல் சடோசி ஒமரா ஆகியோருக் கும், மற்றொன்று மலேரியாவிற்கான சிகிச்சை முறை குறித்து கண்டுபிடிப்புகளை மேற்கொண்டதற்காக யுயுது என்ற பெண்மணிக்கு வழங்கப்பட்டுள்ளது.
-பெரியார் பிஞ்சு மாத இதழ்

பால்வெளி மண்டலம்




பிரபஞ்ச ரகசியத் தொடரில் அவ்வப்போது பால்வெளி மண்டலம் என்ற பெயரை பயன்படுத்தி இருக்கிறோம். இந்தப் பால்வெளி மண்டலம் பற்றி தமிழில் அவ்வளவான செய்திகள் அதிகம் இல்லை, அப்படியே இருந்தாலும் அறிவியல் வார்த்தைகள் சரியாக தமிழ்படுத்தப் படாமலும், தெளிவில்லாமலும் உள்ளது.
அப்படிப்பட்ட கட்டுரைகள் வானியல் பற்றி நன்கு விபரம் அறிந்த சிலருக்கு மட்டும் புரியும் படியாக உள்ளது. பால்வெளி மண்டலம் என்பது நாம் குடியிருக்கும் வீடு போன்றது நமது வீட்டைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டாமா? எளிய தமிழில் எதிர்காலத்தில் விண்ணை ஆளப்போகும் பிஞ்சுகளுக்காக இதைக் கொடுத்துள்ளோம். இது பிஞ்சுகளுக்கு மட்டுமல்ல பால்வெளி மண்டலம் பற்றி அறிய ஆர்வமுள்ள அனைவருக்குமானது.
தொடர்ந்து படித்து வந்த சூரியன், கோள்கள், விண்மீன் மண்டலங்கள், ஒளிர்முகில் கூட்டம் இதர, இவை அனைத்தும் நமது பால்வெளி மண்டலத்தில் தான் அடங்கியுள்ளது.
இரவு நாம் வானில் காண்பவை  அனைத்தும், நமது பால்வெளி மண்டலத்தின் மிகச்சிறிய பகுதியே. எடுத்துக்காட்டாக பால்வெளி மண்டலத்தை நாம் வசிக்கும் வீடாக  எடுத்துக் கொண்டால் நாம் இருக்கும் பகுதி வீட்டு அலமாரியில் வைத்திருக்கும் ஒரு சிறிய தீப்பெட்டி போன்றது தான்,
நவம்பர் மாதத்தில் இருந்து பிப்ரவரி மாதம் வரை வானத்தை நன்கு கூர்ந்து கவனித்தால் வடக்கிலிருந்து தெற்கு முகமாக அழகிய சிறிய வண்ணச்சிதறல் பட்டையைப் போன்று ஒன்றைக் காணலாம்.  நீங்கள் பார்க்கும் அந்த அழகிய வெண்சிதறல் பட்டைதான்  பால்வெளி மண்டலம் அல்லது பால்வீதி ஆகும். இதை ஆகாய கங்கை என்று கூறி பல மூடநம்பிக்கை கதைகளைத் திணிப்பார்கள்.
ஆகவே மூடநம்பிக்கைப் பெயரான ஆகாய கங்கை (வட மொழியில் ஆகாஷ் கங்கா) என்ற பெயரைப் பயன்படுத்துவது தவறான கருத்தைக் கொடுத்துவிடும்
சாதாரண தொலைநோக்கி கொண்டு பார்க்கும் போது எண்ணிலடங்கா விண்மீன் சிதறல்கள் இந்த பால்வீதியில் இருப்பதைக் காணலாம். நவீன தொலைநோக்கி கொண்டு பார்க்கும் போது விண்மீன்கள் மேலும் தெளிவாகத் தெரியும்.
வடக்கு முகமாக காசியோப்பியா என்ற விண்மீன் மண்டலத்தில் இருந்து,   ஓரையான் வழியாக தெற்கே தென்சிலுவை செண்டாரஸ் விண்மீன் மண்டலத்தில் முடியும், இந்தப் பால்வீதியின் விளிம்புகளைப் பார்த்தால் ஒழுங்கற்று காட்சிதரும்.
நன்றாக கவனித்து வந்தால் சில இடங்களில் பெரியதாகவும் சில இடங்களில் இரண்டாக பிரிந்து பிறகு ஒன்று சேர்வது போல் காட்சிதரும். சித்திரை (ஸ்பைகா), ஸ்வாதி  (அர்க்டூரஸ்), மகம் (ரெகுலஸ்), பாமல்ஹெனத் போன்ற பிரபலமான விண்மீன்களின் பின்பலத்தில் இவை காட்சி தரும். முக்கியமாக இந்த விண்மீன்கள் குளிர்காலத்தில் தெரியும்.
ஆகவே இந்த விண்மீன்களை நாம் தொடர்ந்து பார்ப்போமோயானால் பால்வீதியை நாம் எளிதில் காணலாம்.
பால்வெளி மண்டலத்தை நமக்கு அடையாளம் காட்டியவர்
நீண்ட காலமாக துருவப்பகுதி மற்றும் அய்ரோப்பியப் பகுதியில் பாலை வானில் சிதறிவிட்டது போல் (Milky Way) காட்சி தரும் பொருளைப் பற்றி அறிய பல அறிவியல் ஆய்வாளர்கள் முனைந்தனர். அதில்  முதன்முதலாக வெற்றிகண்டவர் தொலை நோக்கியைக் கண்டறிந்த கலிலியோ தான்,
கோள்களை ஆய்வு செய்வதற்காக, தானே தயாரித்த தொலைநோக்கியைக் கொண்டு வானை அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்தார், அவர் கண்டுபிடித்த தொலை நோக்கி தற்போதுள்ள சாதாரண தொலை நோக்கியைவிட சக்தி குறைந்தது என்றாலும் அவர் அதன் மூலம் நமக்கு பல்வேறு கேள்விகளுக்கான விடைகளைச் சொல்லிச்சென்றார்.
அதில் ஒன்று தான் இந்தப் பால்வெளி மண்டலம், கோள்களைப் பற்றிய தனது ஆய்வின் போது எண்ணிலடங்கா விண்மீன் பட்டைகளைக் கொண்ட பால்வெளி மண்டலத்தையும் அவர் ஆய்வு செய்யத் தவறவில்லை,
கலிலியோவின் பால்வெளி மண்டலம் பற்றிய பல்வேறு ஆய்வு 1920 வரை பலரால் கவனிக்கப் படாமலேயே இருந்தது. 1920 ஆம் ஆண்டு ஹர்லொவ் சேப்லீ, அவரது உதவியாளர் ஹேபர் குர்டிஸ் இருவரும் கலிலியோவின் ஆய்வுக் குறிப்புகளில் உள்ள பால்வெளி மண்டலம் பற்றி ஆய்வு செய்ய முடிவுசெய்தனர்.
இவர்களுக்கு எட்வின் ஹப்பிள் உதவிபுரிந்தார். அன்றிலிருந்து இன்று வரை நாம் பல கோடிக்கணக்கான பால்வெளி மண்டலங் களைப் பற்றி தெரிந்து கொண்டோம்.
விழாக்காலங்களில் எரியும் சங்குசக்கர பட்டாசு போன்று தோற்றமளிக்கும் பால்வெளி மண்டலம் சுமார் லட்சத்து எண்பதாயிரம் (1,80,000) ஒளியாண்டு அளவில் உள்ளது. அதாவது ஒரு முனையில் இருந்து மறுமுனைக்குச் செல்ல 1,80,000 ஒளியாண்டுகள் ஆகும்.
இது 100-முதல் 400 பில்லியன் விண்மீன்களை உள்ளடக்கியது, இதில், நமது சூரியனும் ஒன்று, சில அறிவியல் ஆய்வாளர்கள் ஒரு டிரில்லியன் விண்மீன்கள் வரை இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.
இந்த விண்மீன்கள்களை மையமாக வைத்து நமது சூரியக்குடும்பத்தில் உள்ளக் கோள்களைப் போல் சுமார் 100--மில்லியன் கோள்கள் இருக்கலாம் என்று கருதுகிறார் கள். நாம் இதுவரை 4000-த்திற்கும் மேற்பட்ட கோள்களைக் கண்டுபிடித்து விட்டோம். அந்தக் கோள்களில் நம்மைப் போன்ற உயிரினங்கள் உள்ளதா என்ற ஆய்வும் நடந்து வருகிறது.
நாம் தற்போது இந்த பால்வெளி மண்டலத்தின் மையப்பகுதிக்கு அருகில் இருக்கிறோம், நமக்கும் மையப்பகுதிக்கும் உள்ள தூரம் 21,000 ஒளியாண்டுகள் ஆகும்.
பிறப்பு
பெருவெடிப்புக் கொள்கைக்குப் பிறகு பல்வேறு பொருட்கள் உருவாகி அண்டத்தின் வெற்றுவெளியில் நான்கு புறமும் பரவத் துவங்கியது. அவ்வாறு பரவியப் பொருட்களில் அதிகமாக உள்ளவை தூசுகள் தான். இந்த தூசுகள் நாம் முன்பு பார்த்த ஒளிர்முகில் போன்றவைதான்,
ஆனால் இவ்வகை தூசுக்கள் பல ஆயிரம்கோடி மடங்கு பெரியவை, ஒளிவேகத்தில் நான்குபுறமும் பரவிக்கொண்டு இருந்த இந்த தூசுகள் நாளடைவில் தங்களுக்குள்ளே ஈர்ப்புவிசை காரணமாக மையப் புள்ளி ஒன்றை இலக்காக வைத்து சுழல ஆரம்பிக்கின்றது. நாளடைவில் அருகருகில் உள்ள தூசுப் படலங்கள் அனைத்தையும் ஈர்க்கும் போது அது சுருள்வடிவமுள்ள அழகிய பால்வெளி மண்டலங்களாக உருமாறுகிறது.
எடுத்துக்காட்டாக நாம் பஞ்சுமிட்டாய் செய்யும் இயந்திரத்தை எடுத்துக் கொள்ளலாம், பஞ்சுமிட்டாய் செய்பவர் சர்க்கரையை சுழல் சக்கர அடுப்பின் மையத்தில் கொட்டிய பிறகு வேகமாக சுழலும் பாத்திரத்திற்குள் மெல்லிய பஞ்சு போல் படியுமல்லவா அது போல் தான் நமது பால்வெளி மண்டலமும் காட்சிதரும்.
விண்வெளி ஆய்விற்காக ஹப்பிள் (Hubble) என்ற மிகப்பெரிய  தொலை நோக்கியை நாசா வானியல் ஆய்வாளர்கள் கடந்த 1990--ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ஆ-ம் தேதி விண்ணில் செலுத்தினர். இந்த தொலைநோக்கியின் மூலம் ஏராளமான புகைப்படங்கள் பெறப்பட்டு, தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நமது  பால்வளி மண்டலம் பற்றிய பல்வேறு உண்மைத் தகவல்களைப் படம்பிடித்து அனுப்பி வருகிறது.
முக்கியமாக நமது பால்வெளி மண்டலத்தின் மையப்பகுதி பற்றி பல்வேறு தகவல்கள் கணக்கீடுகளின் மூலம் கிடைத்தாலும் அதை கண்களால் கண்டு தகவல்களை உறுதிப்படுத்த விண்ணியல் ஆய்வாளர்கள் பேராவல் கொண்டு இருந்தனர். அவர்களின் ஆர்வத்திற்கு ஈடு செய்யும் வகையில் ஹப்பிள் பல்வேறு படங்களை அனுப்பி இருந்தது,
பால்வெளி மண்டலங்களுக்கிடையே இருக்கும் கருந்துளை பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.
-பெரியார் பிஞ்சு மாத இதழ்,நவம்பர் 2015

திங்கள், 30 நவம்பர், 2015

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்?



வங்கக் கடலில் உருவாகி யுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ கத்தின் கரையோர மாவட்டங் களில் பரவலாக மழை இருக்க லாம் என்று டிவி அல்லது ரேடி யோவில் வானிலை அறி விப்பின் போது தெரிவிப்பார்கள். மழை சீசனின் போது இவ்வித அறிவிப்பைக் கேட்கலாம்.

அதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்?
தரையிலிருந்து தொடங்கி வானில் பல கிலோ மீட்டர் உயரம் வரை காற்று வியாபித்துள்ளது.காற்றுக்கு எடை உண்டு. ஆகவே மேலிருந்து கீழ் வரை உள்ள காற்று நம்மை அழுத்துகிறது. எந்த ஒருவரையும் காற்றானது கடல் மட்டத்தில் சதுர செண்டி மீட்டருக்கு ஒரு கிலோ வீதம் அழுத்துகிறது. ஒரு புறத்திலிருந்து மட்டும் அழுத்தம் இருந்தால் நம்மால் உணர முடியும். ஆனால் காற்று நம்மை எல்லாப் புறங்களிலிருந்தும் அழுத்துவதால் காற்று அழுத்துவதை நம்மால் உணர முடிவதில்லை.

ஓர் இடத்துக்கு மேலே இருக்கின்ற மொத்தக் காற்றின் அளவு இடத்துக்கு இடம் வித்தியாசப்படும். ஆகவே காற்றழுத்தமும் வித்தியாசப்படும். ஓரிடத்தில் காற்றழுத்தம் மிக அதிகமாக இருக்கும்.வேறிடத்தில் குறைவாக இருக்கும்.இதற்கு சூரியனும் காரணம். காற்றழுத்தம் அதிகமாக உள்ள இடத்திலிருந்து காற்றழுத்தம் குறைவாக உள்ள பகுதியை நோக்கி காற்று வீசும். காற்றுடன் மேகங்களும் நகரும். ஆகவே காற்றழுத்த நிலைமைகள் வானிலைத் துறையினருக்கு மிக முக்கியம். வானிலைத் துறையினர் காற்றழுத்தத்தை அளக்க மேலே சொன்ன (சதுர செண்டிமீட்டருக்கு இவ்வளவு என்ற) கணக்கை பின்பற்றுவதில்லை.அவர்கள் கணக்குப்படி கடல் மட்டத்தில் சராசரி காற்றழுத்தம் 1013 மில்லி பார். காற்றழுத்தம் இடத்துக்கு இடம் மாறுபடுவதால் ஆங்காங்கு காற்றழுத்த அளவு மானி வைக்கப்படுகிறது.

காற்றழுத்தமானிகள் தெரிவிக்கின்ற எண்ணற்ற தகவல் களை வைத்து காற்றழுத்த நிலவரப் படம் தயாரிப்பார்கள். எந்தெந்த இடங்களில் ஒரே மாதிரி அழுத்தம் இருக்கிறதோ அந்த இடங்களை எல்லாம் சேர்த்து கோடு போடுவார்கள். இதற்கு  lsobar என்று பெயர். மேலே உள்ள படத்தில்  எல் என்ற எழுத்து  Low என்பதைக் குறிப்பதாகும். எச் என்பது  High என்பதைக் குறிப்பதாகும்.படத்தில் 1008 என்று குறிப்பிடப்பட்ட கோட்டைக் கவனிக்கவும். அக்கோடு அமைந்துள்ள இடங்கள் அனைத்திலும் காற்றழுத்தம் அந்த அளவில் இருக்கிறது என்று அர்த்தம். ஓரிடத்தில் காற்றழுத்தம் குறைவாக இருக்க, அதைச் சுற்றியுள்ள இடங்களில் எல்லாம் அதிகமாக இருக்க நேரிடலாம். நட்ட நடுவே காற்றழுத்தம் குறைவாக உள்ள இடத்தை  Low  என்று குறிப்பிடுவார்கள். நேர் மாறாக நட்ட நடுவே ஓரிடத்தில் அதிகமாக இருந்தால் அது  High.

மேடாக இருக்கும் இடத்திலிருந்து தண்ணீர் பள்ளமாக இருக்கின்ற இடத்தை நோக்கிப் பாய்வது போலவே காற்றும் செயல்படுகிறது. வடகிழக்குப் பருவ மழைக் காலத்தின் போது காற்று வட கிழக்கிலிருந்து வீசுகிறது. கடல் மீதாக வருகின்ற மேகங்கள் ஆவி வடிவிலான நீரைத் தாங்கியவையாக வருகின்றன. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அந்த மேகங்களை ஈர்க்கும் போது மழை பொழிகிற்து.. ஆகவே கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தோன்றினால் மழை பெய்யும் வாய்ப்பு தோன்றுகிறது.

-விடுதலை,19.11.15
.

புதன், 11 நவம்பர், 2015

அகழ்வாராய்ச்சியில் நாய்களைப் பற்றிய தகவல்


- மு.வி. சோமசுந்தரம்
நாய்கள், மனிதர்களின் சிறந்த நண் பர்கள் என்பது உலகம் ஏற்றுக் கொண்ட  உண்மை. அதற்கு மேலும் நாய்களுக்கு சிறப்பு உண்டு. உயிரின வளர்ச்சி வர லாறு, அகழ்வாய்வு மூலம் கண்ட றியப்பட்டவை நாய்களைப் பற்றி பல்வேறு செய்திகளை அறிய முடிகிறது. இன்று நாம் நேசிக்கும் நாய் 20000 ஆண்டுகளுக்கு முன் இருந்த தில்லை.
எப்பொழுது, எங்கே, முதல் முதலாக நாய் என்ற மிருகம் பற்றி அறிய வந்தது? அவை முதலில் உணவுக்காக பயன்படுத்தப்பட்டதா? வளர்ப்பு நண்பனாக வைத்திருந் தார்களா? வேட்டையாடும் திறமை கண்டு வளர்த்தார்களா? இந்த கேள்விகள் விலங்கியல் துறையிடையே முக்கியத்துவம் பெற்றன.
நாய் இனம் வேட்டையாடும் முரட்டு நாய் ஜேக்கால் (Jackal) சீனவழி வந்தவை என்ற கருத்து சரியல்ல என்பதாயிற்று. சாம்பல் நிற ஓநாய் (Wolf) இனத்தின் வழி வந்தவை என்ற கருத்து ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது. அடுத்து, நாய்கள் முதலில், சீன நாட்டிலா, தூரகிழக்கு நாட்டிலா, ஆப்பிரிக்காவிலா செல்லப் பிராணி யாக வளர்க்கப்பட்டது என்ற கேள்வி எழுந்தது. புதிய கற்காலத்தில்  நாய்கள் முக்கிய பங்கு வகித்தன. 10000 ஆண்டு களுக்கு முன்னதாக, மனித வாழ்க் கையில் நாய்கள் சிறந்த காவலாளியாக, மதச்சடங்குகளில் பலியிடுவதற்காக, உடலுக்குத் தேவையான புரதசத்தை பெறுவதற்கான மிருகம் என்ற பங்கை வகித்து வந்தன. இந்த செய்தி சீனா, ஆப்பிரிக்கா நாடுகளில் கண்டெடுக்கப்பட்ட எலும் புக் கூடுகளின் வாயிலாக அறியப்படுகிறது.
பல நூற்றாண்டுகளுக்கு முன் ஓநாய் (Wolf)   இன வழியாக இவை உற்பத்தி அடைந்தன என்றும், பயிர் தொழில், வேட்டையாடுதல் தொழிலில் ஈடுபட்டவரி டையே நாய்கள் வளர்ச்சி யடைந்திருக்க முடியும் என்ற கருத்தும் நிலவுகிறது. லாஸ்ஏன்ஜல்ஸ் கலி போர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் ராபர்ட்வயன், வளர்ப்பு நாயின் டி.என்.ஏ. கிழக்கு நாடுகளின் ஓநாயினுடைய டி.என்.ஏ வுடன் ஒத்து உள்ளதாகக் கூறுகிறார். விக்டோரியா பல்கலைக்கழக அகழா ராய்ச்சிப் பேராசிரியர் கிராக்போர்ட் (Crockford) கூறுவது; நாய்களை புதைக்கும் பழக்கம், ஆன்மீக சிந்தனையுடன் நாய் தொடர்புள்ளதை காட்டுகிறது. அடுத்து காவலுக்கு பயன்படுத்தும் பழக்கம் வந்துள்ளது. வேட்டைக்கு அன்று துவக்கத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.
மக்கள் கலாச்சாரத்தோடு நாய் எப்படி தொடர்புடையதாக இருந்தது என்பதைப் பற்றிய செய்தி வருமாறு:
தென் அமெரிக்காவின் பெருநகரத் தின் கல்லறைகளில், 80 நன்கு பதப் படுத்தப்பட்ட நாய்கள் அவற்றின் சொந் தக்காரருடன் புதைக்கப்பட்டிருந்தது. அழகான கம்பிளி துணியால் மூடப்பட்டு அவற்றின் மூக்கின் அருகில் மீன் வைத்துள்ளனர். அதன் எலும்பு காணப்படுகிறது. அவை குட்டியிலிருந்து பெரிய நாய்களாக உள்ளன. பண்டய எகிப்தியர் நாயை கடவுளாக மதித்தனர். இந்த உலகத்திற்கும், இறந்த பின் மறு உலகத்துக்கும் துணைவனாக கருதப் பட்டது. சில புதைக்கப்பட்ட நாய்களுடன் ஒரு கிண்ணமும் உள்ளது. ரோம கலாச்சாரத்தில் நாயை மனிதருக்குக் கொடுக்கும் மதிப்போடு மதிக்கும் பழக்கம் இருந்தது.
தேவதைகளை திருப்திபடுத்த நாயை பலியிடும் பழக்கம், மதத்தின் அடிப்படையில் நடைபெற்றது. கிரேக்க நாட்டில் ஸ்பார்டன் பகுதி மக்கள் போரில் வெற்றிபெற நாயை பலியிட் டனர். குழந்தை பிறந்த பிறகு, ஒருவர் இறந்த பிறகு தூய்மை ஏற்பட நாயை பலியிடும் பழக்கம் கிரேக்கரிடம் இருந்தது. இதைப்போலவே ஹங்கேரி நாட்டில் நாய்குட்டிகளை சிறு பானைகளில் வைத்து புதைத்துள்ளனர். தீய சக்திக்களை நீக்குவதற்கு இந்த பழக்கம்   இருந்தது. இங்கிலாந்தில் உள்ள ரோம நாட்டு கட்டடங்களில் சுடுமண் ஓடுகளில் நாய்களின் பாதங்களை பதிய வைக்கும் பழக்கம் இருந்துள்ளது.
உணவுக்காக நாய்
பழக்கத்தின் காரணமாக, விருப்பத் தின் காரணமாக அல்லது தேவையின் காரணமாக நாயை உணவுக்காக பயன் படுத்தும் கலாச்சாரம் இருந்து வந்துள் ளது. உலோக காலத்தில் (450 - 100 BC)உணவுக்காக நாயை வளர்த்து வந்தனர் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. எளிதில் புரத உணவுப்பொருளை பெறு வதற்கு நாய் உணவு பயன் பட்டது. சில நேரங்களில் விழாக்காலங்களிலும் நாய் உணவு சாப்பிட்டு வந்தனர்.
ஆத்மாவுக்கு பாதுகாவலன்
பழங்கால மக்கள், இறந்த பின் மறு உலகத்தில் நாய் களை சந்திக்க முடியும் என்று நம்பினர். ரிக்வேதத் திலும் , கிரேக்க, ரோம நாட்டு கதைகளிலும் இது பற்றி கூறப்பட்டுள்ளது. பல கலாச்சாரங்களில் ஆத்மா வுக்கு வழிகாட்டியாக நாய் உள்ளதாகக் கருதப்பட்டது.
(‘ARCHAEOLOGY’ (அகழ் ஆராய்ச்சி) அக்டோபர் 2010 இதழிலிருந்து வழங்கப்படும் செய்தி)
இந்தியாவிலும் நவீன கற்கால மனிதர்கள் இறந்தவர்களை குழியில் புதைக்கும் வழக்கத்தில் இருந்தனர். சில சமயங்களில் இறந்தவர்களை புதைக்கும் போது அவருடைய நாயுடன் புதைக்கும் வழக்கம் இருந்துள்ளது. காஷ்மீர், கர்நாடகம், தமிழகம் போன்ற பகுதிகளில் இந்த முறை இருந்துள்ளது. (வி.வி.கிருஷ்ணசாஸ்திரி, பழங்கால வரலாற்று நாகரீகங்கள்) நாய் பற்றிய பழமொழிகளுக்கும் பஞ்சமில்லை. நாயின் குணங்களைப் பற்றியும், இன்று அவை எந்தெந்த வகையில் மனிதர் களுக்குப் பயன்படுகிறதென்றும் நாம் அறிவோம்.
நாய் கண்காட்சிகள் நடப்பதும், அவற்றிற்கு பரிசளிப்பதும் உலகெங்கும் நடைபெறுவதுண்டு. அக்கண்காட்சிகளில் பலவகைத் தோற்றத்துடைய நாய்களைக் காண் கிறோம். நாய்களை வீட்டில் வளர்ப்பதற்கு சில விதிமுறைகளை அரசு விதிப்பதால், தெரு நாய்கள் என்று ஒரு கூட்டம் இருப்பதில்லை. இந்த முறையை சிறப்பான வகையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் கடைபிடிப்பதைக் காண முடிந்தது. நாய்கடிக்கு பல நாட்கள் ஊசி போடும் முறைக்குப் பதிலாக ஒரு ஊசி போதும் என்பதாக அறிவியல் உதவியுள்ளது.
-விடுதலை ஞா.ம.4.5.13

பழங்கள் பிறந்த கதை


ஆரம்ப காலத்தில் அதாவது சுமார் 60 கோடி வருடங்களுக்கு முன்பு, விதைகளின் மேல் சதை பற்றில்லாமல் கரடு முரடான கரோட்டின் எனப்படும் ஒரு வகை பட்டைமட்டுமே இருந்தது. அது டைனோசர்களின் காலம் அங்கு பழங்களை சாப்பிட அதிக உயிரினமில்லை, அப்போது உயிரினங்களில் இரண்டு வகை மட்டுமே ஒன்று தாவரஉண்ணி மற்றொன்று மாமிச உண்ணி, தாவர உண்ணிகளிடம் இருந்து தாவரங்கள் தன்னை  காப்பாற்றிக்கொள்ள எந்த அளவு உய்ரவேண்டுமே அந்த அளவு உயர நேர்ந்தது, அன்றைய காலகட்டங்களில் சாதாரண செடிகள் கூட சென்னை எல்.அய்.சி. கட்டிடத்தை மிஞ்சும் உயரம் வளரவேண்டி இருந்தது, விண்கற்களின் தாக்குதலால் பூமி நிலை குலைந்தது, நடமாடும் உயிரினங்கள் தாவரங்கள் 90 அழிந்தது, பூமி தனது பாதையில் மாற்றம் காண நேர்ந்தது விளைவு துருவங்கள் உருவாகின, துருவங்கள் உருவான பிறகு கால நிலை மாற்றம், புதியவகை தாவர உயிரினம் தோன்றியது சுமார் 30 கோடி வருடங்கள் ஓடிவிட்டது,  தாவரங்கள் தங்களை செடிகளாக, புதர்களாக, கொடிகளாக மரங்காளாக மாற்றிக்கொண்டு வாழும் சுழலில் சிறிய சிறிய இடம்பெயர் உயிரினங்கள் (பாலூட்டி, பூச்சி, பறவை, ஊர்வன) தோன்றின.இந்த புதிய உயிரினங்களை தங்கள்  இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் தாவரங்களுக்கு ஏற்பட்டது., அந்த உயிரினங்கள் வண்ணங்களை பகுப்பாராயும் தன்மை கொண்டவை இதை அறிந்து கொண்ட தாவரங்கள் ஒரு புதிய யுக்தியை கையாண்டது, வண்ண வண்ண பூக்கள், சதைப்பற்றுள்ள காய்களை உற்பத்தி செய்தது, தான் தயாரா கிவிட்டேன் என்ற சமிக்ஞைக்காக தன்னுடைய மேற்புற நிறத்தை மாற்றியது.
இதுவரை பச்சை பச்சையான நிறத்தை பார்த்து வந்த உயிரினங்கள் புதியதாக பலப்பல வண்ணங்களில் வித்தியாசமாக தெரிய அவற்றை உண்ணுவதற்கு நடமாடும் உயிரினங்கள்  அதிக ஆர்வம் காட்டியது, முன்பு கடினமான கரோட்டின், விதை உறையாக மாறியது, அதன் மேல் இனிப்பு புளிப்பு இதர சுவைகளில் ஒரு பொருளை தாவரம் உற்பத்தி செய்தது காரணம் அதை உண்டு விட்டு விதைகளை எறிந்து விடவேண்டும் இயற்கையின் இந்த அற்புத தொழில் நுட்பம் இந்த பூமி எங்கும் தாவரம் பரவ காரணமாகியது. இது பழங்கள் பிறந்த கதை,
விடுதலை ஞா.ம.,23.2.13
குறிப்பு -  விளக்கவுரையில்  கருத்து மாறுபாடு உண்டு.                                                             

திங்கள், 9 நவம்பர், 2015

பழங்கால மனிதனை மீண்டும் உருவாக்குதல்


விஞ்ஞானம் வியக்கும் வகையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இதன் இன்னொரு மைல்கல்லாக மறைந்து போன பழங்கால மனிதர்களை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
இதுவரை நமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி மனித இனத்தில் 4 பிரிவுகள் இருந்துள்ளன. அவை பரவலாக அறியப்பட்ட எஸ்கிமோக்கள் மற்றும் நகானாசான்ஸ், கோர்யாக்ஸ், சக்சிஸ். இந்த இனங்கள் அனைத்தும் இப்போது இல்லை.
ஹோபன்கேகன் பல்கலைக்கழக நிபுணர்குழு, கிரீன்லாந்தின் பெர்மாபிராஸ்ட் பகுதியில் ஒரு எஸ்கிமோ மனிதனின் சடைபிடித்த கெட்டியான ரோமத் துண்டை தோண்டி எடுத்துள்ளனர். இதனை தீவிரமாக ஆராய்ந்ததில் பல்வேறு வியப்பூட்டும் உண்மைகள் வெளிவந்துள்ளன.
இவர்கள் வாழ்ந்த காலம் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. இந்த மனித இனத்தின் கண்களும், ரோமங்களும் பழுப்பும், காவியும் கலந்த நிறமாக இருந்திருக்கின்றன. உடல் தோற்பரப்பின் நிறமும் அறியப்பட்டுள்ளது. ரோமங்கள் அடர்த்தியாக இருந்துள்ளன. அப்போதைய காலத்தில் தலை வழுக்கை இருந்திருக்காது என்று அறிய முடிகிறது.
இதுவரை நமக்கு கிடைத்துள்ள படிமங்களைவிட கூடுதல் சிறப்பம்ச மாக இதன் டி.என்.ஏ. வடிவமைப்பை வரைய முடிந்துள்ளது. இதனை வைத்து அப்போதைய மனிதர்களின் பழக்கவழக்கம் முதல் பல முக்கிய உண்மைகளை அறிய முடியும்.
இதை அடிப்படையாக வைத்து கணினியில் வரைபடம் வரையப் பட்டது. இதற்கு `இனங்க் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் மரபணு குறியீடு வரையறுக்கப்பட்டு எஸ்.என்.பி. என்னும் நவீன தொழில் நுட்பம் மூலம் அந்த நாட்டின் சுற்றுப் பகுதியில் உள்ள 3.5 லட்சம் பேரின் மரபணுவோடு ஒப்பிட்டு ஆய்வு நடந்து வருகிறது.
-விடுதலை ஞா.ம.10.11.12