தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஆராய்ச்சிகள் பல புதுப்புதுத் தகவல்களைத் தந்து கொண்டிருக்கின்றன. முதலில் உலகம் தட்டை என்று நம்பப்பட்டது. பின்னர் ஆராய்ச்சிகள், அதைத் தொடர்ந்த பயணங்கள் உருண்டை என்று நிரூபித்தன.
இப்படித்தான் மனிதனின் பரிணாம வளர்ச்சியும், குரங்கினின்று _ அதிலும் சிம்பன்சி எனும் குரங்கு வகையினின்று மாற்றம் பெற்று வளர்ச்சியடைந்தவன்தான் மனிதன்.
இப்படிப்பட்ட மாற்றத்தைப் பெற 50 லட்சம் ஆண்டுகள் ஆகின என இதுவரை இருக்கும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் சமீபத்தில் ராபர்ட் டி.மார்ட்டின் என்பவரால் சையின்ஸ் டெய்லி இதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தி மேலும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இவரது கூற்றுப்படி சிம்பன்சியினின்று மனிதனாக மாறிய பரிணாம வளர்ச்சியின் காலம் மேலும் 30 லட்சம் ஆண்டுகட்கு முந்தையது எனத் தெரிகிறது.
அதாவது 50 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பதற்குப் பதில் 80 லட்சம் ஆண்டுகட்கு முன்பே இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாம்! மனிதனுக்கு முந்தைய இந்த சிம்பன்சிகளுக்கும் முந்தைய ஆதார உயிரினம் 8 கோடியே 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்துள்ளனவாம்!
அறிவியலே விந்தை _ அதிலும் விந்தை இந்த அறிவியலை ஆராயும் மானிட மூளை!
இப்படித்தான் மனிதனின் பரிணாம வளர்ச்சியும், குரங்கினின்று _ அதிலும் சிம்பன்சி எனும் குரங்கு வகையினின்று மாற்றம் பெற்று வளர்ச்சியடைந்தவன்தான் மனிதன்.
இப்படிப்பட்ட மாற்றத்தைப் பெற 50 லட்சம் ஆண்டுகள் ஆகின என இதுவரை இருக்கும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் சமீபத்தில் ராபர்ட் டி.மார்ட்டின் என்பவரால் சையின்ஸ் டெய்லி இதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தி மேலும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இவரது கூற்றுப்படி சிம்பன்சியினின்று மனிதனாக மாறிய பரிணாம வளர்ச்சியின் காலம் மேலும் 30 லட்சம் ஆண்டுகட்கு முந்தையது எனத் தெரிகிறது.
அதாவது 50 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பதற்குப் பதில் 80 லட்சம் ஆண்டுகட்கு முன்பே இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாம்! மனிதனுக்கு முந்தைய இந்த சிம்பன்சிகளுக்கும் முந்தைய ஆதார உயிரினம் 8 கோடியே 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்துள்ளனவாம்!
அறிவியலே விந்தை _ அதிலும் விந்தை இந்த அறிவியலை ஆராயும் மானிட மூளை!
(நன்றி: ஜனசக்தி 16.4.2011)
-விடுதலை ஞா.ம.23.4.11
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக