ஞாயிறு, 13 டிசம்பர், 2015

மனித உடலில் புதிய தசை நார் கண்டுபிடிப்பு


நாம் நடந்து செல்லும்போது திடீரென்று திசை மாற்றி கால்களைத் திருப்பி நகர்த்தும் போது இந்த தசைநார்கள் தான் கால்களுக் கான பாதுகாப்பு அரணாக அமைகிறதாம்.
நமது முழங்கால் பகுதியில் இதுவரை அறியப்படாத தசைநார் ஒன்று இருப்பதை கண்டறிந்துள்ளதாக பெல்ஜியத்தின் முழங் கால் மருத்துவ நிபுணர்கள் அறிந்துள்ளார்கள். தொடை எலும்புக்கு மேல்புறத்தி லிருந்து முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடைப் பட்ட முன்னங்கால் வரையான பகுதி வரை இந்த தசைநார் அமைந்துள்ளதாக மருத்துவர் க்ளஸ்ஸு, பேராசிரியர் ஜோஹன் பெல் லெமன்ஸ் ஆகிய மருந்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
நாம் நடந்து செல்லும்போது திடீரென்று திசை மாற்றி கால்களைத் திருப்பி நகர்த்தும் போது இந்த தசைநார்கள் தான் கால்களுக் கான பாதுகாப்பு அரணாக அமைகிறதாம். இப்படி ஒரு தசைநார் முழங்காலை ஒட்டி அமைந்திருக்கும் என்று நீண்டகாலமாக கருத்துக்கள் இருந்து வந்த போதிலும், இப்போதுதான் அது பற்றிய ஒரு தெளிவு ஏற்பட்டிருக்கிறது. என்கிறார் பிரிட்டனைச் சேர்ந்த முழங்கால் சிகிச்சை நிபுணர் ஜோயல் மெல்டன். மருத்துவப் பரிசோதனைகள் செய்வ தற்காக தங்களது உடலை தானமாகத் தந்த 41 பேரின் உடலிலிருந்து முழங்கால்களை நுண்ணோக்கி மூலம் ஆராய்ந்தபோது இதைக் கண்டறிந்துள்ளனர். எல்லோரது முழங்கால் எலும்புகளிலும் இந்த தசைநார்கள் இருப்பதையும், அவை எல்லாம் ஒரே வடிவமைப்பில் இருப்பதையும் விஞ்ஞானிகள் பார்த்துள்ளார்கள்.
பொதுவாக விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படக்கூடிய முழங்கால் காயங்களின்போது, அவற்றை சரியாகப் புரிந்துகொள்ளவும் சிகிச்சை அளிக்கவும் இந்த தசைநாரின் அமைப்பு உதவும் என்பது மருத்துவர்கள் கருத்து. கால்களின் முன் பக்கவாட்டில் இருக்கின்ற இந்த தசைநாரில் ஏற்படுகின்ற காயங்களே ஏராளமான முழங்கால் உபாதைகளுக்குக் காரணமாக இருக்கின்றன என்பதும் க்ளஸ்ஸு மற்றும் ஜோஹன் பெல்லொமன்ஸ் ஆகியோரின் கருத்து. கால்களில் ஏற்படும் வலி மற்றும் உபாதைகள் தொடர்பான சிகிச்சைகளுக்கு இந்தப் புதிய கண்டுபிடிப்பை எந்த அளவுக்கு பயன்படுத்த முடியும் என்பது குறித்து தீவிர ஆராய்ச்சி நடக்கிறது.
-விடுதலை,12.6.14


கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக