சனி, 12 டிசம்பர், 2015

சோதனைக் குழாய் மூலம் பிறந்த உலகின் முதல் நாய்க் குட்டிகள்!



வாஷிங்டன்,  டிச.11_ உலகிலேயே முதல் முறையாக சோதனைக் குழாய் மூலம் கருத்தரிக்கப்பட்ட 7 நாய்க் குட்டிகள் அமெரிக்காவில் பிறந்துள்ளன.
அமெரிக்க விஞ்ஞானி கள் இந்த சாதனையால், அரிய வகை நாய்களைப் பாதுகாப்பதற்கும், மனிதர் கள் மற்றும் விலங்கினங் களின் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் புதிய வழி கிடைத்துள்ள தாக நிபுணர்கள் தெரி விக்கின்றனர்.
இதுகுறித்து அமெரிக் காவிலிருந்து வெளியாகும் "பப்ளிக் லைப்ரரி ஆஃப் சயின்ஸ் ஒன்' அறிவியல் இதழில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:
அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழக கால்நடை மருத்துவத் துறையைச் சேர்ந்த விஞ் ஞானிகளின் முயற்சியில், சோதனைக் குழாயில் கருத்தரிப்பு செய்யப்பட்ட 7 வெவ்வேறு இனம் மற்றும் கலப்பின நாய்க் குட்டிகள் கடந்த ஜூலை மாதம் பிறந்தன.
நீண்டகாலமாவே, சோதனைக் குழாய் கருத் தரிப்பு முறையில் மனிதர் கள் குழந்தை பெற்று வந்தாலும், அதே முறை யில் நாய்களை கருத்த ரிக்கச் செய்யும் முயற்சி இதுவரை வெற்றி பெற வில்லை. பெண் நாய் களின் கருத்தரிக்கும் பருவம் மிகவும் மாறு பட்டது என்பதால் அவற் றின் சினை முட்டையை தனியாக எடுத்து, அதனைக் கருவுறச் செய்ய முடியாமல் இருந்து வந்தது.
தற்போது, புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சோதனைக் குழாய் மூலம் நாய்க்குட்டி களையும் பிறக்கச் செய் திருப்பதே அமெரிக்க விஞ்ஞானிகளின் சாதனை யென அந்த  அறிவியல் இதழில் கூறப்பட்டுள் ளது.
-விடுதலை,11.12.15
-

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக