வியாழன், 22 டிசம்பர், 2022

செயற்கைக் கருப்பை அறிவியலின் அடுத்த அடி


இயந்திரங்கள் மற்றும் நவீன கண்டுபிடிப்புகள் முக்கியத்துவம் மனித வாழ்க்கையில் நீண்ட காலத்திற்கு முன்பே ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விட்டது. எதிர்காலத்தில் இயந்திரங்கள் மூலம் என்ன என்ன நடக்கும் என்று கணிப்பது கடினம்.  அந்த வகையில் இப்போது செயற்கைக் கருப்பை மூலம் குழந்தைகளை பிறக்க வைக்க முடியும் என்று எக்டோ லைப்  என்ற தனியார் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தான் உலகில் செயற்கையாக உருவாக்கப்பட்ட முதல் கருவறை நிறுவனம் என்றும் கூறப்படுகிறது. எக்டோலைப் நிறுவனம் பெர்லினை தலைமையகமாகக் கொண்ட உயிரி தொழில்நுட்பவியல் நிறுவனம். இந்த நிறுவனம் தான் உலகின் முதல் செயற்கைக் கருப்பை முறையில் குழந்தையை உருவாக்கும் முறையை அறிமுகப்படுத்துகிறது.   வருங்காலத்தில் தாய் கர்ப்பமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. பிரசவம் அல்லது அறுவை சிகிச்சை போன்ற வலிகளில் இருந்து பெண்கள் விடுதலை அடைவார்கள்

எக்டோலைஃப், 'உலகின் முதல் செயற்கைக் கருவூட்டல் வசதி' என்பது குழந்தைகளை பெற்றெடுக்க பெற்றோர் களுக்கு இது ஒரு வசதியாக வழிமுறையை வழங்குகிறது.  பெண்களின் கருப்பை போலவே செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள கருப்பை  அமைப்புகள் மூலம் வருடத்திற்கு 30,000 குழந்தைகளை உருவாக்க முடியும் என்று எக்டோலைப் நிறுவனம் கூறுகிறது. இதில் உள்ள ஒவ்வொரு செயற்கைக் கருப்பைகளிலும் குழந்தையின் இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், வெப்பநிலை, சுவாசம் உள்ளிட்ட முக்கிய உயிர்காக்கும் அம்சங்களை கண்காணிக்கும் சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும். இது தொடர்பான காணொலிக் காட்சிப் பதிவை எக்டோலைப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்களின் ஐம்பது ஆண்டுகால 'முன்னோடியில்லாத அறிவியல் ஆராய்ச்சி'யின் அடிப்படையில் கூறிள்ளது,  ஒரு ஆய்வகத்தில் ஆண்டுக்கு 30,000 குழந்தைகளை வளர்க்க முடியும். மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து கொண்டிருக்கும் ஜப்பான், பல்கேரியா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளுக்கு இது பெரிதும் உதவும் என்றும், உடல் நல பாதிப்புகள் மற்றும் கருப்பை பாதிப்புகளால், குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கும் பெண்களுக்கு இது வரப்பிரசாதமாக அமையும் எனவும் கூறப்படுகிறது. இது முழுவதும் மாசற்ற மின்சார சக்தியில் இயங்கும் இதன் கீழ் 75 ஆய்வகங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு ஆய்வகத்தில் 400 செயற்கைக் கருப்பை இருக்கும்.

வியாழன், 22 செப்டம்பர், 2022

ஆதிமனிதன் வரலாறு: 31,000 ஆண்டுக்கு முன்பே உறுப்பு நீக்க அறுவைச் சிகிச்சை செய்த குகை மனிதன்

ஞாயிறு, 31 ஜூலை, 2022

பரிணாமக் கொள்கையில் டார்வினின் முன்னோடி

புதன், 27 ஜூலை, 2022

கனடாவில் மம்மூத் வகை குட்டி யானையின் உடல் கண்டெடுப்பு


கனடாவின் வடக்கே உள்ள க்ளோண் டிக் தங்க வயல்களில் உள்ள சுரங்கத் தொழிலாளர்கள் ஒரு அரிய வகை குட்டி மம்மூத்தின் உடலை கண்டெடுத்துள்ள னர். இந்த மம்மூத்திற்கு அந்த ஊர் மக்கள் Tr'ondek Hwech'in First Nation  என்று பெயரிட்டனர், அதாவது "பெரிய குழந்தை விலங்கு" என்று பெயர்

மம்மூத்கள் என்பவை இப்போதுள்ள யானைகளின் மூதாதைகள் என்கின்ற னர்,  வரலாற்று ஆய்வாளர்கள். இந்த வகை யானைகள் பனியுகத்தில் வாழ்ந் தவை. இப்போது உள்ள யானைகள் போல் அல்லாமல் மம்மூத் வகை யானை கள் உருவத்தில் மிகப்பெரியதாகவும் மிக நீண்ட தந்தங்களும் உடையவை. இப் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த குட்டி மம்மூத் வகை யானைகள், பனியுகத் தில் வாழ்ந்தவை. பனிக்காலம் என்பதால் குளிரை தாங்கும் வண்ணம் இதன் உடலில் கம்பளி போன்ற ரோமங் கள் காணப் படுகின்றன.

மம்மூத்களின் உடல் முழுவதும் அடர்த்தியான உரோமங்களால் போர்த் தப்பட்டிருந்த காரணத்தால் இவை கம் பளி யானைகள் என அழைக்கப்பட்டன. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மம் மூத்தானது அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் எல்லையான கனடாவின் யூகோன் பிரதேசத்தில் உள்ள டாசன் நகருக்கு அருகே அகழ்வாராய்ச்சி யின்போது குழந்தை மம்மூத்தின் எச் சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

30,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கம்பளி வகை மம்மூத்களும் இதனுடன் வேறு விலங்குகளான குதிரைகள், சிங்கங் கள் மற்றும் காட்டெருமைகளும் இருந்து உள்ளன என்று தெரிவிக்கின்றன. இந்த மம்மூத் வகை யானை பெண் என்று சொல்கின்றனர். 30,000 ஆண்டுகளுக்கு முன்பு, பனி யுகத்தின்போது இறந்திருக் கலாம் என்ற தகவல் வெளியாகி யுள் ளது. 1948ஆம் ஆண்டு அலாஸ்காவின் உட் புறத்தில் உள்ள ஒரு தங்கச் சுரங்கத்தில் “எஃபி” என்ற பெயருடைய ஒரு பகுதி மம்மூத் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஏன் வெவ்வேறு நிறங்களில் இருக்கின்றன?

செவ்வாய், 26 ஜூலை, 2022

பெருவெளியில் 13 பில்லியன் ஆண்டு தொலைவில் உள்ள பால்வெளி மண்டலங்களின் பிறப்பிடம் இங்கே!! ‘முப்பத்து முக்கோடி தேவர்கள் எங்கே?’

வியாழன், 21 ஜூலை, 2022

நிலவில் காலடி எடுத்து வைத்த இணையற்ற நாள்(ஜூலை 21)

இந்நாள் : நிலவில் காலடி எடுத்து வைத்த இணையற்ற நாள்(ஜூலை 21)

நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்? இந் தக் கேள்விக்கு யாராயிருந் தாலும் உடனே பதில் சொல்லிவிடுவீர்கள், நீல் ஆம்ஸ்ட்ராங் என்று. நிலவில் முதன்முதலில் கால் வைத்திருக்க வேண் டியவர் யார் தெரியுமா? பல பேருக்கு தெரியாது. அவர், எட்வின் சி ஆல்ட் ரின். அவர்தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண் கலத்தின் பைலட். ஆல்ட் ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணி புரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ள வர். அதனால் அவர் பைலட்டாக நியமிக்கப் பட்டார். நீல் ஆம்ஸ்ட் ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலை பார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக் கப்பட்டார். அவர் கோ-பைலட். இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து பைலட் பர்ஸ்ட் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம். இடது காலை எடுத்து வைப்பதா? வலது காலை எடுத்து வைப்பதா? என்றல்ல. நிலவில் முதன் முதலில் கால் எடுத்து வைக்கிறோம். புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரி யாது. புதை மணலாக இருந்து உள்ளே இழுத்து விட்டால், எரி மணலாக இருந்து காலை சுட்டு விட்டால் தயக்கத்தில் மணிக்கணக்காக தாம திக்கவில்லை. சில நொடி கள்தான் தாமதித்திருப் பார். அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப் பட்டது. கோ பைலட் நெக்ஸ்ட். நீல் ஆம்ஸ்ட் ராங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்துவைத்தார்.

உலக வரலாறு, ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது. திறமை யும் தகுதியும் இருந்தும் கூட தயக்கத்தின் காரண மாக தாமதித்ததால் இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை.முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத் திருக்கும் என்பது மட்டு மல்ல. தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதா ரணம்.

இனி நிலவை பார்க் கும்போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்து விடுகிறது. நாம் எல்லோ ருமே மிகப்பெரும் சாத னைகளை படைக்கிற வல் லமை உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம், பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி.

பஸ் ஆல்ட்ரின் வாழ்க்கைக் குறிப்பு:

பஸ் ஆல்ட்ரின் (Buzz Aldrin (இயற்பெயர் எட் வின் யூஜின் ஆல்ட்ரின், Edwin Eugene Aldrin, Jr., பிறப்பு: ஜனவரி 20, 1930) என்பவர் அமெரிக்க விண் வெளி வீரரும் விமானியும் ஆவார். இவர் முதன் முதலாக மனிதரை சந்திர னில் ஏற்றிச் சென்ற அப் பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ரோங் உடன் பயணம் செய்து சந்திர னில் இறங்கிய இரண்டா வது மனிதர் என்ற பெரு மையைப் பெற்றார். விஞ்ஞானப் பட்டதாரி யான ஆல்ட்ரின் 1951'இல் அமெரிக்க வான்படையில் இணைந்தார். கொரியப் போரில் போர் விமானி யாகப் பங்கு ஆற்றினார். பின்னர் மசாசுசெட்ஸ் தொழிநுட்பக் கல்லூரி யில் வானியலில் முனை வர் பட்டம் பெற்றார். மீண்டும் அமெரிக்க வான் படையில் இணைந்து பணியாற்றினார். அக்டோ பர் 1963'இல் நாசாவினால் விண்வெளிப் பயிற்சியில் இணைந்தார். ஜெமினி 12 விண்கலத்தில் செல்வ தற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

ஜூலை 16, 1969'இல் அப்பல்லோ11 விண்கலத் தில் நீல் ஆம்ஸ்ட்ரோங் உடன் சந்திரனை நோக் கிய பயணத்தை ஆரம்பித் தார். சரியாக 02:56 UTC ஜூலை 21(இரவு 10:56 ணிஞிஜி, ஜூலை 20), 1969 இல், ஆம்ஸ்ட்ராங் சந்திர னில் கால் பதித்தார். ஆல்ட்ரின் அவரைப் பின்தொடர்ந்தார். பஸ்" (Buzz) என்ற பெயரிலேயே அவர் பிறப்பில் இருந்து அழைக்கப்பட்டு வந்தார். 1988'இல் இவர் தனது பெயரை "பஸ் ஆல்ட்ரின்" என அதிகாரபூர்வமாக மாற்றிக் கொண்டார்.

சனி, 2 ஜூலை, 2022

உலகின் மிகப் பெரிய தாவரம் கண்டுபிடிப்பு!


ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கடலடியில் முளைத்து செழிக்கும் கடற்புல் தாவரத்தை ஆராய்ந்து வந்தனர்.

தெற்கு ஆஸ்திரேலிய கடற்பகுதியில், கடலின் ஆழத்தில் பல சதுர கி.மீ வளர்ந்து நிற்கும் ஒரு வகை புல் புதரின் பல்வேறு பகுதிகளை மாதிரி எடுத்து, மரபணு சோதனை செய்தனர். அபோது தான் அந்த அரிய உண்மை தெரிந்தது.

ஷார்க் வளைகுடா பகுதி என்ற பகுதியில், 200 சதுர கி.மீ., அளவுக்கு கடற்புல் வெளியாக படர்ந்திருக்கும் அத்தனை புல்லுமே, ஒரே விதையிலிருந்து முளைத்தவை. இதனால் தான், உலகின் மிகப் பெரிய தாவரம் என்று விஞ்ஞானிகள் அதை அழைத்தனர். மேலும், இந்த கடற்புல் புதரின் வயது 4,500 ஆண்டுகள் என்பது ஆய்வில் தெரியவந்தது.

கல்லீரலின் வயது எப்போதும் மூன்று!


வேகமாக செல்களை புதுப்பித்துக் கொள்ளக் கூடியது கல்லீரல். இருந்தாலும், வயதானால், புதுப்பிக்கும் திறன் குறையும் என்றே மருத்துவர்கள் கருதினர்.

ஆனால், ஜெர்மனியில் நடந்த ஒரு ஆய்வின்படி, உங்கள் வயது இருபதோ, எண்பதோ எதுவானாலும், உங்கள் கல்லீரலின் வயது மூன்று தான் என்று தெரியவந்துள்ளது!ஜெர்மனியின் டிரெஸ்டனிலுள்ள டெக்னிஷ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், புதிய வழியில் இந்த விடையை கண்டனர்.

கடந்த 1950களில் அணுகுண்டு சோதனைக்குப் பின், கதிரியக்க நச்சு பரவி, பலரது செல்களுக்குள் புகுந்தது. அப்போது வாழ்ந்து மறைந்தோரின் கல்லீரல்களை, விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர். ஆய்வில், 20 முதல் 80 வரை வயதுள்ள பலரது கல்லீரல் செல்களுக்கு வயது 3 ஆண்டுகளாக இருந்தன. இதனால், பெரும்பாலானோரின் கல்லீரல் செல்கள், மூன்று ஆண்டுகள் இருந்து, சிதைவதாக விஞ்ஞானிகள் கணக்கிட்டனர்.

மனித உடலில் உள்ள பலவித நச்சுக்களை பிரித்தெடுப்பது தான் கல்லீரலின் பணி. இருந்தாலும், அது வேகமாக செல்களைப் புதுப்பித்துக் கொள்வதன் மூலம், நச்சுக்களின் தாக்குதலை சமாளிக்கிறது. இந்தத் திறன் இருப்பதால் தான், மது, புகை, என்று உட்கொள்ளும் பலரால் உயிரோடு நடமாட முடிகிறது.

வியாழன், 26 மே, 2022

பூமிக்குத் தண்ணீர் வந்த வழி

 

நமது பால்வெளி மண்டலத்தில் உயிர் உள்ள ஒரே கோளாக நமது பூமி மட்டுமே திகழ்கிறதுஇந்த பூமிக் கோளின் சிறப்பே இதில் உயிர்கள் உள்ளது என்று பலர் கூறினாலும்,உண்மையில் எந்த கோளிலும் இல்லாத ஒரு சிறந்த பொருளை இந்த பூமி கொண்டுள்ளதுஅது தான் தண்ணீர்தண்ணீர் இருந்தால் மட்டுமே அந்தக் கோளில் உயிர்கள் உருவாகவும்உயிர் வாழவும் முடியும் என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.

இதனால் தான் நமது பூமி சிறப்பானதாக இருக்கிறதுசரிபூமி எப்படி உருவாகியது என்பது தெரியும்ஆனால்பூமியில் தண்ணீர் எப்படி உருவாகியது இது குறித்து பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் இரண்டு மட்டுமே உறுதியாகி உள்ளனஒன்று எரிநட்சத்திரங்களின் மோதல்மற்றொன்று பூமியில் இருந்த வாயுக்கள் வெப்பத்தால் இணைந்து நீராவியாகி பிறகுநீராக மாறியது

ஆனால் இரண்டு கருத்துக்களை அறிவியலாளர்கள் தெளிவுபடுத்தியிருந்தாலும்அது எதுவும் உறுதிசெய்ய முடியாமல் இருந்தது என்பதே உண்மைஆனால்நீண்ட நாட்களுக்குப் பிறகுஇப்போது அறிவியலாளர்கள் ஒரு முடிவிற்கு வந்துவிட்டனர்பூமியில் தண்ணீர் எப்படி உருவாகியது என்பதற்கான பின்னணியை தற்பொழுது வெளியிட்டுள்ளனர்.

நமது பால்வெளி மண்டலத்தில் இருக்கும் ஒட்டுமொத்த கோள்களில் பிரமிக்க வைக்கும் கோளாக இதுவரை பூமி திகழ்ந்துவருகிறதுநமது பூமி நீரின் அளவு காரணமாகத் தனித்து நிற்கிறதுபூமி பெரும்பாலும் “தி ப்ளூ பிளானட்” என்று இதனால் தான் குறிப்பிடப்படுகிறதுபூமியில் நீர் உருவாகியதற்குச் சூரியன் முக்கிய காரணமாக இருந்துள்ளதுபூமியின் மேற்பரப்பில் சுமார் 70 சதவீதம் நீரால் ஆனது என்பதை நாம் பள்ளிக்கூடப் பாடங்களில் இருந்தே படித்து வருகிறோம்இந்த 70 சதவீத தண்ணீர் பூமியில் உருவாக முதல் காரணமாகக் கூறப்படுவது கார்பனேசியஸ் அல்லது வெறுமனே “சி-வகை சிறுகோள்கள்” என்று அழைக்கப்படும் சிறுகோள்களின் தாக்குதல் காரணமாக உருவாகியிருக்கலாம் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சிறுகோள் குழுவிலிருந்து தான் பூமிக்கு நீர் வந்திருக்க வாய்ப்புள்ளதாக முன்னர் இருந்தே விஞ்ஞானிகள் சந்தேகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதுஇருப்பினும்இது மட்டும் காரணமாக இருக்க முடியாது என்பதை உணர்ந்த அறிவியலாளர்கள்  தொடர்ந்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டுபூமியில் தண்ணீர் எப்படி உருவாகியது என்பதை நிரூபிக்க முயன்று வந்தனர்இறுதியாக,  நீர் குறித்த முடிவிற்கு வந்துள்ளனர்.

பூமியின் நீர் டியூட்டீரியத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும்இது “சி” டைப் சிறுகோள் தாக்குதல் காரணமாக - பூமியில் இருக்கும் நீரின் ஒரே ஆதாரமாக மாறியிருக்க வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்அடிப்படையில் இவை ஹைட்ரஜனின் கனமான பதிப்பாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.பூமியில் நீரை உருவாக்குவதில் நமது சூரியன் முக்கிய பங்காற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுகளால் விஞ்ஞானிகளுக்குச் சாதமான பதில் கிடைத்துள்ளது.

சூரியக் காற்றுகள் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் அயனிகளால் சார்ஜ் செய்யப்படுகின்றனஅவை சிறுகோள்கள் அல்லது சிறுகோள் தூசியுடன் தொடர்பு கொண்டால்காற்றில் உள்ள ஹைட்ரஜன் அயனிகள் சிறுகோளில் உள்ள ஆக்ஸிஜன் அணுக்களுடன் தொடர்புகொண்டு பூமியில் மூலக்கூறை உருவாக்கி இருக்கும் என்பதை இது குறிக்கிறதுபூமியின் பரந்த நீர்நிலைகளில் சூரியனின் பங்குக்கான முதல் சான்று ஜப்பானிய விண்வெளி ஏஜென்சியின் ஹயபுசா விண்வெளி ஆய்வு மூலம் 2010 இல் பூமிக்கு வாங்கப்பட்ட இடோகாவா என்ற சிறுகோள் மாதிரிகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதுஇது பூமியில் எப்படி நீர் உருவாகியது என்ற ஆராய்ச்சிக்கு முக்கிய பங்கை வழங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேச்சர் வானியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஒரு ஆய்வறிக்கையில்,

விஞ்ஞானிகள் பூமியில் தண்ணீருக்குப் பங்களிப்பவைகளில் முக்கிய காரணிகளில் ஒன்றாகச் சூரியனை உறுதிப்படுத்தியுள்ளனர் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளதுசூரியக் காற்றிலிருந்து வரும் ஹைட்ரஜனும் சிறுகோள்களில் இருந்து வெளியான டியூட்டீரியமும் இணைந்து தான் பூமியில் இன்று நாம் உயிர் வாழ முக்கிய காரணமாக அமைந்துள்ள நீரை உருவாக்க முக்கிய முதுகெலும்பாகச் செயல்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெள்ளி, 20 மே, 2022

நிலவு மண்ணில் தாவரம் வளர்வது வியப்பானதா!

         • Viduthalai


நாம் இருக்கும் இந்த புவியில் உயிரினங்களும், தாவர இனங்களும் செழித்து பெருகி இருக்க இயற்கை சூழ்நிலையே காரணமாகும். 

இதில் முதன்மையாக தாவர இனங்கள் வளர்வதற்கு அடிப்படையாக மண் தேவைப்படுகிறது.

புவியில் 118 வகையான தனிமங்களும் மற்றும் அதனால் உண்டான கலவைகளும், சேர்மங்களும் உள்ளன. அதோடு மட்டுமல்லாமல் உயிரினங்களா லும், தாவரங்களாலும் உண்டான கரிம சேர்மங்களும் (அமினோ அமிலங்கள்) உள்ளன. இவற்றிற்கு பொது வான அறிவியல் பெயரும் இடப்பட்டுள்ளன.

இவற்றில் நம் புவியில் உள்ள மண்ணும் ஒரு தனிமம் தான். 

தாவரங்கள் வளர்வதற்கு மண் ஏதுவாக  இருக்கிறது. 

நிலவின் மண்ணை எடுத்து அதில் தாவரங்களை 'நாசா' அறிவியலாளர்கள் வளர்த்து உள்ளதாக ஒரு செய்தி வந்துள்ளது.

உண்மையில் தாவரங்கள் வளர மண் தேவையா?

தாவரங்கள் வளர மண் தேவையில்லை என்பதே உண்மையாகும்.

தாவரங்கள் வளர ஊட்டச்சத்தும் நீரும், காற்றும் சூரிய ஒளியும் மட்டுமே இருந்தாலே போதும். மண் தேவையில்லை.

புவி மண்ணில் மேற்கண்ட அனைத்தும் கிடைப்பதால் தாவரங்கள் செழித்து வளர்கின்றன.

மண்ணில்லா வேளாண்மை (ஹைட்ரோபோனிக்) முறை என்றே ஒரு வேளாண்மை முறை உள்ளது. 

இதில் மண்ணை பயன்படுத்துவதில்லை, பெரும் பான்மையாக நீர் தான் பயன்படுகிறது.

அப்படி இருக்கும்போது நிலவில் இருந்து எடுத்துக்கொண்டு வந்த 'ரெகோலித்' என்ற ஊட்டச் சத்து இல்லாததாக சொல்லக்கூடும் மண்ணில், தாவரத்தை வளர்ப்பதில் வியப்பொன்றுமில்லை.

நிலவில் இருந்து எடுத்துக் கொண்டு வந்த மண்ணில் ஊட்டச்சத்தும் நீரும் விட்டுதான் நாசா அறிவியலாளர்கள்  'அரபிடோப்சிஸ் தலியானா' என்ற கடுகு வகை செடியை வளர்த்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் எந்த வகையான வியப்புக் குரிய செய்தியும் இருப்பதாக தெரியவில்லை! மண் ஒரு பிடிமானப் பொருள் அவ்வளவுதான்! தாவரங்கள் வளர மண் தேவையில்லை என்பதே உண்மை!

-செ.ர.பார்த்தசாரதி, சென்னை

கொசுக்களுக்கு நிறம் பிரிக்கத் தெரியுமா?


மனித வாடையை முகர்ந்துவிட்டால்கொசுக்கள் அருகே வந்து கடிக்கத் தோதான இடம் பார்க்கும்இது அறிவியல்பூர்வமான உண்மைமனித மூச்சில் உள்ள கார்பன் - டை - ஆக்சைடு வாடைதான் கொசுக்களுக்கு அழைப்பிதழ்ஆனால்தற்போது வாசிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூடுதல் தகவலையும் கண்டறிந்துள்ளனர்.

அதாவதுமனித மூச்சிலுள்ள கார்பன் - டை - ஆக்சைடின் வாடையை கண்டுகொண்ட பிறகுஅவை சுற்றிலும் நோட்டம் பார்க்கின்றனஅப்போது சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் ஏதாவது தட்டுப்படுகிறதா என்பதை தேடுகின்றனஅப்படி தட்டுப்பட்டதும்அதை நெருங்கி தங்கள் ரத்தப் பசியை தீர்க்க முயல்கின்றன.ஆய்வகங்களில் பல நிறங்களில் பொருட்களை வைத்தபோதும்கொசுக்கள் இந்த இரு நிறமுள்ள பொருட்களையே நாடுவதை ஆய்வாளர்கள் கவனித்தனர்.

இது ஏன் என்று ஆராய்ந்தபோதுமனிதர்கள் எந்த நிறத் தோலை உடையவர்களாக இருந்தாலும்அவர்களது தோலிலிருந்து சிவப்பு அல்லது ஆரஞ்சு நிற ஒளி அலைகள் பிரதிபலிக்கின்றனமுதலில் கார்பன் - டை - ஆக்சைடு வாடை அந்த இடத்திலிருந்து வரவேண்டும்.

அடுத்து அந்த இடம் சிவப்பு அல்லது ஆரஞ்சு வண்ணத்தில் இருக்க வேண்டும்அப்படி இருந்தால்கொசுக்களுக்கு சாப்பாட்டு மணி அடிக்கப்படுவதாகவே பொருள்.

மற்ற பூச்சிகளுக்கு இதேபோல நிறப் பாகுபாடு பற்றிய அறிவு உண்டா எனவிஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

வியாழன், 19 மே, 2022

உயிரை எடுக்கக் கூடிய சயனைடே பூமியில் உயிர்கள் உருவாக உதவியது: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

 

லண்டன்பிப். 17- புதிய ஆராய்ச்சி யில் ,  கொடிய சயனைடு  கலவைஉண்மையில்பூமியில் உயிர்கள் உருவாக உதவியது என்று கண்டறியப்பட்டு உள்ளது.

விஞ்ஞானிகள் சயனை டைப் பயன்படுத்தி ஓர் இரசா யன எதிர்வினையை உருவாக்கி யுள்ளனர்,சயனைடு 400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் கரிம உயிர்களை உருவாக்க உதவியது என கண்டறிந்து உள்ளனர்.

சயனைடு என்பது கார்பன் மற்றும் நைட்ரஜன் அணுக் களால் உருவானதுஇதன் அறிவியல் பெயர் சிஎச் (சிபிஇதனை உட்கொள்ளும் நபர் முதலில் தலைவலிஎரிச்சல்இதய துடிப்பின் வேகம் அதி கரிப்புவாந்தி முதலியவற்றை சந்திக்கநேரிடும்பின்னர் குறைந்த இரத்த அழுத்தம்மெதுவான இதய துடிப்புமாரடைப்பு  ஏற்பட்டு உயிரி ழக்க நேரிடும்.

இதனை உட்கொண்ட நபரை காப்பற்ற இயலாதுஒரு வேளை காப்பாற்றினாலும் வாழ்நாள் முழுவதும் நரம்பு சம்பந்தபட்ட நோய்களால் அவதிப் பட நேரிடும்.

இதற்கு காரணம் அதில் கலந் துள்ள ஹைட்ரஜன் சயனைடு வாயு மற்றும் ஹைட்ரஜன் உப்புகள்.

இந்த ஆபத்தான வாயுக்கள் சயனைடு குப்பியில் மட்டுமில் லால் எரிகின்ற வீடுமெட்டல் புகைகளில் இருந்தும் வருகின் றது

சயனைடு எனபது பல வடிவங்களில் இருக்கக்கூடிய ஒரு கொடிய இரசாயனம்இர சாயனம் உயிரை போக்கக் கூடி யதாக இருந்தாலும் சயனைடு  உயிருக்கு  தேவையான மூலக் கூறுகளை உருவாக்குவதற்கு ஓர் அத்தியாவசிய கலவை  என விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.

மேலும்வேற்றுக் கோள் களில் அதற்கான அறிகுறிக ளைத் தேடுவதுபிரபஞ்சத்தில் வேறு இடங்களில் உள்ள உயிர் களைக் கண்டறியவும் உதவும் என்று ஸ்க்ரிப்ஸ் ஆராய்ச்சியின் வேதியியலாளர்கள் கண்டறிந் துள்ளனர்.

நைட்ரஜன் அணுவுடன் பிணைக்கப்பட்ட கார்பன் அணுவைக் கொண்ட கலவைகார்பன் டை ஆக்சைடில் இருந்து கார்பன் அடிப்படையிலான சேர்மங்களை உரு வாக்கும் பூமியில் சில முதல் வளர்சிதை மாற்ற எதிர்வினை களை ஏற்படுத்தியிருக்கலாம் என்று குழு கண்டுபிடித்தது.

வளர்சிதை மாற்ற எதிர் வினைகள் என்பன உணவில் இருந்து ஆற்றலை உருவாக்கும் எதிர்வினைகள் மட்டுமின்றி உயிரைத் தக்கவைக்கவும் அவ சியமானதாகும்.

இதுகுறித்து கூறிய ஆராய்ச் சியாளர்கள் 'சயனைடு பூமியில் உயிர்களின் தோற்றத்தில் முக்கிய பங்கு வகித்திருக்கலாம்மேலும் வேற்றுக் கோள் வாசி களை கண்டறிய நமக்கு  உதவ லாம்என்று கூறி உள்ளனர்.

ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சியின் வேதியியல் இணைப் பேராசிரி யரும்ஆய்வின் முதன்மை ஆசி ரியருமான டாக்டர் ராமநாரா யணன் கிருஷ்ணமூர்த்தி கூறிய தாவது:-

பூமியின் ஆரம்பத்திலோ அல்லது பிற கோள்களிலோ - நாம் உயிர் வாழ்வின் அறிகுறி களைத் தேடும்போது - நாம் அறிந்த உயிர் வேதியியலின் அடிப்படையில் தேடுகிறோம்.

இதே வளர்சிதை மாற்ற எதிர்வினைகள் சயனைடால் நிகழ்ந்து இருக்கலாம் என்பது வாழ்க்கை மிகவும் வித்தியாச மாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது என கூறினார்.