சனி, 2 ஜூலை, 2022

உலகின் மிகப் பெரிய தாவரம் கண்டுபிடிப்பு!


ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கடலடியில் முளைத்து செழிக்கும் கடற்புல் தாவரத்தை ஆராய்ந்து வந்தனர்.

தெற்கு ஆஸ்திரேலிய கடற்பகுதியில், கடலின் ஆழத்தில் பல சதுர கி.மீ வளர்ந்து நிற்கும் ஒரு வகை புல் புதரின் பல்வேறு பகுதிகளை மாதிரி எடுத்து, மரபணு சோதனை செய்தனர். அபோது தான் அந்த அரிய உண்மை தெரிந்தது.

ஷார்க் வளைகுடா பகுதி என்ற பகுதியில், 200 சதுர கி.மீ., அளவுக்கு கடற்புல் வெளியாக படர்ந்திருக்கும் அத்தனை புல்லுமே, ஒரே விதையிலிருந்து முளைத்தவை. இதனால் தான், உலகின் மிகப் பெரிய தாவரம் என்று விஞ்ஞானிகள் அதை அழைத்தனர். மேலும், இந்த கடற்புல் புதரின் வயது 4,500 ஆண்டுகள் என்பது ஆய்வில் தெரியவந்தது.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக