ஞாயிறு, 26 மே, 2024

ஞாயிறின் முதல் ஒளியை படம் பிடித்த ஜேம்ஸ் வெப்

விடுதலை ஞாயிறு மலர்
Published November 25, 2023

நமது சூரியன் உருவாகி 470 கோடி ஆண்டுகள் ஆகிவிட்டது. சூரியன் உருவாக்கத்தின் போது வெளிப்பட்ட ஒளிக் கற்றையை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்துள்ளது. இதன் மூலம் நாம் நமது சூரியனின் குழந்தைப் பருவத்தின் போது வெளிப்பட்ட ஒளிக்கற்றையைக் காணும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

ஒளிப்படக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட ஒளிப்படங்களை பத்திரப்படுத்தி அது எடுக்கப்பட்ட காலத்தில் இருந்த மக்களை  200 ஆண்டுகளுக்குப் ஒளிப்படமாக பார்க்கிறோம் அதாவது அந்தப் படங்களைப் பத்திரப்படுத்தி நமது பார்வைக்கு கொண்டு வந்துள்ளார்கள்.

நமது சூரியனின் குழந்தைப் பருவத்தைப் பார்க்கமுடியுமா? என்ற கேள்விக்கு ஜேம்ஸ் வெப் விடை மட்டும் கூறவில்லை. நமக்கு காண்பித்தும் உள்ளது. 

சூரியனை ஒத்த வேறொரு விண்மீனின் பிறப்பைக் கண்கூடாகப் பார்ப்பதன் மூலம், நமது சூரியனின் பிறப்பு குறித்து நாம் புரிந்துகொள்ள முடியும். அதையே இப்போது ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கி செய்துள்ளது.

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (JWST) மூலம் தற்போது கிடைத்துள்ள இந்த அற்புதமான, புகழ்பெற்ற புதிய படத் திலிருந்து உங்களுக்கு ஒரு சான்றும் 3 கிடைக்கும். இப்படத்தின் மய்யத்தில், 50,000 ஆண்டுகள் பழைமையான பிபி212 என்று அழைக்கப்படும் இந்தத் தொடக்கநிலை ‘குழந்தை விண்மீன்’’ உள்ளது.

நம்முடைய சூரியனும் இதே வயதாக இருந்தபோது இந்தக் காட்சியில் தோன்றுவதைப் போலவேதான் இருந்திருக்கும்.

வாயு மற்றும் தூசியின் அடர்த்தியான, சுழலும் வட்டுக்குள் மறைந்திருப்பதால், புரோட்டோ ஸ்டார் நிலையில் இருந்தே பளபளப்பை நீங்கள் உண்மையில் பார்க்க முடியாது.

துருவ எதிர் திசைகளில் அதிவேகமாகப் பாயும் இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு வண்ணத்திலான வாயுக்கள் மற்றும் தூசியின் காட்சிகள் மட்டுமே உங்களுக்குக் கிடைக்கும்.

குழந்தை விண்மீனில் உள்ள வண்ணங்கள் எதைக் குறிக்கின்றன? HH212-வின் படம் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் நியர் இன்ஃப்ராரெட் கேமரா (NIRCam) மூலம் பதிவு செய்யப்பட்டது. வாயு மற்றும் தூசியின் அடர்த்தியான, வீழும் ஒளிக்கற்றை மூலம் அது மறைக்கப்பட்டிருப்பதால், HH212 என்ற புரோட்டோ ஸ்டாரை பார்க்க முடியாது. பார்வைக்குத் தெரியும் வகையில் சில முதிர்ந்த விண்மீன்கள் உள்ளன, ஆனால் பெரும் பாலான ஒளி புள்ளிகளாகத் தெரிபவை தொலைதூர விண்மீன் கூட்டங்களாகும்.

HH212 என்ற இந்த குழந்தை விண்மீன் ஓரையான் விண்மீன் மண்டலத்தில் அமைந் துள்ளது. இந்த விண்மீனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள தொலைவு சுமார் 1,300 ஒளி ஆண்டுகள் ஆகும்.

வியத்தகு வகையில் வெளியேறும் வாயுக்களின் ஆற்றல் தான் இந்த குழந்தை விண்மீன் அதன் செயல்முறைகளை ஒழுங்கு படுத்துவதற்கான வழிமுறையாகும். அதில் தெரியும் வண்ணங்களின் மூலமாக அந்த வாயுக்களை நாம் தெரிந்துகொள்ளலாம்.

“மய்யத்தில் உள்ள வாயுப் பந்து சுருக்கப் படுவதால், அது சுழல்கிறது. ஆனால் அது மிக வேகமாகச் சுழன்றால், அது தனியாகப் பிரிந்து பறந்துவிடும்.”இது வெளிநோக்கி அதிவேகமாகப் பாயும் வாயுக்கள் என்று தான் என்று நாங்கள் நினைக்கிறோம். அனைத்துப் பொருட்களும் சுருங்கும்போது, காந்தப்புலங்கள் ஒன்றாக இழுக்கப்படுகின்றன.

பின்னர் மய்ய வட்டு வழியாக வரும் சில பொருட்கள் காந்தப் புலங்களினால் ஈர்க்கப்பட்டு துருவங்கள் வழியாக வெளியே அதிவேகமாக வீசப்படுகின்றன. அதனால்தான் நாம் இந்த கட்டமைப்புகளை இருமுனை என்று அழைக்க முடிகிறது” என்று அய்ரோப்பிய விண்வெளி முகமையின் மூத்த அறிவியல் ஆலோசகர்  தெரிவித்தார்.

அமெரிக்கா, கனடா மற்றும் அய்ரோப்பிய கூட்டுத் தயாரிப்பான ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் துல்லியமாக வான் பொருட்களைப் படம்பிடிக்க உதவுகிறது.

இளஞ்சிவப்பு-சிவப்பு நிறம் மூலக்கூறு ஹைட்ரஜன் இருப்பதைக் காட்டுகிறது. இது இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றாக பிணைக்கப்பட்டுள்ளது (புரோட்டோ ஸ்டாரின் பெயரில் உள்ள “பிபி” போல). 2.12 மைக்ரான் அகச்சிவப்பு அலைநீளத்தில் (இது புரோட்டோ ஸ்டாரின் பெயரின் இரண்டாம் பகுதி) முக்கியமாகப் படம் பிடிக்கப்பட்ட இந்த வெப் படத்தில் அதிர்வலைகள் வெளியேறி, அவற்றை ஒளியேற்றி, பிரகாசமாக ஒளிரச் செய்கின்றன.

மேலே உள்ள படத்தில், இடது மற்றும் வலது புறம் உள்ள காட்சிகளை உன்னிப்பாகப் பார்த்து, அவை ஒவ்வொன்றிலும் பிரகாசத்தின் முடிச்சுகளைக் கண்டறியவும். அந்த அதிர்வுகளை எண்ணிப் பாருங்கள். வேகமான பொருள் அதற்கு சற்று முன்னால் மெதுவாகச் செல்லும் பொருளில் மோதியதால் ஏற்பட்ட அதிர்வுகள் தான் அவை.

இந்த கட்டமைப்புகள் குறிப்பிடத்தக்க வகையில் சமச்சீராக உள்ளன. வலதுபுறத்தில் மிகவும் குழப்பமான அதிர்வுகள் இருந்தாலும் அவை கூடுதலாக இருப்பதாகத் தோன்றுகிறது.

உண்மையில், மறுபுறம் ஒரு முழுமைப் படுத்தும் அதிர்வுகள் இருக்கலாம். இந்த வெப் படத்தின் பரந்த காட்சியில் நிச்சயமாக அதுகுறித்த பிங்க் நிற குறிப்புகள் உள்ளன. அந்தத் திசையில் விண்வெளியில் உள்ள வாயு மற்றும் தூசியின் அடர்த்தி மெல்லியதாக இருப்பதால், தூண்டுவதற்கு குறைவான பொருள் உள்ளது. அதனால் அதிர்ச்சியின் அமைப்பு மிகவும் பரவலானதாகத் தோன்றுகிறது.

வானியல் விஞ்ஞானிகள் HH212- ஐ 30 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகின்றனர். அது என்ன மாற்றங்களை எதிர்கொள்கிறது என்பதைப் பார்க்க அவ்வப்போது அதன் படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

HH211 என்ற விண்மீன் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மற்றொரு இளம் விண்மீனாகும்.

ஜேம்ஸ் வெப் சூப்பர் தொலைநோக்கியில் இருந்து நீங்கள் எதிர்பார்ப்பது போல, முன்பு இருந்ததை விட 10 மடங்கு கூர்மையான படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், விஞ்ஞானிகள் விண்மீன் உருவாக்கத்தை தூண்டும் செயல்முறைகளை ஆழமாக ஆராய இந்த படங்கள் உதவிகரமாக இருக்கும்.

அதிவேகமாக வெளியேறும் வாயு கட்டமைப்புகளில் உள்ள கூறுகள் காலப் போக்கில் எவ்வாறு மாறுகின்றன என்பதைப் பார்க்க, ஒரு முழு பட வரலாற்றையும் ஒன்றாக இணைத்துப் பார்ப்பது ஒரு நல்ல அம்சமாகும். மீண்டும் மீண்டும் கவனிப்பதன் மூலம், அந்த விண்பொருட்கள் நகரும் வேகத்தையும் நீங்கள் அளவிட முடியும். அது வினாடிக்கு 100 கி.மீ. மற்றும் அதற்கு மேல் இருக்கும்.

HH என்பது மூலக்கூறு ஹைட்ரஜனைக் குறிக்கிறது. அது ஒரு நேர்த்தியான பொருத்தமாகத் தான் இருக்கிறது. ஆனால் 1940கள் மற்றும் 50களில் இந்த வகைப் பொருளில் முன்னோடியாகப் பணியாற்றிய ஜார்ஜ் ஹெர்பிக் மற்றும் கில்லர்மோ ஹாரோ ஆகியோருக்குப் பிறகு இந்த பிபி என்பது உண்மையில் ஹெர்பிக்-ஹாரோவைக் குறிக்கிறது.

ஜேம்ஸ் வெப்பின் திறன்களைக் கண்டு அவர்கள் ஆச்சரியப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. வெப் அதன் 6.5 மீட்டர் நீளமுள்ள முதன்மைக் கண்ணாடியால் காட்சிப்படுத்தக் கூடிய படத்தின் கூர்மை மட்டுமல்ல, அதன் கருவிகள் இப்போது கண்டறியக் கூடிய வண்ணத்தின் ஆழமும் இந்த தொலைநோக்கியை மிகவும் சிறப்பான தாக்குகிறது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வானியல் தொடர்பான பல துறைகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கிறது.

“நாங்கள் கூறியது போல், இந்த விஷயங் களைப் பார்ப்பதற்கான முக்கிய அலைநீளம் – அதிர்வடைந்த மூலக்கூறு ஹைட்ரஜனைப் பார்ப்பதற்கு – 2.12 மைக்ரான் அல்லது நடுவில் காணக் கூடியதை விட தோராயமாக நான்கு மடங்கு அதிகம். ஆனால் முதல் முறையாக, இப்போது நம்மிடம் ஒரு நல்ல வண்ணப் படம் உள்ளது.

இந்தக் குறிப்பிட்ட பொருளை நீங்கள் தரை தொலைநோக்கியில் இருந்து பார்க்க முடியாது என்பதுடன், மற்ற அலைநீளங்களில் எங்களால் அதைப் பற்றி தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் அதிவேகமாக வெளியேறும் வாயுக்களில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை அறிய இது எங்களுக்கு உதவும்” என்று பேராசிரியர் மெக்காக்ரியன் கூறினார்.

ஜேம்ஸ் வெப் பல வானியல் துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ஹெர்பிக்-ஹாரோ பொருட்கள் குறித்த ஆய்வுகள் நிச்சயமாக பயனடைந்துள்ளன.

கீழே பாருங்கள், HH211 எனப்படும் HH212 தம்பியைப் பார்த்து நீங்கள் இன்னும் ஆச்சரியப்படுவீர்கள். பெர்சியஸ் விண்மீன் தொகுப்பில் அமைந்துள்ள இந்த விண்பொருள் இன்னும் குழந்தை நிலையிலேயே உள்ளது. அதாவது சிலஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தான் அது தோன்றியிருக்க வேண்டும். நம் சூரியன் இப்படித் தான் உருவாகி தற்போதைய நிலையை அடைந்துள்ளது என்பதை நாம் நன்றாகப் புரிந்துகொள்ளலாம்.

ஞாயிறு, 12 மே, 2024

பூமியின் நிறம் நீலம் என்று கூறிய முதல் மனிதர்



விடுதலை ஞாயிறு மலர்
Published May 13, 2023

விண்வெளியில் முதலில் பறந்தவர் ரஷ்யாவைச் சேர்ந்த யூரி ககாரின். 1961ஆம் ஆண்டில் வாஸ்டாக் 1 என்ற விண்கலம் மூலம் உலகைச் சுற்றி வந்து அவர் சாதனை படைத்தார். அவர் விண்வெளி சென்ற ஏப்ரல் 12ஆம் தேதி, மனிதன் விண்வெளியில் பறந்த பன்னாட்டு நாளாக இப்போது கொண்டாடப்படுகிறது.

அவர் விண்வெளிக்குச் செல்வதற்கு முன்னதாக ஒரு நாய், ஒரு பூனை போன்றவை அனுப்பப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டிருந்தன. அவர் பங்கேற்றது மிகவும் ஆபத்தான பரிசோதனை. ஆனால் அது வெற்றிகரமாக நிகழ்ந்தது. 20ஆம் நூற்றாண்டின் வரலாற்றில் அவர் விண்வெளியில் பறந்தது மிகப் பெரிய திருப்புமுனை.

விண்ணில் பறந்த முதல் மனிதனான அவர், அப்படிப் பறந்தபோது, பதற்றமாக இருந்த நேரத்தில் தனது “வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி சிறகடித்தது” போல இருந்ததாகக் கூறினார். அப்போது அவர் கூறிய அந்தப் பிரபலமான உவமைதான், இப்போது வரை பலராலும் எடுத்தாளப்பட்டு வருகிறது. ‘பூமி ஒரு நீல நிறக் கோள்’ என்பதை முதலில் சொன்னவரும் அவர்தான். இதற்குக் காரணம், அவரால் தானே முதன்முதலில் புவியை வெளியிலிருந்து பார்க்க முடிந்தது.

20ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வந்த ரஷ்யா, முதலாளித்துவ ஆட்சி நடந்து வந்த அமெரிக்காவுக்கு இடையே விண்வெளி ஆராய்ச்சியில் மிகப் பெரிய போட்டி நிலவியது. (ககாரின் வானில் வெற்றிகரமாகப் பறந்ததற்குப் போட்டியாகத்தான் நீல் ஆம்ஸ்ட்ராங்கை அமெரிக்கா நிலவுக்கு அனுப்பிவைத்து, பரிசோதனை நடத்தியது). அந்தப் பின்னணியில் சோவியத் விண்வெளித் திட்டத்தின் கீழ் விண்வெளியில் பறப்பதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் யூரி ககாரின்.

இந்தத் திட்டத்துக்கு ககாரின் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணம், அவர் அடக்கத்துடன் இருந்ததும், சிக்கலான கணிதக் கோட்பாடுகளைக் கையாளத் தெரிந்திருந்ததும், சட்டென்று எதிர்வினை ஆற்றியதும், இதற்கெல்லாம் மேலாக உடலை உறுதியுடன் வைத்திருந்ததும்தான்.

அவரைச் சுமந்து சென்ற வாஸ்டாக் 1 விண்கலம் வெறும் 108 நிமிடங்களில் உலகை வலம் வந்தது. அப்படியானால் அது எவ்வளவு வேகத்தில் சுற்றியிருக்கும்? அப்படிச் சுற்றியிருந்தால், வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி என்ன, ஹெலிகாப்டரே பறந்திருக்கும்! ககாரின் அதை அழகாகச் சொல்லியிருக்கிறார் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம்.

விண்வெளியில் பறந்துவிட்டுத் திரும்பிய பிறகு, உடல் எடையற்று இருந்ததுபோல உணர்ந்ததை, முக்கியமான வேறுபாடாக ககாரின் கூறியிருக்கிறார். “ஒரு நபர் அந்தரத்தில் கைவிடப்பட்டால் எப்படியிருக்குமோ, அப்படியிருந்தது,” என்று கூறியிருக்கிறார். அந்தரத்தில் உதிர்ந்து காற்றில் கீழே மிதந்து தரையிறங்கி வரும் ஒரு இலையைப் போல இருந்திருக்கும். இந்த அனுபவத்தை முதலில் பெற்ற மனிதர் அவரே.

வெற்றிகரமாக விண்வெளியில் பறந்த யூரி ககாரின், அதற்குப் பிறகு ஒரு நாயகனாகக் கொண்டாடப்பட்டார். உலகம் முழுவதும் உள்ள நாளிதழ்கள் அவரது கதையையும், அவர் பறந்த விதத்தையும் பற்றிக் கட்டுரைகளை வெளியிட்டன. ரஷ்யாவில் மதிப்புக்குரியதாக மதிக்கப்படும் கிரெம்ளின் மாளிகைக்கு ககாரின் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். ‘சோவியத் யூனியனின் ஹீரோ’ என்ற உயரிய பட்டத்தை அப்போதைய சோவியத் அதிபர் நிகிதா குருஷ்சேவ் அவருக்கு வழங்கினார்.

அதற்குப் பின், ககாரின் ஓர் உலக சுற்றுப்பயணமும் மேற்கொண்டார். இது அவருக்கு மேலும் புகழைத் தேடித் தந்தது. சில நாடுகள் அவரை கௌரவிக்கும் விதமாக அஞ்சல்தலைகள், அஞ்சல் உறைகள், நினைவுக் காசுகள் போன்றவற்றை வெளியிட்டுள்ளன.

ஆனால் விண்வெளியில் வெற்றிக்கொடி நாட்டிய ககாரினைப், பிற்காலத்தில் ஒரு விமானம் கைவிட்டுவிட்டது. 1968இல் மார்ச் 27இல் ராணுவ விமானம் ஒன்றை ஓட்டிச் சென்றபோது, விபத்தில் சிக்கி அவர் இறந்தார்.

2011 ஏப்ரல் 7ஆம் தேதி அய்.நாவின் 65ஆவது பொது அவை அமர்வு, ஏப்ரல் 12ஆம் தேதியை விண்வெளியில் மனிதன் பறந்ததற்கான பன்னாட்டு நாளாக அறிவித்தது. “நீடித்த வளர்ச்சியை எட்டுவதற்கு உதவும் வகையில் விண்வெளி அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியை எட்டுவதிலும், மக்கள், நாடுகளின் வளங்களை அதிகரிப்பதில் விண்வெளி அறிவியல் துறை அளித்துவரும் பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும், இந்த நாள் அனுசரிக்கப்படும் என்று தீர்மானத்தில் கூறப்பட்டிருக்கிறது.

“அமைதிக்கான காரணங்க ளுக்காகவே விண்வெளி ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும்,” என்பது ககாரினின் ஆசை. இன்றைக்கு விண்வெளி ஆராய்ச்சியை நடத்தி வரும் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கூட்டாக பணியாற்றி வருகிறார்கள்.

ககாரின் விண்ணில் பறந்த பிறகுதான் விண்வெளியில் நடப்பது, விண்வெளி நிலையம் அமைப்பது போன்ற மற்ற முன்னேற்றங்கள் ஏற்பட்டன. இன்றைக்கு ‘விண்வெளிக்குப் பறப்பது’ என்பது ஆச்சரியத்துக்கு உரிய ஒரு விஷயமாக இல்லை. இப்போது விண்வெளி சுற்றுலா பற்றியும் பேசப்பட்டு வருகிறது.

1961 ஏப்ரல் 12ஆம் தேதி வெறும் 108 நிமிடங்களில் (2 மணி நேரத்துக்கு 12 நிமிடங்கள் குறைவு) உலகம் தலைகீழாக மாறியது. அது யூரி ககாரினுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்துக்கும்தான்.