ஞாயிறு, 28 ஜூலை, 2019

பால்வெளி மண்டலத்தில் பூமிக்கு அருகில் 28 புதிய வகை விண்மீன்கள் : இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

உத்தரகாண்ட், ஜூலை 28 பால்வெளி அண்டத்தில் 28 புதிய வகை விண் மீன்களை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவற்றின் ஒளிரும் தன்மை, சீராக இல்லாமல் மாறிக்கொண்டே இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள ஆரியபட்டா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஏரீஸ்) இயக்குநர் வஹாப் உத்தீன் கூறுகையில், பால்வெளி விண்மீன் திரள் மண்டலத்தில் பூமிக்கு அருகில் அமைந்துள்ள என்ஜிசி 4147 என்ற விண்மீன் தொகுதியில், புதிய வகையிலான 28 விண்மீன்களைக் கண்டு பிடித்துள்ளோம்.
அவற்றின் ஒளிரும் தன்மையானது, நிலையாக இல்லாமல் மாறிக் கொண்டே இருக்கிறது. இது அரிய நிகழ்வாகும் என்றார்.
புதிய வகை விண்மீன்கள் தொடர் பாக, ஏரீஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானி அனில் பாண்டே கூறியதாவது:
உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள நைனிடால் மாவட்டத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட தொலைநோக்கி மூலம் இந்த ஆய்வை மேற்கொண்டோம். என்ஜிசி 4147 விண்மீன் தொகுதியில், முதல் முறை யாக மாறுபட்டு ஒளிரும் வகையிலான விண்மீன்கள் கண்டறியப்பட்டுள்ளன. விண்மீன்களின் ஒளிரும் தன்மை மாறுபட்டுக் காணப்படுவதற்கு, அந்த விண்மீன்களின் சீரான சுருங்கி விரியும் தன்மையோ அல்லது மற்ற வானியல் பொருள்களின் நிழல் இவற்றின் மீது விழுவதோ காரணமாக இருக்கலாம்.
இந்தக் கண்டுபிடிப்பானது, விண் மீன் தொகுதிகள் உருவான விதம் குறித்தும், அவற்றிலுள்ள பொருள்கள் குறித்துமான ஆராய்ச்சிகளுக்குப் புதிய தகவல்களை அளிக்கும் என்று நம்புகிறோம். இந்த ஆராய்ச்சியின்போது, என்ஜிசி 4147 விண்மீன் தொகுதியின் உள்கட்டமைப்பு குறித் தும் அறிந்துகொண்டோம்.
என்ஜிசி 4147 விண்மீன் தொகுதி யைக்  கடந்த 1784-ஆம் ஆண்டு கண் டறிந்த பிரிட்டன் வானவியலாளர் வில்லியம் ஹெர்ஷெல், இந்த விண் மீன் தொகுதியானது அதிக அளவி லான ஒளிரும் தன்மையைக் கொண் டுள்ளதாகத் தெரிவித்தார்.
அதிகப் படியான ஈர்ப்புவிசை காரணமாக இந்த விண்மீன் தொகுதி கோள வடிவில் காணப்படுகிறது என்றார் அனில் பாண்டே.
-விடுதலை நாளேடு, 28.7.19

வியாழன், 4 ஜூலை, 2019

செவ்வாய் கிரகத்தில் வாழும் திறனுள்ள பூமியின் ஆதிகால உயிரிகள்

சில தாவரங்கள் மிக கடுமையான சூழலிலும் வாழக் கூடியவை. ஆக்சிஜனே இல்லாத நிலையிலோ அல்லது மிகவும் அதிக வெப்ப நிலையிலோ உயிர்வாழக் கூடியவை யாக அவை உள்ளன.

தாவரங்களின் தாக்குபிடிக்கும் தன்மையானது, பருவநிலை மாற்ற சூழ்நிலை நமது உணவு உற்பத்தியை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பது பற்றியும், மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பயிர்கள் எப்படி தகவமைப்பு செய்து கொள்ளும் என்பது பற்றிய ஆராய்ச்சியில் விஞ்ஞானிகளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் ஒன்றைவிட மற்றொரு தாவரம் அதிக தாக்குபிடிக்கும் தன்மை கொண்டது என எப்படி அமைகிறது?

இதற்கான பதிலை கண்டறிவதற்கு தாவரவியலாளரும் பிபிசி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ஜேம்ஸ் வோங் முயற்சி மேற்கொண்டார். அப்போது நமது பூமியின் கடினமான தாவரங்களின் வினோதமான மற்றும் ஆச்சர்யத்துக்குரிய உண்மைகளை அவர் கண்டறிந்தார்.

செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கு ஏற்ற கடினமான இரண்டு தாவர வகைகளை ஜெர்மனி விஞ்ஞானிகள் அடையாளம் கண்டனர்.

சுவிட்சர்லாந்து மற்றும் அண்டார்டி காவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட கற்பாசிகள் மற்றும் நீலப்பசும் பேக்டீரியா  என்ற இரண்டு உயிரிகளாக இருப்பதால் இதில் ஆச்சர்யம் ஏதும்இல்லை.

இந்த ஆதிகால தாவரங்கள் அதில் உயிர்வாழ முடியுமா என பரிசோதனை செய்வதற்காக - கடுமையான சூரிய வெப்பம், வெப்ப நிலையில் ஏற்ற இறக்கங்கள், அதிக அளவிலான உலர்ந்த நிலை மற்றும் குறைவான காற்றழுத்தம் - போன்ற செவ்வாய் கிரகத்தின் சூழ்நிலைகளை ஆராய்ச்சியா ளர்கள் உருவாக்கினர்.

 

என்ன முடிவு கிடைத்தது? இந்தத் தாவர இனங்கள் உயிர் பிழைத்திருந்தது மட்டுமின்றி, ஒளிச் சேர்க்கை செய்தல் மற்றும் வழக்கமான தாவர செயல்பாடுகள் தொடர்ந்து நடக் கின்றன என்பதைக் கண்டறிந்தார்கள்.

- விடுதலை நாளேடு 4. 7 .19