நிலவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிலவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 21 ஜூலை, 2022

நிலவில் காலடி எடுத்து வைத்த இணையற்ற நாள்(ஜூலை 21)

இந்நாள் : நிலவில் காலடி எடுத்து வைத்த இணையற்ற நாள்(ஜூலை 21)

நிலவில் முதன்முதலில் கால் வைத்தவர் யார்? இந் தக் கேள்விக்கு யாராயிருந் தாலும் உடனே பதில் சொல்லிவிடுவீர்கள், நீல் ஆம்ஸ்ட்ராங் என்று. நிலவில் முதன்முதலில் கால் வைத்திருக்க வேண் டியவர் யார் தெரியுமா? பல பேருக்கு தெரியாது. அவர், எட்வின் சி ஆல்ட் ரின். அவர்தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண் கலத்தின் பைலட். ஆல்ட் ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணி புரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ள வர். அதனால் அவர் பைலட்டாக நியமிக்கப் பட்டார். நீல் ஆம்ஸ்ட் ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலை பார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக் கப்பட்டார். அவர் கோ-பைலட். இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து பைலட் பர்ஸ்ட் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம். இடது காலை எடுத்து வைப்பதா? வலது காலை எடுத்து வைப்பதா? என்றல்ல. நிலவில் முதன் முதலில் கால் எடுத்து வைக்கிறோம். புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரி யாது. புதை மணலாக இருந்து உள்ளே இழுத்து விட்டால், எரி மணலாக இருந்து காலை சுட்டு விட்டால் தயக்கத்தில் மணிக்கணக்காக தாம திக்கவில்லை. சில நொடி கள்தான் தாமதித்திருப் பார். அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப் பட்டது. கோ பைலட் நெக்ஸ்ட். நீல் ஆம்ஸ்ட் ராங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்துவைத்தார்.

உலக வரலாறு, ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது. திறமை யும் தகுதியும் இருந்தும் கூட தயக்கத்தின் காரண மாக தாமதித்ததால் இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை.முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத் திருக்கும் என்பது மட்டு மல்ல. தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதா ரணம்.

இனி நிலவை பார்க் கும்போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்து விடுகிறது. நாம் எல்லோ ருமே மிகப்பெரும் சாத னைகளை படைக்கிற வல் லமை உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம், பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி.

பஸ் ஆல்ட்ரின் வாழ்க்கைக் குறிப்பு:

பஸ் ஆல்ட்ரின் (Buzz Aldrin (இயற்பெயர் எட் வின் யூஜின் ஆல்ட்ரின், Edwin Eugene Aldrin, Jr., பிறப்பு: ஜனவரி 20, 1930) என்பவர் அமெரிக்க விண் வெளி வீரரும் விமானியும் ஆவார். இவர் முதன் முதலாக மனிதரை சந்திர னில் ஏற்றிச் சென்ற அப் பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ரோங் உடன் பயணம் செய்து சந்திர னில் இறங்கிய இரண்டா வது மனிதர் என்ற பெரு மையைப் பெற்றார். விஞ்ஞானப் பட்டதாரி யான ஆல்ட்ரின் 1951'இல் அமெரிக்க வான்படையில் இணைந்தார். கொரியப் போரில் போர் விமானி யாகப் பங்கு ஆற்றினார். பின்னர் மசாசுசெட்ஸ் தொழிநுட்பக் கல்லூரி யில் வானியலில் முனை வர் பட்டம் பெற்றார். மீண்டும் அமெரிக்க வான் படையில் இணைந்து பணியாற்றினார். அக்டோ பர் 1963'இல் நாசாவினால் விண்வெளிப் பயிற்சியில் இணைந்தார். ஜெமினி 12 விண்கலத்தில் செல்வ தற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

ஜூலை 16, 1969'இல் அப்பல்லோ11 விண்கலத் தில் நீல் ஆம்ஸ்ட்ரோங் உடன் சந்திரனை நோக் கிய பயணத்தை ஆரம்பித் தார். சரியாக 02:56 UTC ஜூலை 21(இரவு 10:56 ணிஞிஜி, ஜூலை 20), 1969 இல், ஆம்ஸ்ட்ராங் சந்திர னில் கால் பதித்தார். ஆல்ட்ரின் அவரைப் பின்தொடர்ந்தார். பஸ்" (Buzz) என்ற பெயரிலேயே அவர் பிறப்பில் இருந்து அழைக்கப்பட்டு வந்தார். 1988'இல் இவர் தனது பெயரை "பஸ் ஆல்ட்ரின்" என அதிகாரபூர்வமாக மாற்றிக் கொண்டார்.

வெள்ளி, 20 மே, 2022

நிலவு மண்ணில் தாவரம் வளர்வது வியப்பானதா!

         • Viduthalai


நாம் இருக்கும் இந்த புவியில் உயிரினங்களும், தாவர இனங்களும் செழித்து பெருகி இருக்க இயற்கை சூழ்நிலையே காரணமாகும். 

இதில் முதன்மையாக தாவர இனங்கள் வளர்வதற்கு அடிப்படையாக மண் தேவைப்படுகிறது.

புவியில் 118 வகையான தனிமங்களும் மற்றும் அதனால் உண்டான கலவைகளும், சேர்மங்களும் உள்ளன. அதோடு மட்டுமல்லாமல் உயிரினங்களா லும், தாவரங்களாலும் உண்டான கரிம சேர்மங்களும் (அமினோ அமிலங்கள்) உள்ளன. இவற்றிற்கு பொது வான அறிவியல் பெயரும் இடப்பட்டுள்ளன.

இவற்றில் நம் புவியில் உள்ள மண்ணும் ஒரு தனிமம் தான். 

தாவரங்கள் வளர்வதற்கு மண் ஏதுவாக  இருக்கிறது. 

நிலவின் மண்ணை எடுத்து அதில் தாவரங்களை 'நாசா' அறிவியலாளர்கள் வளர்த்து உள்ளதாக ஒரு செய்தி வந்துள்ளது.

உண்மையில் தாவரங்கள் வளர மண் தேவையா?

தாவரங்கள் வளர மண் தேவையில்லை என்பதே உண்மையாகும்.

தாவரங்கள் வளர ஊட்டச்சத்தும் நீரும், காற்றும் சூரிய ஒளியும் மட்டுமே இருந்தாலே போதும். மண் தேவையில்லை.

புவி மண்ணில் மேற்கண்ட அனைத்தும் கிடைப்பதால் தாவரங்கள் செழித்து வளர்கின்றன.

மண்ணில்லா வேளாண்மை (ஹைட்ரோபோனிக்) முறை என்றே ஒரு வேளாண்மை முறை உள்ளது. 

இதில் மண்ணை பயன்படுத்துவதில்லை, பெரும் பான்மையாக நீர் தான் பயன்படுகிறது.

அப்படி இருக்கும்போது நிலவில் இருந்து எடுத்துக்கொண்டு வந்த 'ரெகோலித்' என்ற ஊட்டச் சத்து இல்லாததாக சொல்லக்கூடும் மண்ணில், தாவரத்தை வளர்ப்பதில் வியப்பொன்றுமில்லை.

நிலவில் இருந்து எடுத்துக் கொண்டு வந்த மண்ணில் ஊட்டச்சத்தும் நீரும் விட்டுதான் நாசா அறிவியலாளர்கள்  'அரபிடோப்சிஸ் தலியானா' என்ற கடுகு வகை செடியை வளர்த்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் எந்த வகையான வியப்புக் குரிய செய்தியும் இருப்பதாக தெரியவில்லை! மண் ஒரு பிடிமானப் பொருள் அவ்வளவுதான்! தாவரங்கள் வளர மண் தேவையில்லை என்பதே உண்மை!

-செ.ர.பார்த்தசாரதி, சென்னை

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

நிலவில் நீர் மூலக்கூறுகளை கண்டுபிடித்த சந்திரயான்-2


புதுடில்லி, ஆக.15 நிலவில் நீர் மூலக்கூறுகள் இடம்பெற்றி ருப்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மய்யத்தின் (இஸ் ரோ) சந்திரயான்-2 விண்கலம் அனுப்பிய தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இஸ்ரோ முன்னாள் தலைவர் ஏ. எஸ். கிரண்குமார் இணைந்து எழுதியிருக்கும் ஆய்வுக் கட்டுரையில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திர யான்-2 விண்கலத்தை கடந்த 2019 ஜூலை 22ஆம் தேதி ஆந்திர மாநிலம் சிறீஅரி கோட்டாவில் இருந்து இஸ்ரோ அனுப்பியது. பல்வேறு கட்ட பயணத்துக்கு பிறகு, சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக நிலவை நெருங்கியது. ஆனால், செப்.7ஆம் தேதி சந்திரயான் விண்கலத்தின் லேண்டர் கலன் திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்கவில்லை. திடீர் தொழில் நுட்பக் கோளாறால் லேண்டர் வேகமாக சென்று நிலவின் தரையில் மோதி தகவல் தொடர்பிலிருந்து விலகியது

எனினும், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட் டர்' நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப் பட்டது. இந்த ஆர்பிட்டர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நிலவை சுற்றிவந்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு, பூமிக்கு தகவல்களை அனுப்பி வருகிறது. தற்போது இந்த தரவுகள் மூலம் நிலவின் பரப்பில் நீர் மூலக் கூறுகள் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. இதுதொடர்பாக நடப்பு அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளுக்கான வலைதளத் தில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையில் கூறியிருப்பதாவது: ஆர்பிட்டரில் இடம்பெற்றிருக் கும் அய்அய்ஆர்எஸ் கருவி எடுத்து அனுப்பியிருக்கும் ஆரம்ப கட்ட புகைப்பட தரவுகளில், இயற்பியல் அடிப்படையிலான வெப்ப திருத்த ஆய்வுகள் மேற்கொண்ட பிறகு, நிலவின் பரப்பில் 29என் மற்றும் 62 என் இடையேயான அட்சரேகை பகுதியில் ஓஎச் (ஹைட்ராக்ஸில்), எச்2ஓ ஆகிய நீர் மூலக்கூறுகள் பரவலாக இடம்பெற்றிருப்பது தெளிவாக தெரிகிறது. முன்பு, அதிக அளவில் ஓஹெச் மூலக்கூறுகள் இருக்க வாய்ப்பிருப்பதாக கண் டறியப்பட்ட நிலவின் உயர் வெப்ப பகுதியைக் காட்டிலும், இப்போது கண்டறியப்பட்டி ருக்கும் தாதுக்கள் நிறைந்த பாறைகளில் அதிக அளவில் ஓஎச், எச்2 ஓ மூலக்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டிருக் கிறது. நிலவின் சுற்றுப் பாதையில் ஆர்பிட்டர் தொடர்ந்து சிறப் பாக செயல்பட்டு வருவதோடு, எடுக்கும் புகைப்படங்களை முன்னர் அனுப்பப்பட்ட சந்திர யான்-1 விண்கலத்துக்குத் தவ றாமல் அனுப்பி வருகிறது என்று ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 10 அக்டோபர், 2019

சனி கிரகத்தின் 20 புதிய நிலவுகள் கண்டுபிடிப்பு



பாரீஸ், அக். 9- சூரியக் குடும் பத்தைச் சேர்ந்த சனி கிரகத் தைச் சுற்றி வரும் 20 புதிய நிலவுகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இத்து டன், அந்தக் கிரகத்தைச் சுற்றி வரும் நிலவுகளின் எண் ணிக்கை 82-ஆக உயர்ந்துள் ளது. இதையடுத்து, அதிக நிலவுகளைக் கொண்ட சூரியக் குடும்பத்துக் கிரகம் என்ற பெருமையை சனி பெறுகிறது. இதுவரை 79 நிலவுகளைக் கொண்ட ஜூபி டரே அதிக நிலவுகளைக் கொண்ட கிரகமாக இருந்து வந்தது.

இதுகுறித்து பிரான்சி லுள்ள சர்வதேச விண்வெளி ஆய்வாளர்களின் அமைப் பில் விஞ்ஞானிகள் சமர்ப் பித்துள்ள அறிக்கையில், புதிதாகக் கண்டறியப்பட்ட 1 நிலா சனி கிரகத்தைச் சுற்றி வர 3 ஆண்டுகளுக்கும் மேல் எடுத்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

- விடுதலை நாளேடு, 9.10. 19

புதன், 29 மே, 2019

நிலவு உருவானபோதுதான் பூமிக்கு நீர் கிடைத்தது ஜெர்மனி பல்கலைக்கழக ஆய்வில் தகவல்



பிராங்போர்ட், மே 23- நிலவு உருவானபோதுதான் பூமியின் உயிர் ஆதாரமான நீர் கிடைத் ததாக, ஜெர்மனி விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வு முடிவு கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து, நேச்சர் அஸ்ட் ரானமி அறிவியல் இதழில் வெளியான, அந்த ஆய்வு குறித்த கட்டுரையில் தெரிவிக் கப்பட்டுள்ளதாவது:

அண்டவெளியில் இதுவரை அறியப்பட்ட கிரகங்களிலேயே பூமியில் மட்டும்தான் உயிரி னங்கள் இருக்கின்றன. பூமி யில் உயிரினங்கள் தோன்றிய தற்கு, இந்த கிரகத்தில் மிக அதிக அளவில் நீர் இருப்பது தான் முக்கியக் காரணம் ஆகும்.

சூரியக் குடும்பத்தில் சூரி யனுக்கு பக்கத்தில் இருக்கும் பிற கிரகங்களைப் போல் பூமியும் உலர்ந்த கிரகமாகவே இருந்திருக்க வேண்டும்.

எனினும், 440 கோடி ஆண் டுகளுக்கு முன்னர், செவ்வாய் கிரகத்தின் அளவு கொண்ட தெயியா என்ற பொருள் பூமி மீது மோதியதால்தான் பூமிக்கு நீர் கிடைத்ததாக ஜெர்மனியின் மன்ஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்ததுள்ளது.

பூமியில் தெயியா மோதிய போது ஏற்பட்ட மாற்றங்களில் ஒன்றாகத்தான் நிலவு உருவா னது. மற்ற கிரகங்களுக்கு உள்ள நிலவுகளை விட தெயியா மோதலால் ஏற்பட்ட பூமியின் நிலவு பெரிய அளவில் இருந்த தால், அது பூமியின் சுழற்சியை உறுதிப்படுத்தி வருகிறது.

இதுவரை, நிலவு உருவாக் கத்துக்குக் காரணமான தெயியா பொருள், சூரியனுக்கு அருகி லிருந்து வந்தது என்று கருதப் பட்டது.

எனினும், மன்ஸ்டர் பல் கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில், சூரிய னுக்கு அப்பால் உள்ள, நீர் நிறைந்த கோள்கள் கொண்ட பகுதியிலிருந்து வந்த பொரு ளாக இருக்கும் என்று கண்ட றியப்பட்டுள்ளது.

இதன் மூலம், பூமிக்கு அதிக  அளவு நீர் கிடைப்பதற் குக் காரணமாக, நிலவை உரு வாக்கிய தெயியா விளங்கியது.

அந்த வகையில், பூமிக்கு நிலவுதான் உயிரூட்டியதாகக் கூற முடியும் என்று அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

- விடுதலை நாளேடு 23. 5 .2019