புதன், 21 ஜனவரி, 2026

ஆண் துணை இல்லாமலும் இனப்பெருக்கம் செய்யும் கரப்பான் பூச்சி !

 'பாலுறவு!'


 பாலுறவு என்பது மிகவும் சிக்கலான நடவடிக்கை யாகும். எனினும் பெரும் பாலான உயிரினங்கள் மிக எளிமையாக -பாலுறவு ஈடுபாடு இல்லாமலே நகலக்கம் எனப்படும் குளோனிங் முறையில் உற்பத்திப் பெருக்கம் செய்து தள்ளுகின்றன எனப் பெரும்பாலோர் கருதக் கூடும். பார்க்கப் போனால் பாலியல் தொடர்பற்ற உற் பத்தி என்பது உயிரினங்களைப் பொறுத்தவரை மிகவும் அரிது. ஒரு முறை பாலுறவில் ஈடுபட்டுவிட்டால், பின்னர் பாலுறவற்ற உற்பத்திக்கு மீள்வது மிகக் கடினம் என்று  பாட்ரிகா ஜே.மூர் போன்ற மான்செஸ்டர் பல்கலை வல்லுநர்கள் அறி வுறுத்துகின்றனர்.


 மரபணு மாறுபாடுகள் காரணமாக பாலுணர்வு எழுகிறது என்பது வழிவழிவந்த ஞானமாகும்.  பாலுறவு அற்ற அற்ற உற்பத்தியினால் எழும் வாய்ப்புக் குன்றவுகளால்கூட பாலுணர்வு முகிழக்கூடும்.


 அதாவது மரபணுக்களை நீர்த்துப் போகச் செய்யாது என்பது பாலுறவு அற்ற உற் பத்தியின் பயனுறு அம்சமாகும்


 இந்தப் பிரச்சினையில் ஒரு பிடிமானத்தைப் பெறுவது இன்று சிக்கலாகவே இருக்கிறது. எடுத்துக்காட்டாக செடிப் பேன்கள் பாலுறவு இன்றியே உற்பத்தி பெருக்கத்தில் வழைமையாக ஈடுபடுகின்றன.


 சில உயிரினங்கள் பாலுறவின் மூலமும் சில பாலுறவு இல்லாமயேயும் உற்பத்திப் பெருக்கம் செய்வது எப்படி என்பது இன்னும் புரிந்து கொள்ள முடியாத கடும் புதிர் தான். உற்பத்திப் பெருக்க முறைகளில் ஈடு படுகின்றன என்பது ஏற்கனவே நாம் அறிந்திருக்கிற சிக்கலான செய்தி


 உயிரினம் ஒன்று, சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பாலுறவு கொண்டும் பாலுறவு இல்லாமலும் உற்பத்திப் பெருக்கம் செய்து கொள்கின்றன என அறியும்போது நமது வியப்பு பன்மடங்காகிறது.



உயிர் தத்துவமும் வளர்ச்சியும் என்ற புதிய இதழிழ் ஒன்றில், வல்லுநர் மூலம் அவரது சகாக்களும் சோதனைச் சாலை கரப்பான்களிடத்தில் ஒரு தன்மையைக் கண்டு பிடித்து எழுதியிருக்கின்றனர். வழைமையாக இவை பாலுறவில் ஈடுபட்டுதான் உற்பத்திப் பெருக்கம் செய்கின்றன. 


 

ஆனால் ஆண் காப்பான்களுக்குத் தட்டுப்பாடு - பற்றாக்குறை ஏற்படும் போது, ​​பெண் கரப்பான்கள் பாலுறவுக் கூட்டற்ற இளப்பெருக்கம் முறையில் உற்பத்திப் பெருக்கம் செய்து கொள்கின்றனவாம்.  இந்த முறையில் ஆணின் உதவியின்றியே அனைத்தும் பெண் சுரப் பான்கள் உற்பத்தியைப் பெருக்கும் ஆற்றல் படைத்தனவாம்.


 உயிரினப் பெருக்கம் தொடர்பான அதிசயக் கனவாக இது தெரிந்தபோதிலும், பத்து பெண் கரப்பான்களுக்கு நான்கு என்ற கணக் கில் மட்டுமே இந்த வசதியைப் பெற்றவை.


 பாலுறவுடன் கூடிய உற்பத்திப் பெருக்கத்தைப் போலவே, மிக எளிதாக உற்பத்தியும் உள்ளது என்பது பாலுறவு கூட்டற்ற உற்பத்தியுள்ளது. என்பது

மற்றொரு சிறப்பாககும்.  ஆனால்,ஒரு முறை பாலுறவுக் கூட்டற்ற உற்பத்தி ஏற்பட்டுவிட்டால்.  மீண்டும் பாலுறவு உற்பத்தி என்பது கடிதிலும் கடிதாகிப் போகுமாம்.


 பெண் கரப்பானிடத்தில் சினை படாத முட்டைகளுக் கும் அதாவது ஆணின் உதவி வின்றிக் கருவாகாத முட்டைகளின் எண்ணிக்கை.  ஆணின் உதவியே தேவைப்படாத முட்டைகளின் எண் னணிக்கைக்கும்  பெருத்த வேறுபாடு நிலவுகின்றது.  தொழில் நுட்பரீதியாகப் பாக்கும்

போது, ​​விந்து அல்லது முட்டை செல்கள் உற்பத்தி யாகும்போது, ​​கரு முனை அணுக்களில் அணு இயக்க மாற்றுக் கூறு நடைபெறுகிறது.


 சாதாரணமாக.  கருமுட்டை செல் ஒன்றில் பாதியளவு முதிர்வுக் குரோ மோசோம்கள் இடம் பெற்றுள்ளன.  விந்து செல் ஒன்றை இது சந்திக்கும் போது, ​​முழு எண்ணிக்கையிலான குரோமோசோம்கள் (இளக்கீற்று) மீண்டும் பெறப்படுகின்றன.


 கருமுறை அணு இயக்க மாற்றம் என்பது இரண்டு கட்டமான நிகழ்வாகும்.  செல் பிரிவு விந்துவையும் கரு முட்டை செல்களையும் உற்பத்தி செய்வதாகும் இப் போதுதான் இவை பாதியாகக் குறைகின்றன.  இங்கு தான் குளறுபடிகளே ஏற் பட்டு விந்து கருமுட்டை செல்கள் ஏற்றத் தாழ்வாக உருவாகின்றன அல்லது பாதிக்கும் குறை வான பங்களிப்பில் இனக் கீற்றுகள் முகிழ்கின்றன.


 பெண் கரப்பான்களைப் பொறுத்தவரை, கருமுறை அணு இயக்க மாற்றம் தவறாகப் போய் கருமுட்டை செல்கள் முழுமையான இனக் கீற்றுகளோடு உற்பத்தியா கிறது.  குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இவை கருவுயிர்களாக மேம்படுகின்றன.  ஆனால் இப்படிப்பட்ட நிகழ்வு ஒன்றுக்கு இரண்டு மடங்கு நிகழ்வுச் சாத்தியமற்றவை.  முதலாவதாக,


 கருமுறை அணு இயக்க மாற்றத்தில் சில தவறுகள் ஏற்பட்டு முதிர்ந்த இனக் கீற்றுகள் போதிய எண்ணிக் கையில் உருவாக வேண்டும்.  இரண்டாவதாக, அசாதாரண முட்டைக்கரு செல் ஒன்று மேலும் வளர்ச்சியடையும் வாய்ப்பைப் பெற வேண்டும்.  எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், பாலுறவு டன் கூடிய உற்பத்திப் பெருக்கம் நிகழ்ந்த பின்னர், பாலுற வற்ற உற்பத்திக்கு பல்வேறு அரிய நிகழ்வுகள் ஒரேயடியாக நடைபெற வேண்டும்.


 பெண் சுரப்பான்கள் உற் பத்திப் பெருக்கம் தொடர் பான தனது நிலைகளை உடலுறவு - உடலுறவற்ற என்று மாற்றிக் கொள்ளும் வசதி படைத்தவை என்றா லும், அடிக்கடி இந்த மாற்றங் களில் ஈடுபடத் துணிவ தில்லை.  எனவே, பாலுற வற்ற உற்பத்திப் பெருக்கம் என்பது மிகக் கடினமானது என்றே நிலைநாட்டப்படுகிறது..


- விடுதலை ஞாயிறு மலர்,27.2.2000

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக