வெள்ளி, 30 செப்டம்பர், 2016

அஜினோ மோட்டோ அள்ளி வழங்கும் நோய்கள்

மோனோ சோடியம் குளுட்டோமேட்’ என்ற வேதிப்பெயர் கொண்ட உப்பு, அஜினோ மோட்டோ ஆகும்.

இதன் விஷத்தன்மை குழந்தைகளுக்குப் பலவித ஆபத்துக்களை உண்டாக்குகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது கலந்த உணவைச் சாப்பிடும் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்கள் சுரப்பு வெகுவாகக் குறையும். இதனால் உடல் வளர்ச்சி குறையும்.

மூளையில் ‘ஆர்க்குவேட் நுக்ளியஸ்’ என்னும் பகுதியை பாதிப்பதால் எடை தாறுமாறாக அதிகரிக்கும். மூளை மட்டுமன்றி இரைப்பை, குடல், கல்லீரல் போன்ற உறுப்புகளில் அழற்சியையும் இரத்தக் கசிவையும் ஏற்படுத்தும். இதனால் குழந்தைகளுக்கு காரணம் கண்டுபிக்க முடியாத வயிற்று வலி உண்டாகும்.

ஒவ்வாமை உள்ளவர்களுக்கு இதைச் சாப்பிட்டதும் மார்பில் எரிச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டு உடல் வியர்க்க ஆரம்பிக்கும். அஜினோ மோட்டோவைப் போன்றே விரைவு உணவுக்கடைகளிலும், 5 நட்சத்திர ஓட்டல்களிலும் பயன்படுத்தப்படும். ‘ஜீரோஏடேட் ஹைட்ரோஜெனடேட்’ என்ற எண்ணெய் பசு, எருது, பன்றி போன்ற விலங்குகளின் கொழுப்பிலிருந்து தயாரிக்கப்-படுவதாகும். இதில் உடலுக்குத் தேவையற்ற ஒருவித கொழுப்பு உள்ளது. இந்த எண்ணெய்யை பலமுறை திரும்பத் திரும்ப பயன்படுத்தினாலும் உணவின் மணம் மாறாது. பதினெட்டு மாதம் வரை உணவுப் பொருள் கெட்டுப் போகாது.
பாக்கெட்டுகளில் கிடைக்கும் உருளைக்-கிழங்கு வற்றல், பீட்சா, சாக்லெட் மற்றும் சில துரித உணவுகள் இந்த

எண்ணெயில்தான் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை உண்பதால் உடலில் வேண்டாத கொழுப்பு சேர்ந்து இதயநோய், புற்றுநோய் உடல் பருமன் எல்லாம் வந்துவிடும்.

விருந்துகளில் உண்போர் வயிற்று வலியால் பாதிக்கப்படுவது இதனால்தான். இவற்றால் உடலில் அனைத்துவிதமான நோய்களும் வருவதற்கு வாய்ப்புகள் அதிகமே! 

தகவல்: கெ.நா.சாமி

-உண்மை,16-30.9.16

திங்கள், 5 செப்டம்பர், 2016

கற்கால மனிதன் கயிறு தயாரித்தது எப்படி?


40,000 ஆண்டுகளுக்கு முன்பு அய்ரோப்பாவில் கால் பதித்த ஆதி மனிதர்கள், வேட்டைக்கு மிக அவ சியமான கயிறை எவ்வாறு தயாரித்தனர் என்பது குறித்து இதுவரை இருந்து வந்த மர்மம் விலகியுள்ளது.
இதுகுறித்து ஜெர்மனி யில் வெளியாகும் தொல் லியல் துறைக்கான அறி வியல் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அய்ரோப்பாவில் கற்கால மனிதர்கள் கயிறுகளைப் பயன்படுத்தி வந்தனர் என்பது, அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட பானைகளில் பதிந்துள்ள கயிறுகளின் தடங்கள் மூலம் தெரிய வருகிறது.
மேலும், அந்தக் காலகட்டத்திய கலைப் பொருள்கள் சிலவற்றிலும் கயிறு சித்திரிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆதி மனிதர்கள் கயிறுகளைப் பயன்படுத்தி வந்தது தெரிய வந்தாலும், அவர்கள் அந்தக் கயிறை எவ்வாறு தயாரித்தனர் என்ற விவரம் இதுவரை தெரியாமல் இருந்து வந்தது.
இந்தச் சூழலில், டியூபிங்கென் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிக்கோலஸ் கனார்டு என்பவரால் புகழ்பெற்ற ஹோலே ஃபெல்ஸ் குகையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருளும், அதனைக் கொண்டு தொல்லியல் நிபுணர் வீர்லே ராட்ஸ் தலைமையிலான குழு மேற்கொண்ட ஆய்வும் அந்த மர்மத்தை விலக்கியது.
நிக்கோலஸ் கண்டெடுத்த அந்தப் பொருள், அழிந்துபோன "மாமத்' யானை இனத்தின் தந்தத் துண்டு ஆகும்.
20.4 செ.மீ. நீளமுள்ள அந்தத் தந்தத்தில், 7 முதல் 9 மி.மீ. விட்டம் கொண்ட நான்கு துளைகள் மிகத் துல்லியமாக செதுக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே இதுபோன்ற துளைகளுடன் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் கம்பிகளை நேராக்கும் கருவிகள் எனவும், அலங்காரப் பொருள்கள் எனவும் கூறப்பட்டு வந்தன. ஆனால், நிக்கோலஸ் கனார்டு கண்டெடுத்த தந்தத்தை ஆய்வு செய்த நிபுணர்கள், அதிலுள்ள துளைகள் வெறும் அலங்காரத்துக்காக செதுக்கப்படவில்லை எனவும், அது கயிறுகளைத் திரிப்பதற்கு கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கருவி எனவும் தெரிவித்தனர்.
இதன் மூலம், கற்கால மனிதர்களின் கயிறு தயாரிப்பு முறை குறித்து இதுவரை இருந்து வந்த புதிருக்கு விடை கிடைத்துள்ளது.
இவ்வாறு அந்த அறிவியல் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலை ஞாயிறு மலர், 30.7.16

ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

இதயத்தின் எலெக்ட்ரிக் சர்க்யூட்!

இதயத்தின் வலது மேலறையின் வெளிப்பக்கத்தில் ‘எஸ்.ஏ.நோடு’(Sino Atrial Node) என்று ஒரு புடைப்பு இருக்கிறது. இதில்தான் மின்சாரம் உற்பத்தியாகிறது. இதயத்தைத் துடிக்கச் செய்வதும் இதுதான். இரண்டு மேலறைகளுக்கும் இரண்டு கீழறைகளுக்கும் நடுவில் ‘ஏ.வி.நோடு’ (Atrio Ventricular Node) இருக்கிறது. இதற்குக் கீழே ‘ஹிஸ்_பர்கின்ஜி நார்க்கற்றைகள்’ (Bundle of His-Purkinje) இதனுடன் இணைக்கப்-பட்டிருக்கின்றன. இவை கிளைகளாகப் பிரிந்து வலது, இடது கீழறைகளை அடைகின்றன. ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பை இதயத்தின் ‘எலெக்ட்ரிக் சர்க்யூட்’ எனச் சொல்லலாம். எஸ்.ஏ.நோடில் நிமிடத்துக்கு 72 தடவை மின்தூண்டல்கள் உற்பத்தியாகி, ஏ.வி.நோடுக்குப் பாய்கிறது. இந்த சர்க்யூட் மூலம் முறைப்படி இதயத் தசைகளுக்கு மின்சாரம் வினியோகிக்கப்படுவதால், இதயம் சீராகத் துடிக்கிறது.

-உண்மை இதழ்,1-15.8.16

சனி, 3 செப்டம்பர், 2016

செத்தவர் பிழைத்த அதிசயம்!

இறந்துவிட்டார் என மருத்துவமனை அறிவித்து 15 மணி நேரம் கழித்து, மயானத்திற்கு தூக்கிச் செல்லும்போது, உயிர் திரும்பினால் அதனை என்ன சொல்வார்கள்?

எமன் தப்பாகக் கணக்கிட்டு உயிரைக் கொண்டுசென்று உண்மை தெரிந்து மீண்டும் உயிரைக் கொடுத்தான் என்பர். அவ்வாறு பிழைத்த சிலரும் எமலோகம் போய் எமனைச் சந்தித்ததாய் கதை சொல்வர்.

ஆனால், இவை கற்பனைகள்; கதை அளப்புகள். உண்மை என்ன? கீழேயுள்ள உண்மை நிகழ்வைப் படியுங்கள்.

படத்திலுள்ள பத்மாபாய் லோதா ராஜஸ்தானை சேர்ந்தவர். 59 வயதாகும் இவருக்கு மே 16ஆம் தேதி திடிரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஒரு கட்டத்தில் வென்டிலேட்டர் வைக்கப்பட்டது. இரவு 8.30 மணிக்கு இறந்துவிட்டார் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. பிறகு அடுத்த நாள் காலை 9 மணிவரை மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டார்.

இதனிடையே ராஜஸ்தான், ஆந்திரா, தமிழ் நாட்டில் இருக்கும் அவருடைய சொந்தபந்தங்கள், மும்பையில் வசிக்கும் இரு மகள்களுக்கு தகவல் சென்று அவர்களும் விமானத்தில் பறந்து வந்தனர்.

17ஆம் தேதி, மருத்துவமனையிலிருந்து உடல் எடுத்து வரப்பட்டு இறுதிச் சடங்குகளுக்கான சம்பிரதாயங்கள் நடந்து கொண்டிருந்தன.

இந்த நிலையில் அவர் அருகில் அமர்ந்து கூர்ந்து அவரை வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்த உறவினர்களுக்கு அதிர்ச்சி! அவரது உடலில் சில அசைவுகள் ஏற்பட, அடுத்த சில நிமிடங்களில், பத்மாபாய் சுவாசிப்பது நன்கு தெரிந்தது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அய்.சி.வார்ட்டில் சேர்க்கப்பட்டு, உடல்நிலையில் நல்ல முன்னேற்றம். சீக்கிரம் வீடு திரும்புவார் என மருத்துவமனை அறிவித்தது.

இதனிடையே பத்மாபாய்க்கு உயிர் திரும்பியதால் நெருங்கிய உறவுகளிடையே சந்தோஷம்.

ஆகவே, மூச்சுத்திணறலால் ஒருவருக்கு மூச்சு ஒரு கட்டத்தில் நின்றுவிட்டாலும், தானே, திரும்ப வாய்ப்பு உள்ளது. இதுதான் செத்தவர் பிழைத்தாகக் கூறப்படும் நிகழ்வு. எனவே, இறப்பை மருத்துவர்கள் ஒருமுறைக்கு சிலமுறை சோதித்து உறுதிசெய்ய வேண்டும்!
-உண்மை இதழ், 1-.15.7.16