ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

'SKI NSLV 9' மணியம்மையார் சாட்' விண்ணில் ஏவப்பட்டது பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக மாணவிகளின் மகத்தான சாதனை!

அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி 'மணியம்மையார் சாட்'

செயற்கைக்கோள் முற்பகல் 11.42 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு மைல் கல்

இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று பாராட்டு


வல்லம், ஏப்.21 தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பயிலும் பொறியியல் மாணவியரால் இன்று (21.4.2019) முற்பகல் 11.42 மணிக்கு விண்ணில் செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப் பட்டது. கல்வி நிறுவனத்தின் வரலாற்றில் இது ஒரு மைல்கல் என்பதில் அய்யமில்லை.
ஆசியாவிலேயே மகளிர் சார்பில் முதலில் விண்ணில் செலுத்தப்படும் செயற்கைக்கோள் இதுதான் என்பது பெருமைக்கும், சிறப்பிற்கும் உரியதாகும். பெரியார் கல்வி நிறுவனத்தின் வரலாற்றில் இது ஒரு மைல்கல் என்றே சொல்லவேண்டும்.
அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி இதற்கு மணியம்மையார் சாட்'' என்று பெயர் சூட்டப் பட்டது.
இந்நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக இஸ்ரோ' நிறுவனத்தின் மேனாள் திட்ட இயக்குநரும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத் துணைத் தலை வருமான மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டு சிறப்பித்தார்.
அவருக்கு தேசிய மாணவர் படை (NCC)யின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
செயற்கைக்கோளின் சிறப்பம்சம்

மணியம்மையாரின் நூற் றாண்டில் அவரது நினைவைப் போற்றும் விதமாக “மணியம் மையார் சாட்'' எனும் பெயரில் ஏவப்பட்டதோடு, அதன்மீது மணியம்மையாரின் உருவப்படம் பொறிக்கப்பட் டிருந்தது.

மேலும் வேளாண்மையில் சிறந்தோங்கும் தஞ்சை மாவட் டத்திலிருந்து ஏவப்படுதவதால், மாணவிகள் அதில் விவசாயத்தை முன்னிறுத்தும் விதமான படங் களைச் சுற்றியும் இணைத்து வேளாண்மை தொழிலுக்குப் பெருமை சேர்த்தனர்.

காவிரி டெல்டா மாவட்டம் என்பதனை நினைவு கூறும் விதமாக, செயற்கைக்கோளின் மேற்கூரை பேம்பூ எனும் மூங்கில் குச்சிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருந்தது.

சரியாக 11.42 மணியளவில் மாணவிகளின் உற்சாகப் பெருக் கில், பார்வையாளர்களின் பலத்த கரவொலி, எழுச்சி, வாழ்த்து முழக்கத்துடன் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டதும், வான் நோக்கிப் பறந்திட, பல் கலைக் கழகமே உற்சாகப் பெருவெள்ளத்தில் திளைத்தது.

இந்த மகத்தான சாதனை நிகழ்வினை ஆசிய புக் ஆஃப் ரெக்கார்டு பதிவு செய்திட்டது, பல்கலைக் கழக வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகத் திகழ்ந்தது.

பதிவாளர் வரவேற்புரை


பதிவாளர் பேராசிரியர் தனராஜ் வரவேற்புரை யாற்றினார். அவர் தனது உரையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:
இந்த நாள் நமது கல்வி நிறுவனத்தின் பொன்னாள் - அதுவும் அன்னை மணியம்மையார்  நூற்றாண்டை யொட்டி அவர் பெயரால் இந்த செயற்கைக்கோள் (மணி யம்மையார் சாட்) ஏவப்பட்டு இருப்பது பொருத்தமான தாகும்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுள்ள சாதனையாளர் மயில் சாமி அண்ணாதுரை அவர்கள் 75-க்கும் மேற்பட்ட விருதுகளை அணிகலன்களாகப் பூண்டவர். அதே போல, இவ்விழாவில் பங்கேற்று பெருமை சேர்க்கும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவின் முதன்மைச் செயல் அதிகாரி டாக்டர் சிறீமதிகேசன், குந்தவை நாச்சியார் அரசினர் கலைக் கல்லூரி முதல்வர் டாக்டர் எ.திரு வள்ளுவர், ஏசியா புக் ரெக்கார்டு பதிவாளர் எம்.ஆர்.ஹரீஷ், பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இணை இயக்குநர் ஆர்.சித்தார்த்தன் ஆகிய பெருமக்கள் எல்லாம் பங்கேற்றது நிகழ்ச்சிக்கு மேலும் பெருமை சேர்ப்பதாகும் என்று பதிவாளர் தன்ராஜ் தன் வரவேற்புரையில் கூறினார்.
பங்கேற்ற பெருமக்கள் அனைவருக்கும் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் நினைவுப் பரிசுகள், புத்தகங்களை வழங்கி சிறப்பு செய்தார்.
விழாவிற்கு வருகை தந்த தஞ்சை ஏர்போர்ட் விமானப் படை குரூப் கமாண்டர் பிரஜ்வால் சிங் அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.
பாராட்டுக்குரிய மாணவிகள்

செயற்கைக்கோள் தயாரித்த மாணவியர்கள் குழு:

எஸ்.நிவேதா, பி.பிரணவி, எஸ்.ஜான்சி ராணி, ஆர்.சுபலட்சுமிதாஸ் - விண்வெளி பொறியியல் (Aerospace)

ஜி.அனுமந்திரா, வி.கனகப்பிரியா, வி.சத்யாசிறீ - எந்திரவியல் துறை.

எஸ்.சிவப்பிரியா, எஸ்.சுஷ்மா - மின்னணு தொடர் பியல் பொறியியல் ECE

கே.அபிநயா, டி.ஏ.அக்னேஷ் அர்ச்சனா, பி.எஸ்.மீனா லட்சுமி- கணினி அறிவியல் துறை

பி.ஜெயசிறீ, எம்.சங்கவி, இ.ஞானசுந்தரி - மின்னணு மின்னியல் துறை

துணைவேந்தர் உரை

துணைவேந்தர் பேராசிரியர் வேலுசாமி ஆற்றிய தலைமை உரையில்,
பெண்கள் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றமாகும். ஆசியாவிலேயே முதல் பெண் கல்லூரியாக தொடங்கிய இக் கல்லூரியில் முதல் முறையாக ஆசியாவிலேயே மாணவியர்களால்  இன்று இந்த செயற்கைக்கோள் ஏவப்படுகிறது. பெரியார் - மணியம்மை தொண்டுக்கு இது சான்றாகும். பொருத்தமான விருந்தினர் மயில்சாமி அண்ணாதுரை என்பதும் சிறப்பு.
பெரியார் - மணியம்மையாரின் கொள்கைகள் இன்று நடை முறைக்கு வருகின்றமைக்கு இது சான்றாகும். 100-க்கு 100 சதவிகிதம் வெற்றி பெற  மாணவர்கள் உழைக்கவேண்டும். அதுதான் அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றியாகும். இந்த செயற்கைக்கோள் வெற்றி பெறும். மாணவியர்களுள் 3 பேரை ரஷ்யா அனுப்பி பயிற்சி கொடுக்க ஏற்பாடு செய்யவும் கேட்டுக் கொண்டார்.  ரொபாட்டிக் விழிப்புணர்வு ஏற்படுத்திட தனி மய்யம் விரைவில் தொடங்க ஏற்பாடு செய்து கொண்டுள்ளோம். இதனை வளர்ச்சிக்கு என்று எடுத்துக் கொள்ளவும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மகத்தான சாதனை!

இந்த செயற்கைக் கோளினை பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக் கழகத்தின் பொறியியல் துறையில் கல்வி பயிலும் பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த 15 மாணவியர்கள் கூட்டாகச் சேர்ந்து சென்னை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்தில் பயிற்சி பெற்று, கூட்டு முயற்சியுடன் தயாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் நூற்றாண்டில் பெருமை சேர்க்கும் விதமாக "SKI NSLV 9 மணியம்மையார் சாட்''என அவர்கள் பெயர் சூட்டியுள்ளார்.

மாணவியர்களே தயாரித்த SKI NSLV 9  மணியம்மை யார் சாட் எனும் செயற்கைக்கோள் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நிகர்நிலைப் பல்கலைக் கழகத்திலிருந்து இன்று (21.4.2019) சரியாக 11.42 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த செயற்கைக்கோளானது ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூனுடன் 70 ஆயிரம் அடி வரை வான்வெளிக்குச் சென்று அங்குள்ள வெப்ப நிலை காரணமாக உருமாற்றம் பெற்று பாராசூட் உதவியுடன் பல்கலைக் கழக வளாகத்திலிருந்து 40 கி.மீ. சுற்று வட்டாரத்திற்குள் தரையிறங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த செயற்கைக்கோள் விண்ணை நோக்கி மேலே செல்லும்போதும், கீழே தரையிறங்கும் போதும் அதிலுள்ள கேமராவின் உதவியுடன் வான்வெளியிலுள்ள வளிமண்டலத்தின் வெப்ப நிலை, காற்றின் ஈரப்பதம், அங்குள்ள வாயுக்களின் தன்மை நிலை குறித்தும் கண்டறியப்படவுள்ளது. இச்செயற்கைக்கோளானது சமிக்கைகள் மூலமாக முக்கியமான தகவல்களை ஆராய்ந்து தரக்கூடியது. மேலும் நேரடி டெலிமெட்ரியை அனுப்பும் செயற்கைக் கோளாகும். டெலிமெட்ரி மூலம் சமிக்கைகள் அட்சரேகை, உயரம், திசைவேகம், ஜி.பி.எஸ். மற்றும் வெப்ப நிலை கணக்கிட உதவும். இவை அனைத்தும் மைக்ரோ கண்ட்ரோலர் மூலமாகவும், ரேடியோ மூலமாகவும், தரவுகள் அனைத்தும் சேமிக்கப்பட்டு ஜி.பி.எஸ். மூலமாக கண்காணிக்கவும் உதவுகின்றன.

மயில்சாமி அண்ணாதுரை சிறப்புரை


மாணவியர் 15 பேர் தஞ்சையில் உள்ள பெரியார் பொறியியல் நிறுவனத்திலிருந்து இன்று செயற்கைக்கோள் ஏவப்படுவது பெருமை. வள்ளுவர் கூற்றுக்கேற்ப எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் என்பதும் பெரியாரின் கூற்றே! அதன்படிதான் செயற்கைக்கோள் இன்று வெற்றி பெற உள்ளது. 15 பேரில் 3 பேர் இல்லை; 15 பேரையும் ரஷ்யா தானாகவே அழைப்பார்கள். தமிழச்சியால், பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு இது ஆரம்பமாகும். இந்நிகழ்ச்சி அதுவும் மணியம்மையார் நூற்றாண்டில் அடுத்த கட்ட மைல்கல் ஆகும். கல்வி முறை தரம் நோக்கிச் செல்லவேண்டும். இதன் நிகழ்வுகளையும், விளக்கத்தையும் நோக்கும்போது பல்கலைக் கழகம் நல்ல வளர்ச்சிப் பாதை நோக்கி செல்கிறது. இன்றைய செயற்கைக்கோள் சில மணிநேரத்தில் திரும்பும். இதனைத் தொடர்ந்து, பள்ளி அதுவும் அரசு பள்ளி மாணவர்களும் செயற்கைக்கோள் குறித்து அறிந்துகொள்ள முயலவேண்டும்.
இதனை சரியாகப் பயன்படுத்தி, அடுத்த தலைமுறை மாணவர் களுக்கும் கொண்டு செல்வோம். இந்த முயற்சி கண்டிப்பாக ஆர்வத் தினைப் படைக்கும், சிந்தனையைத் தூண்டும். இது இன்னொரு வகையான படிப்பாகும். இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்த பல்கலைக் கழக நிர்வாகம், குறிப்பாக அன்புராஜ் அவர்களுக்கு எனது பாராட்டுகள். நீங்கள் ஒவ்வொருவரும் உயர்ந்த கல்வி, உயர்ந்த பணி உயர்ந்த இடத்திற்குச் செல்ல வாழ்த்துகிறேன். இன்னும் சற்று நேரத்தில் ஏற்பாடுகள் முடிந்து, சாட்டிலைட் ஏவப்பட உள்ளது. வெற்றிக்கு எனது வாழ்த்துகள்! இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை தமதுரையில் குறிப்பிட்டார். முடிவில், கல்விப்புல முதன்மையர் பேராசிரியர் சிறீவித்யா நன்றி கூறினார்.
-  விடுதலை நாளேடு, 21.4.19

வெள்ளி, 19 ஏப்ரல், 2019

கருந்துளை: கண்டுபிடிப்பும், படிப்பினைகளும்...!

* மயில்சாமி அண்ணாதுரை (துணைத்தலைவர், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மய்யம்)




பூமி, செவ்வாய், புதன், வியாழன் உள்பட கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருவது நாம் தெரிந்ததே.

சூரியனின் ஈர்ப்பு விசை. தற்போது ஒரு நிமிடம் கண்களை மூடி மேலே உயரே சென்று சூரிய மண்ட லத்தையும், அதன் கிரகங்களையும் மனதில் நினை யுங்கள். பூமி, செவ்வாய், புதன் சுற்றும்போது சூரியனை உங்களால் பார்க்க முடியவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் சூரியனின் விசை இல்லாமல் அவை சுற்ற முடியாது. அதாவது நாம் சூரியனைப் பார்க்க முடியாவிட்டாலும் பூமி, செவ்வாய் எல்லாம் சுற்றும். இதற்கு சுற்று வட்டத்தின் மய்யம் கொடுக்கும் ஈர்ப்பு விசை இருக்கும் இடத்தில் இருப்பது ஆகும்.

சூரியன்தான் மற்ற கிரகங்கள் பயணத்தின் காரணி. ஆயினும் நம்மால் சூரியனை பார்க்க முடிவதன் காரணம் அதன் ஒளி நம் பூமிக்கு வருவதால்தான்.

ஆனால் அண்டத்தில் பல இடங்களில் பூமி, செவ்வாய் போன்றவை சுற்றி வரும்போது அவற்றின் மய்யத்தில் சூரியன் போன்ற ஒரு நட்சத்திரத்தை மனிதனால் காண முடியாத நிலை இருந்தது. அதற்கு காரணம் மிக அதிகமான விசை உள்ள ஒரு பெரிய நட்சத்திரம் அதன் ஒளியைக் கூட வெளிவிடாதது காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணித்து அவற்றின் இருப்பை உணர்ந்து, அதை பார்க்க முடியாததால் அதற்கு கருந்துளை என்று பெயரிட்டனர். அதை இன்று வரை யாரும் காணவில்லை. தனது ஈர்ப்பு எல்லைக்குள் வரும் ஒளியைக் கூட வெளியேற விடாமல் தன்னகத்தே வைத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்ட இந்த கருந்துளைகள் அதன் அருகில் இருக்கும் நட்சத்திரங்களை கூட ஈர்த்து விழுங்கக்கூடியவை.

பெரிய நட்சத்திரங்களில் அதிகமான ஈர்ப்பு சக்தி இருக்கும்போது அதன் எடை அப்படியே இருக்கும். ஆனால் அதன் அளவு சுருங்கி கொண்டே போகும். அதனால் அதன் அடர்த்தி மிக, மிக அதிகமாகி கொண்டே போகும்.

பூமியில் நாம் ஒரு பொருளை சூரிய ஒளியின் பிரதிபலிப்பை வைத்துதான் பார்க்கிறோம். இரவில் நிலவு, மின்சார ஒளியின் உதவியால் அந்த பொருள் என்னவென்று பார்க்கிறோம். அதைப் போல தூரத்தில் இருக்கும் நட்சத்திரங்களை சூரிய ஒளி இல்லாத இரவுகளில் அவை அனுப்பும் ஒளிக்கற்றைகளை வைத்து பார்க்க முடிகிறது.

அண்ட வெளியில் நட்சத்திர மண்டலத்தில் சூரிய ஒளிபோல் நட்சத்திர ஒளி இருந்தாலும் அவற்றையும் கருந்துளைகள் ஈர்த்துக்கொள்கின்றன. கருந்துளையில் அது உற்பத்தி செய்யக்கூடிய ஒளியைப் பார்க்க முடியாது. அதன் ஒளியை அதே ஈர்த்துக்கொள்கிறது.

வெளியில் இருந்து எந்த ஒளி வந்தாலும் அதை ஈர்த்துக்கொள்கிறது. நட்சத்திரங்கள் போல் எந்த பொருள் வந்தாலும் ஈர்த்துக்கொள்கிறது மற்றும் அதை நாம் பார்க்க முடியாது. எல்லாவற்றையும் ஈர்த்துக் கொள் வதால் அதை கருந்துளை என்கிறோம்.

அண்டத்தில் இருக்கும் பூமி, நிலவு உள்பட எல்லா நட்சத்திரங்களுக்கும் அதற்கான சுழற்சி இருந்து கொண்டு இருக்கிறது. சுழற்சி மற்றும் ஈர்ப்பு விசையில் இருக்கும் அண்டவெளியில் அதிகமான கதிர் வீச்சுகளும் உள்ளன. அது கருந்துளைக்கு அருகில் செல்லும்போது அவை ஈர்க்கப்படுகிறது.

இரவு நேரத்தில் விண்கற்கள் கீழே எரிந்து விழுவதை பார்த்து இருக்கிறோம். அவை பூமியால் ஈர்க்கப்பட்டு வரும்போது பூமியில் ஏற்படும் உராய்வினால் ஏற்படும் வெப்பமே இதற்கு காரணம்.

இதேபோன்று கருந்துளையை சுற்றியுள்ள இடங் களில் இருந்து கருந்துளையை நோக்கி ஈர்க்கப்படும் பல கதிர் இயக்க ஒளிக்கற்றைகள் மிகவும் லேசாக இருந் தாலும் கூட அதிகபட்சமான ஈர்ப்பு விசை இருப்பதால் கருந்துளைக்கு அருகில் செல்லும் போது வளிமண்டலத் தில் உராய்வு ஏற்படுகிற மாதிரி ஈர்ப்பு விசைக்குள் அவை உராய்ந்து உள்ளே சென்று விடுகிறது.

இத்தகைய கருந்துளைகளின் இருப்பு பற்றிய தகவல் களை பல ஆண்டுகளுக்கு முன்னே விஞ்ஞானிகள் கணித்து வந்தாலும் அதை படம் பிடிக்க முடியவில்லை. இப்போதுதான் முதல் முறையாக கருந்துளையை பார்க்க முடியாவிட்டாலும் அதை சுற்றி நிகழும் மேற்கண்ட நிகழ்வுகளை பார்க்க முடிகிறது. இந்த நிகழ்வுகளை பற்றிய அடுத்தகட்ட புரிதல்களும், கருந்துளையில் நடக் கக்கூடிய நிகழ்வுகளையும் நாம் புரிந்து கொள்ளும் போது இந்த பேரண்டத்தின் ஆதியை புரிந்துகொள் வதற்கான வழிமுறை ஏற்படும்.

நாம் வாழும் பால் வெளியில் இன்னொரு கருந்துளை இருந்தாலும் அதை இதுவரை நம்மால் பார்க்க முடிய வில்லை. அது நாம் தற்போது பார்க்கக்கூடிய கருந் துளையை விட அளவில் சிறியதாக இருப்பதால் அதை சுற்றியுள்ள இயற்கை நிகழ்வுகளின் வீரியம் குறைவாக இருக்கும்.

கருந்துளையை படம் எடுப்பது எளிதான காரியம் அல்ல. பல சவால்களை சந்திக்க வேண்டும். கருந் துளையை படம் பிடிக்க வேண்டும் என்றால் அந்த பொருளில் இருந்து காட்சி படும் அளவு கணிசமான ஒளி இருக்க வேண்டும். அடுத்ததாக அந்த பொருள் வெளிப்படுத்தும் மங்கலான ஒளியை கண்டு காட்சி பிம்பத்தை ஏற்படுத்தும் அளவுக்கு நவீன திறன் கொண்ட தொலைநோக்கி வேண்டும். கருந்துளை ஒளியை உமிழாது அதுமட்டுமின்றி அதன் மீது ஒளியை பாய்ச்சினாலும் பிரதிபலிக்காது. உறிஞ்சி கொண்டு விடும்.

தற்போது விஞ்ஞானிகள் படம் எடுத்துள்ள எம்:87 என்ற கருந்துளையை படம் பிடிக்க சற்றேறக்குறைய பூமியின் விட்டத்தில் ஒரு பெரிய தொலைநோக்கி இருந்தால் மட்டுமே முடியும். ஆனால் அப்படி ஒன்று தற்போது சாத்தியமில்லை.

இந்த குறையை நிவர்த்தி செய்ய கடந்த பத்து ஆண்டுகளாக விஞ்ஞானிகள் பேசி வந்த இரு வழி முறைகளை ஒருங்கே சேர்த்து பன்னாட்டு விஞ்ஞானிகள் கண்ட ஒரு தொலைநோக்கி தான் ஈவன்ட் தொலைநோக்கி என்ற அமைப்பு. இதில் பூமியில் அமெரிக்கா, அய்ரோப்பா, அண்டார்டிகா, ஆசியா ஆகிய கண்டங்களில் உள்ள எட்டு தொலைநோக்கிகள், ஒவ்வொன்றும் 10 மீட்டருக்கும் மேல் விட்டமுள்ளவை. அவை அனைத்தையும் ஒன்றாக இணைந்து ஒரே நேரத்தில் படம் எடுத்து பின் சேர்ப்பது என்பது ஒருமுறை. மற்றொன்று இதே முறையில் கிட்டத்தட்ட 10 நாட்கள் எடுக்கும்போது அண்டத்தில் இருந்து பார்க் கும்போது பூமியின் சுழற்சியில் ஒவ்வொரு தொலை நோக்கியும் வேறு, வேறு இடம் நோக்கி நகர்கிறது.

இந்த நகர்வுகள் எல்லாமே சேர்ந்து பூமியின் விட் டத்தை ஒத்த ஒரு தொலைநோக்கி போன்ற ஒரு செயல் முறை நிகழ்கிறது. அதனால் சிறிய எட்டு தொலை நோக்கிகளை வைத்து ஒரு பெரிய தொலைநோக்கி ஒத்த செயல்திறனை விஞ்ஞானிகள் உருவாக்கினர். ஆனால் இதற்கு பெரிய கணினிகளின் துறையும் 200 பன்னாட்டு விஞ்ஞானிகளின் உழைப்பும், கிட்டத்தட்ட ரூ.300 கோடியும் செலவாகி உள்ளது. இதன் மூலம் கிடைத்த படம்தான் நாம் இங்கே பார்ப்பது.

இருந்தாலும் இன்னும் செயல்திறன் அதிகமாக இருக்கக்கூடிய தொலைநோக்கிகளையும், செயற்கை கோள்களையும் வைத்து பிற்காலத்தில் இதை விரிவாக ஆராயக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

நமக்கு அருகில் உள்ள கருந்துளையை பார்க்க இன்னும் அதிகம் செலவாகும். அதற்கு செலவு செய்ய லாமா? வேண்டாமா? என்பதற்கும் நமது பால்வழியில் இருக்கக்கூடிய கருந்துளை பற்றி ஆராய்வதற்கும் அதனால் நமக்கும், நமது சூரிய மண்டலத்துக்கும் பாதிப்பு எதுவும் இருக்கிறதா? என்பதை பார்ப்பதற்கும் இந்த ஆராய்ச்சி முடிவு முன்னோடியாக இருக்கும்.

நமது செயற்கை கோள்களை விண்ணில் ஏவும்போது பூமியின் ஈர்ப்பு விசை மற்றும் கிரகங்களில் ஈர்ப்பு விசையை சரியாக புரிந்து, கணித்து, வடிவமைத்து அனுப்புகிறோம். சந்திரயான், மங்கல்யான் போன்ற செயற்கை கோள்கள் வெற்றிக்கு இதுதான் காரணம்.

இப்படிப்பட்ட கருந்துளைகளால் அதற்கு அருகில் உள்ள நட்சத்திர கூட்டங்களுக்கு ஏற்படும் பாதிப்பு களையும் ஆராய்வதற்கு இந்த கண்டுபிடிப்புகளும், ஆராய்ச்சிகளும் முன்னோடியாக அமையும். இந்த கண்டுபிடிப்பால் தற்போதைக்கு பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

நன்றி: தினத்தந்தி, 15.4.2019

- விடுதலை நாளேடு, 18.4.19

புதன், 17 ஏப்ரல், 2019

நிழலில்லா நாள்

நிழலில்லா நாள்’’ குறித்து மாணவர்களுக்குப் பயிற்சி: ஏப்.10-க்குள் பதிவு செய்யலாம்




சென்னை, ஏப்.8  வரும் 24-ஆம் தேதி ஏற்படும் “நிழலில்லா நாள்’ குறித்து பயிற்சி பெற விரும்பும் பள்ளி மாணவர்கள் வரும் 10 ஆம் தேதிக்குள் பதிவு செய்யலாம் என தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மய்யம் அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் உலகின் ஒவ்வொரு பகுதியிலும், கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும், இடையில் உள்ள நில உலக வெப்ப மண்டல பகுதியை சூரியன் கடக்கும் போது இரண்டு நாள்கள் மட்டும் மதிய வேளையில் நிழல் விழாத நிகழ்வு ஏற்படுகிறது. அப்போது சூரியன் நமது தலைக்கு நேர் உச்சியில் இருக்கும். இதனால் மதிய நேரத்தில் நாம் சூரிய ஒளியில் நின்றால் நமது நிழல் நமது பாதத்தின் கீழ் நேராக விழும். அதனால் நமது நிழலை நாம் பார்க்க முடியாது. இந்த நிழ்வுக்கு “நிழலில்லா நாள்’  என்று பெயர். மற்ற நாள்களில் நமது நிழல், நமது பின்புறம் அல்லது முன்புறம் விழுவதை நாம் பார்க்க முடியும். சென்னையில் இந்த நாள், ஏப்.24-ஆம் தேதி நிகழ்கிறது.

இந்த நாளில், சென்னையில் வசிப்போர் மதிய வேளையில் சூரியன் உச்சிக்கு வரும்போது நமது நிழலை நாம் பார்க்க முடியாது. அதற்குப் பிறகு சூரியன் மேற்கு நோக்கி நகரும்போது, நமது நிழலைப் பார்க்க முடியும்.

இதுபோன்ற நிகழ்வு ஏன் ஏற்படுகிறது என்பது குறித்து பள்ளி மாணவர்கள் அறிவியல் பூர்வமாகத் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மய்யத்தின் சார்பில் சென்னை காந்தி மண்டபம் சாலையில் உள்ள பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மய்யத்தில் ஏப்.15-ஆம் தேதி ஒரு கருத்தரங்கம் மற்றும் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அன்றைய தினம் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை கருத்தரங்கம், பயிற்சி நடைபெறும். இதில் 7-ஆம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம். இது தொடர்பாக கூடுதல் தகவல்களைப் பெற விரும்புவோர் 044-24410025 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மய்யம் தகவல் தெரிவித்துள்ளது.

- விடுதலை நாளேடு, 9.4.19

செவ்வாய், 16 ஏப்ரல், 2019

கருந்துளையை முதல் முறையாக படமெடுத்து விஞ்ஞானிகள் சாதனை



அரிசோனா, ஏப். 11- அண்ட வெளியில் காணப்படும் கருந்துளையை முதல் முறையாகப் படமெடுத்து, விண்வெளி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

அண்டவெளியில், மிகவும் சக்தி வாய்ந்த ஈர்ப்பு விசையைக் கொண்ட பகுதிகளை 18-ஆம் நூற்றாண்டே கண்டுபிடித்த விஞ்ஞானிகள், அவற்றை கருப்பு நட்சத்திரம் என்று அழைத்து வந்தனர்.

அந்த கோளவடிமான ஈர்ப்பு எல்லைக்குள் செல்லும் விண் துகள்கள், ஒளி போன்ற மின்காந்த கதிர்வீச்சுகள் கூட, ஊடுருவி வெளியேற முடியாத அளவுக்கு அவற்றின் ஈர்ப்பு சக்தி மிக வீரிய மாக இருந்ததால், அவற்றின் உருவம் எத்தகைய தொலைநோக்கிகள் மூலமும் பார்க்க முடியாது; எல்லைக்குள் என்ன நடக்கிறது என்பதை எந்த வித கருவியைக் கொண்டும் அறிந்து கொள்ள முடியாது.

எனினும், அவற்றின் ஈர்ப்பு சக்தி காரணமாக எல்லைக்கு அப்பால் நிகழும் நிகழ்வுகளைக் கொண்டு, அவற்றின் இருப்பிடம் குறித்து அறிந்து கொள்ள முடியும். உதாரணத்துக்கு, குறிப்பிட்ட பகுதியை விண்மீன்கள் சுற்றி வந்தால், அந்தப் பகுதியில் அதீத சக்தி வாய்ந்த ஈர்ப்புவிசைப் பகுதி இருப்பதைக் கண்டறியலாம்.

எனினும், அவற்றைப் பார்க்க முடியாது என்பதால் அதற்கு கருந்துளை என்று விஞ்ஞானிகள் பெயரிட்டு அழைத்தனர்.

இதுவரை கருந்துளை குறித்த கற்பனைப் படங்களே வரை யப்பட்டு வந்த நிலையில், பெரும் முயற்சிக்குப் பிறகு அண்ட வெளியில் உள்ள மேசியர்-87 என்ற பால்வெளி மண்டலத்தில் உள்ள எம்87 என்றழைக்கப்படும் கருந்துளையை விஞ்ஞானிகள் முதல்முறையாக படம் பிடித்துள்ளனர்.

பூமியிலிருந்து 5 கோடி ஒளிவருட தொலைவில் உள்ள அந்தக் கருந்துளையைப் படம் பிடிக்கும் அளவுக்கு மிகப் பெரிய தொலை நோக்கியை உருவாக்க முடியாது என்பதால், அமெரிக்காவின் கவாய், அரிசோனா பகுதிகளிலும், ஸ்பெயின், மெக்சிகோ, சிலி உள்ளிட்ட நாடுகளிலும் உள்ள தொலைநோக்கிகளின் மூலம் பல நாள்களாக கவனித்து எடுக்கப்பட்ட படங்களை ஒருங்கிணைந்து, எம்87 கருந்துளையின் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

அதையடுத்து, இதுவரை கற்பனையில் மட்டுமே வரையப்பட்டு வந்த கருந்துளை, உண்மையில் எப்படி இருக்கும் என்பதை முதல் முறையாகப் பார்க்க முடிந்துள்ளது. விண்வெளி ஆய்வில் இந்த சாதனை ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

- விடுதலை நாளேடு, 11.4.19

திங்கள், 1 ஏப்ரல், 2019

சூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை 4,000 கோள்கள் கண்டுபிடிப்பு

லண்டன், மார்ச் 31- பூமி ஓர் அங் கமாக இருக்கும் சூரிய மண்ட லத்துக்கு வெளியே இதுவரை 4,000 கோள்கள் கண்டுபிடிக் கப்பட்டுள்ளன.

பூமியில் மட்டுமல்லாது விண்ணிலும் நிலை நிறுத்தப் பட்டுள்ள தொலைநோக்கிகள் மூலம் இந்த கோள்கள் கண்ட றியப்பட்டுள்ளன.

1992ஆம் ஆண்டு அலெக்ஸ் சாண்டர் வோல்ஸ்சான் மற்றும் டேல் ஃபிரெய்ல் ஆகியோர் ஒரு நியூட்ரான் நட்சத்திரத்தை சுற்றி வரும் கோள்களைக் கண் டறிந்ததே நாம் இருக்கும் சூரிய மண்டலத்துக்கு வெளியே கோள்கள் கண்டறியப்பட்டது முதல் முறையாகும்.

அய்ரோப்பாவின் 'தி எக் ஸோசோலார் பிளானட்ஸ் என்சைக்ளோபீடியா' இதுவரை 4,000க்கும் மேலான கோள் களை, சூரிய மண்டலத்துக்கு வெளியே இருப்பதை உறுதிப் படுத்தி ஆவணப்படுத்தியுள் ளது.

அமெரிக்காவின் நாசா 4,000 எனும் இலக்கை அடைய இன் னும் 74 கோள்களை ஆவணப் படுத்த வேண்டும்.

-  விடுதலை நாளேடு, 31.3.19