திங்கள், 1 ஏப்ரல், 2019

சூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை 4,000 கோள்கள் கண்டுபிடிப்பு

லண்டன், மார்ச் 31- பூமி ஓர் அங் கமாக இருக்கும் சூரிய மண்ட லத்துக்கு வெளியே இதுவரை 4,000 கோள்கள் கண்டுபிடிக் கப்பட்டுள்ளன.

பூமியில் மட்டுமல்லாது விண்ணிலும் நிலை நிறுத்தப் பட்டுள்ள தொலைநோக்கிகள் மூலம் இந்த கோள்கள் கண்ட றியப்பட்டுள்ளன.

1992ஆம் ஆண்டு அலெக்ஸ் சாண்டர் வோல்ஸ்சான் மற்றும் டேல் ஃபிரெய்ல் ஆகியோர் ஒரு நியூட்ரான் நட்சத்திரத்தை சுற்றி வரும் கோள்களைக் கண் டறிந்ததே நாம் இருக்கும் சூரிய மண்டலத்துக்கு வெளியே கோள்கள் கண்டறியப்பட்டது முதல் முறையாகும்.

அய்ரோப்பாவின் 'தி எக் ஸோசோலார் பிளானட்ஸ் என்சைக்ளோபீடியா' இதுவரை 4,000க்கும் மேலான கோள் களை, சூரிய மண்டலத்துக்கு வெளியே இருப்பதை உறுதிப் படுத்தி ஆவணப்படுத்தியுள் ளது.

அமெரிக்காவின் நாசா 4,000 எனும் இலக்கை அடைய இன் னும் 74 கோள்களை ஆவணப் படுத்த வேண்டும்.

-  விடுதலை நாளேடு, 31.3.19

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக