வியாழன், 19 மே, 2022

உயிரை எடுக்கக் கூடிய சயனைடே பூமியில் உயிர்கள் உருவாக உதவியது: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

 

லண்டன்பிப். 17- புதிய ஆராய்ச்சி யில் ,  கொடிய சயனைடு  கலவைஉண்மையில்பூமியில் உயிர்கள் உருவாக உதவியது என்று கண்டறியப்பட்டு உள்ளது.

விஞ்ஞானிகள் சயனை டைப் பயன்படுத்தி ஓர் இரசா யன எதிர்வினையை உருவாக்கி யுள்ளனர்,சயனைடு 400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் கரிம உயிர்களை உருவாக்க உதவியது என கண்டறிந்து உள்ளனர்.

சயனைடு என்பது கார்பன் மற்றும் நைட்ரஜன் அணுக் களால் உருவானதுஇதன் அறிவியல் பெயர் சிஎச் (சிபிஇதனை உட்கொள்ளும் நபர் முதலில் தலைவலிஎரிச்சல்இதய துடிப்பின் வேகம் அதி கரிப்புவாந்தி முதலியவற்றை சந்திக்கநேரிடும்பின்னர் குறைந்த இரத்த அழுத்தம்மெதுவான இதய துடிப்புமாரடைப்பு  ஏற்பட்டு உயிரி ழக்க நேரிடும்.

இதனை உட்கொண்ட நபரை காப்பற்ற இயலாதுஒரு வேளை காப்பாற்றினாலும் வாழ்நாள் முழுவதும் நரம்பு சம்பந்தபட்ட நோய்களால் அவதிப் பட நேரிடும்.

இதற்கு காரணம் அதில் கலந் துள்ள ஹைட்ரஜன் சயனைடு வாயு மற்றும் ஹைட்ரஜன் உப்புகள்.

இந்த ஆபத்தான வாயுக்கள் சயனைடு குப்பியில் மட்டுமில் லால் எரிகின்ற வீடுமெட்டல் புகைகளில் இருந்தும் வருகின் றது

சயனைடு எனபது பல வடிவங்களில் இருக்கக்கூடிய ஒரு கொடிய இரசாயனம்இர சாயனம் உயிரை போக்கக் கூடி யதாக இருந்தாலும் சயனைடு  உயிருக்கு  தேவையான மூலக் கூறுகளை உருவாக்குவதற்கு ஓர் அத்தியாவசிய கலவை  என விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.

மேலும்வேற்றுக் கோள் களில் அதற்கான அறிகுறிக ளைத் தேடுவதுபிரபஞ்சத்தில் வேறு இடங்களில் உள்ள உயிர் களைக் கண்டறியவும் உதவும் என்று ஸ்க்ரிப்ஸ் ஆராய்ச்சியின் வேதியியலாளர்கள் கண்டறிந் துள்ளனர்.

நைட்ரஜன் அணுவுடன் பிணைக்கப்பட்ட கார்பன் அணுவைக் கொண்ட கலவைகார்பன் டை ஆக்சைடில் இருந்து கார்பன் அடிப்படையிலான சேர்மங்களை உரு வாக்கும் பூமியில் சில முதல் வளர்சிதை மாற்ற எதிர்வினை களை ஏற்படுத்தியிருக்கலாம் என்று குழு கண்டுபிடித்தது.

வளர்சிதை மாற்ற எதிர் வினைகள் என்பன உணவில் இருந்து ஆற்றலை உருவாக்கும் எதிர்வினைகள் மட்டுமின்றி உயிரைத் தக்கவைக்கவும் அவ சியமானதாகும்.

இதுகுறித்து கூறிய ஆராய்ச் சியாளர்கள் 'சயனைடு பூமியில் உயிர்களின் தோற்றத்தில் முக்கிய பங்கு வகித்திருக்கலாம்மேலும் வேற்றுக் கோள் வாசி களை கண்டறிய நமக்கு  உதவ லாம்என்று கூறி உள்ளனர்.

ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சியின் வேதியியல் இணைப் பேராசிரி யரும்ஆய்வின் முதன்மை ஆசி ரியருமான டாக்டர் ராமநாரா யணன் கிருஷ்ணமூர்த்தி கூறிய தாவது:-

பூமியின் ஆரம்பத்திலோ அல்லது பிற கோள்களிலோ - நாம் உயிர் வாழ்வின் அறிகுறி களைத் தேடும்போது - நாம் அறிந்த உயிர் வேதியியலின் அடிப்படையில் தேடுகிறோம்.

இதே வளர்சிதை மாற்ற எதிர்வினைகள் சயனைடால் நிகழ்ந்து இருக்கலாம் என்பது வாழ்க்கை மிகவும் வித்தியாச மாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது என கூறினார்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக