வியாழன், 17 பிப்ரவரி, 2022

உயிர்கள் வாழத் தகுதியான கோள் கண்டுபிடிப்பு


லண்டன், பிப். 14-- உயிர்கள் வாழக் கூடிய வேறு, கோள்கள் இருக் கின்றனவா என்று விஞ்ஞானி கள் தொடர்ந்து ஆராய்ச்சி களை மேற்கொண்டு வருகின்ற னர். இந்தநிலையில் உயிர்கள் வாழ தகுதியான ஒரு கோள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள தாக விஞ்ஞானிகள் தெரிவித் தனர்.

லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் பேராசிரியர் ஜேபரிகி தலைமையிலான ஆய்வு குழுவினர் வெளியிட் டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

“ஒயிட்” டார்ப் என்று அழைக்கப்படும் நட்சத் திரத்தை உயிர்கள் வாழும் சூழ் நிலை கொண்டுள்ள கோள் சுற்றி வருவது கண்டு பிடிக்கப் படுவது இதுவே முதல் முறை யாகும்.

இந்தக் கோள் நட்சத்திரத் தில் உயிர்கள் வாழக் கூடிய மண்டலத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அங்கு உயிர்கள் வாழ முடியாத அளவுக்கு மிகவும் குளிராகவோ அல்லது அதிக வெப்பமாகவோ இருக் காது.

பூமியில் இருந்து 117 ஒளி ஆண்டு தொலைவில் இருக்கும் இந்த கோளுக்கும் அதன் நட்சத்திரத்துக்கும் இருக்கும் தூரம், பூமிக்கும் சூரியனுக்கும் இடையே இருக்கும் தொலைவை விட 60 மடங்கு குறைவாகும்.

உயிர்கள் வாழக்கூடிய மண் டலம் என்பது ஒரு நட்சத் திரத்தில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் அமைந்துள்ள பகுதியாகும். இந்த பகுதியில் அமைந்துள்ள கோள்கள் திரவ நீர் இருக்க வாய்ப்புள்ள சூழ் நிலையை கொண்டிருக்கும். எனவே உயிர்கள் வாழ இது உதவும்.

நட்சத்திரத்துக்கு மிகவும் அருகில் ஒரு கோள் இருந்தால் அது மிகவும் சூடாக இருக்கும். அதிக தொலைவில் இருந்தால் மிக குளிராக இருக்கும். தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ள கோள் இருக்கும் மண்ட லம் உயிர்கள் வாழ மிக சரியாக இருக்கும் பகுதியில் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேராசிரியர் ஜேபரிகி கூறும்போது, “இந்த கணிப்பு வானியலாளர்களுக்கு முற்றிலும் புதியது” என்றார் பேராசிரியர் ஜேபரிகி.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக