செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

43 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நான்கு கால்கள் கொண்ட திமிங்கிலம்


 இன்றைய வட ஆப்பிரிக்கப் பகுதி முன்பு அட்லாண்டிக் கடலுக்குள் மூழ்கி இருந்தது, காலப்போக்கில் நிலத்தட்டுக்களின் நகர்வால் இன்று ஆப்பிரிக்க கண்டம் உருவாகியுள்ளது, அப்படி நகர்வதற்கு முன்பு கடலுக்குள் வட ஆப்பிரிக்க பகுதி இருந்த போது கால்களைக் கொண்ட திமிங்கிலம் போன்ற பல உயிரினங்கள் வாழ்ந்திருந்தது.

அதில் ஒன்றின் புதைபடிமம் எகிப்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.   சுமார் 600 கிலோகிராம் எடைகொண்ட அந்தத் திமிங்கிலம், 3 மீட்டர் நீளம் கொண்ட உயிரினமாக இருந்திருக்கிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அந்தத் திமிங்கிலத்தால் நிலத்தில் முதலைகள் போல் நடக்கவும் முடியும், நீரில் நீந்தவும் முடியும்.  இதற்கு முன், 2011ஆம் ஆண்டில் பெருவில் (peru) 43 மில்லியன் ஆண்டு பழைமைவாய்ந்த, 4 கால்கள் கொண்ட திமிங்கிலத்தின் புதைபொருள் கண்டுபிடிக்கப்பட்டது, இந்த திமிங்கிலங்களின் காலம் - பூக்கும் தாவரங்களும், குட்டை செடிகளும் இல்லாத காலகட்டம். மேலும் தற்போது உள்ள மிகச்சிறிய பூச்சியினங்கள் இக்காலகட்டத்தில் பல மீட்டர் உயரமாகவும் நீளமாகவும் வாழ்ந்தது வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக