ஞாயிறு, 13 டிசம்பர், 2015

பூமியின் தட்பவெப்ப நிலையின் பின்னணி



உலகில் இன்று வெப்பப் பிரதேசங் களாக உள்ள சில பகுதிகள் பழங் காலத் தில் குளிர்ப் பிரதேசங்களாக இருந்து பின்னர் மாற்றம் அடைந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருது கின்றனர். ஆனால் ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற பகுதிகள் எப்போதுமே ஒரே மாதிரியான வெப்பமான பிரதேசமா கவே இருந்து வந்திருப்பதாக ஆராய்ச்சி யாளர்கள் தீர்மானிக்கின்றனர்.
பூமியின் பல்வேறு பகுதிகளில் நிலவும் தட்பவெப்பநிலை குறித்து புவியியல் அறிஞர்களால் பல்வேறு கருத்துகள் கூறப்படுகின்றன.
பூமியின் மீது படர்ந்து படிந்து கிடக்கும் பனிப் போர்வையின் இடமாற்ற மே அந்தந்தப் பிரதேசத்தின் தட்ப வெப்பநிலையைப் பிரதிபலிக்கிறது என்பது ஒரு கருத்து. பூமியின் மீது படிந்துள்ள பனிக்கட்டியின் எடை மில்லியன் கன மைல்களாகும். இது பூமியின் மொத்தப் பரப்பில் 10 சதவீதம்.
ஆல்ப்ஸ் மலை மீதுள்ள பனிக் கூரையை புவியியல் அறிஞர்கள் நெடுங் காலமாக ஆராய்ச்சி செய்து வருகின்ற னர். இம்மலை மீதுள்ள பனிக்கட்டியின் தன்மையை ஒத்த பனிக்கட்டிகள் உலகின் பிற பகுதிகளிலும் காணப்படுவதைக் கண்டு அவர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.
ஓரிடத்தில் இருக்கும் பிரம்மாண்ட மான பனிப் படிவங்கள் இடம் விட்டு இடம் நகரக்கூடும் என்றும், அவ்வாறு நகர்ந்து செல்லும்போது ஆங்காங்கே பிரம்மாண்ட பனிப் பாறைகளை விட்டுச் சென்றிருக்க வேண்டும் என்றும் அறிஞர் கள் கருதுகிறார்கள்.
இவ்வாறு பனிப் படலம் இடம் விட்டு இடம் மாறும்போது பனிப்படலம் போய்ச் சேர்ந்த இடம் குளிர்ச்சித் தன்மையையும், அது இடம் விட்டு நகர்ந்த பகுதி வெப்பத் தன்மையையும் பெற்றிருக்கக் கூடும் என்றும் அறிஞர்கள் நினைக்கின்றனர்.
பனிப் படலங்கள் இடம்பெயரும் போது ஆங்காங்கே பெரிய ஏரிகள் தோன்றின. அம்மாதிரி ஏரிகள் கனடா விலும், அமெரிக்காவிலும் உள்ளன. பல பெரிய ஏரிகள், பனிப்படலங்கள் விட்டுச் சென்ற சின்னங்கள் என்றே கருதப் படுகின்றன. பனிப்போர்வையின் வரு கையும், விலகலும் தட்பவெப்பநிலை யை மட்டுமல்லாமல் கண்டங்களின் உருவங் களையும் மாற்றி அமைக்கின்றன. உதாரணமாக, அண்டார்டிகாவிலும், கிரீன்லாந்திலும் உள்ள பனிப்பாறைகள் அனைத்தும் உருகத் தொடங்கினால் கடல் மட்டமானது 200 அடிக்கு மேல் உயர்ந்துவிடும்.அப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்பட்டால் கடல் ஓரத்தில் உள்ள அனைத்து நாடுகளையும் மூழ்கடித்துவிடும்.
-விடுதலை,12.6.14

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக