புதன், 11 நவம்பர், 2015

பழங்கள் பிறந்த கதை


ஆரம்ப காலத்தில் அதாவது சுமார் 60 கோடி வருடங்களுக்கு முன்பு, விதைகளின் மேல் சதை பற்றில்லாமல் கரடு முரடான கரோட்டின் எனப்படும் ஒரு வகை பட்டைமட்டுமே இருந்தது. அது டைனோசர்களின் காலம் அங்கு பழங்களை சாப்பிட அதிக உயிரினமில்லை, அப்போது உயிரினங்களில் இரண்டு வகை மட்டுமே ஒன்று தாவரஉண்ணி மற்றொன்று மாமிச உண்ணி, தாவர உண்ணிகளிடம் இருந்து தாவரங்கள் தன்னை  காப்பாற்றிக்கொள்ள எந்த அளவு உய்ரவேண்டுமே அந்த அளவு உயர நேர்ந்தது, அன்றைய காலகட்டங்களில் சாதாரண செடிகள் கூட சென்னை எல்.அய்.சி. கட்டிடத்தை மிஞ்சும் உயரம் வளரவேண்டி இருந்தது, விண்கற்களின் தாக்குதலால் பூமி நிலை குலைந்தது, நடமாடும் உயிரினங்கள் தாவரங்கள் 90 அழிந்தது, பூமி தனது பாதையில் மாற்றம் காண நேர்ந்தது விளைவு துருவங்கள் உருவாகின, துருவங்கள் உருவான பிறகு கால நிலை மாற்றம், புதியவகை தாவர உயிரினம் தோன்றியது சுமார் 30 கோடி வருடங்கள் ஓடிவிட்டது,  தாவரங்கள் தங்களை செடிகளாக, புதர்களாக, கொடிகளாக மரங்காளாக மாற்றிக்கொண்டு வாழும் சுழலில் சிறிய சிறிய இடம்பெயர் உயிரினங்கள் (பாலூட்டி, பூச்சி, பறவை, ஊர்வன) தோன்றின.இந்த புதிய உயிரினங்களை தங்கள்  இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் தாவரங்களுக்கு ஏற்பட்டது., அந்த உயிரினங்கள் வண்ணங்களை பகுப்பாராயும் தன்மை கொண்டவை இதை அறிந்து கொண்ட தாவரங்கள் ஒரு புதிய யுக்தியை கையாண்டது, வண்ண வண்ண பூக்கள், சதைப்பற்றுள்ள காய்களை உற்பத்தி செய்தது, தான் தயாரா கிவிட்டேன் என்ற சமிக்ஞைக்காக தன்னுடைய மேற்புற நிறத்தை மாற்றியது.
இதுவரை பச்சை பச்சையான நிறத்தை பார்த்து வந்த உயிரினங்கள் புதியதாக பலப்பல வண்ணங்களில் வித்தியாசமாக தெரிய அவற்றை உண்ணுவதற்கு நடமாடும் உயிரினங்கள்  அதிக ஆர்வம் காட்டியது, முன்பு கடினமான கரோட்டின், விதை உறையாக மாறியது, அதன் மேல் இனிப்பு புளிப்பு இதர சுவைகளில் ஒரு பொருளை தாவரம் உற்பத்தி செய்தது காரணம் அதை உண்டு விட்டு விதைகளை எறிந்து விடவேண்டும் இயற்கையின் இந்த அற்புத தொழில் நுட்பம் இந்த பூமி எங்கும் தாவரம் பரவ காரணமாகியது. இது பழங்கள் பிறந்த கதை,
விடுதலை ஞா.ம.,23.2.13
குறிப்பு -  விளக்கவுரையில்  கருத்து மாறுபாடு உண்டு.                                                             

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக