திங்கள், 29 மே, 2023

மனிதப் பிரதி எடுத்தல் (குலோன்) ஆபத்தை உருவாக்குமா?

  

மனிதப் பிரதி எடுத்தல் (குலோன்) ஆபத்தை உருவாக்குமா?


.com/


நாம் 21-ஆம் நூற்றாண்டில் வாழ்ந் துகொண்டு இருக்கிறோம், மனித இனம் அதிவேகமான அறிவியல் தொழில்நுட்ப யுகத்தில் பயணித்துக்கொண்டு இருக்கிறது.  இந்த தொழில் நுட்பம் மனிதர்களுக்கு பல் வேறு வழிகளில் அமைதியான வாழ்க்கை யைத் தருகிறது, ஆனால் இந்த அறிவியல் தொழில்நுட்பத்தில் இன்றளவும் மனித இனத்தை பிரதிஎடுத்தல் எனப்படும் குளோ னிங் தொடர்பாக பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறோம்.


 நாம் தற்போது இந்த உயிர்பிரதி எடுத்தல் முறையில் மனிதர்களுக்குத் தான் சில விதிமுறைச் சிக்கல்கள், பல்வேறு மரபணுவிதி முரண்பாடுகள் உள்ளன. ஆனால்  உயிர் பிரதி எடுத்தல் முறையில் ஆடு, பசு, நாய் மற்றும் சமீபத்தில் சீனா குரங்குகளைக் கூட உயிர்பிரதி எடுத்தல் முறையில் உருவாக்கி விட்டது.  ஆனால் இதே போன்று மனித உயிர் பிரதிஎடுத்தல் எளிதானதல்ல.


நம்முள் சில கேள்விகள் எழலாம் அதா வது உண்மையிலேயே மனிதப் பிரதிஎடுத்தல் சிக்கலான ஒன்றா? அல்லது நாம் மனிதர் களைத் தவிர இதர உயிரினங்களில் மட்டுமே இந்த சோதனையைச் செய்துகாட்டும் நிலை உள்ளதா? என்று கேட்கலாம்.


 முதலில் சில கேள்விகளுக்கு பதிலைத் தேடுவோம், பலர் தற்போது உயிர்பிரதி எடுத்தல் குறித்து தவறான கருத்தைக் கொண்டுள்ளனர். மரபணுப் பிரதி எடுத்தல் என்பது பெற்றோர்களில் அடையாளத்தை அழிப்பது அல்ல, இதிலும் அறிவியல் இரண்டு கருத்துக்களை கொண்டுள்ளது.


  முக்கியமாக உயிர்ப்பிரதி எடுத்தல் என்பது ஒரே மாதிரியாக மற்றொன்றை உரு வாக்குவது ஆகும். அதாவது  கருமுட்டையில் இருந்து நேரடியாக பிரதி எடுப்பது இது நடக்குமா என்றால் ஆம் இதுவரை பல உயிர்பிரதி எடுத்தல் ஒரு உயிரின் அதாவது தாயின் கருமுட்டையை மட்டுமே வைத்து அதில் உள்ள செல்களைக் கொண்டு உயிரை உருவாக்கியுள்ளார்கள். ஆனால் ஆண் பெண் உயிரினச்சேர்க்கை அதாவது இரண்டு வேறுபட்ட மரபணுக்களைக் கொண்டு உருவானதுதான் மனித உயிரினம். இவ்வாறு பெறும் மரபணு உண்மையானது ஆகும். ஆனால் இந்த விதியிலிருந்து மாறுபட்டு மரபணுப் பிரதியை உருவாக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம்.


 முக்கியமாக மனித உயிர்பிரதி எடுத்தல் என்பது பெற்றோரின் மரபணுக்கலப்பில் வேறு வேறு சூழலில் இணைந்து உருவானது, இது மனித இனத்தின் தனித்தன்மையை பாதிக்காது. 


ஒரே மனிதர் அதாவது தாயின் கருமுட் டையும் தாயின் உடல்செல்லும் இணைந்து மனிதர் உருவாகும் போது அங்கு முழுமை பெற்ற மனிதத்தன்மை  குறைவாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.  இங்கு டி என் ஏ தகவல் பரிமாற்றத்தில் குறைபாடு உரு வாகும் இது எதிர்கால மனித இனத்திற்கே பேராபத்தாக அமையும். குளோன் மூலம் உருவான பல உயிர்கள் ஆடு, மாடு, குரங்கு, பன்றி, கரடி உள்ளிட்ட பல மலட்டுத்தன்மை உடையதாகவும், தன்னை ஒத்த பிற உயிர்களுடன் இணக்கமாக இல்லாமலும் இருப்பதே இதற்கு எடுத்துக்காட்டு ஆகும்.


இது மரபணுக்களின் மூலம் ஏற்படும் சிக்கல் ஆகும். அதே நேரத்தில் குழந்தைகள் வளரும் விதம் பல்வேறு சூழல்களில் கற்றுக் கொள்வது போன்றவற்றின் மூலம் குழந்தை களின் குணத்தின் தன்மையை மாற்ற முடியும் என்றும் கருதப்படுகிறது.  மனிதப் பிரதி எடுத் தல் என்பது ஒரு தாயிடமிருந்து உருவாக்குவது அதாவது ஒத்த குணங்களைக் கொண்ட மரபணுக்களின் பிரதிமட்டுமே, இதில் அதிக விபரங்கள் இருக்க வாய்ப்பில்லை.


 இது தொடர்பாக அறிவியலாளர்கள் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தி இந்தச் சிக்கலைத் தீர்க்கும் நடைமுறைக் குறித்து ஆலோசித்து வருகின்றனர். மேலும் கொள்கை ரீதியிலான பல்வேறுச் சிக்கல் களும் இதில் உள்ளது. இங்கு முக்கியமாக நமக்கு தெரியவேண்டியது என்னவென்றால் உயிரினங்கள் அனைத்திற்கு வாழ்வதற்கான உரிமைகள் உண்டு. ஆனால் மனிதப்பிரதி எடுத்தல் மூலம் தனித்து உயிர்வாழும் தன்மை சீரழிந்துவிடக்கூடாது. மேலும் மனிதப்பிரதி எடுத்தல் மூலம் உருவாகும் குழந்தை தன்னை தனித்தன்மையானவர் என்று கருதாதவாறு இருக்கவேண்டும், ஒருவேளை மனிதப்பிர தியின் மூலம் உருவாகும் குழந்தை தன்னை தனித்தன்மையானவர் என்று உணர்ந்து கொண்டால்?


 அல்லது மனிதப்பிரதி என்பது உடலுறுப் புகளுக்காக வளர்க்கப்படும் ஒரு உயிரின மாக சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டால்?


மனிதப்பிரதி மூலம் உருவாகும் உயிரி னங்கள் மருத்துவமனை என்னும் சிறைச் சாலைக்குள் வளர்க்கப்படும் ஆய்வு உயிரி னமாக இருந்து அவற்றில் உடல் உறுப்புக் களை  விற்பனைக்காக வளர்க்கப்படும் அபா யமும் உள்ளது.


 முக்கியமாக  மனிதப்பிரதி எடுத்தல் மூலம் உருவாக்கப்படும் மனிதர்கள் ஆரோக்கிய மானவர்களாக இருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு. மனிதர்கள் அல்லாத இதர உயிர் பிரதிகள் ஏன் உருவாக்கினோம் என்றால் அவைகளின் மூளைத்திறன் மிகக்குறைவான தாக உள்ளது அவற்றை நாம் எளிதாக பராமரிக்க முடியும், ஆனால் மனிதப்பிரதிகள் மூலம் ஆரோக்கியமற்ற மனித இனத்தை நாம் உருவாக்குதல் மிகவும் தவறானதாகும்.


 நீங்கள் உங்களைப் போலவே அல்லது உங்கள் நண்பர்களைப் போலவே ஓர் உயிரை விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொண்டால் அந்த பிரதி நண்பரோ அல்லது உங்கள் பிரதியோ ஆரோக்கியமற்ற வாழ்க்கையை அபாயகரமான வாழ்நிலைச்சூழலில் அவர் கள் வாழ்வார்கள். இதை நாம் தெரிந்தே ஓர் உயிரைப் படைக்க துணை போக மாட்டோம். உயிரினங்கள் அனைத்திற்கும் வாழும் உரிமை உள்ளது, முக்கியமாக ஆரோக் கியமான சூழலில் வாழும் உரிமை உள்ளது.


 மனிதர்ப்பிரதி என்பது ஒரு நல்ல உயிரியல் சோதனை அல்ல, எதிர்காலத்தில் மனிதப்பிரதி எடுத்தல் மூலம் உருவாகும் மனிதர்களால் ஏற்படும் சிக்கல்கள், மனித இனத்திற்கே அபாயகரமான சூழலை உருவாக்கிவிடும் ஆபத்து உள்ளது. ஆகவே  முக்கியமாக மனிதர்களாகிய நாம் இயற்கை கொடுத்த உயிரின பரிணாமத்தின் பாதையி லேயே செல்வோம். மனிதப்பிரதி என்ற ஒன்றின் மூலம் மனித இனத்தை அழிவில் தள்ளாமல் பாதுகாப்போம்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக