செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

நவீன பாலூட்டிகளின் தோற்றம்16 கோடி ஆண்டுகளுக்கு முன் (படிமவளர்ச்சி) -12

தோழர்களே நவீன பாலூட்டிகளின் தோற்றம்16 கோடி ஆண்டுகளுக்கு முன் தொடங்கியதைபுதை படிவ சான்றுகள் உறுதி செய்கின்றன
விலங்கியல் குறித்த 12வது பதிவு


இந்த பாலூட்டிகளின் உருவம் மிகவும் சிறியதாகவும் ,இவை சிறு பூச்சிகளை உண்ணும் அளவுக்கு உருவ அமைப்பு கொண்டதாகவும் இருந்தது
இந்த சிறிய உருவ அமைப்புதான் 65 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் பூமியில் விழுந்து பெரும்நாசத்தை விளைவித்து விண் கல்லின் தாக்கத்தில்டைனோசர் கூட்டத்தை பூண்டோடு அழித்த நிகழ்வில் இருந்து தப்பி வாழ வழி செய்தது
மேற்கண்ட சிறிய உதாரணம் போதும் வலியது வாழும் என்ற கூற்றை பொய்யாக்க.
ஆனால் இப்பாலூட்டிகள் ஆஸ்திரேலிய கங்காருக்களைப்போல் மார்சுபியர்ஸ் வகையை சேர்ந்தவை அதாவது குட்டியை ஈன்று அவை நன்கு வளரும் வரைவயிற்றில் ஒரு பைபோன்ற அமைப்பில் பாதுகாத்து வளர்ப்பதாகும்
இந்த பாலூட்டிகள் தான் இன்றைய பாலூட்டிகளின் பொது மூதாதை என நம்புகிறார்கள் ஆனால் இது நம்பும் படி இல்லை
இயற்கையில் எங்கும் பரிணாம வளர்ச்சியில் ஒரேவகை விலங்குகள் மட்டும் உருவாது இல்லை
குறிப்பாக நீரில் இருந்து இருவாழ்விகளோ ஊர்வனவோ தோன்றும்போது அவை ஒரேவகையாக இருக்கவில்லை பல்வேறு வகையாகவும் பல் வேறு பண்புகளை கொண்டதாகவுமே பல்கி பெருகின
எனவே பாலூட்டிகள் அனைத்தும் ஒரேவகையான விலங்கில் இருந்து தோன்றின என்பது நம்புவதற்கு கடினமானது புதிய ஆதாரங்கள் விரைவில் கண்டுபிடிக்கப்படலாம் என நம்புகிறேன்
படத்தில் காணப்படும் சிங்கம் 1கோடி ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய சிங்கம் ,இவை பல்வேறு மாற்றங்களை இக்காலத்தில் அடைந்து பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இக்கால சிங்கங்களுக்கு இடம் விட்டு நகர்ந்தன
சாதாரண குரங்கு வகைகள் சுமார் நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றின
இந்த சாதாரண குரங்குகளில் இருந்து பபூன் போன்ற பெரும் குரங்குகள் இரண்டு கோடி ஆண்டுக்கு முன் பிரிந்தன .
இந்த பெரும் குரங்கு வகைகளில் இருந்து பிரிந்தவைதான் கொரில்லா, கிப்பான் , உராஙுடான்,கொரில்லா சிம்பன்சி போன்றவை
இந்த பெரு மனித குரங்குகளுக்கும் ஆரம்பகாலத்தில் உருவான வால் அமைப்பு கொண்ட குரங்குகளுக்கும் மரபியல் தொடர்ச்சி நிலவுவதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன
இந்த கொரில்லா வகை குரங்குகளும் சிம்பன்சி வகை குரங்குகளும் ஏறத்தாழஒன்றரை கோடி ஆண்டுகளுக்கு முன்னால் பிரிந்தனர்
இந்த சிம்பன்சி கூட்டத்தில் இருந்து மனிதனின் மூதாதைகள் சுமார் 70லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் பிரிந்தார்கள் என்பதை பாசில்கள் உறுதி செய்கிறது ஆனால்?
மரபியல் ஆய்வுகள் 40 லட்சம்ஆண்டுகளுக்கு முன்புதான் சிம்பன்சி குரங்கில் இருந்து மனிதனின் மூதாதை பிரிந்ததாக காட்டுகிறது
ஆய்வாளர்கள் பெரும் குழப்பத்துக்கு ஆளானார்கள் மீண்டும்பலர் குரங்குகளின் வாழ்வை ஆய்வு செய்தார்கள்
அதில் ஒரு புதிய விசயத்தை கண்டு பிடித்தார்கள் அது பபூன் போன்ற குரங்குகள் தங்கள் கூட்டத்திலிருந்து 30 அல்லது 40 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த குரங்குகள் கூட்டத்துடன் பாலியல் உறவு கொண்டு தம் சந்ததிகளை உருவாக்கும் வழக்கத்தை கொண்டு இருக்கின்றன என்ற உண்மையை கண்டுபிடித்தார்கள்
இதுபோலவே மனிதனின் மூதாதைகளும்சிம்பன்சி கூட்டத்தில் இருந்து பிரிந்த போதும் அவற்றுடன் நிண்ட நெடுங்காலம் பாலியல் தொடர்புகளை கொண்டிருக்கவேண்டும் எனும் முடிவுக்கு வந்தார்கள்
இப்படியாக மனித மண்டையோட்டு எலும்புகள் நமக்கு அறிவித்த காலத்துக்கும் ஜீன் ஆய்வுகள் நமக்கு அறிவித்த வேறுபட்ட கால அளவுக்கான முரண்பாடு சரி செய்யப்பட்டது
கொரில்லாவின் ஜீன் தொகுதி நமது உடம்பில் அரை சதவீதமும் அதாவது சிம்பன்சியின் ஜீன்கள் ஒரு சதவீதமும் நம் உடலில் கலந்துள்ளன
மொத்தமாக மனிதனின் 300 கோடி டிஎன்,ஏ தொகுதியில் கொரிலாவின் டிஎன் ஏ ஒன்றைகோடியும் சிம்பன்சியின் டி என் ஏ மூன்று கோடியும் கலந்து காணப்படுகிறது
குரங்குகளுக்கும் நமக்கும் தோற்ற வகையில் மட்டும் இல்லை ஜீன் தொடர்பும் இருக்கிறது
இவை எல்லாம்கண்டு பிடிக்கப்பட்டு நீண்ட காலம் ஆகிறது ஆனால் இவற்றை எளிய முறையில் மக்களிடம் கொண்டு செல்ல ஆளும் வர்க்கம் அணுமதிப்பது இல்லை
அப்படியே கொண்டுசென்றாலும் அதை புரிந்து கொள்ள முடியாத ஒரு அருவமான கல்வியாக கொண்டுசெல்கிறது
உயிரியலில் உயர் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கே இவை புரிவதில்லை என்பதுதான் கொடுமை
தொடரும்
-ஆர். சந்திரசேகரன் ஆர்.சந்திரசேகரன் முகநூல் பதிவு, 25.8.19

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக