செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

ஆர்கா என அழைக்கப்படும் கில்லர் வேல்[kilerwhale] (படிம வளர்ச்சி) -6

தோழர்களே படத்தில் இருப்பது ஆர்கா என அழைக்கப்படும் கில்லர் வேல்[kilerwhale] உலகில் உள்ள விலங்கினங்களில் அதி புத்திசாலி இது டால்பினின் நெருங்கிய இனமாகும்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: சமுத்திரம், தண்ணீர், வெளிப்புறம் மற்றும் இயற்கை


இது ஆண் 17 வருடங்களும் பெண் 29 வருடங்களும் வாழக்கூடியது இது ஒரு பாலூட்டி ஆனால் நீலத்திமிங்கலத்தின் குடும்பத்தை சேர்ந்தவை அல்ல இதன் மூதாதை யின் பாசில்கள் பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டன
சுமார் 1 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் நிலவாழ் உயிரினமாக இருந்தது 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் நீர் நில வாழ் உயிரியாக மாறியதை இதன் பாசில்கள் உறுதி செய்கிறது
இது முதலையை போல் நீரில் மறைந்து இருந்து வேட்டையாடிய போதும் நிலத்தில் நன்கு நடக்கும் திறனையும் பெற்று இருந்ததை இதன் பாசில்கள் உறுதி செய்கிறது
இந்த கில்லர் வேல் என்பது கூட்டாக வாழ்வதற்கும் கூட்டாக சேர்ந்து வேட்டையாடுவதற்கும் உதாரணமாக திகழ்கிறது
இது கடல் சிங்கம் எனப்படும் சீல்களை பிரதான உணவாக கொள்கிறது கடலின் மிக பயங்கரமான மிகப்பெரிய வெள்ளை சுறாக்கள் கூட கில்லர் திமிங்கலம் இருக்கும் பகுதிக்கு வருவதில்லை
பார்க்க மிக சாதுவாக இருக்கும் இவைகள் மிக கொடூரமான வேட்டையாடிகள்
டால்பின்களைபோலவே மனிதனிடம் நெருங்கிப்பழகும் பண்பை பெற்று இருப்பதால் இவற்றை வைத்து நிறைய வெளிநாடுகள் நிகழ்ச்சிகள் செய்து வருமானம் ஈட்டுகின்றன
இவற்றின் சுற்றுலா நிகழ்வு ஒன்றை பார்த்தாலே இவற்றின் அறிவின் ஆழம் நமக்கு புரியும்
இவை பனிப்பாறைகளில் மறையும் சீல்களை வேட்டையாட கூட்டாக சேர்ந்து செயற்கை அலைகளை உருவாக்கும் திறமை பெற்றவை
வெள்ளை சுறாக்களையும் வேட்டையாடும், நீலத்திமிங்கலத்தின் குட்டிகளை கூட வேட்டையாடி விடுகின்றன
இவற்றின் ஆணின் நிறை 3600 கிலோவில் இருந்து 5500 கிலோவரை இருக்கும் பெண் 1500 முதல் 3000 கிலோவரை இருக்கும்
இவை ஒரு பாலூட்டி என்பதும் ஒருகாலத்தில் நிலவாழ் விலங்காக இருந்தது என்பதற்கும் இன்று ஏகப்பட்ட சான்றுகளை ஆய்வாளர்கள் சேகரித்து இருக்கிறார்கள்
ஏன் அப்போது மாறிய விலங்குகள் இப்போது மாற வில்லை என நீங்கள் கேட்பது புரிகிறது
ஒரு விலங்கு பரிணாம வளர்ச்சியின் மூலம் ஒன்று வேறு ஒன்றாக மாற கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆகும்
இந்தமாற்றங்களை நாம் நேரில் கண்டு உணர முடியாது பல லட்சம் ஆண்டுகள் கடந்த பின்பு நம்மை திரும்பி பார்த்தால் நாமே நம்ப மாட்டோம்
ஒரு 40,000ஆண்டுகளுக்கு முன்னால் மனிதன் இருந்ததை போலவா இன்று இருக்கிறான் நாம் முட்டியில் தவழ்ந்ததை போல் எந்த குழந்தையாவது இன்று முட்டி போட்டு தவழ்வதை பார்க்க முடிகிறதா?
அல்லது இன்று குழந்தைகளுக்கு இருக்கும் செல்போன் அறிவு நமக்கு இருக்கிறதா?
கண்முன்ன்னால் பரிணாம வளர்ச்சி நம்மை விட நிறத்திலும் குணத்திலும் உயரத்திலும் அறிவிலும் சிறந்த ஒரு புதிய சந்ததியாக நமது குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் உருவாகி வருவது உங்கள் கண்களுக்கு தெரிய வில்லையா?
நாம் எவ்வளவுதான் அறிவாளிகளாக இருந்தாலும் இன்றைய குழந்தைகளின் சிறப்பு தன்மைகளை நாம் அடைய முடியாத தொலைவில் இருக்கிறோம் என்பதை காணுங்கள் பரிணாமவிதியின் செயலை உணருங்கள்
சரி கூடுதலாக இயற்கை தேர்வைகாணலாம் ,
இன்று கடல் இருக்கும் இடத்தில் தரையும் தரை இருக்கும் இடத்தில் கடலும் தங்கள் இடங்களை மாற்றிக்கொண்டால் என்ன நிகழும்?
வலிமையான ஆஜானுபாகவான விலங்குகள் எல்லாம் நீலத்திமிங்கலம் ஒட்டக சிவிங்கிகள் யானை போன்ற வலிமை பொருந்திய பெரு விலங்குகள்தான் முதலில் அழியும் ஏனென்றால் இவற்றால் தங்கள் வாழ்வை உடனடியாக மாற்றி அமைத்துக்கொள்ள முடியாது
அதே வேளை நீர் நிலம் சார்ந்து வாழும் முதலைகள், நீர்யானைகள் தவளைகள் மட்கிப்பர் எனப்படும் சதுப்பு நில மீன்கள் தம்மை நிலவாழ் அல்லது நீர்வாழ் உயிரியாக மாற்றிக்கொள்ளும் சாத்தியம் அதிகம்
.
இதில் வலிமையானது வாழும் என்பதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா?இயற்கையின் கட்டளையை ஏற்று மாறிக்கொள்ளும் விலங்கே பெரிதானாலும் சிறிதானாலும் வாழும்
இந்த திடீர் அல்லது படிப்படியான மாற்றம்தான் விலங்குகளை புதிய மாறியுள்ள அதாவது இவ்வளவு காலமும் நிலவாழ் உயிரியாக இருந்ததை நீர்வாழ் உயிரியாக மாறும் படி மாறிய இயற்கை நிர்பந்தம் செய்கிறது
இந்த புற நிர்பந்தத்துக்கு கட்டுப்பட்டு தங்களை மாற்றிக்கொள்ளும் விலங்குகள் வாழ்கிறது
மாற்றிக்கொள்ள முடியாத விலங்குகள் அழிகிறது இதுதான் டார்வினின் இயற்கை தேர்வு தொடர்ந்து பார்ப்போம்
6வது பதிவு
- ஆர். சந்திரசேகரன் ஆர்.சந்திரசேகரன் முகநூல் பதிவு, 20.8.19

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக