சனி, 24 ஆகஸ்ட், 2019

இயற்கையின் நிர்பந்தத்தை ஏற்று உயிரினமும் தன்னை மாற்றி அமைத்துக்கொள்கிறது (படிமவளர்ச்சி) - 11

தோழர்களே விலங்கியல் குறித்த 11ம்பதிவு


எப்போதும் மாறி வரும் இந்த பூமி அதன் மாற்றங்களுடன் சேர்ந்து அதை சார்ந்து வாழும் உயிரினங்களையும் அதனுடன் சேர்ந்து மாற நிர்பந்திக்கிறது
இந்த இயற்கையின் நிர்பந்தத்தை ஏற்று உயிரினமும் தன்னை மாற்றி அமைத்துக்கொள்கிறது
இதன் அடிப்படையில் பரிணாம மாற்றம் என்பது ஒரு விட்டு விட்டு தாவிச்செல்லும் ஒரு தொடர் நிகழ்வாகும்
நாம் ஒரு நூறு அல்லது இருநூறு ஆண்டுகளின் போக்கை பார்த்து பரிணாம விதியை கேள்வி எழுப்புகிறோம்
ஒரு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள புலிகளோ சிங்கங்களோ யானைகளோ இன்று இல்லை இன்று இருக்கும் சிங்கம் புலி யானை இவை எல்லாம் இந்த பத்தாயிரம் ஆண்டுகளில் பரிமாண வளர்ச்சி அடைந்தவை.
பெரும் தந்தங்களையும், சடைமுடிகளையும் கொண்ட பிரமாண்டமான மாமதம் எனும் யானைகள் இன்று ஒன்று கூட இல்லை இவை பனியுகத்தின் குளிரை தாங்கும் திறன் பெற்றவையாக இருந்தன
பூமியின் வெப்பம் அதிகரித்ததும் முடிகளை உதிர்த்து விட்டு வெப்பத்தை தாங்கும் திறன் கொண்ட புதியவகை யானைக்கூட்டங்கள் தோன்றின
மயிரடந்த கால்நடைகளும் இன்று இல்லை பெரும் வால் பற்களை கொண்ட புலி சிங்கங்களும் இல்லை இவற்றின் இடத்தை சிறிய வலிமையான கோரைப்பற்களை உடைய வலிமையும் வேகமும் கொண்ட இன்றைய சிங்கம் புலிகள் பிடித்துக்கொண்டன
மனிதனும் இப்பத்தாயிரம் ஆண்டுகளில் படிப்படியாக தனது மிருக குணத்தில் இருந்தும் உடல் அமைப்புகளிலும் மிகவும் மாறி வருகிறான்
மனிதனின் உடல் எங்கும் பரவிக்காணப்படும் மயிரடர்த்தி இன்று குறைந்து விட்டது நிழலிலும் பாதுகாப்பான அறைகளிலும் இருக்கும் மனிதன் பளப்பளப்பான உடலை பெற்று வருகிறான்
ஆரோக்கியமான உணவையும் அதிக இறைச்சியையும் உண்ணும் மேற்கு ஐரோபியர்கள் நல்ல உயரத்தையும் வலிமையான பளபளப்பான உடலையும் பெற்று இருக்கிறார்கள்
இந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் ,தென் அமெரிக்கர்கள் ஆகிய மக்களில் பெரும்பாண்மையினர் இன்னும் ஆரோக்கியமான வாழ்வை பெறாத காரணத்தால் உருவில் சிறுத்தும் பளிச்சென்றதோற்றத்தை பெறாமலும் இருக்கிறார்கள்
இந்த பின் தங்கிய நிலப்பகுதிகளில் சமூகம் சீரான வளர்ச்சி அடையாத காரணத்தால் சாதி மத இனக்குழுக்களின் பின் தங்கிய ஆதிக்கம் காணப்படுகிறது
நெருங்கிய ரத்த உறவுகளுக்குள் மீண்டும் மீண்டும் நடக்கும் திருமணங்கள் ,பரம்பரை நோய்களை மீண்டும் மீண்டும் உயிர்பிக்கின்றன அதிகரிக்கின்றன பரவலாக்குகின்றன
அதேவேளை நாம் ஆரோக்கியமற்ற சந்ததிகளை உருவாக்கி வருகிறோம் ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் நெருங்கிய ரத்த உறவு மணங்களை புறக்கணித்து விட்டதால் அவர்கள் ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்குகிறார்கள்
இந்தியா போன்ற நாடுகளில் சர்க்கரை நோய் ஒரு உயிர் கொல்லி நோயாக பரவி வருகிறது சர்க்கரை ,ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் இல்லாத குடும்பம் எதுவும் இருப்பதாக தெரிய வில்லை
இவை எல்லாம் பரிணாம வளர்ச்சியில் நாம் ஒரு தற்காலிக தேக்கத்தை அடைந்து இருப்பதை காட்டுகிறது
பரிணாம வளர்ச்சியில் இயற்கை தேர்வு மட்டும் அல்ல குழுக்களின் மக்கள் கூட்டங்களின் சமூக செயல்பாடுகளும் தலையிடுகின்றன என்று கடந்த பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன்
யாரெல்லாம் தமது ரத்த உறவுகளின் எல்லைகளை தாண்டி தமது சந்ததிகளை உருவாக்குகிறார்களோ அவர்கள் பரிணாம வளர்ச்சியின் சாதகமான அம்சங்களை உள்வாங்கிக்கொள்கிறார்கள்
மற்றவர்கள் தேங்கி தம் சந்ததிகளை வாழத்தகுதி அற்றவர்களாக மாற்றுகிறார்கள்
இதில் இயற்கை யாரை தேர்வு செய்யும்பரந்த மரபியல் பண்புகளை பெற்றவர்களே வாழும் திறனை பெற்றவர்களாவும் தனிமைப்படுத்திக்கொள்பவர்கள் வாழும் தகுதியை இழப்பவர்களாகவும் மாறுகிறார்கள்
எனவே நமது பரம்பரை மரபியல் நோய்களை ஒழித்து நமது மரபை வாழும் தகுதியுள்ளதாக மாற்ற வேண்டுமானால் சாதி மறுப்பு திருமணங்கள் இன்று தேவையான ஒன்று சாதியை உடைப்பதும் அதை அழிப்பதும் நம் வாழும் திறனைஅதிகரிக்கும் உறுதி செய்யும்
தொடரும்
- ஆர் .சந்திரசேகரன் ஆர். சந்திரசேகரன் முகநூல் பதிவு, 24.8.19
No photo description available.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக