புதன், 21 ஆகஸ்ட், 2019

இயற்கை தேர்வின் மூலமும் வேறு சூழல்களும் புதிய வகை இனங்களை தோற்றுவிக்கும் ( படிம வளர்ச்சி) - 8

தோழர்களே விலங்கியல் குறித்த எட்டாவது பதிவு
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்


பரிணாமவளர்ச்சி என்பது அடிப்படையில் இயற்கை தேர்வின் மூலம் நடந்தாலும் வேறு சூழல்களும் புதிய வகை இனங்களின் தோற்றத்துக்கு காரணமாகின்றன
விலங்குகள் கூட்டத்தின் தனித்த செயல்பாடுகளும் இதில் தலையிடுகின்றன.
கூட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆண் விலங்குகள் இவை நல்ல கவர்ச்சிகரமான நிறத்தில் ஆரோக்கியமாக இருக்கும் போது மட்டுமே பெண்பறவைகள் இவற்றை ஏற்கும்
ஆண் மயில்களின் வலிமையான கவர்ச்சிகரமான தோற்றம் பெண் மயில்களை கவரும்
சில பறவை கூட்டங்களில் ஆண் பறவைகள் சிறப்பான கூடுகளை உருவாக்கும் திறமை பெற்று இருந்தால் அவற்றுக்கு பெண் பறவைகள் முன் உரிமை வழங்கும்
பாலூட்டிகளில் வலிமை வாய்ந்த ஆண் விலங்குகளே பாலுறவில் ஈடுபடும் வாய்ப்பை பெறும் பெண் விலங்குகள் தமதுசந்ததியை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்று சிறப்பாக செயல்பட்டாலே அதன் வாரிசுகள் இப்பூமியில் வாழும்
இப்படி இருப்பவைகளில் சிறப்பு தகுதி கொண்டவைகளே விலங்குலகின் உற்பத்தியாளர்களாக மாறுகிறார்கள்
தகுதி அற்றவைகள் புறக்கணிக்கப்பட்டு அதன் சந்ததி பூமியில் வாழும் உரிமை மறுக்கப்படுகிறது
புதிய சூழலுக்கு வாழ்க்கை முறைக்கு தம்மை மாற்றிக்கொள்ள திறமை கொண்ட உயிரினங்களே தம் வாழ்வை பாதுகாத்துக்கொள்ள முடியும் தனது சந்ததிகளை உருவாக்க முடியும்
இவை இல்லாமல் தனிமை படுத்தப்படும் விலங்குகள் புதிய இனங்களாக மாறுகிறது அதாவது வேறு நிலவழி நீர்வழி தொடர்பை இழந்த விலங்குகளின் ஜீன்களில் உள்ள புறக்கணிக்கப்பட்ட ஜீன்களின் அடங்கு அல்லீல்கள் குறிப்பிட்ட வரம்புக்குள் மீண்டும் மீண்டும் இனப்பெருக்கம் செய்யும் போது இந்த அடங்கு அல்லீல்கள் வெளிப்பட்டு புதிய சிற்றினங்களை உருவாக்குகின்றன
ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் தீவில் இது உலகின் நான்காவது பெரிய தீவு உலகில் உள்ள ஓணான்களில் 75 % வாழ்கிறது இங்கு விதம் விதமாக ஓணான்களை காண முடியும் காரணம் இனப்பெருக்க தனிமைப்படல்
ஒரு உயிரினம் பரவலான இனப்பெருக்க வாய்ப்புகளை பெறும்போது அவை சிறப்பான ஜீன் தொகுதிகளை அதிகம் கொண்ட சந்ததிகளை உருவாக்குகிறது
அப்படி வாய்ப்புகளை இழந்த உயிரினங்கள் உயிரினங்களால் தேவை அற்றவை என ஒதுக்கப்பட்ட ஜீன்களை மீண்டும் உற்பத்தி செய்கின்றன இவை அவ்விலங்குகள் போதுமான திறன் இன்றி நோய் எதிர்ப்பு திறன் இல்லாத வாழத்தகுதி அற்ற உயிரினத்தொகுதிகளை உருவாக்குகின்றன
இதற்கு ஒரு உதாரணத்தை பார்ப்போம் சுமத்ராபகுதியில் இருக்கும் ஒருதனிமை பட்ட தீவில் வாழும் மக்கள் கூட்டம் தங்களுக்குள்ளேயே திருமண உறவுகளை ஏற்படுத்திக்கொள்கிறார்கள் இந்த தீவில் வாழும் அனைவருமே நிறகுருடுகள் இவர்களில் யாருக்கும் வண்ணங்களை பகுத்து பார்க்க முடியாது
உயிரினங்கள் மிக பரந்த அளவில் இனப்பெருக்க வாய்ப்புகளை பெறும்போது மிக சிறப்பான ஜீன் தொகுதிகளை தமது சந்ததிக்கு வழங்குகிறார்கள் குறுகிய வட்டத்தில் இனப்பெருக்கம் நடக்கும் போது பலவினமான நோயுற்ற ஜீன் தொகுதிகளை வழங்குகிறார்கள்
மீண்டும் மீண்டும் ரத்த உறவுகளுக்குள் நடக்கும் இனப்பெருக்க உறவுகள் ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்காமல் நோய் தொடர்ச்சி கொண்ட ஜீன்களை தொடர்ந்து தமது சந்ததிகளுக்கு கடத்துகிறார்கள்
சர்க்கரை நோய் கொண்ட இருவேறு குடும்பங்களுக்கு இடையில் நடக்கும் திருமண உறவின் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்குபாரம்பரிய சர்க்கரை நோய் தொடரும் வாய்ப்புகள் குறைவு
அதேவேளை ரத்த உறவு கொண்ட சர்க்கரை நோய் கொண்ட குடும்பங்களில் உருவாகும் சந்ததிகள் சர்க்கரை நோயை அதிகபட்ச அளவில் உற்பத்தி செய்கிறார்கள்
இதற்கு காரணம் ஜீன்கள் பாதிக்கப்பட்ட குறைபாடு உடைய ஜீன்களை செயலற்ற தாக மாற்றுகிறது அந்த ஜீன்களின் இடத்தை நிறைவு செய்ய போதுமான புதிய ஜீன்கள் இல்லாத நிலையில் பழைய ஜீன்களே உயிர் பெறுகிறது
எனவே சாதி மறுப்பு திருமணங்கள் உண்மையாகவே ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்கும். சொந்த சாதிக்குள் நடக்கும் திருமணங்கள் பரம்பரை நோய்களை பாதுகாத்து அதை வாரிசுகளுக்கும் வழங்கும்
மீண்டும் சந்திப்போம்
[
](https://www.facebook.com/photo.php?fbid=170668990763174&set=a.104351330728274&type=3&av=100034602217599&eav=AfaJYwLY8C0HvFOEOlEJSYfSTfe5f87JyzFXhrzI_ERt0clVuEmoQaCwi5Xm1l3AhkY&eid=ARDwe4Bgtk5VMCbSodjeAwY8U_dX4WLboWL_PvCc7LMPnvw9BeZ-qFGHXx7Gh7MRq9S3m_vWx_SGzXIQ)
[
](https://www.facebook.com/photo.php?fbid=170676604095746&set=gm.926315557711066&type=3&eid=ARBuL8YFAmQztgdAwbbqQRxC0vlyinwQQaKSBy_Ov71oTemqEXVxH5vM4r4CoD0gQrhiiiE43iIyOOy9&ifg=1)
[
](https://www.facebook.com/photo.php?fbid=170676974095709&set=gm.352328139048990&type=3&eid=ARCu8vSH4YM_1XRkb1Rzr9OBoHtR3bfyZMDP6toz6VedP5tU8ytE3xkzmKStLBLk33iq3t5qYX6y4Fsf&ifg=1)
- ஆர்.சந்திரசேகரன் ஆர்.சந்திரசேகரன் முகநூல் பதிவு, 21.8.19

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக