வியாழன், 26 ஜனவரி, 2017

வந்துவிட்டது ஒயர்லெஸ் சார்ஜர்


வந்துவிட்டது!மின் கம்பியில்லாமல் கருவி களுக்கு மின்னேற்றம் செய்ய முடியுமா? ‘ஒயர்லெஸ் சார்ஜிங்’ எனப்படும் இத் தொழில்நுட்பம், இதுவரை நிகழ மறுக்கும் அற்புதமாகவே இருந்தது.

ஆனால், அண்மையில், ‘எனர்கஸ் வாட்அப்’ என்ற நிறுவனம், கம்பி இல்லாமலேயே மொபைல் போன்ற சாதனங்களுக்கு மின் னேற்றம் செய்யும் தொழில்நுட்பத்தை வெற்றி கரமாக அறிமுகப்படுத்தி யிருக்கிறது.

மின்காந்த அலைகளை அனுப்பும் வாட்அப் சாதனத்திற்கு, சில அடிகள் தள்ளி மொபைலை வைத்தால், அது சார்ஜ் ஆகிவிடுகிறது. தற்போதைக்கு வாட்அப் சாதனத்திற்கு மிக அருகே வைத்தால் தான் சார்ஜ் ஆகிறது.

ஆனால், 2017 இறுதிக்குள், 2-4 அடி, 1,0-15 அடி ஆகிய தொலைவுகளில் தேவையான சாதனங்களை வைத்தால் சார்ஜ் செய்யும், ‘மின் பரப்பி’ கருவிகளை அறிமுகப்படுத்த இருப்பதாக எனர்கஸ் வாட்அப் அறிவித்துள்ளது.

மொபைலிலேயே கண் பரிசோதனை!



கண் கண்ணாடிகளை இணையத்திலேயே வாங்கும் வசதி வந்துவிட்டது. ஆனால், தூரப் பார்வையா, கிட்டப் பார்வையா என்பதை அறிய, மருத்துவர்களை நாடவேண்டியிருக்கிறது. இப்போது அதற்கு மாற்றாகவும் ஒரு கருவி வந்திருக்கிறது.

அமெரிக்காவில், கலிபோர்னியாவிலுள்ள, ‘அய்க்யூ’   என்ற நிறுவனம், அதே பெயரில் உருவாக்கியிருக்கும் சாதனத்தை ஒரு ஸ்மார்ட்போனில் பொருத்திக்கொள்ள வேண்டும். அதனுடன், இலவசமாகக் கிடைக்கும், ‘மை அய்க்யூ’ என்ற மொபைல் செயலி யையும் தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

அய்க்யூ சாதனம் வழியே மொபைலில் தெரியும் சில காட்சி களை பார்த்து, தெளிவாகத் தெரியும் வரை, செயலியில் தெரியும் பொத் தான்களை அழுத்தி சரி செய்ய வேண்டும். இரு கண்களையும் தனித் தனியே சோதித்த பின், அந்த சோதனை முடிவுகளை அய்க்யூ நிறுவனத்தின் மேகக் கணினிக்கு அனுப்பவேண்டும். அவ்வளவு தான்.

அந்த நிறுவனம் உங்கள் கண்களுக்கு, ‘பவர்’ என்ன என்பதை தெரிவிக்கும். அந்த அளவுகளை பயன்படுத்தி, கண்ணாடிக் கடை அல்லது கண்ணாடி விற்கும் இணைய தளத்திற்கு அனுப்பி ஆர்டர் செய்யலாம்.

-வடுதலை,26.1.17

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக