புதன், 11 ஜனவரி, 2017

நிலா அது... வானத்து மேலே...




பூமி உருவாகி வந்த சமயத்தில் அதன் மீது வேறொரு கோள் மோதிய பின்னர் பூமியைச் சுற்றி உருவான கோளம்தான் நிலா என்ற அறிவியல் கோட்பாட்டுக்கு ஆதரவான ஒரு ஆதாரம் கிடைத்திருப்பதாக புதிய ஆய்வுகள் காட்டுகின்றன.

பூமி உருவாகி வந்த சமயத்தில் அதன் மீது வேறொரு கோள் மோதிய பின்னர் பூமியைச் சுற்றி உருவான கோளம்தான் நிலா என்ற அறிவியல் கோட்பாட்டுக்கு ஆதரவான ஒரு ஆதாரம் கிடைத்திருப்பதாக புதிய ஆய்வுகள் காட்டுகின்றன. நாற்பது ஆண்டுகளுக்கும் முன்னால் அப்போலோ விண்கலத்தில் நிலவுக்கு சென் றிருந்த விண்வெளி வீரர்கள் எடுத்துவந்த நிலவுப் பாறைகளில் ரசாயன ஆய்வுகளை மேற் கொண்ட ஜெர்மானிய விஞ்ஞானிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

நானூற்றைம்பது கோடி ஆண்டுகள் முன்பாக பூமியின் மீது வேறு ஒரு கோள் பயங்கரமாக மோதியது என்பதும், அப்படி மோதிச் சிதறிய சிதறல்கள் தான் பூமியைச் சுற்றி ஒன்று திரண்டு நிலவு உருவானது என்பதும்தான் 1980கள் முதல் விஞ்ஞானிகள் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கோட்பாடாக இருந்து வருகிறது.

சூரிய குடும்பமும் உருவான விதம் தொடர்பான சாத்தியக்கூறுகளை கணினிகள் மூலமாக அனுமானித்தபோதும் நிலவு உருவானதற்கு பொருந்தி வரக்கூடிய விளக்கமாக இதுதான் இருந்து வருகிறது.

ஆனால் இந்த கோட்பாட்டுக்கு தடய பூர்வ ஆதாரம் எதுவும் இதுவரை இல்லாமல் இருந்துவந்தது. அப்படி வந்து மோதியதாக கருதப்படும் கோளுக்கு கிரேக்க புராணத் திலிருந்து எடுத்து தியா என்ற ஒரு பெயரை விஞ்ஞானிகள் கொடுத்திருந்தார்கள்.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி யாளர்கள் நிலவுப் பயணம் சென்று அங்கிருந்து பாறைகளை எடுத்து வந்த பின்னர் அதில் செய்யப்பட்டிருந்த ஆய்வு களை வைத்து, நிலவுப் பாறைகள் முழுக்க பூமியிலிருந்து சென்றவைதான், அதாவது பூமிப் பாறைகளில் காணப்படும் ரசாயன மூலக்கூறுகளும் அடையாளங்களும்தான் அந்த பாறைகள் முழுமையிலும் தென்பட்ட தாக கருதப்பட்டது.

ஆனால் மேலும் நூதனமான ஆய்வு களை தற்போது நிலவுப்பாறைகளில் மேற்கொண்டபோது, பூமிப் பாறைகளின் ரசாயன கூற்றுக்கு சம்பந்தமில்லாத வெளிக் கோள் தோற்றத்துக்கான அடையாளங்கள் நிலவுப் பாறைகளில் தெரிவதாக ஜெர்மனி யிலுள்ள கொயெடிங்கென் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
-விடுதலை,22.8.14

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக