திங்கள், 30 ஜனவரி, 2017

பாலினத்தை நிர்ணயிக்கும் புதிய மரபணு கண்டுபிடிப்பு


மதவாதங்களுக்கு மரண அடி!
பாலினத்தை நிர்ணயிக்கும் புதிய மரபணு கண்டுபிடிப்பு

குழந்தை உருவாகும் போது அக் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை எக்ஸ், ஒய் என்கிற குரோமோ சோம்கள் மட்டுமே நிர்ணயிப்பதில்லை. துணை மரபியல் கூறாக உள்ள மிகச் சிறிய மரபணுக்களே முக்கி யப் பங்கை வகிக்கின்றன.

அமெரிக்காவில் உள்ள கோல்ட் ஸ்பிரிங் ஹார்பர் ஆய்வகத்தின் (சிஷீறீபீ ஷிஜீக்ஷீவீஸீரீ பிணீக்ஷீதீஷீக்ஷீ லிணீதீஷீக்ஷீணீஷீக்ஷீஹ்-சிஷிபிலி) அறிவியலாளர்கள் சிறிய மரபணுக்களின் துணைக் குழுக்கள் ஆர்.என்.ஏ மூலக்கூறுகளின் குறியீடுகளாக உள்ளதைக் கண்டறிந்தார்கள். அவற்றை மைக்ரோ ஆர்.என்.ஏ.க்கள் (னீவீஸிழிகி) என்று அழைக்கின்றனர். அதன் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்தபோது, அவை ஆண், பெண் திசுக்களை வேறுபடுத்துவதில் முக்கியப்பங்கினை ஆற்றுவதையும் கண்டு வியந் தார்கள்.

மைக்ரோ ஆர்.என்.ஏக்கள் சிறிய தொகுதிகளாக ஆர்.என்.ஏ.வில் உள்ளன. அவை செயலாற்றும்போது, மரபணுக்களில் ஒன்று அல்லது பல புரோட்டீன் குறியீடுகளை உருவாக்குகின்றன. அவற்றின்மூலம் எந்த ஒரு மரபணுவையும் குறிப்பிட்டு செயலிழக்கச் செய்ய முடியும். பல கூறுகளுடன் கூட்டு மரபணுக் களை திட்டமிட்டவகையில் வளர்ச்சியடையவும் செய்ய முடியும்.

-விடுதலை,22.8.14

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக