திங்கள், 20 பிப்ரவரி, 2017

என்னே அறிவியலின் சாதனை! 60 வயது பாட்டிக்கு குழந்தை பிறப்பு


காந்திநகர், பிப். 18- செயற்கை கருத்தரித்தல் முறையில், 60 வயது பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் கட்ச் மாவட்டத்தை சேர்ந்த, பிர வீன் - சுசீலா, 60, தம்பதிக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லை.

இந்நிலையில், அவர்களது கிராமத்தை சேர்ந்த, 60 வயது பெண் ஒருவர், செயற்கை கருத்தரித்தல் முறையில் குழந்தை பெற்றதை அறிந்து, அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம் சென் றனர்.

சுசீலா தம்பதியை பரிசோ தித்த மருத்துவர்கள், சுசீலா வுக்கு மாத விலக்கு சுழற்சி மீண்டும் வருவதற்கான சிகிச் சையளித்தனர். பின், அவ ருக்கு செயற்கை கருவூட்டல் முறையில் சிகிச்சை அளிக்கப் பட்டது.

முதல் முறை, இரண்டு கரு உருவாகி, சில மாதங் களில் கலைந்துவிட்டது. இரண் டாவது முறை கருத்தரித்த சுசீலாவுக்கு, அறுவை சிகிச்சை மூலம், அழகான பெண் குழந்தை பிறந்தது.இதுகுறித்து சுசீலாவுக்கு சிகிச் சையளித்த மருத்துவர் தாமினி கூறியதாவது:

ஏற்கனவே நீரிழிவு, உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக் கப்பட்ட சுசீலா, வயது காரணமாக, கர்ப்ப காலத்தில் மிகவும் சிரமப்பட்டார். எட் டாவது மாதம் முடிந்த பின், அவருடைய உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால், அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. தற்போது தாயும், சேயும் நலமாக உள்ள னர். இவ்வாறு அவர் கூறி னார்.
-விடுதலை,18.2.17

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக