திங்கள், 20 பிப்ரவரி, 2017

சர் அய்சக் நியூட்டன், ஆங்கில அறிவியலாளர் (1727)




காலம் காலமாக நாம் பார்க்கும் மிகச்சாதாரணமான ஒரு செயல் மேலி ருந்து ஒரு பொருள் கீழே விழுகிறது, பொதுவான ஒரு மனிதர் என்றால் அதை சாதாரணமாக கடந்து விடுவார்கள், ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு ஒரு அறிவியல் ஆய்வாளர் இந்தச் செயலை கண்டு எப்படி நடக்கிறது என்று நீண்ட ஆய்வு நடத்தினார்

விளைவு புவி ஈர்ப்புவிசை கண்டறியப்பட்டது

நியூட்டன் இங்கிலாந்தின் கிராம்டன் பள்ளிக்கூடத்தில் தனது ஆரம்பக் கல்வி பயின்றார்.ஆரம்ப காலத்தில் அவருக்கு கல்வியில் அதிக ஈடுபாடு இல்லை, அவரை பள்ளி ஆசிரியர்கள் தினசரி பாதிவகுப்பிலேயே வெளியேற்றிவிடு வார்கள்.இதனால் சகமாணவர்கள் முன் னிலையில் அவமானப்பட்டார் இதனால் அவருக்கு தன்னம்பிக்கை அதிகரித்து நன்றாக படிக்கத் தொடங்கினார். சிறு வயதிலிருந்தே நியூட்டனுக்கு அறிவிய லில் ஈடுபாடு இருந்தது, தண்ணிரிலும் வேலை செய்யும் கடிகாரத்தை அவர் சிறுவயதிலேயே உருவாக்கினார். அவ ருக்குப் பதினான்கு வயதானபோது குடும்ப ஏழ்மையின் காரணமாகப் பள் ளிப் படிப்பைக் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. நியூட்டனின் கல்வி ஆசையை அறிந்துகொண்ட அவரது மாமன் 1661ல், அவரைப் புகழ்பெற்ற கேம்பிரிஷ் மதகோட்பாட்டை கற்பிக்கும் கல்லூரியில் சேர்த்தார். அக்காலத்தில் கல்லூரியின் கற்பித்தல், அரிஸ்ட்டாட்டி லைப் பின்பற்றியதாகவே இருந்தது. ஆனால் நியூட்டன், டெஸ்கார்ட்டஸ், கலிலியோ, கோப்பர்னிக்கஸ் மற்றும் கெப் ளர் போன்ற அக்காலத்து நவீன தத்துவ வாதிகளுடைய கருக்களையும் கற்க விரும்பினார்

1665 இல், பரிமாண தேற்றத்தைக் கண்டு பிடித்ததுடன், பிற்காலத்தில் நுண்கணிதம் என வழங்கப்பட்ட, புதிய கணிதக் கோட் பாடொன்றை உருவாக்கத் தொடங்கினார் 1665 இல் இவர் பட்டம் பெற்றதும், பெருங் கொள்ளைநோய் காரணமாக பல்கலைக் கழகம் மூடப்பட்டது அடுத்த இரண்டு வருடங்கள் விட்டிலிருந்தபடியே, நுண் கணிதம், ஒளியியல், ஈர்ப்பு என்பவை பற்றி ஆராய்ந்தார். மிகச்சிறப்பாகக் கற்றுத் தேர்ந்து 1665 ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார் நியூட்டன் அவரது பல்கலைக்கழக நாட்கள் பற்றிய குறிப்புகள் அவ்வுளவாக இல்லை. ஆனால் அவர் பட்டம் பெற்ற இரண்டு ஆண்டு களில் அவரது அறிவியல் மூளை அபரிமித மாக செயல்படத் தொடங்கியது. நவீன கணிதத்தின் பல்வேறு கூறுகளை அவர் கண்டுபிடித்தார்.  Generalized binomial theorem, infinite decimal calculusபோன்ற நவீன கணிதத்தின் பிரிவுகள் அவர் கண்டு பிடித்தவைதான் வளைந்த பொருள்களின் பரப்பையும் கெட்டியான பொருள்களின் கொள்ளளவையும் கண்டுபிடிக்கும் முறை கள் அவர் வகுத்துத் தந்தவையே, நியூ ராயல் சோசைட்டி என்னும் அறிவியல் ஆய்வாளர்கள் பொதுக்கூட்டத்தில் புலால் உணவும் சைவ உணவும் பற்றிய ஒரு விவாதம் நடந்தது, அந்த விவாததின் போது நியூட்டன் கூறியது. நான் புலால் உணவு சாப்பிடாமல் சைவ உணவை மட்டும் உண்பவனாக இருந்தால், இந்நேரம் இத் தாலியில் உள்ள எங்கள் மூதாதையார்கள் அடிமையாக வேலைபார்த்த பண்ணை ஊழியனாக இருந்திருப்பேன் என்று கூறி னார்.

இவர் கருத்துகளில் முக்கியமானவைகள்

*              தேவாலயங்களில் முழங்காலிட்டு செலவிடும் நேரத்தை ஆய்வாலயங் களில் சிந்தனையை கிளறி புதிய கண்டுபிடிப்புகளுக்காக செலவிடுங் கள்

*              கடவுள் என்று உண்டு என்றால் என் னால் இந்த கண்டுபிடிப்புகளை கண் டறிய தேவையில்லாமல் போயிருக் கும்

*              ஈர்ப்புவிசையை எதிர்த்து புவியை விட்டு வெளியே செல்வது கூட கடவுள் படைத்த உலகம் என்று சிலர் கூறும் பொய்யை உடைப்பது போன் றதாகும்

(நீல் டைகிரீஸ் டைசன் எழுதிய ‘‘அறிவியலாளர்களின் வாழ்க்கை’’ என்ற நூலிலிருந்து)

 -விடுதலை ஞா.ம.18.2.17

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக