ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமான ஜீன்கள்!


உயர் ரத்த அழுத்தத்தோடு தொடர்புடைய, 107 மரபணுக் களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.பிரிட்டனில் செயல்படும், ‘பயோபேங்’ என்ற திட்டத்தில் பங்கேற்ற, நான்கு லட்சம் பேருக்கு மேற்பட்டோரிடம் மேற்கொண்ட மரபணு முடிவில் இந்த கண்டுபிடிப்பு சாத்தியமாகியுள்ளது.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மரபணுக்கள், மனித ரத்த நாளங்கள் மற்றும் இதயத் திசுக்களில் செயல்படுபவை. லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரி மற்றும் குயின் மேரி பல்கலைக்கழகம் ஆகியவற்றை சேர்ந்த விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ள இந்த மரபணுக்களின் அடிப் படையில், புதிய மற்றும் செம்மையான உயர் ரத்த அழுத்த மருந்துகளை உருவாக்க முடியும்.மேலும், ஒருவருக்கு பரம்பரையாக உயர் ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் பக்கவாதம் வரும் வாய்ப்புகள் உள்ளதா என்பதை துல்லியமாக கணிக்கவும் இந்த கண்டுபிடிப்புகள் உதவும் என்று இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உயர் ரத்த அழுத்தத்தை தடுக்க, வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவு முறை மாற்றங்களை பரிந்துரைக்கவும் இக்கண்டுபிடிப்புகளை மருத்துவர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.


-விடுதலை,9.2.17

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக