செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

இன்று (பிப்ரவரி 28) தேசிய அறிவியல் தினம்

தேசிய அறிவியல் நாள் இந்தியாவில் பிப்ரவரி 28 ஆம் நாளில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தேசத்தலைவர்கள்மற்றும் தியாகிகளைக் கொண்டாடுவது போல, அறிவியல் மேதைகளும் போற்றப்பட வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் 1987 ஆம் ஆண்டு இந்தத் தேசிய அறிவியல் நாள் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிக்கோளை அடிப்படையாக கொண்டு இந்நாள் கொண்டா டப்படுகிறது.2013-ஆம்ஆண் டிற்காக,“மரபணுமாற்றப் பட்டபயிர்களும்உணவுப் பாதுகாப்பும்“  குறித்த கொள் கையை வலியுறுத்தப்படுகிறது.

இந்த தினம் கொண்டாடப் படும் வரலாறு மற்றைய தினங் களைப்போல அல்லாமல் வழக்கத்துக்குமாறானதுஆகும். பொதுவாக தேசத் தலைவர் களின்பிறந்தமற்றும் நினைவு நாள்களே சிறப்பு நாள்களாக அறிவிக்கப்படும். இந்த இரண்டு வகையிலும் அல்லாமல் இந்திய மண்ணில் பிறந்து உலகம் போற் றும் வகையில் பல அரிய கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து வெளியிட்டவரும் மிகச் சிறந்த இயற்பியல் மேதையுமான சர்.சி.வி.இராமன் தன்னுடைய நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28 ஆம் தேதி தேசிய அறிவியல் தினம் என அறிவிக்கப்பட்டது.

சர்.சி.வி.இராமன் தனது புகழ்பெற்ற ராமன் விளைவை இந்நாளிலேயே கண்டுபிடித்தார்.இந்தக்கண்டு பிடிப்பு உலகளாவிய பெரு மையை இந்தியாவிற்குப் பெற் றுத் தந்ததுடன் மிக உயரிய விருதான நோபல் பரிசும் (1930) இவருக்கு கிடைத்தது. அந்நிகழ்வின் நினைவாகவும் அறிவியல் என்பது அடித்தட்டு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கோடும் இந்திய அரசு இந்நாளைத் தேசிய அறிவியல் நாளாகப் பிரகடனப்படுத்தியது.

எந்த ஒரு நாகரிகத்திற்கும் அடிப்படையானஅறிவியலின் சிறப்பை இளம் தலைமுறை மாணவர்களுக்கு கூறும் வகை யிலும், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும்பலபுதியஅறி வியல் சிந்தனைகளைக் கண் டறிவதும், அதனை தகுந்த முறையில் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், புதிய கண்டு பிடிப்புகளை வரவேற்பதுமே அறிவியல் அறிஞர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான நன்றிக்கடன் என்பதை உண ரச் செய்வதே இந்நாளின் நோக் கமாகும்.

-விடுதலை,28.2.17

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக