செவ்வாய், 3 செப்டம்பர், 2019

ஹோமோ சேப்பியன் ஆக மாறிய மனிதன் (படிமவளர்ச்சி) -17

தோழர்களே விலங்கியல் குறித்த 17ம் பதிவு

மரபியல் அடிப்படையில் பார்த்தால் ஆப்பிரிக்கனும் அமெரிக்கனும், பார்பாணும் தீண்டத்தகாதவனாக சித்தரிக்கப்படுபனும் ஒரே மரபியல் அமைப்பை கொண்டவர்களே

மரபியல் அடிப்படையில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று எதுவும் இல்லை மனிதனிடம் ஏற்பட்ட தனிச்சொத்துடமைதான் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என மக்களை பிரித்தது

இன்று உலகம் மனிதகுல சமத்துவத்தை நோக்கி முன்னேறுகிறது எதிர்காலத்தில் எவ்வளவு இழப்புகள் ஏற்பட்டாலும் மனிதகுலம் தமது சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் அடைந்தே தீர வேண்டும் என்பதே இயற்கையின் சமுதாய பொருளாதாரத்தின் தீர்வாக அமையும் ஆனால் இதற்கு நீண்ட காலம் ஆகும் ஆனால் நிச்சயம் நடக்கும்

சரி நாம் விலங்கியலுக்குள் போவோம்

நியாண்டர்தால் மனிதன் மிக அதிக அளவு மூளைத்திறன் கொண்டவன் அவனின் ஜீன்களை உள்வாங்கியதால்தான் ஐரோப்பியர்கள் திறமை உடையவர்களாக உள்ளனர் என மார்க்சியம் பேசும் சிலரே என்னிடம் விவாதித்தது உண்டு

ஐரோப்பிரின் சாதனைகளை தெரிந்து கொல்ள விரும்புவோர் எனது இந்திய வரலாறு குறித்த பதிவுகளை பாருங்கள்

நியாண்டர்தால் மனிதனின் வாழ்வை சற்று பார்க்கலாம் இவன் ஓரளவு பேசும் திறனையும் எலும்பு முறிவுகளுக்கு சிகிச்சை செய்யும் திறனையும் பெற்று இருந்தான்

நோயை எதிர்க்க பெனிசீலியத் பூஞ்சைகளை பயன்படுத்தினான் நெருப்பை பயன்படுத்தி உணவை வேக வைத்து உண்டான்

சராசரி மனிதர்களை விட பலம் பொருந்திய எலும்புகளை பெற்று இருந்தான் இறந்தவர்களை புதைக்க சடங்கு செய்த முதல் உயிரினம் கற்கருவிகள் எலும்புகள் ஆகியவற்றை பிணத்துடன் வைத்து புதைத்தான்

இவன் இந்த அளவு வளர்ந்து இருந்த போதும் இவனின் ஜீன்கள் நவீன மனிதனுடன் நெருக்கத்தை காட்டவில்லை சிம்பன்சி குரங்குகளுடன் நெருங்கிய தன்மை கொண்ட ஜீன்களையே கொண்டு இருந்தான்

கொரில்லாக்கள் சிம்பன்சிகளுக்கு இருக்கும் 24 ஜோடி குரோமசோம்களே இவனுக்கும் இருந்தது

இவ்வளவு மரபியல் வேறுபாடுகளை கொண்ட இவன் எப்படி நவீன ஆப்பிரிக்க ஹோமோ செபியனுடன் புணர்ந்து இன்றைய ஐரோப்பிய இனம் உருவாகி இருக்க முடியும் வாய்ப்பே இல்லை

ஏன் இவ்வளவு வேறுபாடு மனிதகுல பொது மரபில் இருந்து விலகி 550000 ஆண்டுகளுக்கு பின் வளச்சி அடைந்த ஹோமோ செபியனை சந்திக்கும் போது அவன் மனித தன்மையுடனும் நியாண்டர்தால் குரங்கு தன்மையுடனும் இருந்தார்கள்

எனவே ஹோமோ செபியன் இவனுடன் உறவு கொள்ளவில்லை இவனை வேட்டையாடி உண்டான் என்பதே உண்மை

பிறகு எப்படி இவனின் 1,4% ஜீன்கள் ஐரோப்பியரின் ஜீனுடன் கலந்தது

இது குறித்து ரசியா ஜெர்மனி ,பிரான்ஸ் ,போன்ற ஐரோப்பிய நாடுகள் எங்கும் ஆய்வாளர்கள் ஹோமோசெபியனின் ஜீனுடன் கலந்த நியாண்டர்தாலின் ஜீன்களை தேடினார்கள் எதுவும் ஒத்து வரவில்லை

கடைசியாக குரோட்டியா நாட்டில் உள்ள அல்டாய் மலைப்பகுதியில் நியாண்டர்தால் மற்றும் டெனிசோவன் ஆகியோரின் ஜீன்களை தாங்கி ஹோமோசெபியனாக அதாவது மனிதனாக மாறிய ஒரு பெண்ணின் ஜீன்கள் கொண்ட எலும்புகளை கண்டுபிடித்தார்கள்

இது ஐரோப்பாவில் சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு அதாவது நவீன ஆப்பிரிக்க ஹோமோசெபியன் நுழைவதற்கு முன் நடந்த நிகழ்வாகும்

அதாவது ஆப்பிரிக்க நவீன ஹோமோ செபியன் ஐரோப்பாவில் நுழைவதற்கு முன்பே அங்கு நியாண்டர்தால் டெனிசோவன் ஆகிய இனங்களின் ஒரு சிறு பிரிவு மனிதனாக மாறி இருந்தது இந்த மனிதனாக மாறிய சிறுகூட்டத்துடன் பாலுறவு கொண்டதன் மூலமே ஆப்பிரிக்க ஹோமோ செபியன் நியாண்டர்தால்களின் குறைந்த அளவிலான ஜீன்களை பெற்றான்

மற்ற நியாண்டர்தால்களை அழித்தான்,இதுபோலவே இந்தியாவிலும் நவீன ஹோமோ செபியன் வருவதற்கு முன்பே நவீன மனிதன் உருவாகி விட்டான் என்பதையே விலுப்புரம் ஓடையில் கிடைத்த 160,000 ஆண்டுகள் பழமையான ஹோமோ செபியன் வகையை சேர்ந்த சிறுமியின் எலும்புகளும் ,மத்திய பிரதேசத்தின் நர்மதை மனிதனின் மண்டை ஓடும் சான்றுகளாகும்

நவீன ஆப்பிரிக்க ஹோமோ செ[பியனுடன் இந்தியா சீனா ஐரோப்பா ,இலங்கை போன்ற பகுதிகளில் ஏற்கனவே மனிதனாக மாறி இருந்த கூட்டம் இணைந்தது

இவ்வளர்ச்சியை எட்டாத ஹோமோஎரக்டசாக இருந்தவர்கள் வேட்டையாடப்பட்டு அழிக்கப்பட்டார்கள்

ஹோமோ எரக்டசாக ஒரு பிரிவு மாறிய பாது பல பிரிவுகள் பின் தங்கி வளராமல் இருந்தனர் ஹோமோ எரக்டசின் ஒரு பிரிவு மனிதனாக மாறிய பிறகும் பல ஹோமோ எரக்டசுகள் வளர்ச்சி இன்றி இருந்தன

வளர்ந்த கூட்டம் வளராமல் இருந்த கூட்டங்களை வேட்டை ஆடியது

இன்றும் இது நடக்கிறது வளர்ந்த நாடுகள் வளர்ச்சி அடையாத நாடுகளை இன்று சூறையாடுவதைப்போல்

தொடரும்
- ஆர் சந்திரசேகரன் ஆர் சந்திரசேகரன் முகநூல் பதிவு, 30 .8 .19

[
](https://www.facebook.com/photo.php?fbid=172933727203367&set=gm.357913978490406&type=3&eid=ARAvuRkYTp6feblmkvH4-3oQ4kI0d1X5B-7KWVdubbA68t2ASB16xfUQrU11LwiEI46QgEqp4d3q81uP&ifg=1)

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக