புதன், 4 செப்டம்பர், 2019

படிவுப்பாறையும் புதை படிமங்களும்

இனிபடிவப்பாறைகளைப் பற்றி ‌காண்போம்#
சில சமயங்களில் வெள்ளக் காலங்களில் நதிகள் அடித்து வரும் பெருமணல்,சிறுமணல், வண்டல் மண் ஆகியன எடைக்கேற்ப படிப்படியாக கீழேபடியும் பொழுது சில உயிரினங்கள் உயிருடனோ இறந்தபிறகோ இத்துகள்களுக்கிடையே அகப்பட்டு கொள்கின்றன.
அவற்றின்‌மீது மண்துகள்கள் படிவதால் எடை கூடுதலாகிறது.
எடைகூடுவதால் அழுத்தம் அதிகரிக்கின்றது.வெப்பமும் அதிகரிக்கிறது‌
வேதியல் மாற்றத்தால் ஒருபொருள் பண்பில் முற்றிலும் வேறுபட்ட பொருளாகிறது.(விறகை எரித்தால் கிடைப்பது கரி.கரிகாகும் விறகுக்கும் பெரும் வேறுபாடு).
மண்துகள்கள் பாறைகளாகின்றன.
இப்பாறைக்கு படிவப்பாறைகள்(Sedimentary) என்று பெயர்.

இந்நிலையில் இப்பாதையில் சிக்குண்ட உயிரினங்களின் உடல்களும் வேதியல் மாற்றத்திற்கும் மாகி பாறைகளில் புதைபடிவங்களாக ஆகின்றன.

மண்ணுக்குள் புதையுண்டு மடிந்து போகும் உயிரினங்கள் அனைத்தும் புதைபடிவங்களாக ஆகிவிடுவதில்லை.
சாதகமான சூழ்நிலைகள் இருக்கும் இடங்களில் தான் புதைபடிவங்கள் உருவாகும்.மற்ற இடங்களில் உருவாக.

உயிரினங்களின் கடினப்பாகமாகிய எலும்பு,பல்,ஓடு,மரக்கிளை போன்றவைதான் புதைபடிவங்களாகும்‌.எளிய உயிரினங்கள் புதைபடிவங்களாவது அரிது‌.

1950ஆம் ஆண்டு கணக்கில், அறிவியலாளர்கள் வட அமெரிக்காவின் கொலராடோ நதிப்பகுதியில் பேக்டீரியா,ஆல்கோ போன்றவற்றின் புதைபடிவங்களைத் தோண்டி எடுத்துள்ளனர்.

300கோடிஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பேக்டீரியா,ஆல்கோ ஆகியன போன்ற நுண்ணுயிர்களின் புதைபடிவங்களை(Microscopic Fossils) ஆஸ்திரேலியா,தென் அமெரிக்கா போன்ற நாடுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அடுத்து 60கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒட்டுடலி வகையை சேர்ந்த டிரிலோபைட் (Trilobite) என்னும் கடல்வாழ் உயிரியின் புதைபடிவங்களும் கிடைத்துள்ளன.
ஆய்வின்படி 300கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் பேக்டீரியா,ஆல்கே போன்ற எளிய உயிரினங்கள்தான் வாழ்ந்திருக்க வேண்டும்.

பாறைகளின்வயது#
பூமியிலுள்ள பாறைகளின் அடுக்குகளை நிலவியல் வல்லுநர்கள் பல பிரிவுகளாக பிரித்து அந்தந்த அடுக்குகளின் வயதினை துல்லியமாகக் கணக்கிட்டுள்ளனர்‌
பூமியின் ஓட்டுப்பகுதியின் அடிப்பகுதியில் காணப்படும் அடுக்குதான் மிகவும் தொன்மையான அடுக்காகும்.முதலில் உண்டான அடுக்காகும்.
அடிஅடுக்கிலிருந்து மேல் நோக்கிப் படிப்படியாக வயதுதான் மிகவும் குறைவு.‌.
மேல்அடுக்குதான் அண்மைக்காலத்தில் தோன்றியதாகும்,இளமையான தாகும்.
அண்மைக்காலத்தில் என்றால் 10ஆண்டுகளுக்கு முன்னர் என்றோ கணக்கிட்டு விடல் கூடாது.
பலகோடி ஆண்டு கணக்கில்தான் கணக்கியல் வேண்டும்.

(அடுத்து பாறைகளின் வயதினைக் கணக்கிடல்).
தொடரும்.........
-  ராஜமோகன் முகநூல் பதிவு, 30.8.19

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக