ஞாயிறு, 16 ஜூன், 2019

மனித இனங்கள்

நூல் அறிமுகம்

நூல் :- ''மனித இனங்கள்'' ஆசிரியர்-மி.நெஸ்தூர்ஹ்
தமிழில் பூ.சோமசுந்தரம்
சோவியத் யூனியனில் 1981ல் மீர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. சோவியத் சிதறுண்டதால் நூல் வெளியீடு நிறுத்தப்பட்டுள்ளது.
          உலக மனித இனங்களின் வகைப்பாட்டு பட்டியல், இனங்களின் பிரிவுகள் மற்றும் இனவாரியாக, நாட்டு வாரியாக இன மக்களின் படங்களும் இடம் பெற்றுள்ளன.
           மனித இனத்தின் தோற்றமும் பரவலும் விவரிக்கப்பட்டுள்ளது. மனித இனம் எப்படி பல இனங்களாக மாறியது  என்றும் விளக்கப்பட்டுள்ளது.
          முடிவாக மனித இனங்களின் முன்னோடி இனங்களில்  பல இயற்கை தேர்வால் அழிந்துபட்டு ''நியாண்டர்தல்'' முன்னோடி இனம் மட்டும் இயற்கையுடன் போராடி நிலைத்து நின்றது, அந்த முன்னோடி'நியாண்டர்தல்''  இனத்திலிருந்து வந்த இனங்கள் தான் உலகில் உள்ள அனைத்து மனித இனங்களும் என்று நிறுவுகிறது. வெளித்தோற்றமான ''முடி,நிறம், தோற்ற அமைப்பு, மண்டை ஓடு அமைப்பு'' இவற்றில் மட்டுமே சின்னச் சின்ன மாற்றங்கள் உள்ளன ஆனால் உடற்கூறு அனைவருக்கும் ஒன்றாகவே உள்ளது, ஆகையால் 'உலக மனிதர்கள் அனைவரும் ஒரே இனம்' என்று இன்னூலில் கூறப்பட்டுள்ளது.
        நூலகங்களில் தேடிப்பிடித்து படித்து,  சிந்தனை தெளிவு பெறுங்கள்.

- முக நூலில் 10.6.14ல் நான் பதிவிட்டது

அறிவியல் இயக்க மேனாள் தலைவர் மறைவு



வேலூர், ஜூன் 16- தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மற்றும் அறிவொளி இயக்கம், தமிழ் நாடு முற் போக்கு எழுத்தாளர் சங்கத் தின் மாநில மாவட்ட நிர் வாகியாக செயலாற்றியவர் முகில் பரமானந்தம் அவர் கள்.  பொய்கை சடையமுத்து வாத்தியார் அவர்களின் மக னும், ஜெய்பீம் இரவு பள்ளி கூட்டப்பமைப்பின் கவுரவத் தலைவருமாவார். இராணிப் பேட்டை பாரத மிகு மின் நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் முகில் பரமானந்தம்.

அன்னார் 14.06.2019 அன்று பிற்பகல் சி.எம்.சி மருத்துவமனையில் மறைந் தார். அன்னாரின் உடல் பொது மக்கள் மரியாதை செலுத்துவற்காக 16.06.2019 அன்று காலை 11 மணிவரை வேலூர் அடுத்த பொய்கை எம்.சி.சாலையில் உள்ள மனோன்மணியம் இலவச இரவு பள்ளி, 3/160, வி.சி. சாலை, பொய்கை இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது.

உடற் கொடை


16.06.2019 அன்று பிற்பகல் 12 மணியளவில் அன்னாரின் உடல் வேலூர் சி.எம்.சி. மருத் துவமனைக்கு கொடையாக குடும்பத்தினர் வழங்கினர்.

கவிஞர்,மக்களிசை பாடகர்,எழுத்தாளர், நாடக வியலாளர், வீதிநாடக கலை ஞர்,நாட்டுப்புற பாடகர், இசையமைப்பாளர், கலைப் பயண வித்தகர், அறிவியல் இயக்க,அறிவொளி இயக்க, தமுஎச இயக்க முன்னோடி, மக்களோடு மக்களாக வாழ்ந் தவர், மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர்,சிறந்த நிர்வா கத்திறனுடையவர், ஆளு மைத்திறனாளர், இலக்கிய வாதி,சமூகப்போராளி இப்படி பன்முகத்திறனுடைய கலைஞனின் மறைவு நம் அனைவருக்கும் பேரிழப் பாகும். அவரோடு இணைந்து பழகிய நினைவுகள் காலத் தால் அழியாதவை.

ஆழ்ந்த இரங்கலை வருத் தத்துடன் நேரில் பதிவு செய் தவர்கள் விவரம் வருமாறு:

வேலூர் மாவட்ட ஆட் சியரின் நேர்முக உதவியாளர் எம்.சிலுப்பன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் மற்றும் காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்க செயலாளர் செ.நா. ஜனார்த்தனன், செயற்குழு உறுப்பினர் எம்.பிரபு, தமிழ்நாடு அறிவியல் இயக் கத்தின் மாநில பொருளாளர் கு.செந்தமிழ் செல்வன், மாநில செயலாளர் எஸ்.சுப்பிரமணி, மாவட்ட தலைவர் க.பூபாலன், ந.கருணாநிதி, அ.கலைநேசன், பி.ராஜேந்திரன், சி.குண சேகரன், எ.முத்துகிருஷ்ணன், பி.ராமு, கே.விஸ்வநாதன், ச.குமரன்,  தி. சாந்தி மனோகர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சிந்தனை செல் வன், மாநில அமைப்புச் செயலாளர் நீல சந்திரகுமார் மற்றும் ஊர் பொதுமக்கள் பெல் தொழி லாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர் கள் உள்ளிட்ட ஏராளமா னோர் மரியாதை செலுத் தினர்.

-  விடுதலை நாளேடு, 16.6.19

திங்கள், 10 ஜூன், 2019

புதிய மிகுமின் கடத்தி கண்டுபிடிப்பு!

மின்சாரத்தை கம்பி வழியே அனுப்பும்போது, விரயம் ஏற்படுவதை தடுக்க முடியாது. ஆனால், 'மிகுமின் கடத்தி'கள், மின்சாரத்தை முழுமையாக மறு முனைக்கு சேர்க்கும் திறன் உடையவை.

இருந்தாலும், மிகுமின் கடத்திகளை மின் கம்பிகளாக பயன்படுத்த முடியாது. காரணம், அவை அறை வெப்பத்தில் இயங்குவதில்லை. அவை மிகுமின் கடத்தும் திறனை, -234 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைவான வெப்பநிலையில் தான் வெளிப்படுத்துகின்றன.

அண்மையில், ஜெர்மனியைச் சேர்ந்த மேக்ஸ் பிளாங்க் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், லான்தனம் ஹைட்ரைடு என்ற மிகுமின் கடத்தியை குளிர்வித்து மின்சாரம் பாய்ச்சினர்.  லான்தனம் ஹைட்ரைடு கம்பிகள், -23 டிகிரி செல்ஷியஸ் குளிர்ச்சியிலேயே முழுமையாக மின்சாரத்தை கடத்தியது. இது அறை வெப்பநிலைக்கு அருகாமையில், ஒரு மிகுமின் கடத்தியை உருவாக்கும் பந்தயத்தில், முக்கியமான மைல்கல் என, 'நேச்சர்' இதழ் அங்கீகரித்துள்ளது. பரவலாக மின் கம்பிகளாக பயன்படுத்தப்படும் தாமிரம், அலுமினியம் போன்றவை, கணிசமாக மின்சாரத்தை வீணடிக்கின்றன. உற்பத்தியாகும் மின்சாரத்தை முழுமையாக அனுப்ப முடிந்தால், உலகெங்கும் உள்ள மின்வாரியங்கள், நஷ்டமில்லாமல் இயங்க முடியும்.

 - விடுதலை நாளேடு 6. 6 .2019

தங்கத்தை கண்டுபிடிக்கும் பூஞ்சை!



தங்கத்தைத் தேடிப் படரும் புதிய பூஞ்சை வகையை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மண்ணில் மலிந்து கிடக்கும் ஏராளமான பூஞ்சை வகைகளுள் ஒன்றான 'புசாரியம் ஆக்ஸ்போரம்', வேதியல் ரீதியில் துடிப்பான பல உலோகங்களுடன் வினை புரியும் என்பதை முன்பே விஞ்ஞானிகள் அறிந்தி ருந்தனர்.

ஆனால், வேதியல் ரீதியில் எளிதில் வினை புரியாத தங்கத் தாதுத் துகள்களுடன் புசாரியம் ஆக்ஸ்போரம் வினைபுரிந்து, தனது உடலெங்கும் அலங்கரித்துக்கொள்வதைப் போல சேமித்து வைத்திருப்பதை அண் மையில் ஆஸ்திரேலியாவின் விஞ்ஞான முகமையான சி.எஸ்.அய்.ஆர்.ஓவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்த வகை பூஞ்சையைப் பயன்படுத்தி, மின்கழிவுகள் மற்றும் சாக்கடைக் கழிவுகளி லிருந்து தங்கத்தை பிரித்தெடுக்க முடியுமா என்று இப்போது விஞ்ஞானிகள் ஆராயத் துவங்கியுள்ளனர்.

அதுமட்டுமல்ல, பெரும் பொருட் செலவில் சுரங்கங்களைத் தோண்டாமலேயே, பூமிக்கடியில் தங்கம் இருக்குமிடத்தை கண்டுபிடிக்க, புசாரியம் ஆக்ஸ்போரம் பூஞ்சையை பயன்படுத்த முடியுமா என்பதையும் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.

- விடுதலை நாளேடு, 6 .6 .2019

பூமிக்கடியில் ஓர் உலகம்



காடுகளில் மண்ணுக்கு அடியில் ஒரு ரகசியமான உயிரிகள் உலகம் இருக்கிறது. இதில் வேர்கள், பூஞ்சைகள், பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் செழித்துத் தளைக்கின்றன.

கடந்த, 50 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்து இருக்கும் இவை, மரங்கள், செடிகளுக்கு சத்துக்களை வழங்குவதோடு, அவற்றுகிடையே ஒரு பிணைப்பை உருவாக்குகின்றன.

இதனால், இந்த நிலத்தடி உலகை, 'வைய வன வலை' என உயிரியலாளர்கள் அழைக் கின்றனர். அண்மையில், சுவிட்சர்லாந்திலுள்ள குரோதெர் லேப் மற்றும் அமெரிக்காவின், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் ஆகிய வற்றை சேர்ந்த விஞ்ஞானிகள் உலகின் முதல் மண்ணடி நுண்ணுயிரிகளின் வரைபடத்தை உருவாக்கிஉள்ளனர்.

உலகின், 70க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள, 12 லட்சம் மரங்கள் அடர்ந்த பகுதிகள், 28 ஆயிரம் நுண்ணுயிரிகள் அடங்கிய தகவல் தொகுப்பை ஆராய்ந்து, செயற்கை நுண் ணறிவு மென்பொருளின் உதவியுடன் இந்த வரைபடத்தை விஞ்ஞானிகள் உருவாக்கினர்.

சில நுண்ணுயிரிகள் தாவரங்களின் வேர்களை ஊடுருவி வாழ்பவை. சில வேர்களை சுற்றி வாழ்பவை. சில வகைகள் கரிமத்தை மண்ணுக்கு சேமித்துத் தருபவை. சில வகைகள், கரிமத்தை வேகமாக மண் ணிலிருந்து வெளியேற்றுபவை.

புவி வெப்பமாதலால், தற்போது கரிமத்தை சேமிக்கும் நுண்ணுயிரிகள் வேகமாக குறைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

- விடுதலை நாளேடு, 30.5.19

வியாழன், 30 மே, 2019

நம்ப முடிகிறதா? ஆனாலும்... செயற்கை இறைச்சி



விவசாயம் குறைகிறது, தண்ணீர் பற்றாக்குறை என்றெல்லாம் நாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இனி உணவு உற்பத்தி இல்லாமல் மனித குலம் எப்படி வாழும் என்றும் போராடிக் கொண்டிருக்கிறோம். மிகவும் தீவிரமான இந்த பிரச்சினையை விஞ்ஞானம் வேறு ஒரு கோணத்தில் அணுகுகிறது.

மனிதனுக்கு உணவு வேண்டும் அவ்வளவுதானே? விளைநிலங்களில்தான் உணவு உற்பத்தியாக வேண்டுமா? ஆய்வுக்கூடங்களிலும் அதே சத்தூட்டங்கள் கொண்ட உணவை தயார் செய்துவிட முடியாதா? என்ற கேள்விகளோடு ஆராய்ச்சி யாளர்கள் வெகுவேகமாக முன்னேறி கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கெனவே நாம் சாப்பிட்டுக் கொண்டி ருக்கும் கணிசமான உணவுகள் ஆய்வகங் களில் வடிவமைக்கப்பட்டு, தொழிற்சாலை களில் தயாராகி வருபவைதான். பிஸ்கட்டுகள், குளிர்பானங்கள், சத்து மாத்திரைகள், துரித உணவுகள் என பல்வேறு உணவுகள் இயற்கையாக உருகாதவைதான். இன்னும் சொல்லப் போனால் காய்கறிகள், பழங்களைக் கூட மரபணு மாற்றம் செய்து தங்கள் விருப்பத்துக் கேற்றவாறு விளைவிக்க முடிகிறது.

எனவே, இனி எல்லாமே சாத்தியம்தான். எல்லாமே மாற்றத்துக்கு உட்பட்டதுதான் என்று நம்பிக்கையோடு களம் இறங்கியிருக் கிறார்கள். இந்த ஆராய்ச்சியில் இரண்டு முக்கியமான மைல் கல்களையும் அடைந் திருக்கிறார்கள். சுவையும், சத்தும் மிக்க இறைச்சியை ஆய்வகங்களில் உற்பத்தி செய்யும் முயற்சி வெற்றி அடைந்திருக் கிறது. அதேபோல், அரிசியை ஆய்வகத்தில் தயார் செய்து விற்பனை செய்வதற்கான உரிமத்தை அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகம் பெற்று வைத்திருக்கிறது.

இதயநோய் நிபுணரும், அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனில் தலைமைப் பொறுப்பில் உள்ளவருமான விஜய வாடாவைச் சார்ந்த இந்தியரான உமா வேலட்டி தன்னுடைய ஆய்வகத்தில் விலங்குகளின் ஸ்டெம் செல்லில் இருந்து சுத்தமான மாமிசத்தை உருவாக்கியுள்ளார். சுற்றுச்சூழலைப் பாதிக்காத மற்றும் மிருகவதையிலிருந்து விலங்குகளை பாதுகாக்கும் இந்த கண்டுபிடிப்பு உலகம் முழுவதையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

விலங்கின் ஸ்டெம் செல்லில் இருந்து உருவாக்கப்பட்ட இந்த மாமிசம் 100 சதவீதம் சுத்தமானது என்பதால் தன்னுடைய இந்த ஆய்வை மற்ற உணவுப் பொருட்களிலும் தொடரப் போவதாகவும், எதிர்காலத்தில் உணவு மேஜையில் ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட உணவுப்பொருட்களே இருக்கும் என்றும் வேலட்டி உறுதி அளிக்கிறார். அவருடைய கிளன் மீட் டெக்னாலஜி மூலம் உருவாகும் மாமிச தயாரிப்பு நிறுவனமான மெம்பிஸ் இப்போது அமெரிக்காவில் செயல்பட்டுக் கொண்டி ருக்கிறது.

இறைச்சி ஒவ்வாமை, முட்டை வெள்ளை புரதம் ஒவ்வாமை, வேர்க்கடலை ஒவ்வாமை ஆகியவற்றால் உணவு சகிப்புத்தன்மை பிரச்சினை உடையவர்களுக்கு இது போன்ற கண்டுபிடிப்புகள் மிகவும் பயன் அளிப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

- விடுதலை ஞாயிறு மலர் 25. 5 .2019

புதன், 29 மே, 2019

விண்கல்லில் தண்ணீர்



ஜப்பானிய   விண்கலனான, 'ஹயபுசா' 2010ஆம் ஆண்டில், 'இடோகா' என்ற விண் கல்லின் மாதிரிகளை சேக ரித்து, பூமிக்கு அனுப்பியது. அந்த மாதிரிகளை ஆராய்ந்து, விண்கற்களில் ஏதாவது புதிய உலோகங்கள், தாதுக்கள் இருக்கிறதா என்பதை ஆராய்வதும், பிர பஞ்சத்தில் கிரகங்கள் உரு வான விதம் குறித்து அறி வதும் தான், அந்த ஆய்வின் நோக்கம்.

ஆனால், இடோகா விண் கல் மாதிரிகளை ஆராய்ந்த, அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக் கழக விஞ்ஞானிகள்,  அந்த விண்கல்லில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்களை கண்டறிந்து, ஆச்சரியத்தை ஏற்படுத்தி யுள்ளனர்.பூமியில் தண்ணீர் இருப்பதற்குக் காரணமே, பல கோடி ஆண்டுகளுக்கு முன், பல மைல் அகல முள்ள விண்கற்கள் தாக்கியதால் தான் என்று சொல்லும் விஞ்ஞானிகளும் உண்டு. இடோகாவில் இருப்ப தாக சொல்லப்படும் தண் ணீர் தடயம், அந்தக் கருத் துக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.

- விடுதலை நாளேடு 23 .5 .2019