நூல் அறிமுகம்
நூல் :- ''மனித இனங்கள்'' ஆசிரியர்-மி.நெஸ்தூர்ஹ்
தமிழில் பூ.சோமசுந்தரம்
சோவியத் யூனியனில் 1981ல் மீர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. சோவியத் சிதறுண்டதால் நூல் வெளியீடு நிறுத்தப்பட்டுள்ளது.
உலக மனித இனங்களின் வகைப்பாட்டு பட்டியல், இனங்களின் பிரிவுகள் மற்றும் இனவாரியாக, நாட்டு வாரியாக இன மக்களின் படங்களும் இடம் பெற்றுள்ளன.
மனித இனத்தின் தோற்றமும் பரவலும் விவரிக்கப்பட்டுள்ளது. மனித இனம் எப்படி பல இனங்களாக மாறியது என்றும் விளக்கப்பட்டுள்ளது.
முடிவாக மனித இனங்களின் முன்னோடி இனங்களில் பல இயற்கை தேர்வால் அழிந்துபட்டு ''நியாண்டர்தல்'' முன்னோடி இனம் மட்டும் இயற்கையுடன் போராடி நிலைத்து நின்றது, அந்த முன்னோடி'நியாண்டர்தல்'' இனத்திலிருந்து வந்த இனங்கள் தான் உலகில் உள்ள அனைத்து மனித இனங்களும் என்று நிறுவுகிறது. வெளித்தோற்றமான ''முடி,நிறம், தோற்ற அமைப்பு, மண்டை ஓடு அமைப்பு'' இவற்றில் மட்டுமே சின்னச் சின்ன மாற்றங்கள் உள்ளன ஆனால் உடற்கூறு அனைவருக்கும் ஒன்றாகவே உள்ளது, ஆகையால் 'உலக மனிதர்கள் அனைவரும் ஒரே இனம்' என்று இன்னூலில் கூறப்பட்டுள்ளது.
நூலகங்களில் தேடிப்பிடித்து படித்து, சிந்தனை தெளிவு பெறுங்கள்.
- முக நூலில் 10.6.14ல் நான் பதிவிட்டது
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக