வெள்ளி, 29 மார்ச், 2019

அரிதான நிகழ்வு இரட்டைக் கருப்பைகள் மூலம் இரு குழந்தை பெற்ற பெண்



டாக்கா, மார்ச் 29- வங்காளதேசம் நாட்டின் தென்மேற்கில் அமைந் துள்ளது ஜெசோர் பகுதி. இங் குள்ள ஷர்ஷா கிராமத்தை சேர்ந் தவர் அரிபா சுல்தானா இதி. இவர் கடந்த ஆண்டு கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து தொடர்ந்து மருத்துவ பரிசோத னைகள் செய்யப்பட்டன. அல்ட்ரா சவுண்ட் சோதனையின் போது அரிபாவுக்கு இரட்டை கருப்பைகள் அமைந்துள்ளது தெரிய வந்தது.

இதற்கிடையே, பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி அரிபா ஒரு கருப்பை மூலம் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அதன் பின்னர், ஒரு மாதத்துக்கு பிறகு மற்றொரு கருப்பை மூலம் மார்ச் 22இ-ல் அழகான இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். தற்போது தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர் என டாக் டர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், மருத்துவ துறை யில் இது ஓர் அரிதான நிகழ்வு. இதுபோன்ற சம்பவத்தை நான் முதன்முதலாக பார்க்கிறேன். இதற்கு முன்னால் இதுபோன்ற சம்பவத்தை நான் கேட்டதே இல்லை என தெரிவித்தார்.

 -  விடுதலை நாளேடு, 29.3.19

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக