வியாழன், 30 ஜூன், 2016

செல்ல நாயின் திசுக்களில் இருந்து இரண்டு குட்டி நாய்கள்



தங்களது செல்ல நாய் இறந்துவிட் டதால் அதே போல் நாயை உருவாக்க நினைத்த லண்டன் இணையரின் ஆசையை நிறைவேற்றிய கொரிய உயிர் அறிவியலாளர்கள்  நாயின் உடலில் இருந்து திசுவை எடுத்து அதே போல் தோற்றம் மற்றும் குணநலமுடைய இரண்டு குட்டி நாய்களை உருவாக்கிக் காட்டி சாதனை படைத்துள்ளனர்.
லண்டனைச் சேர்ந்த லாரா ஜாக்வின் ரிச்சர்ட் ரெமெடோ இவர்கள் நீண்ட காலமாக பாக்ஸர் இனத்தைச் சேர்ந்த நாய் ஒன்றைச் செல்லமாக வளர்த்து வந்தனர். இதற்கு டைலின் என்று பெயர் சூட்டினர் இந்த நாய் முதுமையின் காரணமாக விரைவில் இறந்து போகும் நிலை ஏறபட்டது. நாயின் பிரிவை தாங்களால் தாங்கமுடியாது என்ற நிலையில் தாங்கள் வளர்க்கும் நாயைப் போன்றே குளோனிங் (நாயின் திசுக்களில் புதிய உயிர் உருவாக்குதல்) முறையில் வேறொருநாயை உருவாக்க நினைத் தனர். இதனை அடுத்து பல்வேறு அறிவியல் ஆய்வாளர்களிடம் தங்களின் விருப்பத்தை கேட்டுக்கொண்டனர்.
கொரியாவைச் சேர்ந்த சோம் உயிர் ஆய்வியல் கழகம் இவர்களின் வேண்டு கோளை ஏற்று அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டது. இதனிடையே நாய் மரணிக்கும் முன்பாக அதன் உடலின் நாக்கு பாகத்தில் உள்ள திசுக்களை எடுத்துக் கொண்டது. திசுவை எடுத்த சில நாட்களில் முதுமையின் காரணமாக, டைலின் என்று பெயர்சூட்டப்பட்ட அந்த நாய் மரணமடைந்தது. இந்த நிலையில் கொரிய அறிவியலாளர்கள் டயலின் நாயின் திசுவை பெண் பாக்சர் இன நாயின் கருமுட்டையையும் இணைத்து சோதனைக்குழாயில் வைத்து கரு முட்டை  மற்றும் திசுக்கள் இணைந்து புதிய கரு ஒன்றை உருவாக்கினர்.
புதிதாக உருவான கருவை பெண் நாயின் கருப்பையில் செலுத்தினர். பெண் நாயின் கருப்பபையில் முழு மையாக வளர்ச்சி யடைந்த நிலை யில் இரண்டு நாய்க் குட்டிகளை ஈன் றுள்ளது. அந்த நாய்க்குட்டிகள் இரண்டுமே மரணம்டைந்த டையலின் நாயைப் பிரதி எடுத்ததைப் போல் உள்ளன.
இது குறித்து லாரா ஜாக்வின் த கார்டியன் என்ற இதழுக்கு கூறியதா வது,  நாங்கள் மீண்டும் எங்கள் டயலின் வருகையை எதிர்ப்பார்த்திருக்கிறோம். முதலில் ஒரு டயலின் தான் இருந்தது, தற்போது எங்க ளுக்கு புத்தாண்டு பரிசாக இரண்டு டயலின்கள் வருகை தரவிருக்கிறது என்று கூறினார்.
தென் கொரிய உயிர் ஆய்வாளர்களின் முதல் முயற்சியிலேயே குளோனிங் குட்டிகள் வெற்றிகரமாக உருவாகியுள்ளது. இனி வரும் ஆண்டுகளில் பலர் தங்களது செல்லப்பிராணி களை இவ்வாறு மீண்டும் புதிதாக ஒரே தோற்றம் குணநலமுடைய குட்டி களை உருவாக்க முடியும் என சோம் உயிர் ஆய்வியல் கழகம் தலைமை ஆய்வாளர் பேராசிரியர் ஹூ சுக் வாங் கூறினார்.
-விடுதலை ஞா.ம.,,2.1.16

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக