திங்கள், 6 ஜூன், 2016

குரங்குகள் ஏன் மனிதர்களாக மாறுவதில்லை?

குரங்கிலிருந்து
மனித இனம் தோன்றியது என்றால்,
குரங்குகள் ஏன் மனிதர்களாக மாறுவதில்லை?
பரிணாம வளர்ச்சி என்பது ஒரு விலங் கினத்தில், எல்லா விலங்குகளுக்குள்ளும் ஒரே சமயத்தில், ஒரே மாதிரி நடப்பதில்லை. அது, குறிப்பிட்ட சூழலில் உள்ள சிக்கல்கள், பல விலங்கினங்களுக்குள் இருக்கும் ஜீவ மரண போராட்டங்கள், உணவு,
இருப்பிடத் திற்கான போட்டிகள் போன்றவற்றை சமாளிக்க, ஒரு குறிப்பிட்ட இனத்தின் மரபணுக்கள் செய்யும் தகவமைப்பு முயற்சி. அதேபோல, பரிணாம வளர்ச்சியால், ஒரு புதிய இனம் உருவானதும், அது உருவாகி வந்த முந்தைய இனம் அழிக்கப்பட்டுவிடும் என்பதில்லை.
‘கிப்பன்ஸ்’ குரங்கு இனத்திலிருந்து, ‘உராங்குடான்’ குரங்கு பரிணமித்து வந்ததாக விஞ்ஞானிகள் சொல்கின்றனர். ஆனால் இன்றும், இரு இன குரங்குகளும் உலகில் இருக்கின்றன. நம் பெற்றோரும், நாமும் ஒரே காலத்தில் வாழ்வதைப் போல.
பரிணாம வளர்ச்சி பல லட்சம் ஆண்டு களாக, சிறுகச் சிறுக நடப்பது. குரங்கு குட்டியாக பிறந்து வளரும் சில ஆண்டு கால இடை வெளியில் பரிணாம வளர்ச்சி ஏற்பட்டு விடாது.
மரபணு அளவில்கூட கவனிக்கத் தக்க மாறுதல்கள் ஏற்பட பல்லாயிரம் ஆண்டுகள் ஆகும்.இப்போதும் நீங்கள் காணும் குரங்குகள் பரிணாம வளர்ச்சியின் ஒரு அங்கம் தான். அவற்றிலிருந்து சிறிய காதுகளை உடைய, சின்ன வால் உடைய, ரோமங்களே இல்லாத, ‘மொழுக்‘ குரங்கு இனம் ஒன்று கிளைத்து வருவது போன்ற எதுவும் நடக்கலாம்.
-விடுதலை,14.3.16

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக