திங்கள், 27 ஜூன், 2016

தாயின் கருப்பையை கொடையாகப் பெற்று குழந்தையை ஈன்றெடுத்த பெண்

... மகப்பேறு மருத்துவர்கள்
உலகிலேயே முதல் முறை  தாயின் கருப்பையை கொடையாகப் பெற்று குழந்தையை ஈன்றெடுத்த பெண்
லண்டன், டிச.5_  உலகிலேயே முதல் முறையாக ஸ்வீடனில், தனது தாயின் கருப்பை யையே கொடையாகப் பெற்று அழகான ஆண் குழந்தையை ஈன்றெடுத்துள்ளார் ஒரு பெண். ஒரு மாதத்துக்கு முன்பு பிறந்த ஆண் குழந்தை தனது தாயுடன் நலமாக உள்ளது.
இதன் மூலம், பிரிட்டனில், கருப்பையே இல்லாமல் பிறந்த மற்றும் நோய் காரணமாக கருப்பையை நீக்கிய பெண்களும் குழந்தைப் பேறு அடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கருப்பை மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் 7 பெண்கள் தற்போது தாய்மை அடைந் துள்ளனர். இதில் தற்போது குழந்தையை ஈன்றவருக்கு, அவரது தாயே தனது கருப்பையை கொடையாக வழங்கியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்புதான் உருவான கருப்பையையே கொடையாகப் பெற்று அதில் தனது குழந்தையை கருவாக சுமந்து ஈன்றெடுத் துள்ளார் ஒரு பெண்.
-விடுதலை,5.12.14

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக