ஞாயிறு, 12 ஜூன், 2016

உயரே உள்ள மேகம் பூமியை மீறி விண்வெளிக்கு செல்லுமா?


மேகம், புவியீர்ப்பு விசையால் ஈர்க்கப்படுமா?
உயரே உள்ள மேகம் பூமியை மீறி விண்வெளிக்கு செல்லுமா?
காற்று மண்டலம் பூமியை போர்த்தியிருப்பதே புவியீர்ப்பு விசையால் தான். காற்று மண்டலத்தில், ‘மிதக்கும்‘ இலகுவான மேகங்களும், அதே புவியீர்ப்பு விசைக்குட்படுகின்றன.
பூமியிலுள்ள நீர் பரப்புகளிலிருந்து வெப்பத்தால் ஆவி யாகும் நீராவி இலகுவானது. அது, காற்று மண்டலத்தில் மிதந்து குறிப்பிட்ட உயரம் சென்ற பின் குளிர்ச்சியடைந்து நீர் துகள்களாக மாறுகிறது. குண்டூசி முனையைவிட பலநூறு மடங்கு சிறிய நீர்த்துகள்கள் அவை.
அந்த நீர்த்துகள்கள் வளி மண்டல வாயுக்கள் மற்றும் தூசு துரும்புகளுடன் சேர்ந்து மேகம் உருவாகிறது. பூமி எந் நேரமும் தன்னை நோக்கி மேகத்தை ஈர்த்தபடியே இருக்கிறது. அதே சமயம், காற்று மண்டலமும் மேகம் கீழே வருவதை தொடர்ந்து தடுத்தபடியே இருக்கிறது. தவிர, வேகமாக நகரும் காற்றோட்டமும் மேகத்தை உயரே அலைக்கழித்தபடியே இருக்கிறது. மேகம் குளிர்ச்சியடைந்து கனமாகும்போது தாழ்வாக வருவதை மலைப் பகுதியில் நீங்கள் பார்க்க முடியும்.
பூமியின் வளி மண்டலத்திற்குள் சிக்கியுள்ள மேகம், புவியீர்ப்பு விசைக்குத் தப்பித்து, விண்வெளிக்கு செல்ல, ‘எஸ்கேப் வெலாசிட்டி’ எனப்படும் வேகம் தேவை. அதாவது, விநாடிக்கு அதிகபட்சம், 11.2 கி.மீ., வேகமும், குறைந்தபட்சம், 7.1 கி.மீ., வேகமும் தேவை.
அந்த வேகம் மேகங்களுக்கு இல்லை. மனிதர்கள் உருவாக்கிய ராக்கெட்டுக்களுக்கே உண்டு.
-விடுதலை,12.5.16

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக