வியாழன், 14 பிப்ரவரி, 2019

கல் விழுங்கும் முதலைகள்

நீர் நிலைகளில் அதிக நேரத்தைக் கழிக்கும் முதலைகள், அடிக்கடி கற்களையும் விழுங்குவது உண்டு.  இது எதனால் என்பது, உயிரியலாளர்களுக்கு தெளிவாக தெரியாமல் இருந்தது.

சில பறவைகள், கடினமான இரைகளை செரிமானம் செய்வதற்காக, நுண் கற்களை கொத்தித் தின்பது உண்டு.  அதுபோல, காட்டெருமை போன்ற கடினமான இறைச்சிகளை வேட்டையாடும் முதலைகளும், உண்ட இரை  சீக்கிரம்  செரிப்பதற்காக, கற்களை உண்பதாகவே உயிரியலாளர்களில் ஒரு தரப்பு கருதியது.

ஆனால், குட்டி முதலைகள் சிலவற்றை ஆய்வகத்தில் வைத்து ஆராய்ந்த விஞ்ஞானிகள், நீருக்கு அடியில் அதிக நேரம் இருப்பதற்காக, தன் எடையை கூட்டுவதற்காகத் தான் கற்களை முதலைகள் உண்பதாக கண்டறிந்துள்ளனர்.

தன் உடலின் எடையில், 2.5 சதவீதம் எடையுள்ள கற்களை விழுங்கும் முதலைகள், வழக்கத்தைவிட, 88 சதவீதம் கூடுதல் நேரம் நீருக்கடியில் வலம்வர முடிந்ததை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
- விடுதலை நாளேடு, 14.2.19
 

புற்றுநோய்க்கு தீர்வு தருமா மரபணு மாற்றப்பட்ட கோழி முட்டைகள்?



மரபணு மாற்றம் மூலம், மூட்டு வலி மற்றும் சில வகை புற்றுநோய்க்கு மருந்து தரும் முட்டைகளை இடும் கோழிகளை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்வதைக் காட்டிலும் இந்த மருந்துகளை முட்டையாக இடும்போது பல மடங்கு விலை மலிவானதாக உள்ளது.

பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளை போன்று இந்தக் கோழிகள் துன்புறுத்தப்படமாட்டாது. மேலும் அவை அன்பாக கவனித்துக் கொள்ளப்படும்.

பெரிய பண்ணைகளில் வாழும், அதிக பயிற்சிபெற்ற தொழில்நுட்பவியலாளர்களால் இவைகளுக்கு உணவும், நீரும் வழங்கப்பட்டு தினமும் நன்றாக கவனித்துக் கொள்ளப்படும். அவை ஒரு வசதியான வாழ்க்கையை வாழும்.

இந்த கோழிகளை பொறுத்தவரை அவை எப்போதும் போல் முட்டைகளை இடுகின்றன எனவே அவற்றின் ஆரோக்கியத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

முன்னதாக மரபணு மாற்றப்பட்ட ஆடுகள், முயல்கள் மற்றும் கோழிகள், முட்டை மற்றும் பால் மூலம் மனிதர்களுக்கு தேவையான புரதத்தை வழங்க முடியும் என விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

இந்த புதிய முயற்சி பழைய வழி முறைகளை காட்டிலும் அதிக திறன் கொண்டது என்றும், குறைவான செலவில் நல்ல பலனை தரும் என்றும் தெரிவிக்கின்றனர். இம்மாதிரியான முட்டைகள், மருந்து தயாரிக்கும் செலவைக் காட்டிலும் பல மடங்கு குறைவாக இருக்கும் எனவே ஒட்டு மொத்தமாக தயாரிப்பு செலவுகள் குறையும் என எதிர்ப்பார்ப்பதாக என எடின்பரோவில் உள்ள ரோஸ்லின் டெக்னாலஜிஸை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஹெரோன் தெரிவித்தார்.

தொழிற்சாலைகளில் மருந்துகளை தயாரிக்க சுத்தமான அறைகளை உருவாக்கும் செலவுகளைக் காட்டிலும் கோழிப் பண் ணைகள் உருவாக்குவது விலை குறைவே.

பல நோய்களுக்கு காரணம் நமது உடல் தானாகவே சில ரசாயனங்களையும், புரதங் களையும் உற்பத்தி செய்யாததே. அம்மாதிரி யான நோய்கள், புரதங்களை கொண்ட மருந்துகளை கொண்டு சரி செய்யப்படும். அந்த மருந்துகள், மருந்து நிறுவனங்களால் செயற்கையாக தயாரிக்கப்படுகின்றன.

ஹெரோன் மற்றும் அவரது குழுவினர் மனித உடலில் புரதத்தை உற்பத்தி செய்யும் மரபணுவை, கோழி முட்டையில் வெள்ளை கருவை உற்பத்தி செய்யும் டிஎன்ஏவில் செலுத்தினர்.

முட்டை கருவில்


கோழி முட்டையில் வெள்ளை கருவை பிரித்து பார்த்ததில், கோழியில் அதிகப்படியான புரதம் இருப்பதை ஹெரோன் கண்டறிந்தார்.

அதில் மனித நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான இரண்டு வகையான புரதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒன்று வைரஸ் கிருமிகள் மற்றும் புற்றுநோய்க்கு எதிரானதாக செயல்படும் 2. மற்றொன்று சேதமடைந்த திசுக்களை தானாக சரி செய்து கொள்ள உதவும் மேக்ரோஃபேஜ் - சிஎஸ்எஃப் - நீங்கள் என்ன சாப்பிட்டாலும் ஒல்லியாக இருக்க இதுதான் காரணம்.

ஒரு கோழி ஒரு ஆண்டுக்கு 300 முட்டைகளை இடும். எனவே கோழிகளின் எண்ணிக்கை போதுமானதாக இருந்தால் இதை வணீக ரீதியாக செயல்படுத்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

மனித உடலுக்கு தேவையான மருந்து களை உருவாக்குவது மற்றும் அதற்கான நெறிமுறைகளை செயல்படுத்துவதற்கு 10-20 வருடங்கள் ஆகும். இந்த கோழிகளை, மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கான மருந்துகளை தயார்படுத்தவும் பயன்படுத்தலாம் என ஆராய்ச்சியாளார்கள் தெரிவிக்கின்றனர்.

ஆண்டிபயோட்டிக்குகளுக்கு பதிலாக இந்த மருந்துகள் விலங்குகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

விலங்குகளின் பாதிக்கப்பட்ட நுரையீரல் மற்றும் சிறுநீரக பாகங்களை சரி செய்ய இந்த மருந்து பயன்படும். தற்போது அந்த மருந்துகளின் விலை அதிகமானவை. எனவே இந்த மருந்துகளை உருவாக்குவது மிகவும் பயனளிக்கும்.

தற்போது நாங்கள் மனிதர்களுக்குத் தேவையான மருந்துகளைத் தயாரிக்கத் தொடங்கவில்லை ஆனால் இந்த மருந்து கண்டுபிடிப்புக்கு தேவையான புரதங்களை கோழிகள் எளிதில் வழங்க முடியும் என்று இந்த ஆய்வில் தெரிகிறது என்கிறார் பேராசிரியர் ஹெலன்.

- விடுதலை நாளேடு, 14.2.19

செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

அரசு மருத்துவர் உருவாக்கிய பலூன் உபகரணம்

மீண்டும் மீண்டும் துளையிட தேவையில்லை; அதிக காயம் ஏற்படாது


நுண்துளை அறுவை சிகிச்சையில் வயிற்றுக்குள் கருவிகளை செலுத்த


அரசு மருத்துவர் உருவாக்கிய பலூன் உபகரணம்




வயிற்றுப் பகுதியில் நுண்துளை மூலம் அறுவைச் சிகிச்சை செய் வதற்கான கருவிகளை உட்செலுத்துவதற்குப் பயன் படும் நவீன உபகரணத்தை புதுக்கோட்டை அரசு மருத்துவர் வடிவமைத்துள்ளார்.

வயிற்றுப் பகுதியில் நுண்துளை அறு வைச் கிசிக்சை செய்வதற்கு உள்உறுப்பு களைத் துண்டித்தல், உள்ளிருக்கும் திர வத்தை உறிஞ்சி எடுத்தல், உறுப்புகளை விலக்கிப் பார்த்தல் போன்ற செயல்களுக்கு பலவிதமான நவீன கருவிகள் பயன்படுத் தப்பட்டு வருகின்றன.

இத்தகைய கருவிகளை வயிற்றில் தனித்தனியே துளையிட்டு உட்செலுத்தி, ஒரே நேரத்தில் இயக்கி அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படும். இந்தக் கருவி களை நேரடியாக பயன்படுத்தாமல், ஒவ்வொரு துளையிலும் ஒரு உபகரணம் வீதம் பொருத்தப்பட்டு, அதன் வழியே தான் அந்தந்தக் கருவிகள் உட்செலுத்தப்படும்.

இந்த உபகரணங்கள் தோல் பகுதியில் போதிய பிடிப்பின்றி இருப்பதால் அடிக்கடி அசைவு ஏற்படும். அப்போது, வயிற்றைப் பெரிதாக்குவதற்காக செலுத்தப்பட்ட காற்று (ஆக்சிஜன்) வெளி யேறுவதால், வயிற்றுப் பகுதி சுருங்கும்.

மேலும், அசைவால் துளை பெரிதாகி, அந்த உபகரணமே கீழே விழுந்துவிடும். அத்தகைய சந்தர்ப்பங்களில், மீண்டும் அதே இடத்தில் அந்த உபகரணத்தை வைக்க முடி யாது என்பதால் வேறு இடத்தில் துளையிட வேண்டும். இதனால் அறுவைச் சிகிச்சையில் தாமதம் ஏற்படும்.

இத்தகைய சிரமங்களைத் தவிர்க்கும் விதத்திலான புதிய உபகரணத்தை புதுக் கோட்டை சுகாதார துணை இயக்குநரும் (காசநோய்), அறுவைச் சிகிச்சை அரசு மருத் துவருமான எம்.பெரியசாமி வடிவமைத்து உள்ளார். இதுகுறித்து மருத்துவர் எம். பெரியசாமி கூறியதாவது:

“நுண்துளை அறுவைச் சிகிச்சையின் போது பிடிமானமற்ற ட்ரோ கார் கேனுலா (Trocar Cannula) 
எனும் உபகரணத்தின் வழியே தான் கருவிகள் பயன்படுத்தப் படுகின்றன. மேலும், அசைவின் மூலம் ஒரு உபகரணத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பொருத்தவேண்டியிருப்பதால் காயம் அதிகமாகிவிடுகிறது. இதைத் தடுப்பதற்காக, ட்ரோகார் கேனுலா உப கரணத்தில் வயிற்றுக்குள் செல்லக்கூடிய 10 செ.மீ நீளமுள்ள குழாய் வடிவிலான பகுதியில் 10 மி.லி அளவில் காற்று நிரப் பக்கூடிய பலூன் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த உபகரணம் வயிற்றுக்குள் செலுத் தப்பட்டதும் அந்த பலூனில் காற்று நிரம்பி விடும். அந்த பலூனை அடுத்துள்ள உபகரணம் அறுவைச் சிகிச்சையின்போது பிடுங்கிக்கொண்டு வெளியே வராது. உள்ளிருக்கும் காற்றையும் வெளியேற விடாது.

மேலும், அறுவைச் சிகிச்சை முடிந்த தும் உபகரணத்தில் பொருத் தப்பட்டுள்ள பலூனில் இருந்து பைலட் பலூன் வழியாக காற்றை வெளியேற்றிவிட்டு உபகரணத்தை எளிதில் அகற்றிவிடலாம். இதனால் குறித்த நேரத்தில் அறுவை சிகிச்சை செய் வதோடு, அதிக காயம் வர வாய்ப்பில்லை.

இந்த உபகரணத்தின் பயன் பாடு குறித்து மருத்துவர்கள் மாநாட்டின் மூலம் அறிந்துகொண்ட மருத்துவ ஆராய்ச்சியா ளர்களும் வரவேற்றுள்ளனர். இந்த உப கரணத்துக்கு பெரிஸ் லேப்ராஸ் கோப்பிக் ட்ரோகார் கேனுலா' என பெயரிடப்பட்டு உள்ளது என்றார்.

- நன்றி: இந்து தமிழ், 13.12.2018

- விடுதலை ஞாயிறு மலர், 12.1.19

நகர்ந்து வரும் வடதுருவ காந்தப்புலம்



பூமிப் பந்தின் வட துருவ காந்தப் புலம் தொடர்ந்து நகர்ந்து வருகிறது. வட புலம் துல்லியமாக குறிக்கப்பட்ட, 1881லிருந்தே, அது ஆண்டுக்கு, 10 கி.மீ., இடம் பெயர்ந்து வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, வட காந்தப் புலம்  இடம் பெயர ஆரம்பித்திருக்கிறது.

இன்று, திறன் பேசிகளிலில் இருக்கும், ஜி.பி.எஸ்., வசதி முதல், கப்பல்கள், விமானங்களில் இருக்கும் திசைகாட்டிகள் வரை இதனால் பாதிக்கப்படுமே? ஆனால், ‘உலக காந்த மாதிரி’ உருவாக்கும் அமெரிக்காவின், என்.ஓ.ஏ.ஏ., எனப்படும், ‘தேசிய கடல் மற்றும் வளி மண்டல நிர்வாகம்‘ வட புல நகர்வை தொடர்ந்து, காந்த மாதிரியை புதுப்பித்து வருகிறது.

இந்த புதிய மாதிரிகளைத் தான், ஜி.பி.எஸ்., சேவைகள் வாங்கி பயன்படுத்துகின்றன. அண் மையில் அதிபர் டிரம்பின் அரசு, முடக்க தீர்மானித் திருக்கும் பல அரசு துறைகளில், என்.ஓ.ஏ.ஏ.,வும் வருவதால், உலக காந்த மாதிரியை புதுப்பிப்பதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த புல நகர்வு, வட துருவத்திற்கு அருகே இருப்பவர்களுக்கே லேசான பாதிப்பு. தள்ளி இருப்பவர்கள், வழக்கம்போல வட புலம் நகர்வது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

இன்னொரு விஷயம், பூமியின் இரு காந்தப் புலங்களும், 7.8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தலை கீழாக மாறியதாகவும், அப்படி ஒரு மாற்றம் வருவதற்கான அறிகுறியே நகர்வு வேகம் அதிகரித்து வருவது என்றும், விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

-  விடுதலை நாளேடு, 31.1.19

வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

சிறந்த அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள்: 9ஆவது இடத்தில் இந்தியா



சென்னை, ஜன.27  உலக அளவில், அரசு நிதியில் இயங்கக் கூடிய சிறந்த அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் 9 ஆவது இடத்தில் இந்தியா இடம்பெற்றுள்ளது என மத்திய அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், பருவநிலை மாற் றத்துக்கான அமைச்சர்  அர்ச வர்தன் பெருமிதம் தெரிவித்தார்.

சென்னை அய்அய்டி-யில் மத்திய அறிவியல் தொழில் நுட்பத் துறையின் ரூ. 16 கோடி நிதியுதவியுடன் சூரிய மின்சக்தி உற்பத்தி மற்றும் சேமித்தல் மையம், கழிவுநீர் மேலாண்மை, சூரியசக்தி தெர்மல் உப்பு அகற்றுதல்  மய்யம் என மூன்று மய்யங்கள் அமைக்கப்பட்டுள் ளன. இந்த மய்யங்களை, அய்அய்டி வளா கத்தில் வெள்ளிக் கிழமை நடை பெற்ற விழாவில் பங்கேற்று திறந்துவைத்த அமைச் சர் அர்சவர்தன் பேசியதாவது:

அறிவியல் ஆராய்ச்சியில் இந்தியா சிறந்து விளங்கி வருகிறது. அய்அய்டி போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் சிறந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அண்மையில் வெளியிடப் பட்ட புள்ளி விவரத்தின் படி, உலக அளவில் அரசு நிதியுதவி யில் இயங்கி வரும் சிறந்த அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங் களைக் கொண்ட நாடுகளில் பட்டியலில் அமெரிக்கா, ஜெர் மனி போன்ற நாடுகளுக்கு அடுத்தபடியாக 9ஆவது இடத் தில் இந்தியா உள்ளது.

அதாவது உலகம் முழுவதும் அரசு நிதியுதவியில் இயங்கும் 1207 அறிவியல் ஆராய்ச்சி நிறு வனங்கள் உள்ளன. இதில் இந்தியாவின் சி.எஸ்.அய்.ஆர். (அறிவியல் தொழில் ஆராய்ச்சிக் கவுன்சில்) 9 ஆவது இடத்தில் உள்ளது. ஒட்டுமொத்தமாக அரசு மற்றும் தனியார் அறிவியல் ஆராய்ச்சி நிறுனங்களின் (5200 நிறுவனங்கள்) பட்டியலில் சி.எஸ்.அய்.ஆர். 75 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

அதுபோல, சிறந்த அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளி யிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 5 ஆம் இடம் வகிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக் கின்றன.

-  விடுதலை நாளேடு, 27.1.19

வியாழன், 31 ஜனவரி, 2019

'மாட்டு மூத்திர மகாத்மியம்'பற்றி அளந்து கொட்டுபவர்களுக்கு மரண அடி!

கரியமில வாயுவைவிட அபாயகரமானது- 300 மடங்கு வெப்ப சலனத்துக்குக் காரணம் மாட்டு மூத்திரமே!


பன்னாட்டு அறிவியல் அறிஞர்களின் ஆய்வு அறிக்கைகள் அம்பலம்




மாட்டு மூத்திரம் கிருமி நாசினி என்றும், மருத்துவக் குணம் கொண்டது என்றும் அளந்து கொட்டும் பிற்போக்குவாதிகள் - கோமாதா புத்திரர்களுக்கு' மரண அடி கொடுக்கும் வகையில் அறிவியல் முடிவுகள் வெளிவந்துள்ளன. இந்திரப் பிரஸ்தா பல்கலைக் கழக பயோ-டெக்னாலஜி துறைப் பேராசிரியரும், சர்வதேச நைட்ரோஜன் இனிஷியேட்டிவ் அமைப்பின் தலைவருமான என்.இரகுராம் கூறியுள்ளார். இதனை எடுத்தாண்டு  திராவிடர்  கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை  வருமாறு:

பசு மாட்டை கோமாதா - குலமாதா' என்று பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் வணங்குவதுடன், பசு பாதுகாப்புக் குழு - காவல் படை என்ற பெயரில் மற்றவர்களை - குறிப்பாக தலித்துகளை - முசுலீம்களைக் கொல்லும் நிகழ்வுகளும், குஜராத்திலும், உ.பி.யிலும், வடமாநிலங்களிலும் (பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில்) இதற்குத் தனியே ஒரு அமைச்சகமும், அமைச்சர் எல்லாம்கூட ஏற்படுத்தி, கூத்தடிக்கின்றனர்!'' எதிர்த்துப் போட்டியிடும் எதிர்கட்சிகள்கூட அதனையே தாங்கள் செய்வதாகக் காட்டி, வாக்கு வங்கி அரசியல் நடத்துவது அதைவிட - பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்சைவிட மகாமகா கேலிக் கூத்தாகும்!

வெப்ப சலனத்தால் ஏற்படும் தீங்குகள்!


இன்று வந்துள்ள ஆங்கில நாளேடு இந்து' பத்திரிகையில் (கோவை பதிப்பு 7 ஆம் பக்கம், 31.1.2019) உள்ள ஒரு செய்தி - அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் திடுக்கிடுவதாக இருக்கிறது.

நாட்டின் பல்வேறு அசாதாரண இயற்கை நிகழ்வுகள் - பருவ மழை தவறுதல், புயல், சுனாமிச் சீற்றங்கள் போன்றவை ஏற்படுவதற்கு மூலகாரணம் வெப்ப சலனம் (Global Warming) ஆகும் என்பது நிலைநாட்டப்பட்ட உறுதியான அறிவியல் கருத்தாகும்.

மாட்டு மூத்திரத்தால் மிகப்பெரிய கேடு - பேராபத்துகள்!


பசு மாட்டின் மூத்திரம் கிருமிகளைக் கொல்லுகிறது - மருத்துவமனைகளில் கிருமி நாசினிகளாகப் பயன் படுகிறது (Disinfectant)  - இது பயிரை வளர்க்கிறது  - நோய்களைத் தீர்க்கிறது  என்று அளந்து கொட்டியவர்கள் முகத்திரையைக் கிழிக்கும் அறிவியல் தகவல் இன்று (31.1.2019) வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு சதவிகிதம் பலன்  அவற்றால் என்றால், பல மடங்கு இந்த மாட்டு மூத்திரத்தால் ஏற்படும் 'நைட்ரஜன்' N2O என்ற Nitrous oxide emissions  என்பது வெப்ப சலனத்தை உருவாக்கக் காரணமான கரியமிலவாயுவைவிட 300 மடங்கு அதிகமான ஆபத்தை உருவாக்கக் கூடிய சக்தியுள்ளதாக  உள்ளது என்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கால்நடைகளை அதிகம் உபயோகிக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா என்பதால், குறிப்பாக இந்த நைட்ரோ ஆக்சைடுமூலம் ஏற்படும் தீமை மிக அதிகம் என்பதை, கொலம்பியா, அர்ஜென்டினா, பிரேசில், நிகரகுவா, டிரினிடாட், டோபோகோ ஆகிய நாடுகளின் ஆய்வுகள் தொகுப்பாக ‘Scientific Reports' (விஞ்ஞான அறிக்கைகள்) என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது!

இந்த அறிவியல் அறிக்கைகள்மூலம் பசு மாட்டு மூத்திரம் (பஞ்சகவ்யம் உள்பட) எவ்வளவு ஆபத்தான ஒன்று என்பது புரிகிறதா?

உடனடியாக தடுத்து நிறுத்தப்படவேண்டும்!


எனவே, கோமாதா மூத்திரம் - உலக அழிவு - வெப்ப சலனம்மூலம் ஏற்பட முக்கிய காரணம் என்றால், இதைத் தடுப்பது - மாற்றுவதுபற்றி விஞ்ஞானிகள் கூடிக் கலந்து தடுப்புப் பரிகாரம் தேடவேண்டும் என்பதே நமது முக்கிய வேண்டுகோள்.

டில்லி இந்திரப் பிரஸ்தா பல்கலைக் கழக பயோ-டெக்னாலஜித் துறை பேராசிரியரும்,  சர்வதேச நைட்ரோஜன் இனிஷியேட்டிவ் அமைப்பின் தலை வருமான என்.இரகுராம் இதுபற்றி மேலும் ஆய்வு களும், மாற்றுப் பரிகார, தடுப்புக்கான வழிவகைகளைச் செய்யவேண்டும் என்று கூறியுள்ளார். இதுவும் முக்கிய மாகும்!

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

கோவை

31.1.2019

-  விடுதலை நாளேடு, 31.1.19

வியாழன், 24 ஜனவரி, 2019

தாவர ஒளிச்சேர்க்கையில் திருத்தம் செய்த விஞ்ஞானிகள்!



செடிகள் பச்சையம் தயாரிக்க சூரிய ஒளியை பயன்படுத்தும் விதத்தில், ஒரு குறையை கண்டுபிடித்துள்ளது சர்வதேச விஞ்ஞானிகள் குழு.

அது என்ன குறை? தாவரங்களில், ‘ரூபிஸ்கோ’ என்ற என்சைம் உள்ளது. இந்த என்சைம், ஒளிச்சேர்க்கை நிகழும் போது, கார்பன்டையாக்சைடு மூலக்கூறுகளை ஈர்த்து, பச்சையம் தயாரிக்கிறது.

ஆனால், அவ்வப்போது ஆக்சிஜன் மூலக்கூறுகளையும் ரூபிஸ்கோ ஈர்த்து விடுகிறது. இதனால், தாவரங்களின் உடலில் நச்சுகள் சேர்ந்து விடுகின்றன.

இந்த நச்சை, ஒளி சுவாசம் - போட்டோ ரெஸ்பைரேஷன் என்ற வேதிவினை மூலம், தாவரங்கள் அகற்ற வேண்டியிருக்கிறது.

இந்த வேதிவினைக்காக, ஒரு தாவரம் சேகரிக்கும் ஆற்றலில், கணிசமான ஆற்றல் வீணாகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த ஆற்றல் செடியின் வளர்ச்சிக்கு மடை மாற்றப்பட்டால், செடியின் வளர்ச்சியும், அதன் காய், கனி, பூக்கள் போன்ற விளைச் சலும் கணிசமாக அதிகரிக்கும்.

‘சயின்ஸ்’ இதழில் வெளியாகியுள்ள கட்டு ரையின்படி, விஞ்ஞானிகள், தாவரங்களின் மரபணுவில் எளிய மாற்றத்தை செய்ததன் மூலம், செடிகளின் வளர்ச்சியும், மகசூலும், 40 சதவீதம் வரை அதிகரிக்க முடியும்.

கார்பன் டை ஆக்சைடை மட்டும் ஈர்க்கும் வகையில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட புகையிலை செடி, மற்றும் சாதாரண புகை யிலை செடிகளை வைத்து, ஆய்வகத்தில் இரண்டு ஆண்டுகள் சோதித்ததில், மரபணு மாற்றப்பட்ட செடி அதிவேகமாக, அதிக இலைகளுடன் வளர்ந்திருப்பதை உறுதி செய்தது, விஞ்ஞானிகள் குழு.

அது மட்டுமல்ல, தாங்கள் உருவாக்கிய செடிக்கு, 25 சதவீதம் குறைவான தண்ணீரே தேவைப்பட்டது எனவும், அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

விலையுயர்ந்த உரங்களைக் கொட்டாமல், ஒளிச்சேர்க்கை முறையில் மட்டும் திருத்தம் செய்து இந்த வெற்றி கிடைத்துள்ளதால், அடுத்த சில ஆண்டுகளில், வளரும் நாடுகளி லுள்ள சிறு விவசாயிகளுக்கு, இந்த தொழில் நுட்பத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என, விஞ்ஞானிகள் தீர்மானித்து உள்ளனர்.

-  விடுதலை நாளேடு, 17.1.19